Jump to content

நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம்


Recommended Posts

நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk
கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது.
முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகளை புகுத்துவது அவசியமாகிறது. அதேவேளை ஒரே ஒரு முறை நேர்ந்த திருத்தக் கூடிய பிழைகளுக்காகவும், எளிதில் மீண்டும் நிகழாமல் காத்துக் கொள்ளக்கூடிய பிழைகளுக்காகவும் புதிய கொள்கைகளை உருவாக்குவதனையும் தவிர்பது முன்னுதாரணமாகிறது.
இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமாகிறதோ, அந்த அளவிற்கு அவை நெகிழ்வுடன் கூடிய, வழிகாட்டல்களுடன் அமைய வேண்டும் என்பதும் வரலாறாகிறது.
உலகலாவிய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட செல்நெறிகளை, இரன்டாம் உலகப் போரின் பின்னான, ரஸ்ய அமெரிக்க பனிப்போர் காலம், அதற்கு பிந்தைய காலம் என பகுப்பாய்வு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்ரேகன் மற்றும் ரஸ்ய ஜனாதிபதி கொபர்சேவ் காலமான 1991ல் பனிப்போர் முடிவுக்கு வந்த பின் உலக ஒழுங்கில், அதன் போக்கில், அணிச் சேர்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. சோவியத் சார்ப்பு கம்யூனிச நாடுகள், அமெரிக்க சார்ப்பு முதலாளித்துவ நாடுகள், அணிசேரா நாடுகள், நேட்டோ உடன்படிக்கை நாடுகள், வார்சோ உடன்படிக்கை நாடுகள் என்ற அணிச் சேர்க்கைகளில் பெரும் மாறுதல்களும், அவற்றையொட்டி கோட்பாட்டு நடைமுறைகளில் மாறுதல்களும் ஏற்பட்டு இருந்தன.
இவற்றிற்கு அப்பால் உலக அளவில் எழுச்சிபெற்று வந்த இஸ்லாமிய தீவிரவாதம், அடிப்படைவாதம், பலஸ்தீன – இஸ்ரேல் முரண்பாட்டில் அமெரிக்காவும், மேலைத்தேசமும் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாற்றங்கள், மத்தியகிழக்கில் ஏற்பட்ட போர் பதட்டம், இஸ்லாமிய நாடுகள், விசேடமாக லிபியா, ஈராக் – ஈரான் போன்ற நாடுகளின் மீதான அமெரிக்க நிலைப்பாடு, மறுபுறம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலான நாடுகள் மீதான அமெரிக்க மேலைத்தேய நிலைப்பாடுகள் என்பவற்றில் பாரிய மாறுபாடுகளும், ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்தன.
மறுபுறம் ஆசிய பிராந்நியத்திலும் உலக அளவிலும், சீனாவின் எழுச்சியும், ஆதிக்கமும், பிராந்தியத்தில் இந்திய – பாகிஸ்த்தான் - சீன முரண்பாடுகளும் விஸ்தரிப்புவாத, ஆதிக்க போட்டிகளும் கூர்மையடையத் தொடங்கி இருந்தன.
இந்த நிலையில், 1970களில் ஆரம்பித்து 1980களில் கூர்மையடைந்த இலங்கையின் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டமும், அதனை முன்கொண்டு சென்ற விடுதலைப்புலிகள் அமைப்பும், 1990களிற்கு பின்னர் ஏற்பட்ட உள்ளக, பிராந்திய, சர்வதேச அரசியல் போக்குகளை கவனத்தில் எடுத்துக்கொண்டனவா?
முக்கியமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின் தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கை தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஏற்பட்ட இந்திய கொள்கை மாற்றம், 1997ல் உலக பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைக்கப்பட்டமை, 2011 செப்டம்பர் 11ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின் பயங்கரவாதம், தீவிரவாதம், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் குறித்து உலக அளவில் உருப்பெற்று விரிவடைந்த கொள்கை மாற்றம், ஜோர்ஜ் புஷ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற புதிய உலக ஒழுங்கு, முதலான விடயங்கள் குறித்து, விரிவான ஆய்வுகள், விவாதங்கள், ஆலோசனைகள் இடம்பெற்றனவா?
ஆயுத போராட்ட வடிவங்களில் அதாவது இராணுவ மூலோபாயங்களில் தந்திரோபாயங்களில் காலத்திற்கு ஏற்ப வடிவ மாற்றங்களை புகுத்தியது போன்று – (விசேடமாக கெரில்லா போர்முறையில் இருந்து மரபுவழிப் போர் முறைக்கு மாறுதலும், பின்னர் தேவை ஏற்படின் மீண்டும் கெரில்லா போர்முறைக்கு மாறுதலும்) காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப அரசியல் ராஜதந்திர நகர்வுகளிலும் கவனம் செலுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
உண்மையில் 80களில் போராளியாக, 90களில் பல்கலைக்கழகத்தில் அரச அறிவியற் துறை சிறப்பு மாணவனாக, பின்னர் அச்சுத்துறை சார் ஊடகவியலாளனாக, 2000 ஆண்டுகளில் இலத்திரணியல் துறை சார் ஊடகவியலாளனாக, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் அனைத்தினதும் செய்தி சேகரிப்பாளனாக, தெற்கின் முற்போக்காளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஐரோப்பிய ஒன்றிய, இந்திய மற்றும் இணைத்தலமை நாடுகளின் ராஜதந்திரிகளோடு நல்லுறவைப் பேணியவனாக, பின்னர் புலம்பெயர்ந்த ஊடக செயற்பாட்டாளனாக, பெற்றுக்கொண்ட அனுபவங்களின் ஊடாக, என்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடைகான்பதற்கான ஒரு பதிவாக இந்தத் தொடர் அமைகிறது.
நீண்ட காலமாக என்னுள் இருந்த இந்த வேட்கை, இந்தக் கொரோனா உள்ளிருப்புக் காலத்தில் சாத்தியமாகி இருக்கிறது.
இந்தத் தொடர் இன்றைய காலத்தின் தேவை என உணர்கிறேன். ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், அகிம்சை வழியிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டம், மிண்டும் சர்வதேசத்தை நோக்கி நீட்சிபெற்று உள்ள சூழலில் என் சிற்றறிவுக்கும், அனுபவங்களுக்கும் எட்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
குறிப்பாக 1985கள், 1990களிற்கு பின் உருவாகிய அடுத்த தலைமுறையினரே இப்போது அரசியல் முன்னரங்க பகுதிகளில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் காலப்பகுதிகளில் நடந்தவை என்ன? என்பது பற்றி அப்போது சிறுவர்களாக இருந்த இந்த தலைமுறையினர் தெரிந்துகொண்டவை என்ன? என்பது பற்றிய கவலைகள் என்னுள் தொடர்கின்றன.
இவற்றின் பிரதிபலிப்பே இந்தத் தொடர்.
தவிரவும் எவரையும் குறை கூறுவதோ, குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ, யார் மீதும் சேறடிப்பதோ என் நோக்கமல்ல என்பதனை திறந்த மனதுடனும், நேர்மையுடனும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் இந்த தொடரில் வரும் கருத்துகள், விமர்சனங்களுக்கு தனிப்பட்ட வகையில் முழுமையாக நானே பொறுப்பு என்பதனால் தனிப்பட்ட எனது முகநூலில் மட்டுமே இதனைத் தொடரவிருக்கிறேன்.
ஆரோக்கியமான விமர்சனங்களையும், விவாதங்களையும், ஆலோசனைகளையும், ஆதரவையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
Image may contain: one or more people and closeup
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.