Jump to content

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
வாட்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.

வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுவது ஒருபுறமிருக்க, இந்தியர்கள் பெரியளவில் பின்தொடர்ந்து வரும் அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்க்கே வாட்சாப்க்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துங்கள் என்று கூறுவதும், வாட்சாப் குழுக்களில் கூகுள் தேடல் வழியாக யார் வேண்டுமானாலும் உள்நுழைந்துவிட முடியும் என்ற சர்ச்சையும் பயன்பாட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், மக்கள் உண்மையிலேயே வாட்சாப் செயலியிலிருந்து மற்ற செயலிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்களா என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் சேவையை கொண்டு பரிசோதித்து பார்த்தோம்.

அலறும் வாட்சாப் பயனர்கள்: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகளுக்கு மாற முடியுமா?

பட மூலாதாரம்,REUTERS

அதில் வியப்பளிக்கும் வகையிலான பதில்கள் கிடைத்தன. ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்புவரை வாட்சாப் வெப், வாட்சாப் ஸ்டேட்டஸ், வாட்சாப் கணக்குக்கான புகைப்படங்கள், ஏ.பி.கே கோப்பு பதிவிறக்கம் உள்ளிட்ட பயன்பாட்டு ரீதியிலான தேடல்களை மேற்கொண்டு வந்த பயனர்கள், தற்போது நேரெதிர்மறையாக வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்சாப் மற்றும் சிக்னல் செயலிகள் குறித்த ஒப்பீடு, சிக்னல் செயலிக்கு மாறுவது எப்படி, வாட்சாப் - சிக்னல் - டெலிகிராம் குறித்த ஒப்பீடு, வாட்சாப் குறித்து ஈலோன் மஸ்க் கூறியது என்ன?, வாட்சாப்க்கு மாற்று என்ன? என்பது உள்ளிட்ட எண்ணற்ற கேள்விகளை கூகுள் தேடல் மூலம் முன்வைத்து வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, மேற்கண்ட தேடலை இந்திய அளவில் பார்க்கும்போது, குஜராத் முதலிடத்திலும், தெலங்கானா, சண்டிகர், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக கூகுள் கூறுகிறது.

அதுவே தமிழக அளவில் இதுதொடர்பான கூகுள் தேடல் குறித்த தரவை பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் என்ற பகுதியில் அதிகபட்சமாகவும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கழனிவாசல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் உள்ளிட்ட ஊர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் திருச்சி 16ஆவது இடத்திலும், தலைநகர் சென்னை 17ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்ட தலைநகரங்களை விட இரண்டாம் கட்ட மற்றும் ஊரகப் பகுதிகளை சேந்தவர்களே இதுகுறித்து ஆவலோடு தேடி வருவதாக தெரிகிறது.

வாட்சாப்புக்கு மாற்று என்ன?

வாட்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்சாப் நிறுவனம் கடும் போட்டிமிக்க செய்தி பரிமாற்ற செயலிகளுக்கான சந்தையில் 200 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டு வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட வாட்சாப்பின் வளர்ச்சியை கண்ட ஃபேஸ்புக் 2014இல் இதை கையகப்படுத்தியது.

எப்போது ஃபேஸ்புக் கட்டுப்பாட்டுக்கு வாட்சாப் சென்றதோ அப்போதே அது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்ற செயலிகள் மற்றும் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்ற அச்சத்தை தொழில்நுட்பவியலாளர்கள் முன்வைத்திருந்தனர். அது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தாமதமாகவே நடந்திருக்கிறதே தவிர, இதில் வியப்படைய ஒன்றுமில்லை என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? - BBC News தமிழ்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.