Jump to content

தாயகம் – தமிழகம் – புலம் ஒன்றுபட்ட ஒலித்த நீதிக்கான கண்டனக்குரல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் – தமிழகம் – புலம் ஒன்றுபட்ட ஒலித்த நீதிக்கான கண்டனக்குரல்கள்

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழர் தாயகம் – தமிழகம் – புலம் என மூன்று தளங்களில் இருந்து ஒன்றிணைந்து நீதிக்காக குரல் எழுப்பும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

mullivaikal-jaffna-uni-2-300x200.jpg

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றிருந்த கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், இணையவழி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு கண்டன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

தமிழர் தாயகத்தில் இருந்து யாழ் பல்கலைக்கழக ஒன்றிய பிரதிநிதிகள், கலைப்பீட ஒன்றிய பிரதிநிதிகள், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜலிங்கம் ஆகியோர் கண்;டனங்களை பதிவு செய்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் இளையோர்பாசறை சங்கத்தமிழன், மதிமுக ஓமான் மைக்கல் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

வரலாற்று மையம் றூபன், பிரித்தானிய தமிழர் பேரவை செந்தில், உலகத் தமிழர் ஒன்றியம் இரவிக்குமார், அனைத்துலக ஈழத்தமிழரவை திருச்சோதி, கவிஞர் பாலகணேசன், விடுதலை செயற்பாட்டு மூத்தஉறுப்பினர் பாலா மாஸ்ரர் ஆகியோர் புலம்பெயர் தேசங்களில் இருந்து தமது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நிகழ்வின் நிறைவுக் கருத்துரையினை வழங்கியிருந்தார்.

நீதிக்காக உணவுத்தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளையவர்களின் அர்ப்பணிப்பு என்பது எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டுவதாக அமைந்திருந்ததோடு, கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் தொடர்ந்து இனவிடுதலைக்காக தொடர்ந்தும் போராட வேண்டுமென தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

Jan-11_1-1-300x194.jpg

உலகின் எந்தபாகத்திலும் இவ்வாறான அழிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் அது ஓர் அநாகரிகமான செயல் என தனது கண்டனத்தினை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லீம் தரப்பினரது கண்டனக்குரல்கள், பல்கலைக் கழகங்களின் குரல் என ஜனநாயசக்திகளின் குரல்கள் ஓங்கி ஒலித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Jan-11_2-300x188.jpg

இரவோடு இரவாக நினைவுத்தூபியினை இடித்தவர்கள், பின்னர் இரவோடு இரவாக மாணவர்களிடம் சென்று நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டுவோம் என என்ற உபவேந்தரினின் செயலுக்கு பின்னால் கதவடைப்பு போராட்டத்தினை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இச்செயலுக்கு பின்னால் இருந்தவர்களுக்கு உள்ளதென்ற சந்தேகத்தினை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பியிருந்தார்.

Jan-11_3-300x182.jpg

தனித்தனி சம்பவங்களுக்கு என அணிதிரளாமல் தாயகம், தமிழகம், புலம் என மூன்று தரப்பு ஒன்றுபட்டு ஓர் பலமான பொதுக்கட்மைப்பினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சிவசக்தி ஆனந்தன் இடித்துரைந்திருதார்.

Jan-11_6-300x184.jpg

தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற இராணுவ அடையாளச் சின்னங்கள் என்பது ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக இருக்கின்றதென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இவைகள் எந்த பிரதேச சபைகளிடம் அனுமதி பெற்று வைக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.

தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் எழுந்துள்ள போராட்டங்கள் இத்துடன் முடியாமல் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு எதிரான குரல்கள் வலிமை பெற வேண்டுமென தெரிவித்த வட மாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், மீளவும் நினைவுத்தூபி கட்டப்படும் என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதென குறிப்பிட்டிருந்தார்.அரச பயங்கரவாதத்தினை ஞாபகப்படுத்துகின்றது என்ற அச்சத்தினாலேயே நினைவுத்தூபி சிறிலங்கா அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது என தமிழர் தேசிய இயக்கம் தோழர் தியாகு தெரிவித்திருந்தார்.
Jan-11_4-300x186.jpg

2018ம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த நினைவுப்தூப்பியினை இதுவரை அழிக்காத சிறிலங்கா அரசாங்கம் தற்போது அழிக்கின்றது என்றால் அதற்கு பின்னால் உள்ள அரசியல் காரணம் இந்தியாவுக்கான பதிலடியாகவே அதனை கருத வேண்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்

Jan-11_7-300x182.jpg

.

குறிப்பாக சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், தமிழர்களது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற அவரது அழுத்தத்துக்கு எதிராகவே அவர் வந்து சென்றிருந்த இரண்டு நாளில் தமிழினவழிப்பு நினைவுப்தூப்பினை அழித்து இந்தியாவுக்கு பதிலடியினை சிறிலங்கத வழங்கியதாகவே சூழ்நிலை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்டகாலத்துக்கு பின்னராக மூன்று தளங்களில் ஓன்றாக இணைந்து நீதிக்காக குரல் எழுப்பியருப்பது புதிய நம்பிக்கைiளை இணையவழியிலான இந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டம் தந்திருப்பதாக பலரும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
 

https://thinakkural.lk/article/104365

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.