Jump to content

விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

எந்தத் தீர்வையும் 
ஈழத் தமிழனிடம்
கேட்க்காமல் 
இந்தியா போட்ட 
பிச்சை இது 

இன்னும் கிடந்து 
இழுக்குது சேடம் 
ஆயிரம் தடவை 
இந்தியா சொல்லியும் 
இலங்கை இதுக்கு 
மசிவதாய் இல்லை

ஏதோ புலி தான் 
மறுத்தினம் என்றால் 
இப்பவும் ஏன் தான் 
மறுக்கினம் கொடுக்க 

13 ம் பெட்டியோடு வந்த 
பெரியண்ணை தலையில்  
பிறத்தாலே நின்று 
துவக்கால அடிச்சும் 
சிங்களம் சொன்னது 

இந்தத் தீவில் 
எந்தத் தீர்வும் 
எப்பவும் இல்லை என்று 
அப்பவே சொன்னது 

விக்கிரமாதித்தன் 
கதையைப் போல
சற்றும் மனம் 
தளராத இந்தியா 
சந்திக்கும் பொழுதெல்லாம் 
13 ம் கதையை 
பல தடவை சொல்லும் 

இதுக்கு மேலாய் 
கொடுப்போம் என்று 
இந்தியாவை மடக்கும் 
இலங்கை இராஜதந்திரம் 

இப்ப இன்னும் 
கடினம் கொஞ்சம் 
இந்தியா நினைச்சது போல் 
இந்து சமுத்திரம் இல்லை 

இனி வரும் காலம் 
சீனா காலமாம் 
இலங்கை இப்போ 
இவன் பக்கம் சாயல் 

இந்தியா நினைப்பது 
போல எதுகும் இல்லை 
எல்லா பக்கமும் 
றகன் வந்து குந்துது 

இத்தனை ஆண்டாய் 
கடத்திய இலங்கை 
அவிபிருத்தி ஒன்றே 
காணும் தமிழனுக்கு என்று 
ஆளுக்கு ஒரு 
அமைச்சு கொடுத்து 
அதிகாரப் பகிர்வை 
அடக்கியே வைத்தது 

ஆன இன்றும் கூட 
இதுகும் இல்லை 
அதுகும் இல்லை 
எதுகும் நடந்ததாய் 
இல்லை 

இன்னும் ஒரு முறை 
இந்தியா வரும் 
அப்பவும் அந்த 
13க் கதை வரும் 
இப்பவும் ஒன்றும் 
தெரியாது போல 
சீனா பார்வையோட 
சிங்கம் உறுமும்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் கைப்பாவைதான் இந்தியா, நல்லா ஆட்டுவிக்கின்றான்கள், கிந்தியாவின் சொல் இனி எடுபடாது இலங்கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்தி முறிஞ்சாலும் விக்கிரமாதித்தனிடம் வேதாளம்( 13 ம் கதை) தங்காது.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை பட்டவர்த்னமாக போட்டுடைக்கும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2021 at 10:33, உடையார் said:

சிங்களத்தின் கைப்பாவைதான் இந்தியா, நல்லா ஆட்டுவிக்கின்றான்கள், கிந்தியாவின் சொல் இனி எடுபடாது இலங்கையில்

 

On 20/1/2021 at 21:34, suvy said:

என்னதான் குத்தி முறிஞ்சாலும் விக்கிரமாதித்தனிடம் வேதாளம்( 13 ம் கதை) தங்காது.......!

 

On 22/1/2021 at 17:56, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உண்மையை பட்டவர்த்னமாக போட்டுடைக்கும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

உடையார்,சுவே,புரட்சிகர தமிழ் தேசிகன் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.