Jump to content

விவசாயிகள்... பிரியாணி, உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Rajasthan Assembly Elections 2018: Sangh poster boys are back in ring;  Madan Dilawar leads pack

விவசாயிகள்... பிரியாணி, உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பறவைகள் வாயிலாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ மதன் திலாவர் அளித்த பேட்டியில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் பறவைகாய்ச்சலை பரப்பும் சதியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டைப் பற்றி கவலைப்படாமல் விவசாயிகள் இதுபோல செயல்படுவதாகவும் அவர் குறைகூறியுள்ளார்.

எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் வெறுமனே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவை காய்ச்சலை பரப்புவதாகவும் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியை வேகவைத்து உண்ணும் போது அதன் வாயிலாக பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://athavannews.com/விவசாயிகள்-பிரியாணி-உண்ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.