Jump to content

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

கிழக்கின் விடுதலைஅபிவிருத்தி என்றுதானே கோடரிக்கொம்பானவர்? அப்போ கிழக்கு சிங்கப்பூர் ஆகிட்டுதோ?? எதிரி நாட்டை அபிவிருத்தி செய்ய வெளிக்கிட்டு விட்டார்? 

ஏற்கெனவே குழம்பிப் போயுள்ள குட்டையில் சுலபமாய் மீன் பிடித்து  மஹிந்தா கும்பலுக்கு அன்பளிப்பளிக்க. 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அண்ணா , பிள்ளையான் கொஞ்சம் கொஞ்சமாய்  செய்து கொண்டு தான் இருக்கிறார் ...கருணா இப்ப பதவியில் இல்லை ... நான் அறிந்த வரைக்கும் அந்த காணிகளில் சிங்கள மக்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாய்  சீசனுக்கு வந்து சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை முடிந்ததும் போய் விடுவார்கள். அதே நேரத்தில் கால் நடை பண்ணையாளர்களும் இருந்தார்கள் ...அப்போது இல்லாத பிரச்சனை இப்போது உருவாகிறதிற்கு என்ன காரணம்?...சிங்களவன் காணி பிடிக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை என்றால் அவர்களை தூண்டி விடுவது யார் ?...இந்த பக்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டுமென்றே எரிகின்ற திரியில் எண்ணெய் ஊற்ற பார்க்கின்றனர் ...பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க ஒருத்தருக்கும் விருப்பம்  இல்லை 
 

தன்ரை ஆக்கள்நாலு பேருக்கு வேலை எடுத்துக் குடுத்தால் அது பெரிய விசயம் தான் என்ன,எவ்வளவு செய்யிறார் எங்கடை பிள்ளையான் அம்மாடியோவ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

தன்ரை ஆக்கள்நாலு பேருக்கு வேலை எடுத்துக் குடுத்தால் அது பெரிய விசயம் தான் என்ன,எவ்வளவு செய்யிறார் எங்கடை பிள்ளையான் அம்மாடியோவ்!

அதுவும் அடியாள் வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 17:13, தனிக்காட்டு ராஜா said:

வர்த்தமானியில் அறிவிக்கப்படாதவரைக்கும் இப்பிரச்சினை தீரப்போவதில்லையாம் , ஒன்று (முதலமைச்சராக வருபவர் தேர்தல் நடந்தால்)  அறிவிக்கலாம் மேய்ச்சல் தரையென, மற்றது கிழக்கு மாகாண ஆளுநர் அறிவிக்க வேண்டும், நம்மை விட சிங்களம் நன்றாக காய் நகர்த்துகிறது நாமதான் பழைய புண்ணை சொறிந்து கொண்டு இருக்கிறம் 

 

1 hour ago, ரதி said:

அண்ணா , பிள்ளையான் கொஞ்சம் கொஞ்சமாய்  செய்து கொண்டு தான் இருக்கிறார் ...கருணா இப்ப பதவியில் இல்லை ... நான் அறிந்த வரைக்கும் அந்த காணிகளில் சிங்கள மக்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாய்  சீசனுக்கு வந்து சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை முடிந்ததும் போய் விடுவார்கள். அதே நேரத்தில் கால் நடை பண்ணையாளர்களும் இருந்தார்கள் ...அப்போது இல்லாத பிரச்சனை இப்போது உருவாகிறதிற்கு என்ன காரணம்?...சிங்களவன் காணி பிடிக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை என்றால் அவர்களை தூண்டி விடுவது யார் ?...இந்த பக்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டுமென்றே எரிகின்ற திரியில் எண்ணெய் ஊற்ற பார்க்கின்றனர் ...பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க ஒருத்தருக்கும் விருப்பம்  இல்லை 
 

தனி, ரதி அக்காச்சி,

நான் கீழே எழுத போவதற்கு அட்வான்ஸ் மன்னிப்புகள்.

உங்களை பார்க்க உண்மையிலே கவலையாக உள்ளது.

இனவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், வியாழேந்திரனால் எந்த காத்திரமான முடிவையும் எடுக்க முடியாது.

அவர்களால் மட்டும் அல்ல, சிங்கள மக்கள் ஒரு குழுவாக ஒரு பிக்கு தலைமையில் ஒரு விடயத்தில் இறங்கிய பின், அவர்களை எதிர்த்து எந்த சிறுபான்மை அரசியல்வாதியாலும் எதுவும் செய்ய முடியாது.

அலம்பில், கொக்கிளாய், நாயாறு, வாகரை கடல்களில் இது ஏலவே நடப்பதுதான். 

அதுவரை, வர்த்தமானி, கூட்டமைப்பில் பிழை, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுறம் என்று இழுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆட்சி அவர்களில் தங்கி இருந்தாலாவது ஏதாவது செய்ய முடியும். 2/3 பெரும்பான்மை பாராளுமன்றில் கெஞ்சி கேட்பதை தவிர வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இனவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், வியாழேந்திரனால் எந்த காத்திரமான முடிவையும் எடுக்க முடியாது.

இதை நான் சொல்லவெளிக்கிட்டால் , அப்படியில்லை கொம்மாணும் பிள்ளையானும் பாலும் தேனும் ஓட வைப்பார்கள் என்று அடம்பிடிக்கிறார்களே, என்ன செய்வது? அவ்வளவு விசுவாசம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இதை நான் சொல்லவெளிக்கிட்டால் , அப்படியில்லை கொம்மாணும் பிள்ளையானும் பாலும் தேனும் ஓட வைப்பார்கள் என்று அடம்பிடிக்கிறார்களே, என்ன செய்வது? அவ்வளவு விசுவாசம் !!!

இதை நான் விசுவாசமாக பார்க்கவில்லை ரஞ்சித். 

இந்த அரசியல்தான் இருக்கும் ஒரே வழி என நம்புகிறார்கள். அதனால் - இதுவும் ஒரு முட்டு சந்துதான் என்ற உண்மையை தரிசிக்க மறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இந்த அரசியல்தான் இருக்கும் ஒரே வழி என நம்புகிறார்கள். அதனால் - இதுவும் ஒரு முட்டு சந்துதான் என்ற உண்மையை தரிசிக்க மறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

கோஷான்,

இது ஓரளவிற்குத்தான் சரி. ஆனால் இவர்களை நியாயப்படுத்தும் கருத்துக்களும் இப்போது வெளிவருகின்றன. வேறு வழியில்லாமல் அரசுடன் நிற்கிறோம் என்பதற்கும், "அவர்கள் நியாயமானவர்கள், நீங்கள் மட்டும் நல்லவர்களா?" என்று கேட்பதற்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை நான் விசுவாசமாக பார்க்கவில்லை ரஞ்சித். 

இந்த அரசியல்தான் இருக்கும் ஒரே வழி என நம்புகிறார்கள். அதனால் - இதுவும் ஒரு முட்டு சந்துதான் என்ற உண்மையை தரிசிக்க மறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

என்னைப்பொறுத்தவரை இன்னமும் விரிசல்களை ஏற்படுத்தவேண்டும் அல்லது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில்தான் கிழக்கு அரசியல்வாதிகள் அதிக அக்கறையுடையவர்களாக தெரிகிறது.. இங்கே மறைந்த ஜோசப் பாராஜசிங்கம் வழக்கு சம்பந்தமான செய்தியில் இப்படி ஒரு வாக்கியம் உள்ளது

“ //அதற்கு பின் யாழ்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தை நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட நாங்கள்.//

 

அன்று போல இன்றுவரை கஷ்டபடுவதும் ஏமாறுவதும் இந்த மக்களே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை இன்னமும் விரிசல்களை ஏற்படுத்தவேண்டும் அல்லது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில்தான் கிழக்கு அரசியல்வாதிகள் அதிக அக்கறையுடையவர்களாக தெரிகிறது.. இங்கே மறைந்த ஜோசப் பாராஜசிங்கம் வழக்கு சம்பந்தமான செய்தியில் இப்படி ஒரு வாக்கியம் உள்ளது

“ //அதற்கு பின் யாழ்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தை நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட நாங்கள்.//

 

அன்று போல இன்றுவரை கஷ்டபடுவதும் ஏமாறுவதும் இந்த மக்களே..

விரிசல்களை ஏற்படுத்துவதுதான் அவர்களின் அடிப்படை அரசியலே. 

அடிப்படையில் இனவாத, இனத்தூய்மைவாத அரசியலின் சகோதரம்தான் பிரதேசவாத அரசியலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

“ //அதற்கு பின் யாழ்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தை நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட நாங்கள்.//

சரி, யாழ்ப்பாணி உங்களின் ரத்தத்தை நனையவிட்டான் என்பதற்காக அவனை சிங்களவனோடு சேர்ந்து கொன்றுகுவித்தீர்களே, அது நியாயமானதா? சரி, யாழ்ப்பாணியைக் கொன்றாவது உங்களின் சுதந்திரத்தை அடைகிறீர்களா? இல்லையே, நீங்கள் யாரின் கால்களை ..... சோரம்போகிறீர்களோ அவர்களே இன்று உங்களை அடிமைப்படுத்தி, உங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்களே, அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? யாழ்ப்பாணியை விடுங்கள், அவன் தனதுபாட்டில் ஏதோ செய்துவிட்டுப்போகிறான், ஆனால் உங்களிக்கிருந்த ஒரே அரவணைப்பையும் விட்டுவிட்டு சிங்களவனின் காலில் அல்லவா கிடக்கிறீர்கள், இனி உங்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது. வாழ்த்துக்கள் !!!

4 minutes ago, goshan_che said:

அடிப்படையில் இனவாத, இனத்தூய்மைவாத அரசியலின் சகோதரம்தான் பிரதேசவாத அரசியலும்.

சகோதரம், திண்ணையில இருந்த சூட்டோட இங்கவந்து எழுதுறியள் போல கிடக்கு !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

சகோதரம், திண்ணையில இருந்த சூட்டோட இங்கவந்து எழுதுறியள் போல கிடக்கு !!!

நானும் அப்படித்தான் நினைத்துவிட்டு ஏடாகூடமாக எதுவும் எழுதாமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

 

சகோதரம், திண்ணையில இருந்த சூட்டோட இங்கவந்து எழுதுறியள் போல கிடக்கு !!!

இல்லை ரகு,

இனவாதம், இனத்தூய்மைவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம், சாதிவாதம் இவை எல்லாம் ஒரே குடும்ப உறவுகள் என்பதில் எனக்கு என்றுமே நல்ல தெளிவுதான்.

இந்த தெளிவு இருப்பதால்தான், யாழ்மையவாதம் எப்படி மட்டகளப்பு மக்களை ஓரம்கட்டியது என்பதை யாழில் எழுதும் அதே வேளை, மட்டகளப்பில் பிரதேசவாதத்தை யார் தமது சொந்த  அரசியல் நலனுக்காக கையில் எடுக்கிறார்கள் என்பதையும் அடையாளம் காண முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இனவாதம், இனத்தூய்மைவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம், சாதிவாதம் இவை எல்லாம் ஒரே குடும்ப உறவுகள் என்பதில் எனக்கு என்றுமே நல்ல தெளிவுதான்.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

 

தனி, ரதி அக்காச்சி,

நான் கீழே எழுத போவதற்கு அட்வான்ஸ் மன்னிப்புகள்.

உங்களை பார்க்க உண்மையிலே கவலையாக உள்ளது.

இனவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், வியாழேந்திரனால் எந்த காத்திரமான முடிவையும் எடுக்க முடியாது.

அவர்களால் மட்டும் அல்ல, சிங்கள மக்கள் ஒரு குழுவாக ஒரு பிக்கு தலைமையில் ஒரு விடயத்தில் இறங்கிய பின், அவர்களை எதிர்த்து எந்த சிறுபான்மை அரசியல்வாதியாலும் எதுவும் செய்ய முடியாது.

அலம்பில், கொக்கிளாய், நாயாறு, வாகரை கடல்களில் இது ஏலவே நடப்பதுதான். 

அதுவரை, வர்த்தமானி, கூட்டமைப்பில் பிழை, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுறம் என்று இழுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆட்சி அவர்களில் தங்கி இருந்தாலாவது ஏதாவது செய்ய முடியும். 2/3 பெரும்பான்மை பாராளுமன்றில் கெஞ்சி கேட்பதை தவிர வேறு வழியில்லை.

நீங்கள் சொல்வதை போல்  கெஞ்சி தான் கேட்க முடியும் அதைத் தான் அமலும் ,பிள்ளையானும் செய்கிறார்கள் ...அரசுடன் இணங்கி போய் தமது மக்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுத்தல் ... இந்த மேய்ச்சல் தரை விவகாரத்தில் முதலில் பிரச்சனையை ஆரம்பித்தது இந்த பண்ணையாளர்கள் தான்...இந்த சிங்கள விவசாயிகள் வந்து விவசாயம் செய்து போட்டு சீசன் முடிய போய் விடுவார்கள் ...அவர்கள் இறுதியாய் வந்த போது அவர்களை விட மாட்டோம் என்பதில் தான் பிரச்சனை ஆரம்பித்தது ...இவர்களை தூண்டி விட்டது யார் ? 
பிள்ளையான் ,அமல் மேல் எனக்கும் விமர்சனம் உண்டு ....ஆனால் அவர்கள் தான் கிழக்கிற்கு குறிப்பாய் மடடுவிற்கு தம்மால் முடிந்ததை செய்கிறார்கள் ...கூட்டமைப்பு வீம்பை கை  விட்டு இவர்களோடு கொஞ்சசமாவது  ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ...ஆனால் அரசியல் சுய லாபத்திற்காய் மக்களை தூண்டி விட்டு குளிர் காய்கிறார்கள் ...என்னை பொறுத்த வரை கோத்தா சகோதரர்களை விட பொல்லாதவர்கள் இவர்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்வதை போல்  கெஞ்சி தான் கேட்க முடியும் அதைத் தான் அமலும் ,பிள்ளையானும் செய்கிறார்கள் ...அரசுடன் இணங்கி போய் தமது மக்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுத்தல் ... இந்த மேய்ச்சல் தரை விவகாரத்தில் முதலில் பிரச்சனையை ஆரம்பித்தது இந்த பண்ணையாளர்கள் தான்...இந்த சிங்கள விவசாயிகள் வந்து விவசாயம் செய்து போட்டு சீசன் முடிய போய் விடுவார்கள் ...அவர்கள் இறுதியாய் வந்த போது அவர்களை விட மாட்டோம் என்பதில் தான் பிரச்சனை ஆரம்பித்தது ...இவர்களை தூண்டி விட்டது யார் ? 
பிள்ளையான் ,அமல் மேல் எனக்கும் விமர்சனம் உண்டு ....ஆனால் அவர்கள் தான் கிழக்கிற்கு குறிப்பாய் மடடுவிற்கு தம்மால் முடிந்ததை செய்கிறார்கள் ...கூட்டமைப்பு வீம்பை கை  விட்டு இவர்களோடு கொஞ்சசமாவது  ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ...ஆனால் அரசியல் சுய லாபத்திற்காய் மக்களை தூண்டி விட்டு குளிர் காய்கிறார்கள் ...என்னை பொறுத்த வரை கோத்தா சகோதரர்களை விட பொல்லாதவர்கள் இவர்கள் தான் 

பண்ணைகாரார் சண்டையை ஆரம்பித்ததாக நான் நினைக்கவில்லை.

இலங்கையில் தேவையில்லாமல் போய் சிங்கள மக்களுடன் முறுகும் அளவுக்கு எந்த தமிழரும் இல்லை. முடிவு யாருக்கு சாதகமாக முடியும் என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.

ஆகவே தேவையில்லாமல் கூட்டமைப்பின் தூண்டுதலால் இதுவரை சுமூகமாக போன ஒன்றை குழப்பி சொந்த செலவில் சூனியம் வைக்கும் அளவுக்கு அவர்கள் இருப்பார்கள் என நான் நம்பவில்லை.

தம்மால் முடியாமல் இருக்கிறது என்பதை மறைக்க பண்ணையாளர்கள் மீது வீண் பழி போடப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாதவூரான் said:

தன்ரை ஆக்கள்நாலு பேருக்கு வேலை எடுத்துக் குடுத்தால் அது பெரிய விசயம் தான் என்ன,எவ்வளவு செய்யிறார் எங்கடை பிள்ளையான் அம்மாடியோவ்!

ஓம் நாங்கள், எங்கட குடும்பம்  எங்கட பரம்பரை  இங்கு  நல்ல வேலை , சம்பளத்துடன் வசதியாய் இருப்போம் ...அங்க இருப்பவர்கள் வேலை வெட்டிக்கு போகாமல் உங்களின் கொள்கைக்காய் போராடணும் ...நீங்கள் ஐந்தோ பத்தோ அனுப்பி விட்டு அவர்களை உங்கள் காலடியில் வைத்திருக்க வேண்டும் இல்லையா? 
 

7 minutes ago, goshan_che said:

பண்ணைகாரார் சண்டையை ஆரம்பித்ததாக நான் நினைக்கவில்லை.

இலங்கையில் தேவையில்லாமல் போய் சிங்கள மக்களுடன் முறுகும் அளவுக்கு எந்த தமிழரும் இல்லை. முடிவு யாருக்கு சாதகமாக முடியும் என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.

ஆகவே தேவையில்லாமல் கூட்டமைப்பின் தூண்டுதலால் இதுவரை சுமூகமாக போன ஒன்றை குழப்பி சொந்த செலவில் சூனியம் வைக்கும் அளவுக்கு அவர்கள் இருப்பார்கள் என நான் நம்பவில்லை.

தம்மால் முடியாமல் இருக்கிறது என்பதை மறைக்க பண்ணையாளர்கள் மீது வீண் பழி போடப்படுகிறது.

நான் ஒன்றும் பிள்ளையானுக்காகவோ அல்லது அவர்கள் தரப்பிற்காகவோ கதைக்கவில்லை ...உண்மையில் பிள்ளையான் தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்று எனக்கு தெரியாது ...அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு எது உண்மை ,பொய் என்று தெரியுமல்லவா?
உங்களுக்கு பிள்ளையானை பிடிக்காது என்பதற்காய் அவர் செய்வது, சொல்வது எல்லாம் பொய் என்றாகி விடாது அல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:


 

நான் ஒன்றும் பிள்ளையானுக்காகவோ அல்லது அவர்கள் தரப்பிற்காகவோ கதைக்கவில்லை ...உண்மையில் பிள்ளையான் தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்று எனக்கு தெரியாது ...அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு எது உண்மை ,பொய் என்று தெரியுமல்லவா?
உங்களுக்கு பிள்ளையானை பிடிக்காது என்பதற்காய் அவர் செய்வது, சொல்வது எல்லாம் பொய் என்றாகி விடாது அல்லவா?

 

எனக்கு எந்த அரசியல்வாதியையும் பிடிக்கும், பிடிக்காது என்று இல்லை.

ஆனால் எந்த அரசியல்வாதியும் தன் இயலாமையை ஏற்று கொண்டதாக இல்லைதானே. 

என்னை பொறுத்த மட்டில் பண்ணையாளர்கள் யுஎன்பி ஆட்சியில் சிங்களவருடன் சுமூகமாக பலவருடம் இருந்துவிட்டு கோட்ட அபய ஆட்சியில் சண்டை பிடிக்கிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

ஓம் நாங்கள், எங்கட குடும்பம்  எங்கட பரம்பரை  இங்கு  நல்ல வேலை , சம்பளத்துடன் வசதியாய் இருப்போம் ...அங்க இருப்பவர்கள் வேலை வெட்டிக்கு போகாமல் உங்களின் கொள்கைக்காய் போராடணும் ...நீங்கள் ஐந்தோ பத்தோ அனுப்பி விட்டு அவர்களை உங்கள் காலடியில் வைத்திருக்க வேண்டும் இல்லையா? 
 

நான் ஒன்றும் பிள்ளையானுக்காகவோ அல்லது அவர்கள் தரப்பிற்காகவோ கதைக்கவில்லை ...உண்மையில் பிள்ளையான் தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்று எனக்கு தெரியாது ...அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு எது உண்மை ,பொய் என்று தெரியுமல்லவா?
உங்களுக்கு பிள்ளையானை பிடிக்காது என்பதற்காய் அவர் செய்வது, சொல்வது எல்லாம் பொய் என்றாகி விடாது அல்லவா?

 

என்ரை பரம்பரை எல்லாம் இங்கை இருக்குது என்று யார் உங்களுக்கு சொன்னது.நீங்கள் என்ன ஸ்கொட்லாண்ட் யார்ட்டா.நீங்கள் தான் சொன்னியள் உங்கடை கொண்ணரும் பிள்ளையானும் மக்களுக்காக வேலை செய்யினம் எண்டு. கடைசியிலை தங்கடை ஆக்களை மட்டும் தான் கவனிக்கினம் என்டு சொல்லுறியள். ஆகவே இனி அவையள் கிழக்கின் விடிவெள்ளி அது இது என்டு கதை விடதேங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎01‎-‎2021 at 09:51, வாதவூரான் said:

என்ரை பரம்பரை எல்லாம் இங்கை இருக்குது என்று யார் உங்களுக்கு சொன்னது.நீங்கள் என்ன ஸ்கொட்லாண்ட் யார்ட்டா.நீங்கள் தான் சொன்னியள் உங்கடை கொண்ணரும் பிள்ளையானும் மக்களுக்காக வேலை செய்யினம் எண்டு. கடைசியிலை தங்கடை ஆக்களை மட்டும் தான் கவனிக்கினம் என்டு சொல்லுறியள். ஆகவே இனி அவையள் கிழக்கின் விடிவெள்ளி அது இது என்டு கதை விடதேங்கோ

அவர்கள் தங்கட மக்களுக்கு தான் ஏதாவது செய்வார்கள் ....அதையாவது அவர்கள் செய்கிறார்கள் என்று சந்தோசப்படாமல் எப்ப பாரு எரிச்சல் பட்டு கொண்டு😠💱 ... உங்களுக்கு, அவர்கள் தங்கட மக்களுக்கு ஒன்றுமே செய்யக் கூடாது ....அப்ப தான் அதைக் காட்டி அரசியலாக்கலாம் இல்லையா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர்கள் தங்கட மக்களுக்கு தான் ஏதாவது செய்வார்கள் ....அதையாவது அவர்கள் செய்கிறார்கள் என்று சந்தோசப்படாமல் எப்ப பாரு எரிச்சல் பட்டு கொண்டு😠💱 ... உங்களுக்கு, அவர்கள் தங்கட மக்களுக்கு ஒன்றுமே செய்யக் கூடாது ....அப்ப தான் அதைக் காட்டி அரசியலாக்கலாம் இல்லையா ?
 

ரதி அக்கா அவை மக்களுக்கு செய்தால் எல்லாரையும் விட சந்தோசப்படுறதுநானாத்தான் இருக்கும் அவை செய்யிறது தங்கடை அடியாட்களுக்கல்லோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

ரதி அக்கா அவை மக்களுக்கு செய்தால் எல்லாரையும் விட சந்தோசப்படுறதுநானாத்தான் இருக்கும் அவை செய்யிறது தங்கடை அடியாட்களுக்கல்லோ

அவை தங்கட அடியாக்களுக்குத் தான் செய்யினம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்...அவை செய்கின்ற உதவிகள் காணாது தான் ....ஆனால் தங்களுடைய மக்களுக்கு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

அவை தங்கட அடியாக்களுக்குத் தான் செய்யினம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்.

எனக்கு தெரியும்.:cool:

கருணா தனது கட்சி சம்பந்தப்பட்டவர்களுக்கே வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை செய்கின்றார்.
அதே போல் வட பகுதியில் இருக்கும் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் தாம் சார்ந்தோருக்கே சகல வசதிகளையும் உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.
ஆனால் மேடைப்பேச்சுக்களில் மட்டும் தமிழ் தமிழினம் என கதறுவார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எனக்கு தெரியும்.:cool:

கருணா தனது கட்சி சம்பந்தப்பட்டவர்களுக்கே வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை செய்கின்றார்.
அதே போல் வட பகுதியில் இருக்கும் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் தாம் சார்ந்தோருக்கே சகல வசதிகளையும் உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.

சிங்கள அரசியல்வாதிகளும், அமெரிக்க அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளும், முந்தி இருந்த சோழ இராசாக்களும் சங்கிலியனும் கூட தங்களிட ஆட்களுக்குத்தான் வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை செய்தவர்கள். எந்த உலகத்தில் இருந்து வந்தனீங்கள்? 🗼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

சிங்கள அரசியல்வாதிகளும், அமெரிக்க அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளும், முந்தி இருந்த சோழ இராசாக்களும் சங்கிலியனும் கூட தங்களிட ஆட்களுக்குத்தான் வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை செய்தவர்கள். எந்த உலகத்தில் இருந்து வந்தனீங்கள்? 🗼

அப்ப ஒரு நாடு இரண்டு சட்டம்  சரி...? 

கற்பகதரு

உப்பிடி முகமூடியோட வந்தாலும் நாங்கள் பயப்பிடமாட்டம்.🤣

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அப்ப ஒரு நாடு இரண்டு சட்டம்  சரி...? 

கற்பகதரு

உப்பிடி முகமூடியோட வந்தாலும் நாங்கள் பயப்பிடமாட்டம்.🤣

என்ன, என்னை உங்களுக்கு அடையாளமே தெரியவில்லையா? என்னைப்பற்றி நித்தியானந்தாவுக்கு சிஷ்யைகள் அள்ளிவைக்க, அவர் என்னை கைலாசாவை விட்டு கலைத்துவிட்டபின் இவரின் சீடராகிவிட்டேன்.😃 இவரைப்பற்றி அறிந்துகொள்ள இதோ:

https://ta.m.wikipedia.org/wiki/போதி_தருமன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.