Jump to content

'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம்.

industry-peoples-for-master

'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.


நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்தில் லீக் ஆயின. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள், எங்களுடைய ஒன்றரை ஆண்டு உழைப்பு என்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமன்றி, தென்னிந்தியத் திரையுலகினர் பலரும் ட்வீட் செய்துள்ளனர். இது அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 10 மாதங்கள் மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் நவம்பர் மாதம்தான் திறக்கப்பட்டன. அப்போதிலிருந்து பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இதனால் பொதுமக்களும் திரையரங்குகளுக்கு வரவில்லை.

திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும், முதல் பெரிய நடிகரின் படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இதில் காட்சிகள் வேறு லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுடைய உழைப்பை மனதில் வைத்து யாரும் பகிராதீர்கள் என்று பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர்கள் பிரசாந்த் நீல், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, நடிகர்கள் அருண் விஜய், விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்துள்ளனர்.

மேலும் ரஜினி, அஜித், சூர்யா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் 'மாஸ்டர்' காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/621588-industry-peoples-for-master-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.