Jump to content

நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்

floods-in-low-lying-areas-of-tamirabarani  
 

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமான அளவு ஏற்பட்டது.

வண்ணாரப்பேட்டை, குறுக்குத்துரை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16105135502027.jpg

16105135622027.jpg

மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 25 வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் தீயணைப்புப் படையினரும் கைகோத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ள அபாயப் பகுதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்றிரவு தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், தாமிரபரணி கரையோரத்தை ஒட்டி 87 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆலடியூர் என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த முகாமில் 8 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு:

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை ஜங்ன்ஷன், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு எட்டுத்தொகை தெரு, டவுன் கருப்பந்துறை ,சி.என்.வில்லேஜ், நாரணம்மாள்புரம் .ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-01-2021) காலை 8 மணி நிலவரப்படி:

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 142.5 அடி நீர் வரத்து : 15977.06 கனஅடி வெளியேற்றம் : 14731.45 கன அடி

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 148.55 நீர்வரத்து : Nil வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 117.18 அடி நீர் வரத்து : 12574 கனஅடி வெளியேற்றம் : 12117கன அடி

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 49 அடி நீர் இருப்பு: 40 அடி நீர் வரத்து: 1039.91 வெளியேற்றம்: NIL

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி நீர் இருப்பு: 11.32 அடி நீர்வரத்து: 19.90 கன அடி வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 36. 25 அடி நீர்வரத்து: 156 கன அடி வெளியேற்றம்: 60 கன அடி

மழை அளவு:

பாபநாசம்: 185 மி.மீ
சேர்வலாறு: 110 மி.மீ
மணிமுத்தாறு: 165 மி.மீ
நம்பியாறு: 45 மி.மீ
கொடுமுடியாறு: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 97 மி.மீ
சேரன்மகாதேவி: 65.40 மி.மீ
நாங்குநேரி: 32 மி.மீ
ராதாபுரம்: 28 மி.மீ
பாளையங்கோட்டை: 26 மி.மீ
நெல்லை :23 மி.மீ

குற்றாலத்தில் குளிக்கத் தடை:

நெல்லையைப் போல் தென்காசி மாவட்டத்திலும் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/621925-floods-in-low-lying-areas-of-tamirabarani-5.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.