Jump to content

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்!


Recommended Posts

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்!

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Ahnaf.jpg

 தமிழில் நடராஜா குருபரன்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னார் கவிஞரின் கைதானது தவறானதென கல்வியாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்…

தமிழ்க் கவிதை நூலில் தீவிரவாத கருத்துக்கள் உட்பதிந்து இருப்பதாக,  குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID)   பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, அஹ்னாஃப் ஜசீம் (Ahnaf Jazeem)    மீது  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அந்த கவிதை நூலைப் படித்த, தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும்  மறுத்துள்ளனர்.

25 வயதான கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) கீழ் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது குறித்து,  சக எழுத்தாளர்கள், தமிழ் கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் கவலையையும்  தோற்றுவித்துள்ளது.

மன்னாரில் வசிக்கும் ஜஸீம், குற்றத்தடுப்பு பிரிவினரால் (CID), பயங்கரவாத குற்றச்சாட்டில் 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார்.  அவர் தமிழில் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தில் “தீவிரவாதம்” குறித்த சிந்தனைகளும் கருத்துகளும் பொதிந்திருந்ததாகவும்,  அந்த நூலானது புத்தளத்தில்  உள்ள ஒரு பாடசாலையில்  இளைஞர்கள் மத்தியில் அவை  பரப்பப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கைதானார். இந்த நிலையில்  ஜசீமின் கவிதை புத்தகத்தின் உள்ளடக்கங்கள் சிறார்களை மோசமாக பாதிக்குமா என்பது குறித்து ஆராய, கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மனநல மருத்துவர்கள் குழு ஒன்றை நியமித்த  கோட்டை மாஜிஸ்திரேட் நிதிமன்றம்  அவர்களிடம் இருந்து  அறிக்கையொன்றை கோரியது.  இந்தக் குழு,  உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர்களின் நேரடி மொழிபெயர்ப்பின் அடிப்படையில்  தனது அறிக்கையை தயாரித்தது.

எனினும், அஹ்னாப்பின்  கவிதைப்  புத்தகத்தின் மின்னணு பதிப்பைப் படித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஸ்ட  விரிவுரையாளர்  கலாநிதி அஹிலன் கதிர்காமர், கவிஞர் அஹ்னாப்பின்  கைது “குழப்பகரமானது” எனவும், இந்த வழக்கானது  எதிர்கால எழுத்தாளர்களை முடக்கும் பீதியான காலச்சாரத்தை மேலும் மோசமாக்கும் என,  கவலையடைவதாகவும் குறிப்பிட்டள்ளார்.  சி.ஐ.டி யால் கைதான அஹ்னாஃப் ஜசீம், நெடிய ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு வழிவகுத்த புத்தகம், தனது சொந்த வாசிப்பின் அடிப்படையில்  எந்தவிதமான தீங்கையும் கற்பிக்கவில்லை என கலாநிதி  கதிர்காமர் குறிப்பிட்டார்.,

“மதத்திலிருந்து அன்பு வரை தனது உலகத்தை வடிவமைக்கும் கருத்துகளினூடாக எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கவிதைத் தொகுப்பு இதுவாகும். இந்த கவிதை புத்தகத்தை எழுதியதற்காக அஹ்னாஃப் ஜஸீமை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதல் எதிர்கால எழுத்தாளர்களை அச்சத்தின் சூழலுடன் திணறடிக்கும் ”என கலாநிதி  கதிர்காமர் டெய்லி எஃப்டிக்கு (Daily Ft)  தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தங்கள் உலகங்களை விமர்சன ரீதியாக ஆராய, எழுத, படிக்க, விவாதிக்க மற்றும் கருத்தாட ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர். “எங்கள் சமூகங்களுக்குள் முற்போக்கான மாற்றத்திற்கான வழி இதுவே” என்றும் கலாநிதி  கதிர்கமர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற தமிழ்  அறிஞரும், பேராதனைப் பல்கலைக்கழ தகைசார் ஓய்வு நிலைப் தமிழ் பேராசிரியரும், 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது  “புத்தரின் படு கொலை” என்ற ஒரு பிரபலமான கவிதையை எழுதியவருமான எம்.ஏ.நுஹ்மான், PTAயின்  கீழ் நீண்டகாலமாக அஹ்னாஃப்ப  ஜசீமின்  தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

இவர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் அறிந்து, அவரின்  45 கவிதைகள் அடங்கிய  சிறிய கவிதை புத்தகத்தை  படித்ததாகவும், அந்தக் கவதைத் தொகுப்பில்  தீவிரவாதம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் பேராசிரியர் எம்.ஏ நுஹ்மான்  தெரிவித்துள்ளார்.. “மாறாக, இந்தத் தொகுப்பில் தீவிரவாதம், வன்முறை மற்றும் போருக்கு எதிராக பல கவிதைகள் உள்ளன” என்றும் ஜஸீமின் கைது குறித்து பேராசிரியர் நுஹ்மான்  கூறியுள்ளார்.

இதேவேளை ஜசீம்மின் பணிகள் பெரும்பாலும் மத அறநெறி, மனிதநேயம், அன்பு மற்றும் அமைதியான வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டுள்ளன. “இந்த உணர்வுகள் எவ்வாறு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பார்க்க முடியும்,” என பரவலாக மதிக்கப்படும் தமிழ் அறிஞர் பேராசிரியர் நுஹ்மான்  கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மொழியில் கவிதைகளைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத அதிகாரிகள் அந்தக் கருத்துடன் ஓடிப்போயிருக்கலாம், ஏனென்றால் ஜஸீமின் தொகுப்பின் அச்சிடப்பட்ட பதிப்பில்  ஒரு சில படங்கள் ஆயுதங்கள் மூலம்  சித்தரிக்கப்பட்டுள்ளன என கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளரும், கவிஞரும்,   புனைகதை எழுத்தாளருமான மஞ்சுளா வெடிவர்தனவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தமிழ் கவிஞரை சிறையில் அடைப்பதை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “நவரசம்” ஆசிரியரும், மன்னாரைச் சேர்ந்த முஸ்லீம் பாரம்பரியத்தைச் சேர்ந்தவருமான ஒரு இளைஞனின் படைப்பு இது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இலங்கைக் குடிமகனாகிய இவர்  இந்த நேரத்தில்,  சிங்கள மேலாதிக்கவாதத்தின் முக்கிய எதிரி ”என்று வெடிவர்தன ஜசீம் கைது செய்யப்பட்டதை  பலமாக  கண்டித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் இன-மத மேலாதிக்கத்தின் வன்முறை மற்றும் அடக்குமுறையின் மற்றொரு தீவிர வெளிப்பாடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என  எச்சரித்த வெடிவர்தன “இதனால்தான், அஹ்னாபின் விடுதலையானது, இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களின் சுதந்திரத்துக்கான, இன-மத மேலாதிக்கத்திற்கு எதிரான, எங்கள் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று நான் நம்புகிறேன்” என மஞ்சுள வெடிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, 2014 ஆம் ஆண்டில் PTA  சட்டத்தின்  கீழ் தவறாக தடுத்து வைக்கப்பட்டவர்.   இவர், ஜசீமின் தடுப்புக்காவல் சிறுபான்மையினர் மற்றும் சுதந்திரமான கருத்துக்களுக்கு எதிராக கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக தான் கருதுவதாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில்  வெளியிட்ட ஆய்வில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாவோர்கள் விசாரணையின்றி 15 ஆண்டுகள் வரை காவலில் தடுத்து வைக்கப்படலாம், என ருக்கி பெர்னாண்டோ டெய்லி எஃப்டிக்கு தெரிவித்தார்.

“PTA  கைதிகள் 15 வருடங்கள் அரச காவலில் இருந்த பின்னர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டதையும் நான் கேள்விப்பட்டேன்,” என்றும்  ருக்கி  பெர்னாண்டோ கூறினார், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களில் பலர்  சில நேரங்களில், இவற்றைக் கையாளும் அமைப்பு முறையின் தவறுகளால்   எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதனையும் விளக்கி உள்ளார்.

செப்டம்பர் 2020 இல் ஹிஸ்புல்லாவின் வழக்கறிஞர்களால் அவரது வழக்கு தற்செயலாக கண்டுபிடிக்கப்படாவிட்டால்  அஹ்னாஃப் ஜஸீமின் தலைவிதியும் இவ்வாறே ஆகியிருக்கும். ஆனால் நாடு முழுவதும் COVID-19  பரவுகையால் நீதிமன்ற செயல்பாடுகள் குறைக்கப்பட்ட நிலையில், ஜசீம் வழக்கு 2021 மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அறியப்படாத ஒரு விடயமாக, ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாத  ஒன்றாக காணப்பட்டது என  ஆர்வலர்கள் டெய்லி எஃப்டிக்கு ((Daily Ft)) தெரிவித்தனர். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, அவரது வழக்கை ஏற்க ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்களுடன் அவரது குடும்பம் இறுதியாக
தொடர்புகொண்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் கலாநிதி கதிர்காமர், அஹ்னாஃப் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டபோது, மன்னாரில் உள்ள ஒரு நண்பரிடம் கேட்டதை நினைவு கூர்ந்தார்.  சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்று நூல் மற்றும் “முறிந்த பனை” ஆகியன அடங்கலான நூல்களை, முஸ்லீம் இளைஞர்கள் எரித்ததாகவும், அத்தகைய விஷயங்களைப் படித்ததற்காக கைது செய்யப்படலாம் என  அவர்கள் பயந்தார்கள்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 “இளைஞர்கள் புத்தகங்களை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கூட அஞ்சும் இத்தகைய சமுதாயத்தையா நாம் கட்டியெழுப்ப விரும்புகிறோம்? இது கலாச்சார பாசிசத்திற்கான பாதை அல்லவா? ” என்று டாக்டர் கதிர்காமர்  கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? இத்தகைய சமுதாயத்தையா நாம் கட்டியெழுப்ப விரும்புகிறோம்? அஹ்னாஃப் ஜசீமீன் கைது தவறானது – கண்டனங்கள் வலுக்கின்றன –

தமிழில் நடராஜா குருபரன்…

இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்! | Athavan News

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.