Jump to content

இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு 
==================================


சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றிகரமான  செயல்பாடுகளில் ஒன்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசையும் வகையில் சிறுபான்மை இனத்தவர்களில் இருந்து பலரை ஈர்த்து வைத்திருப்பதாகும். அந்த அடிப்படையில் தான் நாம் பல விடயங்களை  புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்ற வழி சமைக்கும்.

சம்பவம் ஒன்று: பேராசிரியர் சுரேன் ராகவன் இந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில், கனடிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றில் உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே மாதம் தமிழர் இனவழிப்பு வாரம் அனுஷ்டிக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பது தவறு, இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்கிறார்.
சம்பவம் இரண்டு: இரவோடிரவாக யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைத்து அகற்றப்படுகிறது. 

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
1. இரண்டுமே தமிழர்கள் மீதான இனவழிப்புத் தாக்குதல் தொடர்பானவை.
2. இரண்டிலுமே முன்னரங்கில் நிறுத்தப்பட்டவர்கள் தமிழர்கள்
3. இருவருமே பேராசிரியர் தரத்தில் உள்ள கல்விமான்கள்

ஆனால் இருவரும் இலங்கை அரசாங்கத்தின் அங்கம். ஒருவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் சென்றவர். மற்றவர் சனாதிபதியால் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். இருவரின் செயற்பாடும் கருத்துரைகளும் அவர்கள் சார்ந்த அரச இயந்திரத்தின் அறிவுறுத்தல்களின்படியே அமையும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் அவ்வாறே நடக்கச் சத்தியம் செய்தவர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களையும் இன்னுமொரு வகையிலும் பார்க்க வேண்டும். உண்மையில் விஜய் தணிகாசலம் இனவழிப்பு வாரம் ஒன்டாரியோவில் அனுஸ்டிக்கும் பிரேரணையை முன்வைத்தது கடந்த வருடம் மே மாதம். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை புதிய பாராளுமன்றம் இயங்கத் தொடங்கிவிட்ட நிலையில் ஏன் சுரேன் ராகவன் இத்தனை மாதங்கள் கழித்து இந்த விடயத்தை கையில் எடுத்தார்? இலங்கைக்கு ஐ.நா. சபை கொடுத்தா நீட்டித்த காலக்கெடு இந்த வருடம் முடிவதற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா? சுரேன் ராகவன் குறித்த விடயத்தைப் பாராளுமன்றில் பேசிய மூன்றே நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவு கட்டிடம் யாழில் உடைக்கப்பட்டது, முள்ளிவாய்க்கால் தொடர்பான சாட்சியமாக அது மாறிவிடக் கூடாது என்பதாலா? அல்லது இவை எல்லாம் எதேச்சையாக நடைபெற்றனவா? 

திங்கட் கிழமையிலிருந்து நேற்று வரை ஊடகங்களும் மக்களும் பேரா. சுரேன் ராகவனை துரோகியென்று, கோடரிக் காம்பென்றும் தூற்றிக் கொண்டிருந்தனர். நேற்றிலிருந்து அவருக்கு கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிட்டு பேரா. சற்குணராஜாவை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறார்கள். சுரேன் ராகவனை திட்டியதைவிட இவர் மீதான தாக்குதல் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.

தமிழர்கள் இவ்வாறு இயங்குவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த காலங்களிலும் அரசோடு இயங்கும் தமிழர்களையும் தேசியத்தை கேள்விக்குட்படுத்தும் தமிழரையும் துரோகியென்றும் காட்டி கொடுத்தவன், கூட்டிக் கொடுத்தவன் என்றும் பட்டம் சூட்டித் தங்கள் இயலாமையை திருப்திப்படுத்தும் வேலையையே பலர் செய்து வந்திருக்கின்றனர்.

நாம் முதலில் சுரேன் இராகவனையும் அவரின் அரசியலையும்  புரிந்து கொள்ள வேண்டும். அதே போல யாழ்பல்கலைக்கழக துணை வேந்தரையும் புரிந்து கொள்ள முடியுமா என்பதை பல்முனை கேள்விகளை எழுப்பி சிந்திக்க  வேண்டும்.   

சுரேன் இராகவனை எந்த அடிப்படையில் துரோகி என புரிந்து  வைத்திருக்கிறார்கள்? சுரேன் இராகவன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒத்த நிகழ்ச்சி நிரலாளர் என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், சுரேன் இராகவனை தமிழர் என்கிற அடிப்படையில், துரோகி என  விளிக்கிறார்கள்.  வீட்டில் உள்ள ஒருவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த போது அவரையே துரோகி என்கிற எம்மினம், இனத்துக்கே துரோகம் செய்தவனை துரோகி என்றுதானே அழைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் வாதம்.

ஆனால் அவ்வாறு சரியாக ஆராயாது ஒருவரை துரோகியென்று விளிப்பதும், தாழ்த்தி எழுதுவதும்  மட்டும் எமக்கான விடிவைத் தந்துவிடாது. இவ்வாறான செயல்கள், எம்மையே விரக்திக்குள் தள்ளுவதுடன் ஒடுக்கப்படும் இனம் முன்னெடுக்க வேண்டிய எதிர்ப்பரசியலில் அந்த இனத்தின் அறிவார்ந்த வீச்செல்லையை  மலினப்படுத்தும் செயலன்றி வேறல்ல. 

எப்போது சுரேன் இராகவன் ஈழத் தமிழர்களோடு தோளோடு தோள் நின்று ஈழப்பிரச்சினையில் எம் மக்களிற்காக குரல் கொடுத்தார், இன்று அவர் மாறி நின்று எமக்கு துரோகம் செய்வதற்கு? இந்த ஒரு சாமானியக் கேள்வியை கூட மனதளவில் உய்த்தறிய முடியாதவர்கள் தமிழ்த்தேசியர்களாக வலம் வந்தால் தமிழ்த்தேசியம் எவ்வாறு தமது இனத்துவ விடுதலையை தகவமைத்துக் கொள்ளும்?

வடமாகாணத்திற்கு தமிழர் ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்ற அழுத்தம் இருந்தபோது அரசு கண்டெடுத்த முத்துத்தான் இந்த சுரேன் ராகவன். அப்போதும் சரி (ஆளுனர்) இப்போதும் சரி (பா.உ) அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஒரு இலங்கையராக, அரசின் அங்கமாகத் திறம்படச் செய்கிறார். அதனை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில்  முறியடிப்பது தான் எமது அறிவுடமை. மாறாக அவருக்கு துரோகிப்பட்டம் கொடுத்து தொங்கவிடுவது  அல்ல. அதனால் எதுவும் மாறிவிடப் போவதுமில்லை.

இப்போது  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு துரோகிப்பட்டம் கட்டித் தொங்க விடப்படுகிறது. முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவர் ஒரு அரச ஊழியர். சனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர், அவருக்கு UGC அல்லது சனாதிபதி இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் கடமை. அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விலகியிருந்தாலும் அந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. இன்று இரானுவத் தளபதியும் UGCயின் தலைவரும் தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பத்தமும் இல்லை என்று சொல்லுவதையும் ஒரு தந்திர அரசியலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

“நாம் அவரை நல்லது செய்வார் என்றும் நம்பினோம், இப்படித் துரோகம் செய்துவிட்டார்” என்று வருந்துவோரும் வைவோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர் ஒன்றும் வடக்கிற்கு விடிவெள்ளியாக பதவியேற்கவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகி. அவ்வளவுதான். நீங்கள்தான் அவருக்கு உங்களுக்குப் பிடித்த வகையில் பட்டுக் குஞ்சம் கட்டி மகிழ்ந்தீர்கள். இதில் அவர் குற்றம் ஏதுமில்லை. 2019 February இல் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த நினைவுத் தூபியை அகற்ற முயன்ற அரசு அது முடியாத நிலையில்தான் முன்னர் இருந்தவரைத் தூக்கிவிட்டு இவரை உபவேந்தராகக் கொண்டு வந்தது என்று சொல்லப்படுவது உண்மையென்றால் அதன் பின்னணியில் இவரில் யாரும் கோபப்படுவதில் நியாயமில்லை. 

மேற் சொன்ன இரண்டு சம்பவங்களிலும் அரசு தந்திரமாகத் தான் செய்ய நினைப்பதை தமிழ் பேசுவோரை கருவிகளாக பயன்படுத்தி செய்து முடித்திருக்கிறது. இதில் அரசுக்கு மூன்று ஆதாயங்கள்.  ஒன்று, அரசு செய்ய நினைப்பதை தமிழரைக் கொண்டே செய்துவிடுகிறது. இரண்டு, இதன்போது தமிழர்களை முன்னிறுத்துவதால், இந்த அரசு தமிழருக்கு எதிரானது இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முடியும். மூன்று, நிகழ்வின் பின்னர் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு குறித்த தமிழரையே குறிவைத்துத் தாக்குவார்கள். அதனால் அரசின் மீதான கோபம் இலகுவாகத் திசை திருப்பப்படும். இதையேதான் கடந்தகால அரசுகளும் செய்து வந்திருக்கின்றன. நாமும் உணர்ச்சிவசப்பட்டு தமிழரையே குறிவைத்துத் தாக்கி வந்திருக்கிறோம். 

தமிழ் மக்கள் தொடர்ந்தும் எய்தவன் இருக்க அம்பைத்தான் நோகிறார்களே தவிர எய்தவன்மீதுதான் எப்போதும் எமது இலக்கு இருக்க வேண்டும் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். நாம் இவ்வாறு தொடர்ந்தும் அடக்கு முறை அரசின்  பதவிசார் கட்டிப்பாட்டில் இருக்கும் தமிழர்களைத் துரோகி ஆக்குவது அறிவார்ந்த விடயமல்ல. தமிழ் மக்களை அடக்கியாளும் அரச இயந்திரத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் சக்தியை வீணடிக்காது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான இறந்தவரை நினைவுகூரலுக்குரிய உரிமைகளை அரச இயந்திரம் தடுப்பதை எதிர்த்து குரல் கொடுப்பதே இன்றுள்ள தேவை. 

அதேநேரத்தில், இந்தத் தூபி இறுதி யுத்த காலத்தில் இறந்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள், அவர்களின் குடும்பத்தார் நினைவாகக் கட்டப்பட்டது என்ற வகையில்  உபவேந்தர் மாற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்ற வாதத்தைப் புறந்தள்ள முடியாது. இந்த இடத்தில் சுரேன் ராகவன் உச்சரிக்கும் “நல்லிணக்கம்” பல்லிளிக்கிறது என்பதுதான் உண்மை. தன்னோடு உடன் படித்த சக மாணவர்களை நினைவுகூரும் உரிமையையே அரசு மறுக்கிறது என்றால் சுரேன் ராகவன் வலியுறுத்தும் நல்லிணக்கம் எது என்ற கேள்விதான் இன்று பூதாகரமாக எங்கள் முன் நிற்கிறது.

 

https://www.facebook.com/101881847986243/posts/251902726317487/?d=n

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன். சிறந்த கட்டுரை.உசுப்பேற்றலூடாக பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும் கட்டுரைகள் மத்தியில் இப்படியான சிறந்த அறிவூட்டல் கட்டுரைகளும் வருவது மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினையும் எதிர்வினையும்
=====================

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஸ்பம் சாத்தியே
முட்டு முட்டு முணுமுணென்று மந்திரங்கள் ஓதியும்....!

ஓ! மன்னிக்கவும். சொல்ல வந்ததை விட்டுவிட்டு மறந்து போய் சித்தர் பாடலில் ஆரம்பித்து விட்டேன். சரி விடயத்துக்கு வருவோம். ஒருவழியாக ஜனவரி 11ம் திகதி காலையில் உபவேந்தர் மாணவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததோடு பூசை செய்து இரண்டு கற்கள் வைத்து அடிக்கல்லும் நாட்டியுள்ளார். இனி......!?

இன்றும் நாளையும், மாணவர்கள் தமது உண்ணாநோன்பே வென்றதென்று மகிழக் கூடும். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தாங்களே சாதித்ததாக மகிழவும் கூடும். கனடாவில் வாகனத்தில் புலிக்கொடி கட்டி ஊர்வலம் போனோர் தங்கள் செயலால் இலங்கை அரசு வெருண்டு விட்டது என்று மார்தட்டிக் கொள்ளவும் கூடும். தமிழக அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு, தங்களுக்குப் பயந்தே இலங்கை அரசு இறங்கி வந்ததாக மேடை போட்டுச் சொல்லக் கூடும்.

ஆனாலும் நான் சிறுவயதில் படித்த “பருத்தித்துறை ஊராம், பவளக்கொடி பேராம்” என்ற கதைப்பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. Moral of the story – கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசேல். இந்த விடயத்தில் இந்தக் கதைதான் மிகப் பொருத்தமானது.

அடிக்கல் நாட்டும் முன்னர் உபவேந்தர் பொலிஸ் அதிகாரியிடம் பேசுவதைக் கவனித்தால் இலைமறையான சில விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகிறார்.
1. நான் UGCக்கு எழுதினேன். எனக்கு அரசிலிருந்து பிரச்சனையை சுமுகமாக கையாளும்படி  சொல்லப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் கன பிரச்சினை. இன்று சம்பத் இந்திய தூதரகத்துக்குப் போறார்.
3. முறையான அனுமதியுடன்தான் மீண்டும் தூபி கட்டப்படும்.
4. இன்று இந்தப் பிள்ளைகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதை அடையாளப்படுத்த மட்டுமே இரண்டு கற்கள் வைத்து அடிக்கல் நாட்டுவது மட்டுமே நடைபெறும்.

இதில் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? 

உபவேந்தர் பொலிஸ் அதிகாரியுடன் பேசிய விடயங்களிலிருந்து நாங்கள் ஊகிக்கக்கூடியது, தற்போதைக்கு இந்தப் பிரச்சனையை தற்காலிகமாக தணிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தம் இந்தியாவிலிருந்து வந்துள்ளது. ஆனால் அதற்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை அரசு பயந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். 

அழுத்தம் கொடுப்பது இந்திய மத்திய அரசு. மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள்தான் காரணம் போல் தெரிந்தாலும் அவர்களால் தமிழக மக்கள் மத்தியில் இந்தத் தூபி தொடர்பாக தற்போதுள்ள கொதிநிலையே காரணம். இந்த வருடம் மே மாதம் இந்தியாவில் தேர்தல் வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கில்லை. இந்த தூபி விவகாரம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ள நிலையில் பா.ஜ.க. கட்சி தற்போது ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க. வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் அது மீண்டும் தமிழ்நாட்டில் மண் கெளவும் நிலையே ஏற்படும். அதைத் தவிர்க்கவே இந்தியா அவசர அவசரமாக இலங்கைமீது அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்து, உபவேந்தர் தெளிவாகச் சொல்லுவது கேட்கிறது, “இன்று அடிக்கல் மட்டுமே நாட்டுகிறோம். பின்னர் முறையான அனுமதி பெற்றே தூபி கட்டப்படும்”. இங்கு நாம் சில விடயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் எதற்கெடுத்தாலும் உபவேந்தரின் மேல் பாய்வதை நிறுத்துங்கள். அவர் வெறும் பகடைக் காய் மட்டுமே. இரண்டாவதாக,  இந்த விடயத்தைத் தற்காலிகமாக தணிப்பதற்காகவே இந்த அடிக்கல் நாட்டுவிழா என்பதை நாம் தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். இதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டதா அல்லது அரசு என்று அனுமதி வழங்கும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நாளை (அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ வருசமோ) மீண்டும் அனுமதி கொடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை உபவேந்தர் பலிக்கடா ஆக்கப்படக்கூடும். உடனே எமது ஊடகர்களும் அரசியவாதிகளும் அவரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் கூடும். 

இங்கு முதலில் வினையாற்றிய இலங்கை அரசு அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கோ தமிழ் அரசியல்வாதிகளுக்கோ பயந்துவிடவில்லை. தமிழகத்தில் எழுந்த எதிர்வினையால், இந்திய ஆளும் கட்சி கொடுத்த அழுத்தத்தாலேயே தற்காலிகமாக இந்த விடயத்தைத் தள்ளிப் போடும் வகையில் நடந்து கொள்கிறது. 

2009 இல் இதேபோல மே மாதம் தமிழகத்தில் நடைபெற இருந்த தேர்தலுக்கு முன்னர் இறுதி யுத்தத்தை துரிதப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுத்தது. இன்று தேர்தல் முடியும்வரை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது. 

இந்த வகையில், மாணவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சரியான திசையில் எதிர்வினையாற்றவில்லை என்றால், நேற்று யாழ் வளாகத்தில்  நாட்டப்பட்டது அடிக்கல்லாக அல்ல, தூபிக்கு வைத்த முற்றுப்புள்ளியாகவே  நிலைத்துவிடும்.

நாம் எப்படி வினையாற்ற வேண்டும் அல்லது எதிர்வினையாற்ற வேண்டும்?

1. மாணவர்கள்
முதலில் இந்த விடயத்தில் யாழ் பல்கலைக் கழகத்தின் மாணவர் சமூகம் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்ட வேண்டும். உங்கள் தற்காலிக வெற்றி நிரந்தர வெற்றியாக வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் சரியான திசையில்தான் காய் நகர்த்துகிறீர்களா?

உங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வந்த அரசியல்வாதிகளும் சரி அறிக்கை விட்டவர்களும் சரி உணமையிலேயே உங்கள் உணர்வை மதித்துதான் ஆதரவு செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்க்குள் சிலர் நேர்மையாக உங்களுடன் நிற்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் என்றபோதும், பலரும் இதனைத் தங்கள் அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

தமிழகத்தில் மாணவர்கள், அரசியல்வாதிகளைத் கொஞ்சம் தள்ளி வைத்துப் போராடிய விடயங்களில்தான் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஒரு பாடம். நீங்களும் இந்த அரசியல்வாதிகளை அவர்கள் எங்கு போராடவேண்டுமோ அங்கு சென்று போராடச் சொல்லுங்கள். இதில் மட்டுமல்ல, பல்கலைக் கழகம் சார்ந்த வேறு விடயங்களிலும் அரசியல்வாதிகள் மூக்கை நுழைக்க அனுமதிக்காதீர்கள்.

மறுபுறத்தில் உங்கள் பல்கலைக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட சிங்கள மாணவர்கள் உங்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் நிலையில் எவ்வளவு தூரம் நீங்கள் அவர்களை இவ்வாறான விடயங்களில் உள்ளீர்த்தீர்கள்? உங்கள் கோரிக்கை நியாமானது என்று குரல் கொடுத்துள்ள Law Students Association of Sri Lanka இன் தலைவரான சஜினி விக்ரமசிங்கவின் குரல் உங்கள் காதுகளில் விழுந்ததா? நீங்கள் ஏன் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பல்கலைக் கழக மாணவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை?

இனியாவது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாது, எமது பிரச்சினையை உங்கள் மாணவர் அமைப்பூடாக சிங்கள, முஸ்லிம் மாணவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வதோடு உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள். அனைத்துப் பலகலைக் கழக மாணவர்கள் அமைப்பை அணுகுங்கள். இதன்மூலம் தலைநகரிலும் தெற்கிலும் இந்த விடயத்தை எடுத்துச் செல்ல முடியும். முடிந்தால் ஏனைய பல்கலைக் கழகங்களிலும் போரின்போது இறந்த பொதுமக்களுக்கு நினைவுத் தூபி கட்டுவதற்கு முயற்சி எடுக்க அந்தப் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களோடு இணைந்து முயற்சியெடுங்கள்.
  
2. அரசியல்வாதிகள்
வடக்கு, கிழக்கின் அரசியல்வாதிகளான நீங்கள் மாணவர் போராட்டதிற்கு ஆதரவு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களில் பலர் போராட்டக் களத்திற்கு சென்று மாணவர்களுடன் கதைத்து விபரம் கேட்பதைக் காணொளிகளில் பார்க்க முடிந்தது. அதன்பின்னர் நீங்கள் விட்ட அறிக்கைகளைப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது, மகிழ்ச்சி!! 

ஆனால் இவ்வாறு போராட்ட களத்திற்கு சென்று விபரம் சேகரிப்பதும் பின்னர் அதை செய்தியாக்கி வெளியிடுவதும் ஊடகங்களின் வேலையல்லவா? நீங்கள் எதற்காக ஊடகங்களின் வேலையைச் செய்கிறீர்கள்? அதற்குத்தான் எம்மத்தியில் தேவைக்கு அதிகமான ஊடகங்கள் இருக்கின்றனவே?

இந்த விடயம் தொடர்பாக பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுத் தலைவர், இந்தத் தூபி வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு தடை என்கிறார். அமைச்சர் ஒருவர், பொதுமக்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை தமிழ் மாணவர்கள் நினைவு கூருகிறார்கள் என்று கூறுகிறார். இவற்றுக்கு நீங்கள் ஆற்றிய எதிர்வினை என்ன? நீங்கள் ஏன் கொழும்பில் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளை அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைச் செய்து உண்மையான விடயங்களைத் தெரிவிக்கவில்லை. எத்தனை வருடங்களுக்குத்தான் இந்த உப்புச் சப்பில்லா கடையடைப்பு என்ற கண்துடைப்பைச் செய்யப் போகிறீர்கள்? எப்போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

ஏற்கனவே பலர் இதெல்லாம் வரும் மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து நீங்கள் செய்யும் சித்து வேலை என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இது பொய்யென்று நிரூபிக்க இது நல்ல சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். உங்களால் ஏன் உங்கள் கட்சி அலுவலகங்களில் ஒரு நினைவுத் தூபி கட்ட முடியாது? அப்படிக் ஒவ்வொரு கட்சியும் தூபிகளைக் கட்டினால் அதை எப்படி அரசாங்கம் சட்ட விரோதக் கட்டிடம் என்று சொல்லி அகற்ற முடியும்? பாராளுமன்றில் இதைப்பற்றி பேசுங்கள். நினைவுத் தூபி அமைவதை உறுதி செய்யுங்கள். 

3. தமிழ் ஊடகங்கள் 
இன்று பல தமிழ் ஊடகங்கள் எவ்வாறான பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்குகின்றன என்ற கேள்வியை ஊடகங்கள் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இன்று இருக்கின்றன. ஏனெனில் இந்த நினைவுத் தூபி விடயத்திலும் தமிழ் ஊடகங்கள் சரியான பாதையில் மக்களை வழிநடத்தத் தவறிவிட்டன என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது. 

இவர்கள் கடந்த சில நாட்களாக வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்லும் விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டும் உபவேந்தரை மட்டுமே மையப்புள்ளியாக வைத்துமே வெளியிடப்படும் செய்திகளாகவே இருக்கின்றன. உபவேந்தர் நல்லவரா கெட்டவரா என்ற பட்டிமன்றம் ஒன்று வைக்காதது மட்டும்தான் குறை. 

இந்த விடயத்தில் உபவேந்தர் ஒரு கருவி மட்டுமே, இன்னொரு வகையில் சொன்னால் அவர் ஒரு பகடைக்காய். உண்மையில் அரசுதான் பின்னாலிருந்து இதனைச் செய்கிறது.  ஊடகங்களில் உள்ள சிலருக்கு இந்த உண்மை தெரியாமலும் இல்லை. ஆனால், இப்படியான பரபரப்பான செய்திகளையே வெளியிடுவதன் மூலம் மக்களைத் திசை திருப்பி, அரசின் அபிலாசைகளை தங்களையறியாமலே இந்த ஊடகங்களே நிறைவு செய்கின்றன. 

சில ஊடகங்கள் தாம் சார்ந்த அரசியல் கட்சிகளின் ஊதுகுழலாக இருப்பதாலும் இவ்வாறான அரைகுறைச் செய்திகளை வெளியிட்டு மக்களைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்கின்றன. அதேபோல சில ஊடகங்கள் தமது பிழைப்புக்காக, அரசின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டாது இளகிய இரும்பாகப் பார்த்து அடிக்கும் வேலையையே செய்கின்றன. 

இப்படியாக ஒரு சாதாரண மனிதன் சமூக வலைத் தளத்தில் எழுதுவதுபோல எழுதும் இந்த ஊடகங்களின் தேவையென்ன? இவ்வாறான நிகழ்வுகளின்போது  பிரச்சனையின் பல பக்கங்களையும் ஆராய்ந்து அந்தத் தரவுகள் மூலம் தமது கருத்தை காத்திரமாக வெளியிடுவதே எமது ஊடகங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது ஊடகங்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகிறோம். 

4. பொதுமக்கள் 
பொதுமக்களுக்கு நாம் பணிவுடன் சொல்ல விரும்புவது – இந்தக் குறளைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள். இந்தக் குறளின் பொருளுணர்ந்து வாசியுங்கள்.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பதறிவு”

 

https://www.facebook.com/101881847986243/posts/252949492879477/?d=n

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.