Jump to content

ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவநேசத்துரை சந்திரகாந்தன் Archives - Sri Lanka Tamil News - Newsfirst |  News1st | newsfirst.lk | Breaking

ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட முதலாம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.

இதன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜோசப்-பரராஜசிங்கம்-படுகொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

நீங்கள் வேற பெருமாள், இங்கே இவர்களுக்கு வெளிப்படையாக வாழ்த்துத் தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். சிங்களவனை நொந்து பயனில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் விடுதலை

January 13, 2021

Pillaiyan.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 05 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ் சூசைதாசன் இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (11) மீள பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசங்க ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் சந்தேக நபர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . #பிள்ளையான் #விடுதலை #ஜோசப்பரராஜசிங்கம் #கொலை_வழக்கு

 

https://globaltamilnews.net/2021/155621/

 

 

 

Link to comment
Share on other sites

ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்தேன்- பிள்ளையான்

 

   by : Litharsan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Pillaiyan.jpg

ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒரேயொரு முறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்தியபோது அதனைக் கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக குரல்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஜோசப் பரராஜசிங்கம் என்பவரைக் கண்டதே கிடையாது. ஒரேயொரு தடவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். இவ்வாறான நிலையில் அவரைக் கொலை செய்ததாக வீண்பழியைச் சுமத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னை சிறையில் அடைத்தது.

ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றிபெற்றவர்களைக் கொலை செய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தது. அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பாக எவ்வித விசாரணைகளும் செய்யப்படவில்லை.

நாளை தைப்பொங்கல் தினமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அந்தவகையில் நீதித் துறையினுடைய எனக்கான அறிவிப்பு வந்துள்ளது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்னுடைய வழக்கிலிருந்து என்னை முழுதாக விடுவித்து விடுதலை செய்துள்ளது.

என்னை சிறையில் அடைத்து, நசுக்கி முன்னாள் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தபோது இதனைச்செய்தார்கள். 2015ஆம் ஆண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களோடு நின்றவர்களுக்கு வழங்கிய பரிசாக இதனைச்செய்தார்கள்.

ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை நான் கண்டதே கிடையாது. முறக்கொட்டாஞ்சேனையூடாக வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதில் தூரத்தில் இருந்தபோது அவரை ஒரு தடவை கண்டேன். அவருடன் எந்தவிதமான அரசியல் விரோதங்களும் எனக்கு இல்லை.

ஜோசப் பரராஜசிங்கம் 2005இல் மரணிக்கும்போது நான் அரசியலில் இருக்கவும் இல்லை. அரசியல் செய்யும் எண்ணமும் இல்லை. அரசியலுக்கான எந்த முயற்சியும் எடுத்தவனும் அல்ல. 2008இல் தான் நான் மாகாண சபையில் போட்டியிட்டேன். அந்த வேளையில்தான் எனது முதலாவது வாக்கினைக்கூட செலுத்தினேன்.

அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் எனபவர்கள் என்னை கிழக்கில் வளரவைத்தால் அவர்களின் அரசியல் அழிந்துவிடும், யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து இங்கு தேர்தல் கேட்கமுடியாது என நம்பியவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இயற்குவதற்குத் துணையாக நின்ற பிதாமக்கள். அவர்களின் வாரிசுகளாக இருந்தவர்களைக் கொண்டு நல்லாட்சியை உருவாக்கி அவர்கள் ஊடாக என்னை சிறையில் அடைத்தார்கள்.

பல அசிங்கமான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதிகள் தடுத்துவைக்ககூடாது என்று குரல் கொடுக்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை மட்டும் தண்டிக்கவேண்டும் மற்றவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று இரட்டை முகத்தினைக் காட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

 

ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்தேன்- பிள்ளையான் | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் வேற பெருமாள், இங்கே இவர்களுக்கு வெளிப்படையாக வாழ்த்துத் தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். சிங்களவனை நொந்து பயனில்லை. 

வாழ்த்துக்கள்  சந்திரகாந்தன்  அண்ணை 😁😁😁  நேரடியாக சொல்லி இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது- பிள்ளையான்

கடந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது என ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

WhatsApp-Image-2021-01-13-at-16.27.11-1-

தைபிறந்தால் வழிபிறக்கும் அந்த  அடிப்படையிலும்
என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே சிஜடியின் இடத்துக்கு செல்லுகின்றபோது ஊடகங்களுக்கு சொன்னேன் நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்க நினைக்கின்றது யாருக்கோ எல்லாம் பாவிக்க முடியாத சட்டத்தை அப்பாவியாக அரசியல் செய்து கொண்டிருக்கின்ற எனக்கு பாவிக்க முனைகின்றது என தெரிவித்தேன்

ஆயிரத்து 869 நாட்கள் (1869) சிறைச்சாலையிலே வாடினேன் சிறைச்சாலை என்பது உணவில் இருந்து படுக்கையில் இருந்து மழை பெய்தால் குளிர், போன்ற சொல்லமுடியாத துன்பங்கள் சிறைச்சாலையில் இருக்கின்றது. அப்படியெல்லாம் என்னை அடைத்து நசுக்கினர்.

காரணம் 2015 ஆண்டு வந்த நல்லாட்சி நூறுவீதம் தங்களோடுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த பரிசாக இதைச் செய்தார்கள.; அவர்களுக்கு முட்;கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சிறிசேன அவருடைய கையொப்பத்தையிட்டதன் காரணமாக நான் வாடினேன்.

ஆனால் அடிக்கடி சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது என்னைவரலாறு விடுதலை செய்யும் என தெரிவித்தேன் எனக்கு நம்பிக்கையிருந்தது இந்த வழக்கில் எனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஜோசப்பரராஜசிங்கத்தை நான் கண்டதே இல்லை. அவருக்கு வாக்களித்ததும் இல்லை அவர் அருகில் பார்த்ததும் இல்லை.
அவருடன் அரசியல் ரீதியான எந்தவிரோதமும் எனக்கு இல்லை. அவர் மரணிக்கும்போது 2005ம் ஆண்டு அப்போது நான் அரசியில் இருக்கவில்லை அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அரசியலுக்காக எந்தவிதமான முயற்சியும் எடுத்து மனிதனும் நான் இல்லை. 2008 ம் ஆண்டு தான் முதல்முதலாக மாகாணசபை தேர்தலில் நான் போட்டிபோட்டேன் அந்த நேரத்தில்தான் நான் முதலாவது வாக்கைச் செலுத்தினேன்.

ஆனால் அந்தநேரத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என முன்னாள் அரசாங்க அதிபர் மௌனகுருசாமியை நிறுத்துவது அல்லது எமது கட்சிதலைவர் மறைந்த ரகுவை முதலமைச்சராக நியமிப்பது என்ற அடிப்படையில் தான் நான் தேர்தலிலே போட்டியிட்டேன். இருந்தாலும் காலசூழல் என்னை முதலமைச்சராக்கியது.

PILLEYAN-1-300x150.jpg

எனவே அக்கிரமம் செய்து அரசியலுக்காக வரவேண்டிய தேவைப்பாடு இருக்கவில்லை. இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் என்று நடிக்கின்ற பொய்யான மக்களை உசுப்பேற்றுகின்ற வேடதாரக்கூட்டம் என்னை கிழக்கிலே வளரவைத்தால் அவர்களின் அரசியல் முடிந்துவிடும் அல்லது யாழ்ப்பாணத்திலே இருந்து வந்து இங்கு தேர்தல் கேட்க முடியாது என்ற உறுதியாக நம்பியவர்கள். இந்த பயங்கரவாத சட்டத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்த பிதாமக்கள் அவர்களுடைய வாரிசுகளாக இருக்கின்றவர்களை நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதனுடாக என்னை அடைப்பதற்கு முயற்சி செய்து அடைத்தனர்.

நான் நீதிதுறையை நம்பி பலமுறை வாதாடினேன் என்னை கைது செய்த காலத்தில் மாகாணசபை உறுப்பினராக இருந்தேன் ஒரு மாகாணசபை ஊறப்பினரை அடைப்பது என்பது அந்த மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கு சமன். இதை நீதிபதி தீர்ப்பிலே எழுதியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 2005,6,7, ஆண்டு பகுதிகளிலே எத்தனை கொலைகள் இடம்பெற்றது. ஜோசப்பரராயசிங்கம் என்ற அந்த மனிதர் 2005 தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் வெற்றி பெற்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டு கொலை செய்துவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்தார்கள்.

ராஜன்சத்தியமூர்த்தி, கிங்சிலிராசநாயகம் கொல்லப்பட்டனர். அதேபோல கல்கலைகழ விரிவுரையாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை யாருமே கதைப்பதில்லை கேட்பதில்லை. ஆனாலும் மானிப்பாயில்  அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாரிசுகள் என்ற அடிப்படையில் முன்நிறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் ஆராதனையில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டீர்கள். இப்போது இருக்கின்ற ஆண்டகைதான் அப்போது இருந்திருப்பார் அவாரே மற்றும் ஆராதனையில் ஈடுபட்ட எவரும் என்னை கண்டார்களா? அல்லது நான் சொன்னதாக உறுதியாக சொன்னார்களா? எந்தவிதமான கண்ட, தொழில்நுட்ப, சாட்சிகள் இல்லாமல் என்னை அடைத்தார்கள்.

ஆனாலும் அரசியல் காட்புணர்சி கொண்டவர்கள் தங்களுடைய அரசியலுக்காகவும் ஊடகங்களின் வளர்ச்சிக்காக எங்களுடைய கைதுகளைப் பயன்படுத்தினர்களே தவிர நாங்கள் அடிபட்டு குரல்வளை நசுக்குப்பட்டு எங்கள் குடும்பங்களும் கட்சி தொண்டர்களும் வீதிகளில் கண்ணீர்விட்டு திரிந்தபோது எந்த ஊடகமும் எங்களுக்கு உதவி செய்யவில்லை.

எனது தம்பியின் மனைவி அடிக்கப்பட்டு சிஜடி யினரால் ஓதுக்கப்பட்டபோது எந்த பெண்ணியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை. எவ்வளவே அநியாயங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்திகாட்டியது யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சமதர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதிகளை தடுத்துவைக்க கூடாது என குரல் கொடுத்தனர். ஆளால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் என்னை தண்டிக்க வேண்டும் என இரட்டை முகத்தைக் காட்டுகின்றனர்.

நான் ஓரு போராட்ட அமைப்பில் சோந்து போராடியது குற்றமா, அல்லது இன்று நசுக்கப்பட்டிருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு பணி செய்வது குற்றமா?

நீங்கள் எங்களை அகற்றிவிட்டு நீங்கள் அந்த இடத்தை தக்கவைப்பதற்கு கைக்கூலிகளை கொன்றுவிட்டு வேலை செய்வதற்கான திட்டங்களை வகுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுப்போய் இருக்கின்ற அசிங்க நிலமையை யாழ்ப்பாணத்தில் பார்க்கமுடியும் .

நான் குற்றமற்றவன் வரலாறு என்னை விடுதலை செய்யும் எந்தவிதமான களங்கமற்றவன் நீதித்துறைக்கும் சட்டத்தரணி அணில் சில்வாக்கும் அவருடைய குழாமிற்கும் நன்றிகள்,

பலவேதனையான சம்பவங்களும் நீதிதுறையில் இடம்பெற்றது 3 வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றில் பிணை கேட்டிருந்தேன் அது மறுக்கப்பட்டது சுமத்திரன் மற்றும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மங்களசமரவீர போன்றோர் தலையீடு செய்தார்கள்

pillayan-300x219-1.jpg

நல்லாட்சி அரசாங்கம் நீதிதுறையை தனக்கு சார்பாக பயன்படுத்தி மக்களையும் எங்களையும் பழிவாங்கியது என்பதற்கு நான்தான் சாட்சி ஆனால் இன்று எம்.பி ரஞ்சன் ராமநநாயக்கா முழுக்கமுமுக்க நீதித்துறையை கேவலப்படுத்தினார் என உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது

அந்த வழக்குடன் என்னுடைய வழக்கை சம்மந்தப்படுத்தி எதிர்கட்சியினர் பேசுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் என்ன? பிள்ளையான் தண்டிக்கப்பட்டவரா? எதுவும் தெரியாமல் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்களை வெட்டி முதலைக்க போட்டது என தேர்தலுக்காக செய்தது போல் நல்லாட்சி அரசாங்கம் சம்மந்தன். சுமத்திரன் மற்றும் யாழ்ப்பாணத்தார் சிலரை மகிழ்சிப்படுத்துவதற்காக என்னை பயங்கரவாத தடைச்சட்டத்தில் குற்றம் சாட்டி அடைத்தனர்.

ரஞ்சன் ராமநாயக்காவினதும் எனது வழக்கும் சம்மந்தமில்லைதை கதைக்காமல் எங்களை உங்கள் அரசாங்கம் எப்படி பழிவாங்கியது நீதிதுறையை பயன்படுத்தினீர்கள் எத்தனை நீதிபதியுடன் பேசினீர்கள் என்பதை அறிந்து பாருங்கள். ஆனால் இந்த அரசாங்கம் ஜனாதிபதி தன்னுடைய பலத்தைப் பாவித்து விடுதலை செய்தார்கள் என்ற மாயையத் தோற்றுவிக்க முயல்கின்றர்.

நாங்கள் மேன்முறையீடு செய்திருந்தோம் அந்த மேன்முறையீட: தீர்ப்பு 37 பக்கம் கொண்டது இதனை இரு நீதிபதிகள் 2020-11-17 தீர்பளித்தனர் இதில் 7 வழக்கிலே தீர்ப்பளிக்கப்பட்டதை எனது வழக்குடன் ஓப்பிட்டு காட்டியுள்ளார். மேல் நீதிமன்றம் இந்த இரண்டு சாட்சிகளை வைத்து வழக்கு நடத்தமுடியாது அதற்கான ஏதுக்கள் இல்லை என்று வழக்கை நிராகரித்தனை அடிப்படையாக வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவற்றையெல்லாம் விளங்கி கொள்ளதா எதிர்கட்சியினர் பிள்ளையான் ஒரு குற்றவாளி ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்ததாக ஒரு மாயைத் தோற்றுவிக்கின்றனர். நான் வழக்கு தொடர்பாக ஜனாதிபதியையே பிரதமரையே சந்தித்தில்லை ஏன் எனக்கு தெரியும் இந்த வழக்கை கொண்டு நடத்தமுடியாது என அதேபோல் என்னை கைது செய்த சிஜடி, சாணிஅபயசேகரா, அப்போது இருந்த டிஜஜிக்கு. மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட தெரியும். இந்த வழக்கு நடத்தமுடியாது என்று

இருந்தாலமு; சிலரின் மனங்களை குளிரவைக்கவேண்டும் மாகாணசபை நடத்த தேவையில்லை அதிகாரங்கள் தேவையில்லை. ஜ.நாடுகள் சபையில் கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றக் கூடாது என்றதற்கமைய என்னுடன் சோடிக்கப்பட்டது .முழுக்கமுழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டேன் என்னை விடுதலை செய்வதற்காக கட்சி தொண்டர்கள் கணிசமாக உழைத்தார்கள் இவற்றுக்கெல்லாம் முடிவு கிடைத்துள்ளது

சிறைச்சாலையில் 5 வரும் 10 வருடமே அடைத்தாலும் மனங்கலங்கி அரசியல் விடுபட்டு ஓரம்கட்டி ஒதுங்கும் மனிதனல்ல நான். நான் சிறையில் இருந்து கொண்டே 54 ஆயிரம் விருப்பு வாக்கைப் பெற்றவன். வடக்கு கிழக்கிலே எந்த தமிழரும் பெறாத வாக்கை மட்டக்களப்பு மக்கள் அளித்தார்கள். ஏன் இயவ்பாகவே மட்டக்களப்பில் பற்றுள்ளவன் இறுதிவரைக்கும் நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அந்த நம்பிக்கையை மக்களே நான் செய்து காட்டுவேன். என்னுடைய உறுதி தன்மையையும் மட்டக்களப்பு மீது வைத்துள்ள பற்றையும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவை மாகாணசபை முறமைதான் வேண்டும் என்கின்ற நிலமையை நான் நடாத்திகாட்டுவேன் என்று சித்தம் கொண்டுள்ளேன் உறுதியாக இருக்கின்றேன்.

ஆகையால் சுமத்திரன் போன்றவர்கள் கொழும்பில் இரந்து கொண்டு அல்லது சாணக்கியன் போன்றவர்கள் அங்கும் நின்று இங்கும் நின்று சிறுவயதிலே வெளிநாடு சென்று ஆங்கிலம் கற்று கண்டியில் நின்று படித்து நாங்கள் வரவில்லை மக்களுடன் நின்று 16 வயதிலே பாடசாலையை தூக்கி எறிந்துவிட்டு போராட் இயக்கத்துக்கு சேர்ந்து 2005 பிரபாகரன் எங்களை அடித்து கொல்லும் வரைக்கும் போராடினோம்.

அதற்கு பின் யாழ்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தை நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட நாங்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பல தியாகங்கள் அழிவுகளை கண்ட ஒரு கட்சி இருந்தாலும் எங்கள் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படையில் அநியாயம் செய்யாமல் மக்களை கட்டியனைத்து 10 வருடங்களுக்கு பின்னர் உயர்ந்த வளர்ச்சியடைந்துள்ளோம் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்! பிள்ளையானுக்கு ஆயிரம் பில்லியன் இழப்பீடு

  • January 13, 20215:25 pm

5C1DD4B4-9A1E-48F9-A0F6-3B68833B50E9-300
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பிள்ளையான் விடுதலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து சிங்கள இணையத்தளம் விமர்சனமான செய்தி (சிங்கள மொழியில் https://www.lankanewsweb.net/sinhala/124-gossip/76148-අහිංසක-පිල්ලෙයාන්-තුමා-දැ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தான் பதவிக்கு வந்து இரண்டு வருடத்திற்கு பின்னர் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா “உண்மையை” புரிந்துக்கொண்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இது மாத்திரம் போதாது எனவும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான நிலைமையில் 2005 ஆம் ஆண்டு டிம்பர் மாதம் நத்தார் ஆராதனையில் கலந்துக்கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஏதோ ஒரு காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் நிரபராதியான தன்னை கைது செய்து நீண்டகாலம் சிறையில் அடைத்தமைக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிராக தற்போது வழக்கு தொடர வேண்டும். இதன் மூலம் அரைவாசியான நீதியே கிடைக்கும்.

மீதமுள்ள அரைவாசி நீதியை பெற்றுக்கொள்ள 2017 ஆம் ஆண்டு தனக்கு எதிராக கட்டாயம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டும். அன்றைய சட்டமா அதிபரான தற்போதைய பிரதம நீதியரசரை இதில் சிக்க வைக்க முடியும்.

வெறுமனே வழக்கு தொடர்வது மாத்திரம் போதாது. எதிர்காலத்தில் இப்படி அநீதியான செயல்களை அவர் செய்யாதிருக்க பெருந்தொகை இழப்பீட்டை கோர வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக மாத்திரமல்லாது இளம் வயது முதல் அரசியலில் ஈடுபட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கருணாவுக்கு அடுத்து இரண்டாவது புகழ் நாமத்தை கொண்டுள்ளதால், அந்த புகழுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ஆயிரம் பில்லியன் இழப்பீட்டை கோர வேண்டும்.

இறுதியாக பிள்ளையானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை “ எமது நாட்டில் எப்போதாவது உண்மை தோற்று போகும்” என்பதையே இலங்கை மக்களுக்கு இறுதியாக கூற வேண்டியுள்ளது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
 

https://www.meenagam.com/ஜோசப்-பரராஜசிங்கம்-துப்ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள்  சந்திரகாந்தன்  அண்ணை 😁😁😁  நேரடியாக சொல்லி இருக்கலாம் 

ஜோசப் பரராஜசிங்கத்தைச் சுட்டுக் கொன்றது சரியானதுதான் என்று வாழ்த்துவதனூடாக கூறுகிறீர்கள். 

🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள்  சந்திரகாந்தன்  அண்ணை 😁😁😁  நேரடியாக சொல்லி இருக்கலாம் 

பால்ச்சோறு சாப்பிட்டு/குடுத்து கொண்டாடியிருக்க வேணும்.
இனியென்ன பட்டிக்கலோவுக்கு ஒரே ஏறுமுகம்தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குற்றவாளிகளை உடனடியாக விடுவிக்கும் வழக்குகள்.. ஒன்றில் நந்தசேனவின் பொதுமன்னில் அமையும் இல்லை என்றால் நீதிபதிகள் என்ற சொறீலங்கா பைத்தியக்காரர்களை வைச்சே கெதியா எழுத வைச்சிடுவாங்கள்.

ஆனால்.. அப்பாவி தமிழ் இளைஞர்களை மட்டும்.. சிறையில் அடைத்து ஆண்டுக்கணக்கில் அடைச்சு வைச்சு அரசியல் செய்து கொள்வார்கள். 

இதெல்லாம் ஒரு நாடு.. அதற்கொரு நீதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பால்ச்சோறு சாப்பிட்டு/குடுத்து கொண்டாடியிருக்க வேணும்.
இனியென்ன பட்டிக்கலோவுக்கு ஒரே ஏறுமுகம்தான்...

அண்ணை,

இந்த வாழ்த்துக்களைப் பார்க்கும்போது தீவுச்சேனையில கருணா & பிள்ளையான் குழுவால (6 பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்) கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு பின்னர் வாட்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைமைக் கணக்காய்வாளர் பிரேமினியின் முகமும், அவருடன் சேர்த்து கொல்லப்பட்ட ஏனைய 6 வடபகுதி ஆண்களின் முகமும் கூட வந்து போகிறதண்ணை. 

ஆனால் அது அங்கேயே நிற்கவில்லை அண்ணை. ஜோசேப் பரராஜசிங்கம், ரவிராஜ் என்று நீண்டுகொண்டே செல்லுது கண்டியளோ? 

சிலவேளை வாழ்த்துக்கள் எண்டு சொல்லுறது இதையெல்லாம் சேர்த்துச் செய்ததற்காக இருக்குமோவெண்டு நெய்க்கிறன். 

என்ன செய்வம் அண்ணை? ஒருத்தரும் ஒண்டும் சொல்ல ஏலாது, நடக்கிறதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கோடரிக்காம்புகளின் சுயநல பொருளாதார அரசியல் போட்டாபோட்டியில் கிழக்கு மக்கள் நசுங்கப்போகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

இந்த வாழ்த்துக்களைப் பார்க்கும்போது தீவுச்சேனையில கருணா & பிள்ளையான் குழுவால (6 பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்) கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு பின்னர் வாட்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைமைக் கணக்காய்வாளர் பிரேமினியின் முகமும், அவருடன் சேர்த்து கொல்லப்பட்ட ஏனைய 6 வடபகுதி ஆண்களின் முகமும் கூட வந்து போகிறதண்ணை. 

ஆனால் அது அங்கேயே நிற்கவில்லை அண்ணை. ஜோசேப் பரராஜசிங்கம், ரவிராஜ் என்று நீண்டுகொண்டே செல்லுது கண்டியளோ? 

சிலவேளை வாழ்த்துக்கள் எண்டு சொல்லுறது இதையெல்லாம் சேர்த்துச் செய்ததற்காக இருக்குமோவெண்டு நெய்க்கிறன். 

என்ன செய்வம் அண்ணை? ஒருத்தரும் ஒண்டும் சொல்ல ஏலாது, நடக்கிறதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். 

அநீதி இன்னும் சாகவில்லை இலங்கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

அநீதி இன்னும் சாகவில்லை இலங்கையில்

கொழும்பு டெயிலி மிரர் என்னும் இணையப் பத்திரிக்கையில் பிள்ளையான் எனும் துணைராணுவக் கூலியின் விடுதலை பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இவ்விடுதலை பற்றிச் சிங்களவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது இனத்தினை அழிக்கத்தான் அவர்களது அரசு பிள்ளையானையும் கருணாவையும் பாவித்தது என்பது நன்கு தெரிந்துகொண்டும்கூட, அவர்கள் அரசின் இந்த முடிவினைச் சாடுகிறார்கள். ஒற்றைக் கருத்துக்கூட அவனை வாழ்த்தியோ அல்லது அரசு செய்தது சரிதான் என்றோ இருக்கவில்லை.

ஆனால், நாம் வாழ்த்துகிறோம். 


இந்த இருவராலும் கொல்லப்பட்டது எமது இனம், காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது எமது விடுதலைப் போராட்டம்...அப்படியானால் வாழ்த்துக்கள் எதற்காக? இது முதன்முறையல்லவே. குறைந்தது இதே களத்தில் 3 முறையாவது இந்த வாழ்த்துக்கள் வந்துவிட்டனவே? எப்படி எம்மால் இதைக் கடந்துசெல்ல முடிகிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கொழும்பு டெயிலி மிரர் என்னும் இணையப் பத்திரிக்கையில் பிள்ளையான் எனும் துணைராணுவக் கூலியின் விடுதலை பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இவ்விடுதலை பற்றிச் சிங்களவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது இனத்தினை அழிக்கத்தான் அவர்களது அரசு பிள்ளையானையும் கருணாவையும் பாவித்தது என்பது நன்கு தெரிந்துகொண்டும்கூட, அவர்கள் அரசின் இந்த முடிவினைச் சாடுகிறார்கள். ஒற்றைக் கருத்துக்கூட அவனை வாழ்த்தியோ அல்லது அரசு செய்தது சரிதான் என்றோ இருக்கவில்லை.

ஆனால், நாம் வாழ்த்துகிறோம். 


இந்த இருவராலும் கொல்லப்பட்டது எமது இனம், காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது எமது விடுதலைப் போராட்டம்...அப்படியானால் வாழ்த்துக்கள் எதற்காக? இது முதன்முறையல்லவே. குறைந்தது இதே களத்தில் 3 முறையாவது இந்த வாழ்த்துக்கள் வந்துவிட்டனவே? எப்படி எம்மால் இதைக் கடந்துசெல்ல முடிகிறது? 

ஏனென்றால் துவேசமும் பிரதேசவாதமும் காழ்ப்புணர்வும் எம்முடன் கூடப் பிறந்தவை.

இப்போது எதிரி சிங்களவன் இல்லையே, ****

🤮🤮🤮

Link to comment
Share on other sites

7 hours ago, Kapithan said:

ஏனென்றால் துவேசமும் பிரதேசவாதமும் காழ்ப்புணர்வும் எம்முடன் கூடப் பிறந்தவை.

இப்போது எதிரி சிங்களவன் இல்லையே, ****

🤮🤮🤮

இவை இரண்டுமே எதிரிகள் இல்லை. உண்மையான எதிரியை அடையாளம் காண மறுக்கும் வரை இவை தொடரும்.

7 hours ago, ரஞ்சித் said:

 என்ன செய்வம் அண்ணை? ஒருத்தரும் ஒண்டும் சொல்ல ஏலாது, நடக்கிறதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். 

உண்மையான எதிரியை அடையாளம் காண மறுக்கும்வரை நடப்பதை பார்ப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

ஜோசப் பரராஜசிங்கத்தைச் சுட்டுக் கொன்றது சரியானதுதான் என்று வாழ்த்துவதனூடாக கூறுகிறீர்கள். 

🤮

சுட்டுக்கொன்றது பிள்ளையான் தான் என உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? அல்லது நீங்கள் நேரில் பார்த்தீர்களா? இரு கேள்விக்கும் பதிலை சொல்லுங்கள் 

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் இருக்கும் போது கூட்டமைப்புக்கு பிடிக்காத எம்பிக்களை  எச்சரிக்கை கொடுத்தது மிரட்டியது எல்லாம் லிஸ்டில் இருக்கு சொன்னால் இன்னும் நான் எதிரியாவேன் இந்த இணையத்தில் யாரோ சொல்வதை கேட்டு எழுதுவது அல்ல கபிதன் 

12 hours ago, குமாரசாமி said:

பால்ச்சோறு சாப்பிட்டு/குடுத்து கொண்டாடியிருக்க வேணும்.
இனியென்ன பட்டிக்கலோவுக்கு ஒரே ஏறுமுகம்தான்...

வாக்களித்த மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள் , ஆனால் எனது வாக்கு அம்பாறையில் நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் மட்டக்களப்பு  மக்கள் ஓரளவுக்கேனும் அதன் பலனை அனுபவிப்பார்கள் 

 

7 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

இந்த வாழ்த்துக்களைப் பார்க்கும்போது தீவுச்சேனையில கருணா & பிள்ளையான் குழுவால (6 பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்) கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு பின்னர் வாட்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைமைக் கணக்காய்வாளர் பிரேமினியின் முகமும், அவருடன் சேர்த்து கொல்லப்பட்ட ஏனைய 6 வடபகுதி ஆண்களின் முகமும் கூட வந்து போகிறதண்ணை. 

ஆனால் அது அங்கேயே நிற்கவில்லை அண்ணை. ஜோசேப் பரராஜசிங்கம், ரவிராஜ் என்று நீண்டுகொண்டே செல்லுது கண்டியளோ? 

சிலவேளை வாழ்த்துக்கள் எண்டு சொல்லுறது இதையெல்லாம் சேர்த்துச் செய்ததற்காக இருக்குமோவெண்டு நெய்க்கிறன். 

என்ன செய்வம் அண்ணை? ஒருத்தரும் ஒண்டும் சொல்ல ஏலாது, நடக்கிறதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். 

இப்படித்தான் கிழக்கில் பல போராட்ட இயங்கங்கள் உருவாகி இருந்தது நீங்கள் அறிந்து இருப்பீர்கள் மாற்று இயக்க உறுப்பினர்களை கொன்று அவர்கள் உடல்களை யார் எடுக்கிறார்களோ அவர்களையும் சுடுவோம் என நேரடியாக சொல்லியவர்களும் உண்டு .

இதே கர்ணா பிள்ளையான் வீட்டுக்கு ஒருவர் வந்தே ஆகவேண்டுமென அழைப்பு விடுத்து போகாமல் விட்டால் அவர்களை கடத்தி சென்று பயிற்ச்சி கொடுத்து இயக்கத்தில் இணைக்கும் போது மட்டும் உங்களுக்குகுளிர்ந்து இருக்கும் போல.

துரோகத்திற்கு அப்பால் பல சம்பவங்கள் உண்டு வேண்டாம் என நினைத்து விலகி போகிறேன் , யாரோ எழுதினதை வெட்டி ஒட்டி வியாக்கியானம் பேசுவது உங்களுக்கு அழகாக இருக்கலாம் .

நான் மாறி புலிகளை குற்றம் சொல்ல நினைத்தால் நமக்கு நாமே தூற்றிக்கொள்வது போல் ஆகும் 

நண்பர்களுடன் சில நேரம் சிங்கள பகுதிகளுக்கு செல்வேன் அங்கே நமக்கு நடந்த சோக கதைகளுக்கு மேலாக அதிகம் நடந்து இருக்கு இதையெல்லாம் எழுத நினைத்தால்  புலிக்கு எதிரானவனாக பார்ப்பார்கள் ஆனால் புலிகளுக்கு நினைவு தூபிகளை நாட் கணக்கில் நின்று கட்டியதுதான் எனக்கு மிஞ்சி இருக்கிறது . 

1 hour ago, கற்பகதரு said:

உண்மையான எதிரியை அடையாளம் காண மறுக்கும்வரை நடப்பதை பார்ப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியது.

அதே பல்லவி தான் இப்பவரைக்கும் 

7 hours ago, Kapithan said:

ஏனென்றால் துவேசமும் பிரதேசவாதமும் காழ்ப்புணர்வும் எம்முடன் கூடப் பிறந்தவை.

இப்போது எதிரி சிங்களவன் இல்லையே, யாழ்ப்பாணத்தான்(வட மாகாணத்தார்- பனங்கொட்டை சூப்பி) தானே. 

🤮🤮🤮

அளவானவர்கள் தொப்பியை போடலாம் 😁

7 hours ago, ரஞ்சித் said:

இந்த இருவராலும் கொல்லப்பட்டது எமது இனம், காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது எமது விடுதலைப் போராட்டம்...அப்படியானால் வாழ்த்துக்கள் எதற்காக? இது முதன்முறையல்லவே. குறைந்தது இதே களத்தில் 3 முறையாவது இந்த வாழ்த்துக்கள் வந்துவிட்டனவே? எப்படி எம்மால் இதைக் கடந்துசெல்ல முடிகிறது? 

இந்த இருவராலும் நான் மேலே கூறியதுதான் போராட்டத்திற்கு பிள்ளைகளை வரவேண்டுமென கூறும் போது நீங்கள் எங்கிருந்தீர்கள் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை மாற்றியமைத்து, ஏமாற்றி வெளியே வரலாம் இப்போ. ஆனால் தர்மம் எப்போதும் சம்பந்தப்பட்டவர்களோடு கூடவே இருந்து பழி வாங்கியே தீரும். அப்போ யாரும் யாரையும்  குறை சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

Digital News Team 2021-01-14T11:02:27

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ள்து.

PILLEYAN-1-300x150.jpg

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமாஅதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தொடர்புள்ளவர்கள் வரலாற்று துஸ்பிரயோகங்களிற்காக தொடர்ந்தும் தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமையை அனுபவிப்பது தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

josepgh-par-1.jpg
பொறுப்புக்கூறப்படுதல் இல்லாமல் இலங்கையால் தனது வரலாற்றின் இருண்ட பக்கங்களை கடந்து போக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை குறித்து அதிகாரிகள் புதிய விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் கடந்தகாலத்தில் உள்நாட்டு பொறிமுறைகள் அடைந்த தோல்விகளால் அதனை எதிர்பார்க்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தைமுடிவிற்கு கொண்டுவருவதற்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/104719

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

சட்டத்தை மாற்றியமைத்து, ஏமாற்றி வெளியே வரலாம் இப்போ. ஆனால் தர்மம் எப்போதும் சம்பந்தப்பட்டவர்களோடு கூடவே இருந்து பழி வாங்கியே தீரும். அப்போ யாரும் யாரையும்  குறை சொல்ல முடியாது. 

இது உண்மையானால், தர்மமா முள்ளிவாய்க்காலில் பழிவாங்கியது? 

“புத்தம், தர்மம், கச்சாமி”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன விடுதலைப்போராட்டத்தையும், கூலிப்படையின் கொலைகளையும் ஒன்றாக மதிப்பீடு செய்து இன அழிப்பை நிஜாயப்படுத்துபவர்களை என்ன சொல்வது? ஒரு இனத்தை அடிமைப்படுத்தி, அவர்கள் மேல்  ஆயுதத்தை வலிந்து திணித்து, முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.  இன்று கொக்கரிக்கலாம் அதன் சாபத்திற்காக  புலம்பும் நாள் வெகு விரைவில் வரும். 

தர்மம் தோற்று  விட்டது போல் தோற்றமளித்தாலும் அது விசுவ ரூபம் எடுக்கும்போது யாராலும் 
எதிர்த்து  நிற்கமுடியாது கடந்த பல வரலாறு சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 21:57, nunavilan said:

 

அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கவில்லை

சிங்களத்தின் அடிமைகளுக்கு  ஏது சொந்தத் தேவை, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆசை, சொந்தச் சின்னம்? சொன்னதை செய்து அவர்களின் தேவை, ஆசையை பூர்த்தி செய்து பழி சுமப்பதைவிட  உங்களுக்கென்றொரு ஆசை, சுதந்திரம் உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 15:50, தமிழ் சிறி said:

கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

 

On 13/1/2021 at 15:50, தமிழ் சிறி said:

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வர வர  இலங்கையின்  நீதி அமைச்சு கேலிக்கூத்தாடுகிறது. ஆளுக்கொரு நீதி, சட்டம். மனநோயாளிகளால் இலங்கையின் சகல அமைச்சுகளும் நிரம்பி வழிகின்றன. 

கடந்த அரசாங்கம் செய்திருந்தாலும், சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சும் சேர்ந்தா பிழை விட்டது? அப்போ அரசாங்கம் மாறும்போது  குறித்த திணைக்களங்களும் அவற்றிற்கேற்ப  செயற்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றும்  இவர் இவ்வளவு காலம் சிறையில் இருந்துள்ளார் தானே. முடிந்தால் சட்டமா அதிபருக்கெதிராக வழக்கு தொடர்ந்து வென்று காட்டட்டும். 

On 14/1/2021 at 05:21, கிருபன் said:

நத்தார் ஆராதனையில் கலந்துக்கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஏதோ ஒரு காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

 மனநோயாளிகளின் உச்சகட்ட கண்டுபிடிப்பு. தற்கொலை செய்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை... பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல பழக வேணும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.