Jump to content

அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம்

இன்னுமொரு முறைவழியான இனவாத மற்றும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத் தூபியை அழிக்கும் செயலுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்நினைவுச்ச்சின்னமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது. ஜனவரி 8 அன்றிரவு அழிபாடுகளை நிரவல் எந்திரத்தின் மூலம் கொண்டுசெல்வதை புகைப்படங்களில் காணமுடிகின்றது.

ErONSUSXYAAxEyo-3-300x225.jpg

இறந்தவர்களுக்கான நினைவினை மேற்கொள்ளும் தமிழ் மக்களின் உரிமையை தற்போதைய மற்றும் முன்னைய அரசாங்கங்கள் மறுக்கும் நிகழ்வு இது முதல் தடவை அல்ல எனினும் தற்போதைய நிகழ்வின் நேரப்பொருத்தத்துடனான அரசாங்கத்தின் நகர்வினைப் பார்க்கையில் இவ்விடயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் கோவிட்19 தொடர்பான திறமையற்ற செயலாண்மையினால் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ள கட்டத்தில் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது. பிரஜைகளின் தேவையை நிவர்த்தி செய்யவும் அவர்களை பாதுகாக்கவும் தவறும் அரசாங்கங்களின் விருப்பத்துக்குறிய கவனச்சிதறலாக மக்களின் மீதான இனவாத வன்முறை காணப்படுகின்றது.

சுதந்திரத்தின் பின்னர் நீண்ட காலமாக இன மற்றும் மதக்குழுக்கள் தங்களுக்கிடையில் பகைமை பாராட்டி வந்துள்ளன. விளைவாக பெரும்பான்மை சிங்கள சமூகம் சிறுபான்மை சமூகத்தோடு இணைவது தடுக்கப்படுவதோடு அரசாங்கத்தினை பொறுப்புக்கூறும் நிலையிலிருந்தும் தடுத்துள்ளது.

இச்செயல்முறை புதிதல்ல. பிரித்தாளும் கொள்கையானது பிரித்தானிய காலனித்துவவாதிகளால் சுதேச மக்கள் அரசுக்கெதிராக திரண்டெழுவதை தடுப்பதற்காக கையாளப்பட்ட செயல்திறமிக்க கொள்கையாகும். தங்கள் காலனித்துவ எஜமானர்களால் பயிற்றப்பட்ட ‘தலைவர்கள்’ இக்காலனித்துவ மரபினைப் பேண முன்னின்று செயற்பட்டனர். இருந்தும் இந்த பாசிசத்தலைவர்கள் உணரத்தவறிய விடயம் யாதெனில்இ கொடிய வன்முறையும் அடக்குமுறையும் மக்களுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன; இது காலத்தின் கையிலேயே உள்ளது.

கடந்த வருடத்தில் ராஜபக்ஷ அரசாங்கமானது பல தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது முக்கியமாக தாம் அதிகாரத்துக்கு வர உதவிய மக்களின் நலன்பேணும் விடயத்தில் கூட தோல்விகண்டுள்ளது.
வாக்களிப்பதற்காக வருகை தந்த இடம்பெயர் தொழிலாளர்கள் உண்ண வழியின்றி இருப்பிடமின்றி கைவிடப்பட்ட நிலையில் வயிற்றுப்பிழைப்புக்காக பாலியல் தொழிலை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது . ஆட்கொள்ளி காலத்தின் மத்தியில் பொதுப்பூங்காக்களில் வாழும் அவ்வாறான சிலர் நாடு திரும்புவதற்காக தனியார் கொடையாளர்களில் தங்கியிருக்கும் நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்துக்காக வாக்களித்த சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும் அதே நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்; பல தடவைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதோடு பங்கீடுகள்இ சம்பளம் என்பவற்றை வழங்காமல் தொழில் பற்றிய நிச்சயத்தன்மையையும் வழங்காமல் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தல் காரணமாகவும் அதன் விளைவான தொழில் இழப்பினாலும் பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள பொருளாதார வசதி இல்லாததாலும் மாதக்கணக்காக குடும்பங்களை சந்திக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

ஆட்கொள்ளி நோயின் பின்னணியில் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்பு அமைப்பில்லாமல் கைவிடப்பட்ட மொறட்டுவை பாதை வியாபாரிகள் வீதிகளிலிருந்து அகற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு தமது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர் .

சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் வருமானத்தை இழந்த சபாரி ஜீப் ஓட்டுனர்கள் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்புமில்லாமல் அவதியுறுவதோடு அரசாங்கத்தின் அண்மைய சுற்றுலாத்துறை தொடர்பான திடீர் நடவடிக்கையின் திறமையற்ற செயலாண்மையால் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகளுடன் ஏற்பட்ட ஊடாடுகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்19இன் பின்னணியில் விரிவாக அலசினால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயனுறுதிமிக்க நலன்புரி அமைப்பும் சமூக பாதுகாப்பும் எங்கே?

ஆட்கொல்லி நோய்க்காலத்தில் உயிர்பிழைக்க கஷ்டப்படும் தன் மக்களின் விருப்பை மீளப்பெற அரசாங்கம் ஒரு கவனக்கலைப்பானை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளமை ஆச்சரியமானதல்ல.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் பூதவுடல்களை தகனம் செய்தல் இ வடக்கின் நினைவுத்தூபியை அழித்தல் ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கான நீதி வழங்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை பயங்கரவாத தடுப்புச் சட்டம் (Pவுயு) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசன சட்டத்தின் (ஐஊஊPசு) மூலமும் கைது செய்து நீடித்த காலத்தில் தடுத்து வைத்தல் போன்ற இனவாத செயற்பாடுகளின் மூலம் அரசாங்கம் அதன் தோல்வியை மக்களில் இருந்து மறைக்கப்பார்க்கின்றது.

பிளவுபட்ட நிலையில் காணப்படும் நாட்டு மக்களான எங்களின் கையிலேயெ அரசாங்கத்தின் பிழைத்தல் தங்கியுள்ளது என்பதை உணர இன்னும் எத்தனை காலம் எடுக்கும்? இதனை உணர்வதற்கான எங்கள் காலம் முடிந்து விட்டதா? எங்களை எது மீளெழுச்சிநிலைக்கு கொண்டு வரப்போகின்றது?

அண்மைய சிறுபான்மைக்கெதிரான நிகழ்வுகளான கட்டாய பூதவுடல் தகனம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நினைவுத்தூபி தகர்ப்பு என்பவற்றுக்கு எதிராக எங்களின் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

forced-creamation.jpg

இநடவடிக்கைகளை சமூக பாகுபாட்டுக்கும் துருவப்படுத்தலுக்குமான அரசாங்கத்தின் முறைப்பட்ட முயற்சிகள் என அடையாளம் காண்கின்றோம்.
கடினமான இவ்வுண்மையை உணர்ந்து விழிப்படைவதற்கும் காலங்காலமாக எம்மை பிரித்து சுக்குநூறாக்கும் பாசிச அரசியலை எதிர்க்கவும் விடுதலை இயக்கம் இலங்கை பிரஜைகளாகிய உங்களை அழைக்கின்றது.

அரசாங்கங்கள் ஆட்சியை பிடிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் பயன்படுத்தும் இப்பாகுபட்ட கொள்கைகளை அடையாளம் கண்டு விலக்குவதற்கும் மக்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. எமக்குள் பிரிவினை மற்றும் பிரித்தாளும் முயற்சிகளை ஏற்படுத்திஇ எம்மை பின்னோக்கி இழுக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைமையை முறியடிப்பதற்கு அனைத்து சமூகங்களையும் இன மத வேறுபாடுகளைத் தாண்டி செயற்பட அழைக்கிறோம். அரச வன்முறையை எதிர்க்கவும் அரசாங்கத்தை அதன் மக்களாகிய எமக்கு பொறுப்புக்கூறும் நிலைக்கு தள்ளவும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

 

https://thinakkural.lk/article/104466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் வருமானத்தை இழந்த சபாரி ஜீப் ஓட்டுனர்கள் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்புமில்லாமல் அவதியுறுவதோடு அரசாங்கத்தின் அண்மைய சுற்றுலாத்துறை தொடர்பான திடீர் நடவடிக்கையின் திறமையற்ற செயலாண்மையால் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகளுடன் ஏற்பட்ட ஊடாடுகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா கொண்டு வரும் பயணிகளை ஜீப்பில் ஏற்றினாலும் கொரோனா 
வைரஸ் பரவும் என்பது வியாத்மக ஹை இண்டெலெக்சுவள்சிற்கு தெரியாதா...? விடுதலை புலிகளுடனும் யுத்த வெற்றியுடனும் கொரோனா பண்டமிக்கை  ஒப்பிட்ட அதிமேதாவிகள் அல்லவா  அடுத்தமுறை உக்ரேனில் இருந்து வரும் உல்லாச பயணிகளை விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தால் உள்ள இருக்கும் கொரோனா வைரஸ் பயந்துவிடும் அப்புறம்  பரவாது , இந்த சின்ன விடயத்தை கூடநாங்கள் தான் சொல்லித்தரனுமோ...என்ன ஹை இண்டெலெக்சுவல்ஸப்பா  நீங்கள். 
காகம் இருக்க பனங்காய் விழுந்த கதைகளை வைத்து  உங்களையெல்லாம் அப்பாடக்கர்கள் என்று முழு உலகமே நம்பிப்போட்டினம்,யாழ் விதிவிலக்கா என்ன   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.