Jump to content

இலங்கையில் முகநூல் பதிவுக்காக கைதான, தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க கோருகிறது RSF…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முகநூல் பதிவுக்காக கைதான, தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க கோருகிறது RSF…

January 13, 2021

Kokiladasan.jpg

முகநூல் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாரிஸை தளமாகக் கொண்ட ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ (Reporters Without Borders – RSF) இலங்கை அரசிடம் கேட்டிருக்கிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் என்பவரையே விடுதலை செய்யுமாறு கோரி RSF அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:ஜனவரி 16 ஆம் திகதி ஐம்பதாவது நாளை சிறையில் நிறைவு செய்யும் முருகுப்பிள்ளை கோகுலதாசன் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு முகநூல் பதிவுக்காக ரகசியமான முறையில் கைது செய்யப்பட்டார். 

இச் சட்டம் பெரும்பாலும் பத்திரிகையாளர் களை மௌனிக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கடுமையான சட்டம். 2009 இல் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களது படங்களை முகநூலில் வெளியிட்டதாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வேறு வட்டாரங்கள் ஊடாக எமக்குத் தனித்தனியே கிடைத்த ஆதாரங்களின்படி அவர் ஆண்டு தோறும் நவம்பர் மாதங்களில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை நினைவுகூருகின்ற நிகழ்வு தொடர்பான ஒரு பதிவையே வெளியிட்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

“முருகுப்பிள்ளை கோகுலதாசனின் கைதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவரைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதும் ஊடக சுதந்திரத்தின் மீதான மீறல் என்பதை வெளிப்படை யாகக் காட்டுகின்றன”என்று RSF அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவின் பொறுப்பாளர் டானியல் பஸ்ராட்(Daniel Bastard) தெரிவித்திருக்கிறார். 

கோகுலதாசனை உடனடியாக, நிபந்தனை ஏதும் இன்றி விடுவிக்க உத்தரவிடுமாறு இலங்கையின் சட்டமாஅதிபரைக் கேட்டுக் கொள்கின்றோம். தமிழர் பிரச்சினையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்துகின்றஊடகவியலாளர்களைப் பாதுகாப்புப் படைகள் துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். 

வெளிநாட்டுகளில் தமிழ் புலிகளிடம் இருந்து பணம் பெற்றனர் என்று தெரிவித்து ஓராண்டுக்கு முன் மட்டக்களப்பில் ஏழு ஊடகவியலாளர் களது தகவல்கள் வட்டமிடப்பட்ட அவர்களது தலைகளின் படங்களுடன் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டன. அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கோ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கோ பொலீஸார் மறுத்து விட்டனர்.-இவ்வாறு RSF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

https://globaltamilnews.net/2021/155659/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மகிந்தா - கோத்தா வெள்ளைவான் யுகம் திரும்புகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.