Jump to content

மாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்!

by qljkGaN-_400x400.jpg?fit=40%2C40&ssl=1News Deskabout 5 hours ago379Views

IMG-3944.jpg?fit=758%2C350&ssl=1

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகர திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று (13) நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை மாஸ்டர் திரைப்படத்தை பார்வையிட அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தமை சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.

அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

https://newuthayan.com/மாஸ்டர்-திரைப்படத்தால்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஓவா கொடுத்து பட்டாசு கொளுத்தி பிரமாதமாக பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்  யாழ்ப்பாணத்தில் 2000 ரூபாவாம் டிக்கட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

2000 ஓவா கொடுத்து பட்டாசு கொளுத்தி பிரமாதமாக பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்  யாழ்ப்பாணத்தில் 2000 ரூபாவாம் டிக்கட்டு 

x138730200_3486593414772264_1920723010448136331_n.jpg.pagespeed.ic.jOtg20E7XU.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தியேட்டரப்பா உது? சாந்தி தியேட்டர் மாதிரி கிடக்கு..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எந்த தியேட்டரப்பா உது? சாந்தி தியேட்டர் மாதிரி கிடக்கு..😁

யாழ்ப்பாணம் செல்வாவாம் சாந்தி இல்ல சாமியார் யாழில் சாந்தி  தியட்டர் இருக்கா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணம் செல்வாவாம் சாந்தி இல்ல சாமியார் யாழில் சாந்தி  தியட்டர் இருக்கா ??

ஓம் இருந்தது. அது சரி ஆத்தங்கரை சாந்தி தியேட்டர் இப்பவும் இருக்கா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2021 at 20:54, குமாரசாமி said:

ஓம் இருந்தது. அது சரி ஆத்தங்கரை சாந்தி தியேட்டர் இப்பவும் இருக்கா? 😁

ரெண்டு இருக்கு விஜயா ரவுணில் இருக்கு , சாந்தி கல்லடியில் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு இருக்கு விஜயா ரவுணில் இருக்கு , சாந்தி கல்லடியில் இருக்கு 

ரவுணுக்கை இன்னுமொரு தியேட்டர் இருந்ததெல்லோ?? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ரவுணுக்கை இன்னுமொரு தியேட்டர் இருந்ததெல்லோ?? 🤔

அதன் பெயர்தான் இப்ப மாற்றப்பட்டுள்ளது விஜயா என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 19:34, குமாரசாமி said:

எந்த தியேட்டரப்பா உது? சாந்தி தியேட்டர் மாதிரி கிடக்கு..😁

 அது ஆத்தங்கரை இல்லை  மூத்திர ஒழுங்கை சாந்திக்கு எதிப்புறமான கரன் தியேட்டருக்கு முன்னால் ஒரே மூத்திரநாத்தம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 08:09, குமாரசாமி said:

ரவுணுக்கை இன்னுமொரு தியேட்டர் இருந்ததெல்லோ?? 🤔

மனோகரா, சிறீதர் என்னும் பெயர் கொண்ட தியேட்டர்களும் இருந்ததாக அறிகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

 அது ஆத்தங்கரை இல்லை  மூத்திர ஒழுங்கை சாந்திக்கு எதிப்புறமான கரன் தியேட்டருக்கு முன்னால் ஒரே மூத்திரநாத்தம்தான்.

இஞ்சை பாருங்கோ புலவர்!
நாங்கள் மட்டகளப்புக்கை நிண்டு உளவாரம் செய்யிறம் கண்டியளோ? 😁

 யாழ்ப்பாண கரன் தியேட்டர்  ஒழுங்கையுக்கை மனிசன் கால் வைப்பானே....? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

மனோகரா, சிறீதர் என்னும் பெயர் கொண்ட தியேட்டர்களும் இருந்ததாக அறிகின்றேன்.

எங்கை மட்டக்களப்பிலையோ ????? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2021 at 00:38, பிழம்பு said:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று (13) நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

மன்னிக்கவும் சாமியார்! இந்த கருத்தை ஒட்டியே உங்கள் கேள்வியை புரிந்து  நான் பதில் கொடுத்தேன்.  உங்கள் கேள்வி மட்டக்களப்புக்கானது என  நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

மன்னிக்கவும் சாமியார்! இந்த கருத்தை ஒட்டியே உங்கள் கேள்வியை புரிந்து  நான் பதில் கொடுத்தேன்.  உங்கள் கேள்வி மட்டக்களப்புக்கானது என  நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.

அட விடுங்க சகோதரம். :)
இதுக்கெல்லாம் மன்னிப்பு அது இதுவென்று.
நீங்களும் புலவரும் கருத்து எழுதிய பின் நான் எழுதியதை மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.😁

Link to comment
Share on other sites

யாழில் Bond கல்வி நிலையத்துக்கு அருகாமையில் றீகல் திரையரங்கு இருந்ததாக ஞாபகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதன் பெயர்தான் இப்ப மாற்றப்பட்டுள்ளது விஜயா என 

 

On 15/1/2021 at 21:09, குமாரசாமி said:

ரவுணுக்கை இன்னுமொரு தியேட்டர் இருந்ததெல்லோ?? 🤔

குசா அண்ணை கேக்கிறது ராஜேஸ்வரி?

டிரிங்கோ ரோட், கல்முனை ரோட் சந்தியில் இருந்தது. இப்ப கார்கில்ஸ் பூட் சிட்டி ஆயீட்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

137199092_3578544128908389_1165396800258 * அந்த 6-வது பொயின்ற் கலந்து விட்டீர் பாருமய்யா..  அங்கதான் கப்பில் ஓட்டோ ஓட்டி  நிக்குறியள் ..👌 
அந்த காய்ந்து போன கச்சான் அல்வாவையும்  இத்து போன சீவலிளும் பார்க்க கோரோனோ எவ்வளவோ மேல்..👍

----- வாசகர் கொமொன்ற் -------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1985 முன் யாழ் நகருக்குள் இருந்த தியேட்டர்கள்
ராஜா- கதிரைகள் கூடிய தியேட்டர்
வின்ஸர்-மிகவும் பெரிய தியேட்டர்
லிடோ-மிகவும்சிறிய தியேட்டர்.இந்த முன்றும் வண்ணங்குளத்திற்கு முன்னால் இருந்தன
வெலிங்டன்
,ராணி, -பஸ்நிலையத்திற்கு முன்னால்
மனோகரா- 
சிறீதர்,
சாந்தி,-சுப்பர் பல்கனியுடன் கூடிய தியேட்டர்
கரன்- சாந்திக்கு எதிர்திசையில்- மூத்திர ஓழுங்கைக்குள்
றீகல்-புல்லுக்குளத்திற்கு எதிரில்- பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள் போடுவார்கள்
றியோ- யாழ்மாநகரசபை மண்டபத்தில்-இங்கும்பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள் போடுவார்கள்

karan-(மூட்டைக்கடி  வாங்கலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான குழுவினரால் பருத்தித்துறை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சீல் வைக்கப்பட்டது.

பருத்தித்துறைப்பகுதியில் அண்மையில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த இருபத்தைந்துக்கு மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கான பிசிஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திங்கள் கிழமை வரை திரையரங்கை பருத்தித்துறையில் திறக்கவேண்டாமென மாகாண சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைபெற்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியாலும் பொதுசுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி நேற்று சனிக்கிழமை மாஸ்டர் திரைப்படம் இரவு 9.30 காட்சி நடத்தப்பட்டுள்ளதோடு அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவான மக்களை ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளித்ததாலேயே திரையரங்கு சீல் வைக்கப்பட்டது.

https://www.pagetamil.com/168460/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.