Jump to content

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

விசுகு, விளக்கமுள்ளவர்களுடன்தான் கருத்தாடமுடியும் என்பதால்தான் இத்திரியில் எந்தப்பதிவுக்கும் கருத்திடவில்லை. எங்குபட்டாலும் ஒரேகாலைத்தூக்கும் அறிவாளிகளுடன் கருத்தாடுவதில் எந்தப்பயனுமில்லை. நேரவிரயமே! கடந்து செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

விசுகு, விளக்கமுள்ளவர்களுடன்தான் கருத்தாடமுடியும் என்பதால்தான் இத்திரியில் எந்தப்பதிவுக்கும் கருத்திடவில்லை. எங்குபட்டாலும் ஒரேகாலைத்தூக்கும் அறிவாளிகளுடன் கருத்தாடுவதில் எந்தப்பயனுமில்லை. நேரவிரயமே! கடந்து செல்லுங்கள்.

விளங்கநினைப்பவன்... நான், அந்த முடிவை எடுத்து.. பல மாதங்கள் ஆகி விட்டது.
சிலரின்... கருத்துக்களைப் வாசிக்காமல், கடந்து சென்று விடுவேன். 😎

ஏனென்றால்... அந்தக் கருத்துக்களில்,
முட்டையில், மயிரும்... ஈரும், பேனும்  தான் இருக்கும்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

சும்மா கிடந்த நாச்சியாருக்கு அரைப்பண  தாலி போதாது எண்டது போலை கிடக்குது கதை.

கொடி பிடிக்கக்கூடியவையள் தான் , குளிரை பெரிசா நினையாமல் போகக்கூடியதாக இருந்தது, போராட்டத்துக்கு.

அவையள் போனதும், கொடி பிடிச்சதும் பிழை எண்டால், ஈசி சேறிலை  இருந்து, எழும்பி ஓடி போய், கொடியை பிடியாமல் நில்லுங்கோ, எண்டது தான், நாம சொல்லுற கதை.

யுத்த குற்றவாளிகள் அரசு இடிக்கிறது சரி, கொடி பிடிக்கிறது பிழை எண்டால் எப்படி?  

இங்க பிளந்து காட்டாமல், தம்பியவையள்  கொடிய பிடியாதைங்கப்பு என்று அன்பா ஆலோசனை சொல்லுறது தானே.... பெரிசு, குளிருக்கை கிளம்பி உணர்வோட ஓடி வந்திருக்கப்பா எண்டு, சொல்லுறதை கேட்பீனம் தானே.

தமிழில் தான் எழுதி இருக்கேன் . விளங்காட்டில் நான் ஒன்றும் செய்யேலாது ...எக்கேடாவது கெட்டுப் போங்கள் 

இப்படியான போராட்டங்களுக்கு கொடியை பிடித்துக் கொண்டு போவதும் , வீட்டில் இழுத்து மூடிக் கொண்டு படுப்பதும் என்னைப்  பொறுத்த வரை ஒன்று தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

விளங்கநினைப்பவன்

எழுதியவரின் பெயரையும் வாசிக்காமல் தாண்டிக் கடந்துவிட்டீர்கள் போலிருக்கு தமிழ் சிறி ஐயா!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எழுதியவரின் பெயரையும் வாசிக்காமல் தாண்டிக் கடந்துவிட்டீர்கள் போலிருக்கு தமிழ் சிறி ஐயா!😂🤣

ஓ.... "வெறி, சொறி"... கிருபன் ஜீ . 😲
இன்று, வெள்ளிக்கிழமை இல்லையா...  
இப்பிடி.. சில தவறுகள், நடக்கத்தான் பார்க்கும். 🤣
நீங்கள் தான்... பிழை திருத்தி, வாசிக்க வேணும். :grin:

தவறை.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 🙏

எப்போதும் தமிழன் & விளங்க நினைப்பவன் 
உங்கள் பெயரில்... மாறாட்டம்  வந்தமைக்கு, மன்னிக்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

சிறித்தம்பி! இது வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியவர்கள் யார்? 
சரி அது அவர்கள் பாசையில் சறுக்கி விட்டது என வைத்துக்கொள்வோம்.

2009க்கு இந்த பின்னர் புலம்பெயர் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஈழம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றதா என பாருங்கள்?

ஒடியல் கூழ் பார்டியும், பிரியாணி பார்ட்டியும் , பழைய மாணவர் ஒன்று கூடல் நடத்துவதுவதிலும் மும்முரமாக இருப்பவர்கள்....

ஆனால் அவர்கள் யாழ்களத்திற்கு வந்தால்  தேச பிதாக்கள் மாதிரி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இது வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியவர்கள் யார்? 
சரி அது அவர்கள் பாசையில் சறுக்கி விட்டது என வைத்துக்கொள்வோம்.

2009க்கு இந்த பின்னர் புலம்பெயர் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஈழம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றதா என பாருங்கள்?

ஒடியல் கூழ் பார்டியும், பிரியாணி பார்ட்டியும் , பழைய மாணவர் ஒன்று கூடல் நடத்துவதுவதிலும் மும்முரமாக இருப்பவர்கள்....

ஆனால் அவர்கள் யாழ்களத்திற்கு வந்தால்  தேச பிதாக்கள் மாதிரி இருப்பார்கள்.

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன கடைசியா முடிவு?

கொடி பிடிக்கிறதா? இல்லையா?

சும்மா மச, மச எண்டு பேசிகொண்டிருக்காமல், யார் கெத்து எண்டு அடிச்சு காட்டுங்கோ🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்ப என்ன கடைசியா முடிவு?

கொடி பிடிக்கிறதா? இல்லையா?

சும்மா மச, மச எண்டு பேசிகொண்டிருக்காமல், யார் கெத்து எண்டு அடிச்சு காட்டுங்கோ🤣.

 

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

9 minutes ago, விசுகு said:

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

 

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இது வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியவர்கள் யார்? 
சரி அது அவர்கள் பாசையில் சறுக்கி விட்டது என வைத்துக்கொள்வோம்.

2009க்கு இந்த பின்னர் புலம்பெயர் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஈழம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றதா என பாருங்கள்?

ஒடியல் கூழ் பார்டியும், பிரியாணி பார்ட்டியும் , பழைய மாணவர் ஒன்று கூடல் நடத்துவதுவதிலும் மும்முரமாக இருப்பவர்கள்....

ஆனால் அவர்கள் யாழ்களத்திற்கு வந்தால்  தேச பிதாக்கள் மாதிரி இருப்பார்கள்.

 

34 minutes ago, விசுகு said:

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

நீங்கள்... எத்தனை, முறை...
மாற்றுக்  கருத்து, மாணிக்கங்களிடமிருந்து....
2009´க்குப் பின்.. என்ன செய்தீர்கள்? என்று...
இதே.... களத்தில், பலரும், பலமுறை  கேட்டும்...

"கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாக" 
தப்பி... ஓடி விடுகின்ற, ஆட்கள் தான்...
இந்த, மாற்றுக் கருத்து, மாணிக்கங்கள்.

இவர்களை... ஓட்டுக் குழுக்கள் என்று, முன்பு சொல்வார்கள்.
உண்மையில்... அப்பவும், இப்பவும்...  
ஓட்டுக் குழுக்கள், வேறு வடிவங்களில் வந்து உள்ளமை.. கவனிக்கப்  பட்டுள்ளது.   

எத்தனையோ.... வசதிகள், ஆளுமை  இருந்தும், 
காட்டிக் கொடுப்புகளால்... தோல்வி உற்ற இனம், 
உலகத்திற்கே.... மூத்த, தமிழ் இனம். 

ஆனபடியால்... சில, விடயங்களில்... கடந்து போக வேண்டிய...
காலக் கட்டாயம், கண் முன்னே.. உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

அண்ணை,

நானும் உளப்பூர்வமாகவே எழுதுகிறேன்.

1. கொடி பிடிக்காமல் போனால் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதில்லை, ஆனால் இதை ஒரு அமைப்பு சார்ந்ததாக அல்லாமல் ஒரு இனம் சார்ந்ததாக காட்ட முடியும் என்கிறார்கள் ஒரு சாரார். கொடிக்கு யாரும் அவமரியாதை நினைப்பதில்லை. அந்த கொடிக்காக மாண்டவர் மீது இருக்கும் அதே மரியாதை அந்த கொடியின் மீதும் இருக்கும். ஆனால் ரதி அக்கா சொல்வதை போல, தீர்வு  வந்தபின் கொடியை பிடிக்கலாம், இப்போ உலக ஓப்புக்காக இதை தவிர்ப்போம் என்கிறனர் இவர்கள். (நானும் முன்பு இப்படி யோசித்தேன், எழுதினேன்).

2. இல்லை எப்படியோ நாம் சொல்வதை யாரும் கேட்கபோவதில்லை. எனவே கொடியை விடுத்து போவதில் அர்த்தமில்லை. கொடியோடு போவோம், போராடுவோம் என்கிறார்கள் மறுசாரார். இதில் ஒரு உள் அணியினர், கொடியை விடுத்து போனால் எமக்கு தீர்வு வரும் என்றால், அப்படி ஒரு தீர்வே தேவையில்லை என (வெளிநாட்டில் இருந்தபடி) சொல்பவர்களாயும் உள்ளனர்.

இந்த உள் அணியின் முரட்டு பிடிவாதத்தில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால் எப்படியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எனவே கொடியோடு போவோம் என்பதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருப்பதாகவே படுகிறது.

கொடி பிடிப்பதில் ஏற்பு இல்லை எனும் நாதமுனி, ஆனால் கொடி பிடிப்பவரை பிடிக்க விடுங்கோ, பிடிக்க விரும்பாதோர் பிடிக்காமல் போங்கோ என்கிறார்.

இது ஒன்றும் புதிதல்ல. 2009இல் பலர் கொடி பிடிக்க விரும்பாமல் ஆனால் போராட்டத்து வந்தார்கள் என்பது போராட்டத்தில் கலந்தவர்களுக்கு தெரியும்.

அதுவும் ஒரு கடும் பனிக்காலம்தான்.

ஆனால் இப்போ?

எனது அவதானத்தில் நிச்சயமாக கொடி பிடிப்பவர்கள் மட்டும்தான் போராட போகிறார்கள். 

ஆகவே - அவர்கள் நாங்கள் யார் சொன்னாலும் கேட்க போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் போகிறார்கள்?

படத்தை மிக கவனப்பட்டு முதல் வரி மட்டும் தெரியும்படி எடுத்துள்ளார்கள். 

ஏன்?

ரெண்டாம், மூன்றாம் அடுக்கில் நிற்க ஆட்கள் இல்லை.

சில சமயம் - கொடியை தவிர்த்தால் - இன்னும் பலர் வந்து சேரக்கூடும். வராமலும் போகலாம்.

இங்கே ஒரே ஒரு கேள்விதான்.

இன்றைய நிலையில், கொடி பிடிப்பதால் எமக்கு நன்மையா? தீமையா?

இதற்கான பதில் இப்போதைக்கு மாறி மாறி கதைப்பது மட்டும்தான். அது (மட்டும்) தான் 3 பக்கமாக இங்கே நடந்துள்ளது.

என்னை பொறுத்தவரை - நாம் தொண்டை தண்ணி வத்த கத்தியும் ஒரு பலனுமில்லை.

பெரிய நாடுகளுக்கு நாம் தேவைபட்டால், மூன்று பேர் சேர்ந்து போராடியதையும் பெரியதாக கருதி செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்களுக்கு தேவைபடாவிட்டால் - உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தின் பாராளுமன்றம் முன், ஆயிரகணக்கில் கூடி24/7 போராடினாலும் உச்சு கொட்டி விட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது இனத்தின் சக வாழ்வுக்கான தீர்வு இந்த வீதி போராட்டங்களில் இல்லை என நான் நினைக்கிறேன்.

அது இலங்கையில் ஒரு காத்திரமான தமிழ் தலைமை அமைந்து, அது சர்வதேச காய்நகர்தல்களை திறம்பட கையாளுவதன் மூலமே சாத்தியம். 

எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள்.

பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம். 

அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது.

ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை.

சுமந்திரம், சீவி போன்றோர் இப்படி ஒரு தலைமைதுவத்தை வழங்ககூடும் என்ற எதிர்பார்ப்பும் பிழைத்து போனதை காண்கிறோம். 

ஆகவே இப்போதைக்கு இதை பற்றி அடிபடுவதில் அதிகம் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் நாம் தேவைபட்டு, சர்வதேசம் எம்மை அழைத்து கொடியை மடக்கி விட்டு வாருங்கள் விடயத்தை செய்துதருகிறோம், என்று சொல்லும் நிலை வந்தால் ( பூகோள அரசியல் மாற்றத்தால்) அப்போதாவது, கொடியை கொஞ்ச காலம் ஒத்தி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். 

எந்த தனி நபர், கொள்கை, கொடி மீதான அதீத பற்றுதலும் எமது மக்களின் கெளரவமான சகவாழ்வுக்கு தடையாக வரக்கூடாது.

அந்த கொடியை இறுக பற்றியபடி மாண்டோரும், இன்றைய நிலையில் இதையே சொல்லுவார்கள் என்பதே நான் நினைப்பது.

 

கவனம்: கசப்பான யதார்த்த குளுசை

2009 க்கு பின்

கொடி பிடித்தோரும், பிடிக்காதோரும் ஒன்றும் செய்யவில்லை.

செய்யும் நிலையில் நீங்களும் இல்லை.

நாங்களும் இல்லை. 

யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள்.

பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம். 

அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது.

ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை.

சிரித்துக்கொண்டு, கற்பனை செய்துகொண்டே பார்த்த அழகான கருத்து. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

நானும் உளப்பூர்வமாகவே எழுதுகிறேன்.

1. கொடி பிடிக்காமல் போனால் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதில்லை, ஆனால் இதை ஒரு அமைப்பு சார்ந்ததாக அல்லாமல் ஒரு இனம் சார்ந்ததாக காட்ட முடியும் என்கிறார்கள் ஒரு சாரார். கொடிக்கு யாரும் அவமரியாதை நினைப்பதில்லை. அந்த கொடிக்காக மாண்டவர் மீது இருக்கும் அதே மரியாதை அந்த கொடியின் மீதும் இருக்கும். ஆனால் ரதி அக்கா சொல்வதை போல, தீர்வு  வந்தபின் கொடியை பிடிக்கலாம், இப்போ உலக ஓப்புக்காக இதை தவிர்ப்போம் என்கிறனர் இவர்கள். (நானும் முன்பு இப்படி யோசித்தேன், எழுதினேன்).

2. இல்லை எப்படியோ நாம் சொல்வதை யாரும் கேட்கபோவதில்லை. எனவே கொடியை விடுத்து போவதில் அர்த்தமில்லை. கொடியோடு போவோம், போராடுவோம் என்கிறார்கள் மறுசாரார். இதில் ஒரு உள் அணியினர், கொடியை விடுத்து போனால் எமக்கு தீர்வு வரும் என்றால், அப்படி ஒரு தீர்வே தேவையில்லை என (வெளிநாட்டில் இருந்தபடி) சொல்பவர்களாயும் உள்ளனர்.

இந்த உள் அணியின் முரட்டு பிடிவாதத்தில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால் எப்படியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எனவே கொடியோடு போவோம் என்பதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருப்பதாகவே படுகிறது.

கொடி பிடிப்பதில் ஏற்பு இல்லை எனும் நாதமுனி, ஆனால் கொடி பிடிப்பவரை பிடிக்க விடுங்கோ, பிடிக்க விரும்பாதோர் பிடிக்காமல் போங்கோ என்கிறார்.

இது ஒன்றும் புதிதல்ல. 2009இல் பலர் கொடி பிடிக்க விரும்பாமல் ஆனால் போராட்டத்து வந்தார்கள் என்பது போராட்டத்தில் கலந்தவர்களுக்கு தெரியும்.

அதுவும் ஒரு கடும் பனிக்காலம்தான்.

ஆனால் இப்போ?

எனது அவதானத்தில் நிச்சயமாக கொடி பிடிப்பவர்கள் மட்டும்தான் போராட போகிறார்கள். 

ஆகவே - அவர்கள் நாங்கள் யார் சொன்னாலும் கேட்க போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் போகிறார்கள்?

படத்தை மிக கவனப்பட்டு முதல் வரி மட்டும் தெரியும்படி எடுத்துள்ளார்கள். 

ஏன்?

ரெண்டாம், மூன்றாம் அடுக்கில் நிற்க ஆட்கள் இல்லை.

சில சமயம் - கொடியை தவிர்த்தால் - இன்னும் பலர் வந்து சேரக்கூடும். வராமலும் போகலாம்.

இங்கே ஒரே ஒரு கேள்விதான்.

இன்றைய நிலையில், கொடி பிடிப்பதால் எமக்கு நன்மையா? தீமையா?

இதற்கான பதில் இப்போதைக்கு மாறி மாறி கதைப்பது மட்டும்தான். அது (மட்டும்) தான் 3 பக்கமாக இங்கே நடந்துள்ளது.

என்னை பொறுத்தவரை - நாம் தொண்டை தண்ணி வத்த கத்தியும் ஒரு பலனுமில்லை.

பெரிய நாடுகளுக்கு நாம் தேவைபட்டால், மூன்று பேர் சேர்ந்து போராடியதையும் பெரியதாக கருதி செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்களுக்கு தேவைபடாவிட்டால் - உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தின் பாராளுமன்றம் முன், ஆயிரகணக்கில் கூடி24/7 போராடினாலும் உச்சு கொட்டி விட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது இனத்தின் சக வாழ்வுக்கான தீர்வு இந்த வீதி போராட்டங்களில் இல்லை என நான் நினைக்கிறேன்.

அது இலங்கையில் ஒரு காத்திரமான தமிழ் தலைமை அமைந்து, அது சர்வதேச காய்நகர்தல்களை திறம்பட கையாளுவதன் மூலமே சாத்தியம். 

எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள்.

பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம். 

அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது.

ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை.

சுமந்திரம், சீவி போன்றோர் இப்படி ஒரு தலைமைதுவத்தை வழங்ககூடும் என்ற எதிர்பார்ப்பும் பிழைத்து போனதை காண்கிறோம். 

ஆகவே இப்போதைக்கு இதை பற்றி அடிபடுவதில் அதிகம் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் நாம் தேவைபட்டு, சர்வதேசம் எம்மை அழைத்து கொடியை மடக்கி விட்டு வாருங்கள் விடயத்தை செய்துதருகிறோம், என்று சொல்லும் நிலை வந்தால் ( பூகோள அரசியல் மாற்றத்தால்) அப்போதாவது, கொடியை கொஞ்ச காலம் ஒத்தி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். 

எந்த தனி நபர், கொள்கை, கொடி மீதான அதீத பற்றுதலும் எமது மக்களின் கெளரவமான சகவாழ்வுக்கு தடையாக வரக்கூடாது.

அந்த கொடியை இறுக பற்றியபடி மாண்டோரும், இன்றைய நிலையில் இதையே சொல்லுவார்கள் என்பதே நான் நினைப்பது.

 

கவனம்: கசப்பான யதார்த்த குளுசை

2009 க்கு பின்

கொடி பிடித்தோரும், பிடிக்காதோரும் ஒன்றும் செய்யவில்லை.

செய்யும் நிலையில் நீங்களும் இல்லை.

நாங்களும் இல்லை. 

யாருமில்லை.

தலைய ரெண்டு நாளாய் காணம்..... பொங்கலில் பிசி எண்டு நினைச்சன். இங்க பொங்கி இறக்கி  இருக்கிறியள்.

பொங்கல் எல்லாம் எப்படி போச்சுது?

ஆ.... நமக்கு... இண்டைக்கு தான் பொங்கல்...  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தலைய ரெண்டு நாளாய் காணம்..... பொங்கலில் பிசி எண்டு நினைச்சன். இங்க பொங்கி இறக்கி  இருக்கிறியள்.

பொங்கல் எல்லாம் எப்படி போச்சுது?

ஆ.... நமக்கு... இண்டைக்கு தான் பொங்கல்...  😁

எங்களுக்கும்தான். குளிப்பாட்டி, சந்தனம் வச்சு.. குங்குமம் வச்சு……

கொம்பு மட்டும் இன்னும் சீவேல்ல…

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எங்களுக்கும்தான். குளிப்பாட்டி, சந்தனம் வச்சு.. குங்குமம் வச்சு……

கொம்பு மட்டும் இன்னும் சீவேல்ல…

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

நோ... நோ.. தல... இது உங்கடை ஏரியா. நிண்டு விளையாடுங்கோ..... 

எனக்கு அமெரிக்கா பக்கம் ஒரு zoom viewing.... 95 years...care home.. covid.... உலகம் எப்படி போகுதெண்டு பாருங்கோவன்...😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நோ... நோ.. தல... இது உங்கடை ஏரியா. நிண்டு விளையாடுங்கோ..... 

எனக்கு அமெரிக்கா பக்கம் ஒரு zoom viewing.... 95 years...care home.. covid.... உலகம் எப்படி போகுதெண்டு பாருங்கோவன்...😲

 பொங்கலுக்காக  குளிச்சு முழுகி நல்ல கும்பகோண பட்டுத்தி சந்தியிலை வந்து நிண்டு ஆட்டம் போடுறாரு நம்ம தல... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

 பொங்கலுக்காக  குளிச்சு முழுகி நல்ல கும்பகோண பட்டுத்தி சந்தியிலை வந்து நிண்டு ஆட்டம் போடுறாரு நம்ம தல... 🤣

நாதம் பிசியாம். நீங்க வாங்கோ சீவுவம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஈழம் என்ற நாடு வென்று எடுக்கப்படவில்லை .உலகநாடுகளால் ஆங்கிகரிக்கப்படவுமில்லை. ஆகவே கொடியிருக்கமுடியாது. புலிக்கொடி  தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாகும். தமிழ்ஈழத்தின் கொடியில்லை.

              இது சுவிஸ் தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டபோராட்டம் அவர்களதுகொடியைதான் பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு கொடியில்லாவிடில்..

பிடிக்கமால் விட்டுயிருக்கலாம்.   "192" நாடுகளின் அதரவைக்கோரியோ இப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இலங்கையுமென்று..இந்த"192"

நாடுகளுக்கும் புலிக்கொடி..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின்கொடியெனத்தெரியும்.

இந்தநாடுகளில் பலவும் புலிகளைப்பயங்கரவாதிகளெனத்தடைசெய்துள்ளன...

தொடர்ந்தும் வருட..வருடம்  நீடிக்கப்பட்டும் வருகிறது.

                        இப்படிப்பட்ட சுழ்நிலையில் புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது நாங்கள் பயங்கரவாதிகள் என்று நாங்களே சொல்வது போன்றதுயாகும்.

இது இலங்கையரசு செய்ய வேண்டிய செயல். இந்தப்போராட்டம் இலங்கையரசுக்கு..

சார்பான போராட்டம். மொத்தத்தில் விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்🤗👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அந்த வசனத்தை நீக்கவும். இல்லையேல் நிழலி அல்லது   நிர்வாகத்துக்கு அறிவிக்கட்டுமா?

யாழ்களவிதிகளுக்கு முரணான வசனம் அது.. விளங்காவிடில் கள விதிகளை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.

நீங்கள் எங்கு சொல்லியும் இந்த இடது சாரி பரதேசிகளுக்கு ஒன்று நடவாது, மற்றவர்களுக்கு மட்டும்தான் விதி. 


**** இடது சாரி பரதேசிகள் என்ற வார்தைக்கு இந்த திரியை பார்க்கவும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

நீங்கள் எங்கு சொல்லியும் இந்த இடது சாரி பரதேசிகளுக்கு ஒன்று நடவாது, மற்றவர்களுக்கு மட்டும்தான் விதி. 


**** இடது சாரி பரதேசிகள் என்ற வார்தைக்கு இந்த திரியை பார்க்கவும்

 

அவையள் யாழ்கள மேட்டுக்குடியள். அவை என்ன எழுதினாலும் ஓகே. இப்ப பாருங்கோ நீங்களும் நானும் எழுதினதை இருந்த இடம் தெரியாமல் தூக்குவார். 😁

"ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே"

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

 

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

மாற்று கருத்து மாற்று கருத்து என்று சொல்லாதீர்கள். அப்படி இங்கு ஒருவரும் இல்லை. நாங்களும் உங்களை போலவே, விடுதலைபுலிகள் மாற்று இயக்க போராளிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த  போது அதற்கு ஆதரவாக கதைகளை கூறி  வேடிக்கை பார்த்தவர்கள்தான்.  அவர்களை எல்லோரும், துரோகிகள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று கதை கட்டியபோது, அதை  நம்பி ஆமோதித்து கைதட்டியவர்கள் தான். 

உங்களை போன்ற சாதாரண மனிதர்கள் தான் நாமும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் போது எங்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பது தான் உண்மை. இப்போது அரசியல் செய்பவர்களும் அதே பழைய சாக்கடைப்  பாணியில் ஆனால் ஆயுதம் இல்லாமல் அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  தான் நீங்களை என்ன் செய்தீர்கள் என்று கேட்கவேண்டுமே தவிர எம்மிடம் அல்ல. 

இதற்கு மேல் 2009 மேல் என்ன செய்யப்பட்டது என்று கேட்க விரும்பினால்  கூட்டமைப்பிடமும், கஜேந்திரகுமார், 1000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியவர்களிடம் தான் கேட்கவே்ண்டும். அவர்களிடம் தொடர்பு கொள்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஆகவே இனி மேல் 2009 பிறகு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை அவர்கடம் கேளுங்கள். எங்களை போன்ற சாதாண மனிதர்களிடம் கேட்காதீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவையள் யாழ்கள மேட்டுக்குடியள். அவை என்ன எழுதினாலும் ஓகே. இப்ப பாருங்கோ நீங்களும் நானும் எழுதினதை இருந்த இடம் தெரியாமல் தூக்குவார். 😁

"ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே"

எவரையுமே மாற்றுக் கருத்துக்களின் பொருட்டு அவதூறும் இழிவு செய்வதும் முதிர்ச்சியின்மையால் வருவது. அதன்பொருட்டு கடுஞ்சொல் உரைப்பது நம் தரப்பின்மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.😎

படிக்காத பாமரர் என்ற போலியான விம்பத்திற்குள் ஒளிந்துகொள்வது அவதூறு செய்யவும், நையாண்டி செய்யவும் பாவிக்கும் தந்திரங்கள் என்றும் தெரியும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

மாற்று கருத்து மாற்று கருத்து என்று சொல்லாதீர்கள். அப்படி இங்கு ஒருவரும் இல்லை. நாங்களும் உங்களை போலவே விடுதலைபுலிகள் மாற்று இயக்க போராளிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த  போது அதற்கு ஆதரவாக கதைகளை கூறி  வேடிக்கை பார்த்தவர்கள்தான்.  அவர்களை எல்லோரும் துரோகிகள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று கதை கட்டியபோது அதை  நம்பி ஆமோதித்து கைதட்டியவர்கள் தான். 

உங்களை போன்ற சாதாரண மனிதர்கள் தான் நாமும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் போது எங்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பது தான் உண்மை. இப்போது அரசியல் செய்பவர்களும் அதே பழைய சாக்கடைப்  பாணியில் ஆயுதம் இல்லாமல் அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  தான் நீங்களை என்ன் செய்தீர்கள் என்று கேட்கவேண்டுமே தவிர எம்மிடம் அல்ல. 

இதற்கு மேல் 2009 மேல் என்ன செய்யப்பட்டது என்று கேட்க விரும்பினால்  கூட்டமைப்பிடமும், கஜேந்திரகுமார், 1000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியவர்களிடம் தான் கேட்கவே்ண்டும். அவர்களிடம் தொடர்பு கொள்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஆகவே இனி மேல் 2009 பிறகு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை அவர்கடம் கேளுங்கள். எங்களை போன்ற சாதாண மனிதர்களிடம் கேட்காதீர்கள்.  

தொண்டு  சும்மா  அதிருதில்லை

ஆனால்  குடும்பி தெரியுது

தொடருங்கள்

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

தொண்டு  சும்மா  அதிருதில்லை

ஆனால்  குடும்பி தெரியுது

தொடருங்கள்

நான் கூறியதில் என்ன தவறு கண்டீர்கள் விசுகு . உண்மை தானே.  இதில் என்ன குடும்பி. எல்லோரும் அறிந்த உண்மை தானே.  நீங்கள் என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்தவரோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

 

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

அதே !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.