Jump to content

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு

 
1-87-696x522.jpg
 32 Views

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலீசில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:30

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்களை சிங்களவர் சிலர் பிடித்துச் சென்று மகா ஓயா பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சிங்களவர்களினால் பிடித்துச் சென்ற பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்ததாக தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:54

சிங்கள விவசாயிகளின் பின்னணியில் இருந்து செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநரே மேற்படி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:39

கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு விரோதமாக பிற மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதித்ததன் விளைவாகவே தமிழ் பண்ணையாளர்கள் மீதும் அவர்களது மாடுகள் மீதும் தொடர்ச்சியாக சிங்களவர்கள் தாக்குதல் நடத்த காரணம் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் உறவில் கிழக்கு மாகாண ஆளுநர் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

https://www.ilakku.org/

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

'பேய் அரசுசெய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்' பேய்க்கும் பல குட்டிகள் உண்டாம், அதில் கிழக்கு மாகாண ஆளுநரும் ஒன்றாக இருக்கலாம். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் நித்திரையோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2021 at 23:41, விசுகு said:

அண்ணன் நித்திரையோ???

புது வியாக்கியான கருத்துக்களுடன் வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகளில் சேர்க்கப்பட்ட மாடுகள்? காப்பாற்றுவது யார்- மட்டக்களப்பு அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

 
IMG_8676-696x392.jpg
 23 Views

மூன்று தசாப்தங்களாக மாடுகளை மேய்த்து எமக்காக பால்,தயிர், நெய் என வாய்க்கு ருசியாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தரும் மட்டக்களப்பின் பாரம்பரிய தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பது ஏன்?

இவர்களின் வாக்குகளைப் பெற்று வங்குரோத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் எங்கே?

நீறு பூத்த நெருப்பாக உருவாக்கப்படும் இனவாத வன்முறைகளுக்காக காத்திருக்கிறார்களா இந்த அரசியல்வாதிகள்?

கண்டபடி தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், கடத்திச் சென்று சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் கண்டும் காணாமலும் செல்கிறார்கள் எமது அரசியல் வாதிகள்.

இனவாதத்திற்கு தூபம் காட்டும் அரசியல் தலைவர்களே தமிழ் பண்ணையாளர்களின் உயிர்கள் பறிக்கப்படும்வரை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் அரசியல் நாகரிகமா?

1-87.jpg

இன்னும் எத்தனை காலத்திற்கு போராடுவது அந்த பண்ணையாளர்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட போது எல்லோரும் தமிழர்களாய் துள்ளி எழுந்தோம் வெற்றியும் கண்டோம்.

கிழக்கில் தமிழர்களை கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். அதற்கு எதிராகவும் நாம் அணிதிரளவேண்டும்.

இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை. இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா?

Video Player
 
00:00
 
01:30

பாவம் எங்கள் மாடுகள், அதுகளுக்கு வாக்குகள் இல்லை.  அதுகளை பராமரிக்கும் பண்ணையாளர்களிடமும் பெரும் தொகை வாக்குகள் இல்லை. அதனால் தான் அவர்கள் நாதியற்றவர்களாக அடிவாங்குகின்றனர்.

பாவம் மட்டக்களப்பு சமூகம், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகள் மாடுகளையும் கட்சிகளில் சேர்த்து விட்டனர். அதனால் தான் மாடுகள் கறக்கும் பாலில் கூட கட்சிபேதம் பார்க்கின்றனர். சில அரசியல் தலைவர்கள் அது சாணக்கியனின் மாடுகள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து விட்டதாக கூறி ஒதுங்கி கொண்டார்களாம்.

இதுதான் தொடர்ந்து பண்ணையாளர்கள் தாக்கப்படுகிறார்களாம் .

மாடுகளுக்குள் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகள் மக்கள் பிரச்சினைகள் அனைத்திலும் அரசியல் பாகுபாடு பார்க்கின்றனர்.

மிக கேவலம் நிறைந்த அரசியல் கலாசாரம் கட்டி எழுப்பப்படுகிறது. இதனால் மட்டக்களப்பு சமூகம் இன்னும் இன்னும் பின்நோக்கியே செல்லப்போகிறது.

கடத்தப்பட்டு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பண்ணையாளர்களும் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்கள் குறித்து தமிழர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

WhatsApp-Image-2021-01-11-at-3.43.43-AM.

இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது இவர்களை பலி கொடுக்க தயாராகி வருகிறார்களா மட்டக்களப்பு அரசியல் வாதிகள்? ஏன் இந்த பண்ணையாளர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை?

அனைத்து தமிழர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இவர்களுக்காக போராட வேண்டும் தீர்வு வரும் வரை போராட வேண்டும் ஆயிரம் பேர் இறங்கினால்தான் அரசியல் வாதிகள் நான் முந்தி நீ முந்தி என்று வருவார்கள். அந்த சூழ்நிலை உருவாகும் வரை பண்ணையாளர்களுக்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

 

https://www.ilakku.org/?p=39456

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

ஏன் இந்த பண்ணையாளர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை?

ஒருவர் வடக்கிற்கு வியூகம் அமைக்கபோய்விட்டார்கள்..

இப்பொழுதுதான் இன்னொருவர் வெளியே வந்துள்ளார்கள்.. அவராவது பார்த்து உதவ வேண்டும்.. 

 

23 hours ago, உடையார் said:

இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை. இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா?

ஆதரவற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்காக ஏன் மற்றையவர்கள் குரல் கொடுக்கவில்லை.. மாறாத வடு இருப்பதாலா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

ஒரே வித்தியாசம் அரசுக்கெதிராக இருந்து அரசியல் செய்தால் குறைந்தது ஆக்கிரமிக்கப்படும் எமது தாயகம்பற்றி வெளியுலகிற்காவது கூறமுடியும். ஆனால் அரசுடன் சேர்ந்து அவர்களின் பிணாமிகளாகிவிட்டால் அவர்கள் செய்வதை அமைதியாக ஆமோதிக்கவேண்டும் அல்லது அரசின் திட்டத்தினை அவர்களே முன்னின்று நடத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

 

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

ஒரே வித்தியாசம் அரசுக்கெதிராக இருந்து அரசியல் செய்தால் குறைந்தது ஆக்கிரமிக்கப்படும் எமது தாயகம்பற்றி வெளியுலகிற்காவது கூறமுடியும். ஆனால் அரசுடன் சேர்ந்து அவர்களின் பிணாமிகளாகிவிட்டால் அவர்கள் செய்வதை அமைதியாக ஆமோதிக்கவேண்டும் அல்லது அரசின் திட்டத்தினை அவர்களே முன்னின்று நடத்த வேண்டும்

 

உண்மைதான்..

ஒற்றுமையாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதைதான் சில செய்திகள் காட்டுகின்றன.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்..

ஒற்றுமையாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதைதான் சில செய்திகள் காட்டுகின்றன.. 

வர்த்தமானியில் அறிவிக்கப்படாதவரைக்கும் இப்பிரச்சினை தீரப்போவதில்லையாம் , ஒன்று (முதலமைச்சராக வருபவர் தேர்தல் நடந்தால்)  அறிவிக்கலாம் மேய்ச்சல் தரையென, மற்றது கிழக்கு மாகாண ஆளுநர் அறிவிக்க வேண்டும், நம்மை விட சிங்களம் நன்றாக காய் நகர்த்துகிறது நாமதான் பழைய புண்ணை சொறிந்து கொண்டு இருக்கிறம் 

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

 

மிகச் சரியான கருத்து.

நாம் பலமாக இருப்பது என்பது எல்லோரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் நிற்பது என்பதல்ல. அது வீண்முயற்சி

நாம் பலமாவது என்பது நாம் ஒவ்வொருவரும் எமது இனத்தை பலமானதாக்க என்ன செய்யலாம் என்பதிலிருந்து தொடங்குவது.

அது அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் தொழில்நுட்பம் என்று பலதிசைகளில் அமையலாம்.

அந்தப் பலத்தை நாம் அடைய முயலாது எமக்கு எந்தவாெரு மீட்சியும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையறு நிலையில் இருக்கின்றோம். ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

 

அண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்.....
இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம்  மட்டும் நியாயமாய் மாறும்.....
இதிலை இருந்து என்ன தெரியுது.....???? கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள்.

சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்...

நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம் 

 

Link to comment
Share on other sites

48 minutes ago, valavan said:

நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள்.

சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்...

நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம் 

 

கசப்பான உண்மை. 

எங்களிடையே இது தொடர்பான விழிப்புனர்வின்மையே இதற்கான அடிப்படைக் காரணம்.

விழிப்பு விடுதலையின் முதற்படி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

 

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

இப்ப அவையின்ரை எஜமானர்கள் தானேஆட்சியில் சட்டுப் புட்டென்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிடச்சொல்லுங்கோநெடுக அடுத்தவனைக் குறை சொல்லிக்கொண்டிராமல். அது சரி ஆளுநரும் அவேன்ரை ஆள்தானே. தங்களாலை முடியாட்டில் எலாது எண்டு சொல்ல வேணும் சும்மா அடுத்தாக்களை குறை சொல்லிக்கொண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

கூட்டமைப்பு வேண்டாம் எண்டுதானே இரண்டு பெரிய ஜாம்பவான்களை தூக்கி வைச்சிருக்கிறியள்? அவையள் என்ன அடைகாக்கினமே?

அண்டு தொடக்கம் வடக்கை பாத்து திட்டிக்கொண்டே இருக்கிறியள். ஆனால் சனம் முன்னேறினதாயும் காணேல்லை. சிங்களவனிட்டை அடி வாங்கிறதையும் நிப்பாட்டேல்லை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

இப்ப அவையின்ரை எஜமானர்கள் தானேஆட்சியில் சட்டுப் புட்டென்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிடச்சொல்லுங்கோநெடுக அடுத்தவனைக் குறை சொல்லிக்கொண்டிராமல். அது சரி ஆளுநரும் அவேன்ரை ஆள்தானே. தங்களாலை முடியாட்டில் எலாது எண்டு சொல்ல வேணும் சும்மா அடுத்தாக்களை குறை சொல்லிக்கொண்டு

தற்போது ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது பட்டதாரிகளாக சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக உள்ளீர்ப்பு செய்துள்ளார் , 1300 பேர் வரை , மட்டக்களப்பு நூலக மீள் நிர்மாணம் , மட்டக்களப்பு போதானா வைத்திய சாலைக்கு இதய சத்திர சிகிச்சைக்கு தேவையான மெசின் , திகிலிவெட்டை சந்திவெளி பாலம் நிர்மாணம்  இன்னும்பல செயல் திட்டங்கள் வர இருக்கின்றது . அதில் விவசாயம்  இருக்கிறது அதன் போது இப்பிரச்சினைக்கு  தீர்வு வரலாம் 

 

5 hours ago, குமாரசாமி said:

கூட்டமைப்பு வேண்டாம் எண்டுதானே இரண்டு பெரிய ஜாம்பவான்களை தூக்கி வைச்சிருக்கிறியள்? அவையள் என்ன அடைகாக்கினமே?

அண்டு தொடக்கம் வடக்கை பாத்து திட்டிக்கொண்டே இருக்கிறியள். ஆனால் சனம் முன்னேறினதாயும் காணேல்லை. சிங்களவனிட்டை அடி வாங்கிறதையும் நிப்பாட்டேல்லை.😁

எப்போதே தீர்ந்திருக்க வேண்டிய தமிழர் பிரச்சினை 30 கால போர் முடிந்த பிறகு உடனே தீருங்கள் என்றால் எப்படி சாமியார் திருடனை கட்டி வைத்து அடித்து கண்ணை முளித்து பார் என்பது போல இருக்கு உங்கள் கதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள்.

சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்...

நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம் 

 

இப்ப நீங்க என்ன சொல்ல வாறியள்.. 🤥

20 hours ago, ரதி said:

 

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

 

இரு தரப்பு.. 1) மாடுகள் 2) பண்ணையாளர்

அரசியல்வாதிகள்..?

கொண்ணரும் அரசியல்வாதிதானே.. பிரச்சனைய முடிக்கிறது... ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்.

கிளிநொச்சியில் கொரோனா பிரச்சனையால் தமிழர்கள் தங்கள் மாடுகளுக்கு உணவளிக் முடியாமையினால் மாடுகள் பட்டினி கிடந்து உருகி சாகின்றனவாம் நண்பர் சொன்னார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்.....
இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம்  மட்டும் நியாயமாய் மாறும்.....
இதிலை இருந்து என்ன தெரியுது.....???? கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...

அண்ணா , பிள்ளையான் கொஞ்சம் கொஞ்சமாய்  செய்து கொண்டு தான் இருக்கிறார் ...கருணா இப்ப பதவியில் இல்லை ... நான் அறிந்த வரைக்கும் அந்த காணிகளில் சிங்கள மக்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாய்  சீசனுக்கு வந்து சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை முடிந்ததும் போய் விடுவார்கள். அதே நேரத்தில் கால் நடை பண்ணையாளர்களும் இருந்தார்கள் ...அப்போது இல்லாத பிரச்சனை இப்போது உருவாகிறதிற்கு என்ன காரணம்?...சிங்களவன் காணி பிடிக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை என்றால் அவர்களை தூண்டி விடுவது யார் ?...இந்த பக்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டுமென்றே எரிகின்ற திரியில் எண்ணெய் ஊற்ற பார்க்கின்றனர் ...பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க ஒருத்தருக்கும் விருப்பம்  இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 09:41, விசுகு said:

அண்ணன் நித்திரையோ???

அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.  

கிழக்கின் விடுதலைஅபிவிருத்தி என்றுதானே கோடரிக்கொம்பானவர்? அப்போ கிழக்கு சிங்கப்பூர் ஆகிட்டுதோ?? எதிரி நாட்டை அபிவிருத்தி செய்ய வெளிக்கிட்டு விட்டார்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.