Jump to content

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு

புதுவை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் முதல்வர்.

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை‌ எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர்.

இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (ஜனவரி 😎 முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

குறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டுகிறார். 

இதனால் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம், கொரோனா மருத்துவமனை வளாகம் மற்றும் பிற பகுதிகளில் 500 மீட்டர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பாதுகாப்புக்கு மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து 500 மீட்டர் தொலைவு வரை மூன்று அடுக்கு பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆளுநர் மாளிகை அருகே தர்ணா போராட்டம் நடத்த தடை செய்யப்பட்டதால், அண்ணா சாலைக்கு போராட்டம் மாற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது, வரும் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே இந்த போராட்டம் நடக்கும் என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் எ.வி.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்ற கூட்டணிக் கட்சியினர்.
 
படக்குறிப்பு, 

இந்த தர்ணா போராட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி மற்றும் மத சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கின்றன. காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கும் திமுக இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போராட்டம் நடக்கும் பகுதியில் புதுச்சேரி காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் என 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பிற்காக நிற்க வைக்கப்பட்டுள்ளன.

2019 பிப்ரவரி மாதம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும் கூறி 39 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

6 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில் இறுதியாக, முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கிரண்பேடி ஒப்புதல் அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இப்போது இந்தப் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-55583597

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.