Jump to content

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே
அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி "
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில்
அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு
ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்..
அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில்
பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது
பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள்
படைத்தார்கள் என்றால் மிகையாகாது!
சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம் போன்றவற்றுக்குக்
கட்டுக்கட்டாக அஞ்சலட்டைகள் அனுப்பிவிட்டுக் காத்திருப்பார்கள்! எந்தப் பாடல் ஆனாலும் பரவாயில்லை.. பெயர் கேட்டால் போதும் என்ற நேயர்களுக்காக
"பொங்கும் பூம்புனல்" நாள்தோறும் காலையில் அனைவருக்கும் புத்துணர்வூட்டியது!
வெறுமனே பாடல்களை ரசிப்பதோடு நின்றுவிடாமல் தமது ஆற்றலை வானொலி வாயிலாக வெளிப்படுத்த விரும்பிய ஆக்கத்திறன் மிக்க நேயர்கள் கலந்து கொள்ள எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் அக்காலத்தில் வர்த்தக சேவையில் ஏராளமாகவே இருந்தன! ஒலிமஞ்சரி, இசையும் கதையும், பொதிகைத்
தென்றல், இசைமாலை, பாட்டும் பதமும்,
தேர்ந்த இசை, பூவும் பொட்டும், வாலிப வட்டம், ஆடவர் அரங்கம், வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி என்றெல்லாம்
நிகழ்ச்சிகள் பல நேயர்களைப் பின்னாளில்
படைப்பாளிகள் ஆக்கின!
இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனமாகி 54 ஆண்டுகள் கடந்து விட்டன... இந்த வேளையில் 1960களிலும் 70களின் ஆரம்ப காலப்பகுதியிலும் வர்த்தக சேவையில் நாம் முகம் காணாமலேயே நேசித்த அறிவிப்பாளர்கள் சிலரை நிழற்படங்களில் காண்போமா?
 
Image may contain: outdoor
 
S.P. மயில்வாகனன்
சிலோன் ரேடியோவைக் கடல் கடந்த நேயர் மத்தியிலும் புகழ் பெறச் செய்த முன்னோடி!
Image may contain: 1 person
 
SK பரராஜசிங்கம்

ஒலிமஞ்சரி சஞ்சிகை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியதோடு
நம்நாட்டு மெல்லிசைப் பாடல்கள் வானலைகளில் வலம் வரச் செயல்பட்டவர்!
Image may contain: one or more people
 
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

நல்ல தமிழில் இலக்கியத் தரமிக்க பொதிகைத் தென்றல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களின் நேசம் வென்றவர்!
 
Image may contain: 1 person
 
சரா இமானுவேல்

இசையும் கதையும் நிகழ்ச்சிப் பிரதிகளை
உணர்வுபூர்வமாக வாசித்து உயிரூட்டியவர்
Image may contain: 1 person
 
சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்
பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் புத்தம் புதுப் பாடல்களை வழங்கியே பேர் பெற்றவர்!
இவர் " நேரம்ம்ம்" என்று கூறும் பாணியே தனி!
 
Image may contain: 1 person, standing
 
 
BH அப்துல் ஹமீத்

இலங்கை வானொலியை உலகளாவிய ரீதியில் பெருமைப்படுத்திவரும் இமாலய
சாதனையாளர்
Image may contain: 1 person
 
 
C.நடராஜசிவம்

அறிவிப்பாளராக மட்டுமன்றி நடிப்பாற்றலால்
புகழ் பெற்றவர்! சிங்கள சின்னத்திரையில்
சாதனை படைத்தவர்!
 
Image may contain: 1 person
 
 
விமால் சொக்கநாதன்

இலங்கை வானொலியில் இவரது 'என் விருப்பம்' தனித்துவமானது! புலம்பெயர்ந்த பின்பும் BBC தமிழோசை மூலம் மனம் கவர்ந்தவர்! இப்போதும் வாராவாரம் "வீரகேசரி" யில் எழுதி வருகிறார்!
 
Image may contain: 1 person
 
 
KS ராஜா

திரை விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் புதுமை பொங்கத் தனக்கே உரித்தான உத்திகளைப் பயன்படுத்தி வழங்கி
இன்னும் இலங்கை வானொலி என்றதும்
தன் பெயரைப் பலரும் கூறவைப்பவர்
Image may contain: 1 person
 
R. சந்திரமோகன்

தனது ஒலிபரப்பில் ஜனரஞ்சகமான பாடல்களையே எப்போதும் சேர்த்து வழங்கியதோடு "சந்தனமேடை" மூலம்
ஈழத்து மெல்லிசையை மேம்படுத்த உழைத்தவர்
 
Image may contain: 1 person
 
புவனலோஜினி நடராஜசிவம்

இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில்
முதலில் ஒலித்த பெண் குரல்களில் ஒன்று!
பூவும் பொட்டும் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் படைத்தவர்!
 
Image may contain: 1 person, closeup
 
யோகா தில்லைநாதன்

மாதர் நிகழ்ச்சிகள் பல வழங்கியதோடு
இலங்கை வானொலி தமிழ்ச்சேவையில்
உயர்பதவி வகித்த பின் புலம்பெயர்ந்து
அங்கும் கலைப் பணிகள் புரிகிறார்!
 
Image may contain: 1 person, standing
 
ராஜேஸ்வரி சண்முகம்

வானொலிக் குயிலாக இன்றும் நேயர் நெஞ்சில் நிலைத்திருப்பவர்!
 
Image may contain: 1 person, sitting and table
 
கோகிலா சிவராஜா

இனிய குரல் வளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் படைத்த இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை! கங்கையாளே, மாலையில் ஒரு மாங்குயில் பாடல்களை மறக்க முடியுமா?
 
Image may contain: 1 person
 
நன்றி முகனூல்
 

Mahdy Hassan Ibrahim

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’ஈழத்தின் மெல்லிசைப்பாடல்கள்’ என்ற கலைவடிவம் உருக்கொண்டு உயிர் பெற்றுப் பரவ பெரிதும் காரணமாக இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள். ஆக்க சங்கீதம் பற்றிய பிரக்ஞையை விதைத்தவராகவும்; தன் உயிரைப் பிளியும் குரலால் ஈழத்தின் மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவராகவும் இவரின் ஈழத்துப் பாடல்கள் அமைந்திருந்தன. ஈழத்தின் இசைப்பாரம்பரியங்களையும் வழக்குகளையும் நன்கறிந்து கர்நாடக இசைஞானத்தோடும் ஏனைய நாட்டு இசைப்புலமையோடும் இருந்த பரா, எங்கு இசை அழகுகளைக் கண்ட போதும் அதனை ஈழத்தமிழுக்குக் கொண்டு வர விளைந்தவர். பரிசோதனை முயற்சிகள் பல செய்து ஈழத்து மெல்லிசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்.  அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார்  யசோதா பத்மநாதன் அவர்கள். 

https://www.youtube.com/watch?v=GWs_Bew113Q

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் .. ஒலிபதிவு இருந்தால் இணைத்து விடுங்கள்..👌 .. அந்த காலத்திற்கு சென்று வர உதவும்.. 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.