Jump to content

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்  - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்  - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்

  • January 10, 20216:38 am

 

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் எடுத்த முடிவு, காலத்திற்கு தேவையான முடிவாகும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இருட்டோடு இருட்டாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில், நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் வருட காலப்பகுதியில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் குழுவினால் ஏதோ ஒரு நினைவுத்தூபியொன்று அதற்குள் கட்டியெழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த நினைவுத்தூபியை அடிக்கடி மேம்படுத்தப்பட்டதான விடயத்தையும் அறியக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் உண்மையில் தெரிவிப்பதாயின், அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும்.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவாகும் அது.

தற்பொழுது பல்கலைக்கழக கட்டமைப்பில் கற்கும் மாணவர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் 9, 10 மற்றும் 11 வயதைக் கொண்டிருந்த எமது மாணவர்கள் ஆவர். தமிழ் , சிங்களம் அல்லது முஸ்லிம் எந்தவொரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உட்பட்டவராக இருந்த போதிலும் இலங்கையர்களாகிய எமது பிள்ளைகள் இவர்கள்.

இதன் காரணமாக இன்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைகின்றோம் என்பது என்னவெனில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சுமார் 1500 பேர் கல்வி கற்கின்றனர். அத்துடன் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆகக் குறைந்த ரீதியில் 600 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட தமிழ் மாணவர்கள் விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் எமக்குள்ள முக்கியத்துவமான விடயம் தான் எமது மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகும்.

இதன் காரணமாக எமக்கு முன்பிருந்த அந்த அனுபவங்களை எதிர்காலத்திலும் காண்பதற்கு ஏற்படாது என்பற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு காரணி தான் இந்த மாணவர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் , சமாதானம் ஆகும். இவர்கள் இருப்பது பொதுவான சாதாரண விடுதிகளில் ஆகும். இவர்கள் கலந்துகொள்வது பொதுவான விரிவுரைகளிலாகும். இவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் இடம்பெறுவது பொதுவானதாகவே இடம்பெறுகிறது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதிருப்பதற்கு மாணவர்களே பொறுப்பாக இருப்பது தொடர்பில் நாம் நாடு, இனம் என்ற ரீதியில் உண்மையிலேயே அதிஷ்டமான விடயமாகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் அவர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இந்த நினைவுத் தூபியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் இருந்து அகற்றப்படுகிறது. நான் நினைக்கும் வகையில் இது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும். எமக்கு தேவைப்படுவது என்னவெனில் யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச்சின்னங்களேயாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 

https://www.meenagam.com/எமக்கு-தேவைப்படுவது-யுத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

தலைவரே! எங்கு சற்குணத்தார் இருக்கிறரோ அங்கே திருநீற்று பூச்சு அவசியம். 😁

யாழ். பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : மாணவர்கள் நால்வருக்கு வழங்கப்பட்ட  தண்டனை! - CapitalNews.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர்.

தனக்கு வேண்டிய, தான் காலால் இட்டதை தலைமேற் கொண்டு செய்யும் அடிமைகளை சிங்களம் இப்படி புகழ்வது இது ஒன்றும் புதியதல்லவே. டக்கிலஸையும் மஹிந்த இப்படித்தான் புகழ்ந்தார், புகழ்கிறார்.

1 hour ago, கிருபன் said:

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்.

  இவர்கள் யுத்த வெற்றிவிழா கொண்டாடலாம், நினைவுத்தூபி அமைக்கலாம், எம்மை வெற்றிகொண்டதை சொல்லிச்சொல்லி பயமுறுத்தலாம், நகையாடலாம். அப்போ நம் மாணவர் மனம் புண்படாது, சமாதானம் மலரும். விளக்கத்தை பாருங்கள். யுத்தம் செய்வோம், அழிப்போம் நீங்கள் எல்லாவற்றையும் மறந்து எம்மைத் துதிக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே குழி பறிக்கிறார்கள்.

அன்று கல்விமான்கள் அகற்றப்பட்டதற்கான காரணத்தை  இங்கு நிதர்சனமாக காண்கிறோம். சிங்களத்தின் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் வித்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு ஜி சி சிங்கள பெளத்த பேரினவாத அரசியல் நிரலை செயல்படுத்தும் ஒரு பேரினவாத அமைப்பாகச் செயற்படுவது கண்டிக்கத்தக்கது.

வடக்குக் கிழக்கில் யுத்த நினைவுச் சின்னங்கள் இராணுவத்தால் கடற்படையால் அமைக்கப்பட்டுள்ளன. தென்பகுதியில் பல்கலைக்கழகங்களில் ஜே வி பியின் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இராணுவ வெற்றி நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி ஏன் யு ஜி சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவை மட்டும் என்ன சமாதானப் புறாவை ஞாபகப்படுத்தி நிற்கின்றனவோ.

உலகெங்கும் மரணித்தவர்களுக்கு குறிப்பாக யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு நினைவிடங்கள் இருக்கும் போது.. யு ஜி சியின் காட்டுமிராண்டித்தனமான இனப்பாகுபாட்டு அடிப்படையிலான இந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி உடைப்பு எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது.

யு ஜி சி அரச ஏவல் அமைப்பு அல்லது சிங்கள இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பாக இருப்பது சொறீலங்காவின் உயர்கல்வி இராணுவ மயமாவதையும் முழுச் சிங்கள மயமாவதையுமே எடுத்துச் சொல்கிறது. இது பன்னின இனச் சமூக நாடு ஒன்றுக்கு உகந்த ஒரு கட்டமைப்பு அல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.