Jump to content

நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த
அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

sumanthiran-25-300x182.png

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அதன் காரணமாக அது அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று கூறுவது, இந்த மிலேச்சத்தனத்தை இன்னும் மோசமாக்கும் செயலாகும். யுத்த நினைவு தூபிகளுக்கு ஊள்ளூராட்சி சபைகளின் கட்டட அனுமதி தேவையில்லை. அப்படி இல்லையென்றால் வட-கிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவு தூபிகளும் உடைக்கப்பட வேண்டும். இப்படியான தூபிகள் கிளிநொச்சி, ஆனையிறவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் பல இடங்களிலும் உள்ளன. இந்த யுத்தத்தில் சில ஆயிரம் இராணுவத்தினர் மரித்தது உண்மை. அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் எண்ணிலடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டார்களே. மற்றது எதிர்தரப்பு போராளிகள். அவர்களையும் நினைவு கூர வேண்டாமா?

யுத்தத்திலே இழந்தவர்களை ஒரு சமூகமாக கூடி நினைப்பதற்கும், துக்கப்படுவதற்கும் உதவும் வகையில் நினைவு தூபிகள் பிரத்தியேகப்படுத்தப்பட்ட பொது இடமாக அமையலாம். அந்த இடம் அவர்களுக்கு விசேடமான ஒன்றாக இருக்கும். அங்கே அவர்கள் கூடி ஒருவரை ஒருவர் விசாரித்து ஆறுதல் சொல்லலாம்.

நினைவு தூபிகள் உயிரோட்டமுள்ள சரித்திர பாடங்களாகவும் அமையும். அங்கே இளைய சமூகத்துக்கு யுத்தத்தின் காரணிகளையும் விளைவுகளையும் எடுத்துக் கூறி இனப்பிரச்சனை ஆயதப் போராட்டமாக மாறுவதற்கு முன்னர் தீர்கப்பட வேண்டியதன் அத்தியாவசியத்தை விளக்கலாம். பல்கலைக்கழக சமூகத்தினர் மரணித்ததை நினைவு கூறுவதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் ஒன்றில் அப்படியான தூபியை அமைப்பதன முக்கியத்துவம் இது தான்.

mullivaikal-jaffna-uni-2-300x200.jpg

யுத்த நினைவு தூபமொன்று நிறுவப்படுகிற போது அது இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு புனித பூமியாகிறது. அதனால்தான் இந்த தூபி உடைத்தழிக்கப்பட்ட போது பெரு வெள்ளமாக உணர்வுகள் வெளிவந்தன. இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லீம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இந்த விடயம் “தீர்க்கப்பட்டது” என்பதில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது. தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இந்தப் விடயத்தை சற்று “தணிக்குமாறு” அரசாங்கம் தனக்குச் சொன்னதாக துணைவேந்தர் கூறுவதை நாம் செவிமடுத்தோம். அத்திவாரக் கல் வைத்தது, செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும். இந்த நினைவு தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உடனடியாக அது மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.
 

 

https://thinakkural.lk/article/104446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  நாளும் எங்கு போயிருந்தாரோ எல்லாம் முடிந்தபின் சவுண்டு பலமாய் போடுறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

நானும் ரெளடிதான்.. 😂😂

நானும் ரெளடிதான்.....நானும் ரெளடிதான்.....நானும் ரெளடிதான்...... நானும் ரெளடிதான்.......நானும் ரெளடிதான்..🤣

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

இந்த நினைவு தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உடனடியாக அது மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

மன்னிப்புக் கோருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காலம், நாள், நேரமெது?  உங்கள் சம்மிடம் கேட்டால் அவர் தீபாவளி, தைப்பொங்கல் என்று ஏதாவதொன்றைப் பிடித்துத் தருவாரே! அதுசரி அவர் எங்கே? காணவில்லையே?? தூபி உடைக்கப்பட்ட சம்பவத்தை அவருக்கு நீங்கள் தெரிவிக்கவே இல்லையா.???🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இவ்வளவு  நாளும் எங்கு போயிருந்தாரோ எல்லாம் முடிந்தபின் சவுண்டு பலமாய் போடுறார் .

கேசு போடுவம் என்பார்...பின் 30  வருசமாவது எடுக்கும் கேசு முடிய ..அதுவரை அய்யா பார்லிமெந்து கதிரையில் சயனித்து ..சந்தோசமாக இருப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

மன்னிப்புக் கோருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காலம், நாள், நேரமெது?  உங்கள் சம்மிடம் கேட்டால் அவர் தீபாவளி, தைப்பொங்கல் என்று ஏதாவதொன்றைப் பிடித்துத் தருவாரே! அதுசரி அவர் எங்கே? காணவில்லையே?? தூபி உடைக்கப்பட்ட சம்பவத்தை அவருக்கு நீங்கள் தெரிவிக்கவே இல்லையா.???🤔

அவர் உண்மையான தமிழ் மகன் என்றால் தமிழர்கள் மேல் அக்கறையிருந்தால் மட்டு  மேய்சசல் தரை பிரச்சனையை கையில் எடுக்கட்டும் பார்ப்பம் அதிலை வெல்லுவது  இதுவரைக்கும் அவர் ஒரு கேஸிலும் வெண்டது  கேள்விப்படல ஆனால் நல்லா போட்டோவுக்கு போஸ்  கொடுப்பார் பேருக்காவது அந்த கேஸை எடுத்து நடத்தட்டும் பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அவர் உண்மையான தமிழ் மகன் என்றால் தமிழர்கள் மேல் அக்கறையிருந்தால் மட்டு  மேய்சசல் தரை பிரச்சனையை கையில் எடுக்கட்டும் பார்ப்பம் அதிலை வெல்லுவது  இதுவரைக்கும் அவர் ஒரு கேஸிலும் வெண்டது  கேள்விப்படல ஆனால் நல்லா போட்டோவுக்கு போஸ்  கொடுப்பார் பேருக்காவது அந்த கேஸை எடுத்து நடத்தட்டும் பார்ப்பம் .

அதுக்கு முரளீதரன் சம்மதிக்கோணுமே.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இவ்வளவு  நாளும் எங்கு போயிருந்தாரோ எல்லாம் முடிந்தபின் சவுண்டு பலமாய் போடுறார் .

கூடிக்குலாவி, ஆலோசனை பண்ணி, ஆரவாரம் ஓய்ந்தபின் யாரையும் நோகவைக்காமல் அதட்டுகிறாராம். பயத்தில நாளைக்கே கட்டுமானம் ஆரம்பமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க சுமந்திரன் 

வரவு ஏட்டில் பதிஞ்சாச்சு 

அப்புறம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அடுத்த சோலிய பார்க்க கிளம்பி விட்டீனம்..!👌

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstYW5

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

அவர் உண்மையான தமிழ் மகன் என்றால் தமிழர்கள் மேல் அக்கறையிருந்தால் மட்டு  மேய்சசல் தரை பிரச்சனையை கையில் எடுக்கட்டும் பார்ப்பம் அதிலை வெல்லுவது  இதுவரைக்கும் அவர் ஒரு கேஸிலும் வெண்டது  கேள்விப்படல ஆனால் நல்லா போட்டோவுக்கு போஸ்  கொடுப்பார் பேருக்காவது அந்த கேஸை எடுத்து நடத்தட்டும் பார்ப்பம் .

என்னங்க இப்படிக் கேட்டிட்டீங்க, அவர் தன்னை நம்பிய இலங்கைத் தமிழ் மக்களை இலங்கையிலே மொட்டையடிக்காமல் திருப்பதிக்குக் கொண்டுபோய் மொட்டை அடித்திருந்தால் எத்தனை கோடி சம்பாதித்திருக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். 

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் உணர்வுகளுடன் விளையாட நினைத்தால் என்னாகும் என்பதை சிங்கள அரசுக்கு புரியவைப்பதற்கு இதே நினைவாலயத்தை பிறிதொரு ஏற்ற இடத்தில் அல்லது இதே இடத்தில் இப்போது உள்ளத்திலும் (இடிக்கப்பட்டதிலும்) பார்க்க நூறு மடங்கு பெரிய அளவில் முறைப்படி உரிய அனுமதியுடன் கட்டவேண்டும். புலம் பெயர்ந்த மற்றும் உள்ளூர் தமிழர்களின் உதவிகள் பெறப்பட்டு இத்திட்டத்தை பொறுப்பானவர்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் கணிசமான தொகை ஒன்றை எனது பங்களிப்பாக வழங்கத் தயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.