Jump to content

கொரோனா மருந்து வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் 2021க்குள் பெருமளவு மக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை பெறப்போவதில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மருந்து வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் 2021க்குள் பெருமளவு மக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை பெறப்போவதில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்

உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத் ஆரம்பித்தாலும் இந்த வருடம் பெறுமளவு மக்களிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்ப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Soumya_Swaminathan-300x150.jpg
எதிர்காலத்திலும் நாடுகளும் மக்களும் சமூகவிலக்கல் நடவடிக்கைகளையும் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்துகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களிற்கு பாதுகாப்பை வழங்கினாலும் 2021ற்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் நிலையை நாங்கள் அடையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிலநாடுகள் சில பகுதிகளில் இது இடம்பெற்றாலும் முழு உலகையும் உங்களால் பாதுகாக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

116348011_vaccinestory-13-300x200.jpg
சனத்தொகை முழுவதையும் பாதுகாப்பதற்கு 70 வீதமானவர்களிற்கு கொரோனா மருந்தினை வழங்கவேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எனினும் கொரோனா வைரசின் அதிகளவு தொற்றுதன்மை காரணமாக70வீதத்திற்கும் அதிகமானவர்களிற்கு மருந்தினை வழங்கவேண்டியிருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

116038773_mediaitem116038010-300x169.jpg
உலகின் மிகவும் வறிய நாடுகளில் மருந்துகளை வழங்கும் நடவடிக்கை இந்த மாதமோ அல்லத அடுத்தமாதமோ ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகர் புரூஷ் அயில்வோர்ட் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களால் மாத்திரம் அதனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆபத்தான நிலையிலுள்ள மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கு மருந்து உற்பத்தியாளர்களின் ஆதரவு உலக சுகாதாரஸ்தாபனத்திற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Thinakkural.lk ✂️

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே நான் எப்பவோ சொல்லீட்டன் எல்லோ...? கொரோனா தானாய் போனல் உண்டு இல்லையேல் ஆளையாள் விலத்திக்கொண்டு போக வேண்டியதுதான்...
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.