Jump to content

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டது; சட்டபூர்வ தூபிக்கு அமைச்சரவை பத்திரம்: டக்ளஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/167123/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன பொதுத்தூபி.. சிங்கள இராணுவத்துக்கு நந்திக்கடலில்.. ஒரு தூபி இருக்குது. அதையும் இடியன்..*****

சிங்களப் பல்கலைக்கழகங்களில் இராணுவத் தளபதிகளுக்கு ஸ்தூபி.. ஜே வி பிக்கு தூபி.. ஆனால்.. தமிழர்களின் இழப்பை மட்டும்.. பொதுவில வைக்கப் போகுதாம் *** *****. 

**** ****. 

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும். யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வழங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும்.

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

 

2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வளங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

 

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

 

 

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் ஐநா பரிந்துரையின் பின்னான பரிந்துரையின் பேரில் தான் இந்த தூபியை அமைக்க.. மைத்திரி - ரணில் அரசே இடமளித்தது.

மேலும்... என் வீட்டில் என் வளவுக்குள் நான் நினைத்ததை கட்டவும் வைக்கவும் கோத்தா மகிந்தவிடம் என்னத்துக்கு அனுமதி பெற வேண்டும்.

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

எங்களுக்கு - உங்களுக்கு, நாங்கள் —- என்ன பெயரில் எழுதினாலும், எல்லாம் ஒன்றன்றோ? 😄

16 minutes ago, nedukkalapoovan said:

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். யு ஜி சி வேறு, யாழ். பல்கலைக்கழக பேரவை வேறு. யாழ். பல்கலைக்கழக பேரவையை இந்தியா அதனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

மேலும் யு ஹி சி சிங்கள இராணுவத்தின் வேண்டுகோளை அடுத்து.. மனித உரிமை சட்டவாளராக இருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரை அந்தப் பணி செய்வதில் இருந்தும் தடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யு ஜி சி... தனது அதிகார வரம்புக்கு அப்பால்.. சொறீலங்கா இராணும் மற்றும் அரசின் தேவைகளுக்கு முடிவெடுக்கும் ஒரு பேரினவாதக் கட்டமைப்பாக செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

Guruparan-Kumaravadivel-RTI-.jpg?resize=897%2C1270&ssl=1

யு ஜி சி - சிங்கள இராணுவத் தொடர்பும்.. சிங்கள இராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்ய வரம்பு மீறிச் செயற்படுவதும் எப்போதோ அம்பலமான ஒன்றே. 

இது இப்போ..

Image may contain: one or more people, people standing and outdoor, text that says "2020.12.24 அன்று நினைவு தூபிகளை இராணுவத்தினருக்கு துணைவேந்தர் காட்டிக்கொடுத்த போது"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள்-Remembrance

பிறப்புக்கும்
இறப்புக்குமான
மானுட உனது உரிமைகளை 
கொண்டாடுவதும் நினைவு 
கூர்வதும் போன்றே 
எனது பிறப்புக்கும் 
இறப்புக்குமான
நினைவுகளை 
நான் கொண்டாடுவதை 
நினைவு கூறுவதை 
மறுக்கும் அதை அழிக்கும் 
உரிமை உனக்கில்லை.
                         -பா.உதயன் 


All human beings are born free and equal in dignity and rights
 

Link to comment
Share on other sites

நல்லது. சட்டவிரோதமாக தமிழர் பகுதிகளில் வைத்த அனைத்து பெளத்த சிலைகளையும், பெளத்த 'பன்சல' க்களையும் இதே விதத்தில் ஈபிடிபி உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் இடித்து நீதியை நிலை நாட்டுவார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

இந்த ஐயாவுக்கும் அதே மண்ணில் சொந்த இனத்தை சுட்டுப் பிழைக்கும் உந்தத் தாடியனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல்.. தாடிக்கு வாக்குப் போடும் ஈனத்தமிழனும் எம் மத்தியில் என்று எண்ணும் போது..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நினைவாலயத்தை இடித்து அழிக்கலாம்.தமிழர்கள் நெஞ்சில் கட்டியிருக்கும் நினைவாலயத்தை எப்படி அழிக்கப்போகிறீர்கள்.நேற்றைய நிகழ்வுக்கும் தமிழர் நெஞ்சில் பதியப்பட்டருக்கும்.காலம் கனிந்து வரும் போது எல்லாக்கணக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

எம்மில் சில மெத்த படித்த மேதைகள், அதிகாரவர்க்கம் கையால் காட்டுவதை தலையால் நின்று செய்வதில் படு சூரர்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

3 hours ago, கற்பகதரு said:

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது அந்த அந்த பல்கலைக்கழகங்களின் பேரவையாகும். பேரவை அங்கத்தவர்கள் உள்ளூர் சமுக பிரதிநிதிகள். இவர்களே உபவேந்தருக்கு ஆணை இடுபவர்கள். வசந்தி அரசரட்ணத்தை உபவேந்தராக ஈ.பி.டி.பி. நியமித்த காலத்தில் இருந்தே யாழ். பல்கலைக்கழக பேரவை  ஈ.பி.டி.பி. யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை சிறிலங்கா அரசின் வேண்டுகோள்களை ஈ.பி.டி.பி. யாழ். பல்கலைக்கழக பேரவை ஊடாக உபவேந்தருக்கு ஆணையிட்டு  நிறைவேற்றி வந்தது.

ஜெய்சங்கர் வந்தார் - கேட்டார், குழப்பம் ஒன்று தேவை என்றார். அல்லது கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதென்றார். சூளைமேட்டு வழக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். கேட்டதை உடனேயே செய்து காட்டினால்தானே ஆற்றல் இருப்பதை இந்தியன் நம்புவான்? செய்து காட்டிவிட்டார்கள். மீண்டும் இளைஞர்கள் சிறை செல்வார்கள், காணாமல் போவார்கள், குண்டுகள் வெடிக்கும், இந்திய இராணுவமும் பரந்தன் இராஜனும் வருவார்கள். மக்கள் உலகமெல்லாம் ஊர்வலம் போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது அந்த அந்த பல்கலைக்கழகங்களின் பேரவையாகும். பேரவை அங்கத்தவர்கள் உள்ளூர் சமுக பிரதிநிதிகள். இவர்களே உபவேந்தருக்கு ஆணை இடுபவர்கள். வசந்தி அரசரட்ணத்தை உபவேந்தராக ஈ.பி.டி.பி. நியமித்த காலத்தில் இருந்தே யாழ். பல்கலைக்கழக பேரவை  ஈ.பி.டி.பி. யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை சிறிலங்கா அரசின் வேண்டுகோள்களை ஈ.பி.டி.பி. யாழ். பல்கலைக்கழக பேரவை ஊடாக உபவேந்தருக்கு ஆணையிட்டு  நிறைவேற்றி வந்தது.

ஜெய்சங்கர் வந்தார் - கேட்டார், குழப்பம் ஒன்று தேவை என்றார். அல்லது கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதென்றார். சூளைமேட்டு வழக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். கேட்டதை உடனேயே செய்து காட்டினால்தானே ஆற்றல் இருப்பதை இந்தியன் நம்புவான்? செய்து காட்டிவிட்டார்கள். மீண்டும் இளைஞர்கள் சிறை செல்வார்கள், காணாமல் போவார்கள், குண்டுகள் வெடிக்கும், இந்திய இராணுவமும் பரந்தன் இராஜனும் வருவார்கள். மக்கள் உலகமெல்லாம் ஊர்வலம் போவார்கள்.

ஜெய்சங்கர் யார். யாருடன் என்னென்ன. .கதைத்தார் என்பதை எழுதவும் எனக்கும் இலங்கையில் நானகு வீடுகள் உண்டு அமச்சாரவைப்பத்திரத்தைப்பெற்று. உடைத்தாலும். என்று பயமாகவுள்ளது இரவில்  ஏன்உடைத்தார்கள்  ? உங்களுக்கு முதலே தெரியுமா உடைக்கப் பெகிறார்கள் என்று?  ஓரே நாடு பல சட்டங்கள்...ஓரே நாடு. பல சட்டங்கள.    ஓரேநாடு. பல. சட்டங்கள்....😜😜😜😜😜😜😜😜😜😜😜🤥🤥🤥🤥🤥🤥🤥❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவிட தகர்ப்பிற்கு காரணம் இதுவா?கலாநிதி குருபரன் விளக்கம்!

 
27668aaf-87.jpg
யாப்பாணம் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, யாழ் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் குவிந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த அதிகாரி மிலேச்சத்தனமாக நடந்து கொள்வது கவலை தருவதாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட ,முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சடலங்கள் தகனம்-முஸ்லீம் மக்களுக்கான திட்டமிட்ட சதியே!
ஆரியின் வெற்றிக்கு பேராதரவு-தானா சேர்ந்த கூட்டமாம்!
திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை.

அதன்பின்னர், வருகைதந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

பதற்ற நிலை தொடர்ந்தவண்ணமுள்ள தருணத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

08e7a9ff-7.jpg

முன்னைய உபவேந்தர் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம். தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன” என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்று தூபி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. மற்றைய தூபி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://samugammedia.com/is-this-the-reason-to-remember-mullivaikkal-dr-kuruparan-explanation/?fbclid=IwAR2EmSgv6IfizNHc724TuxtDaiySC8DIgbyfTXwAWiS0brrpUpHiCcNgAxw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

உண்மையும் அதுதான் . 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

அவர்களுக்கு தெரிந்ததைத்தானே  அவர்களால்  செய்ய முடியும்.  நாமும் அவர்களைப்போல் செய்ய முடியுமா? விலத்திப்போய்க்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் வீண் நேர விரயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.