Jump to content

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று  அபிஷேகம் இடம்பெற்றது.

spacer.png

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்! | Virakesari.lk

 

TAGS

Link to comment
Share on other sites

3 hours ago, பிழம்பு said:

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று  அபிஷேகம் இடம்பெற்றது.

spacer.png

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்! | Virakesari.lk

 

TAGS

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கற்பகதரு said:

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

கற்பத்தார்! இந்த பீலிங் உங்களிட்டை நிறையவே இருக்கு...⤵️

சென்னை உண்ணாவிரதத்தில் செல்வி, துர்கா ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு | DMK  begins hunger strike - Tamil Oneindia

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து விகாரைக்கு புக்கை அனுப்பினதே? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

ஏன் ராசன்..?
கிழக்கின் விடிவெள்ளியள் அரசாங்கத்தோடை சேர்ந்து என்ன செய்யினம்?😎
ஓ....அவையளுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி... 😁

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக

வியாழேந்திரன் Archives - Vanakkam London

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

5 hours ago, Nathamuni said:

பக்கத்து விகாரைக்கு புக்கை அனுப்பினதே? 🤔

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஏன் ராசன்..?
கிழக்கின் விடிவெள்ளியள் அரசாங்கத்தோடை சேர்ந்து என்ன செய்யினம்?😎
ஓ....அவையளுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி... 😁

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக

வியாழேந்திரன் Archives - Vanakkam London

அதுதான் கோணமலையில் தலைவர் சம்மந்தர் ஐயாவ குத்த வச்சி இருக்கிறியள் அதுதான் ஐயா இருக்கும் போது நாம் ஏன் போய் அங்கு உளத்துவான் அப்படி நீங்கள் படம் போட்டு காட்டியவர்கள் நினைத்து இருக்கலாம் 😁😁😁

 

4 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

நீங்கள் குறிப்பிட்டவர்கள் அனைவரும் வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே ஆனால் சுமந்திரன் ஐயா மேச்சல் தரை பிரச்சினைக்கு வந்தார் , கல்முனைக்கு வந்து பிரதேச செயலக பிரச்சினைக்கு வந்தார் , பிள்ளையான் றிலீஸ் ஆகிரக்கூடாது என்று ஓடோடி வந்தார் அதுதான் அவர் மீது கரிசனை கூட எனக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

ஓமோம் அவையளோடை பவ்யமாய் கதைக்க வேணும்.  இல்லாட்டி கோவம் வந்துடும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

கேட்றேன் என்று கோவிக்காதீங்கோ ரஞ்சனை தூக்கி நான்கு வருடம் உள்ளே போட்டு இருக்கினம் ....யார் அவருக்காய் வாதாடினது தெரியுமோ 😂
 

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

கேட்றேன் என்று கோவிக்காதீங்கோ ரஞ்சனை தூக்கி நான்கு வருடம் உள்ளே போட்டு இருக்கினம் ....யார் அவருக்காய் வாதாடினது தெரியுமோ 😂
 

ரஞ்சனிடம் உள்ள காசுக்கு தோற்கும் வழக்கையும் எடுத்து செய்யலாம். இதுவும் செய்யாவிட்டால், உழைப்பதற்கு சட்டத்தரணி வேறு என்ன செய்யமுடியும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

முனியர் 

நீங்கள் நல்லா வல்லாரைக் கீரை சாப்பிடுவியள் போல.. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு..... 😂😂😂

Link to comment
Share on other sites

15 hours ago, Nathamuni said:

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

அந்த புக்கையை என்னிடம் இருந்து பறித்து தின்றுவிட்டு இப்படியும் ஒரு கேள்வியா? 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.