Jump to content

நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை (கட்டுரை)

January 8, 2021

நாராயணி சுப்ரமணியன்

பவள வாய்ச்சி” என்று கண்ணகியை வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். மருதாணி இட்ட பெண்ணின் விரல் நகங்களில் ஊடுருவும் அழகிய செந்நிறத்தை, “விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பவளம்/பவளப்பாறை என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருகிற அந்தச் சிவப்பு வெறும் நிறமல்ல. ஒரு பவள உயிரி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான குறியீடு. அந்த நிறத்துக்கும் நலத்துக்கும் ஆபத்துகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதுபற்றி பல தசாப்தங்களாகவே அறிவியலாளர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாலும் சமீபத்திய அறிக்கை ஒன்று கணினியில் உருவாக்கப்பட்ட கணித மாதிரிகள் மூலமாக இந்த ஆபத்தின் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உலகளாவிய தரவுகளை முன்வைத்திருக்கிறது.

நுண்பாசிகளும் பவள உயிரிகளும்

பவளப்பாறைகளின் நிறம் எத்தனை முக்கியமானது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால் பவளங்களின் உடல் அமைப்பு பற்றிய அடிப்படை அறிவியல் பற்றிய புரிதல் அவசியம்.

பவளப்பாறை என்று நாம் பொதுவாகச் சொல்லும் ஒரு அமைப்பு பவள உயிரிகளால் ஆனது. நாம் வெளியில் பார்ப்பது பவள உயிரிகளின் கூடு. ஒவ்வொரு பவளப்பாறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான சிறு பவள உயிரிகள் வசிக்கின்றன. பல்வேறு பவளப்பாறைகள் சேர்ந்து பவளத்திட்டுக்களை (Coral reefs) உருவாக்குகின்றன.

ஒவ்வொரு பவள உயிரியும் சூசாந்தலே (Zooxanthellae) என்ற ஒருவகை நுண்பாசியுடன் கூட்டுவாழ்வையே வாழ்கிறது. நுண்பாசிகள் தாவர உயிர்கள் என்பதால் ஒளிச்சேர்க்கை மூலமாக இவை உணவு தயாரிக்கின்றன. பவள உயிரிகளின் உணவுத் தேவையை, கிட்டத்தட்ட 90% வரை இந்த நுண்பாசிகள் தான் பூர்த்தி செய்கின்றன. ஆகவே பவள உயிரிகள் உயிர் வாழவும் உணவு உண்ணவும் இந்த நுண்பாசிகள் இன்றியமையாதவை.

நிறமிழக்கும் பவளப்பாறைகள்

சுற்றியுள்ள கடல்நீரின் வெப்பம் மாறும்போதோ கடல்நீரின் வேதிநிலை மாறும்போதோ, கிருமிகள் தாக்கும்போதோ, இந்தப் பவள உயிரிகள் உள்ளே வசிக்கும் நுண்பாசிகளைத் துப்பி வெளியேற்றி விடுகின்றன. குறிப்பாக கடல்நீரின் வெப்பத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகரிக்கும்போது நுண்பாசிகள் உடனடியாக வெளியேறும்.

இவ்வாறு நுண்பாசிகள் வெளியேறிவிட்டால், பவளப்பாறைகள் நிறமிழந்து, வெளிறிய நிலையில் காணப்படும். இந்த நிகழ்வு Coral Bleaching என்று அழைக்கப்படுகிறது. நிறமிழந்த பவள உயிரிகள் பசியால் வாடத்தொடங்கும்.

பொதுவாக இந்த நிறமிழத்தல் தற்காலிகமானதுதான். சூழல் மாறும்போது நுண்பாசிகள் மீண்டும் பவளங்களோடு கூட்டு வாழ்க்கை வாழ உள்ளே புகுந்துவிடும். போன நிறமும் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பி வரும். ஆனால் நிறமிழத்தலுக்குக் காரணமாக இருந்த சூழல் தொடர்ந்தபடியே இருந்தால் பாசிகள் திரும்ப வருவதற்கான கால அவகாசம் கடந்து விடும். அப்போது பட்டினியால் பவள உயிரிகள் மொத்தமாக இறக்கும்.

காலப்போக்கில் பவளப்பாறைகள் பாசி இலைகளால் மூடப்பட்டு அந்த பவளத்திட்டே பாசித்திட்டாக மாறிவிடும். ஒரு பவளப்பாறை நிறமிழப்பது என்பது அதன் அழிவுக்கான முதல் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. நிறமிழந்த பவளப்பாறைகளை மனித முயற்சியால் மட்டுமே மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.

நிறமிழத்தல் நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய பவளத்திட்டான பெரும்தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தப் பவளத்திட்டு மூன்று லட்சத்து நாற்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது! விண்வெளியில் இருந்துகூட இதைப் பார்க்க முடியும்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தப் பவளத்திட்டில் மூன்று பெரிய நிறமிழத்தல் நிகழ்வுகள் (Mass Bleaching events) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய நிறமிழத்தல் ஏப்ரல் 2020-ல் நடந்தது. இதுவரை வந்த நிறமிழத்தல்களிலேயே அதிக பரப்பளவில் பவளப்பாறைகளை பாதித்த நிகழ்வு இது. 1036 தனிப் பவளத்திட்டுக்கள் மொத்தமாக நிறமிழந்தன. இது மொத்த பவளத்திட்டுக்களில் 25 சதவிகிதம்! அதாவது, ஒவ்வொரு பவளத்திட்டிலும் கிட்டத்தட்ட 60% பவள உயிரிகள் நிறமிழந்து அழிந்தன. இவற்றில் சில பவளத்திட்டுக்களாவது மீண்டும் உயிர்பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் உலகளாவிய பவளத்திட்டுக்களில் 50% திட்டுக்களை நாம் இழந்திருக்கிறோம். 2050-ம் ஆண்டோடு மொத்த பவளத்திட்டுக்களில் 90% முற்றிலுமாகவே அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிறமிழத்தல் நிகழ்வுகள் அவ்வப்போது வருகின்ற நிலை மாறி வருடாவருடம் தீவிரமாக ஏற்பட்டு பவளப்பாறைகள் அழியும். தங்களைக் காத்துக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் பவள உயிரிகளுக்கு அவகாசமே இல்லாத அளவுக்கு குறுகியகால இடைவெளியில் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

லா நினாவும் நிறமிழத்தலும்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மேலும் ஒரு அச்சமூட்டும் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவாக இயற்கைச் சுழற்சியில் எல் நினோ – லா நினா (El Nino – La Nina) நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவது இயல்பு. எல் நினோ நிகழ்வின்போது சராசரிக் கடல் வெப்பநிலை அதிகமாகவும் லா நினாவின் போது சராசரிக் கடல் வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். செப்டம்பர் 2020-ம் ஆண்டில் லா நினா நிகழ்வு தொடங்கியுள்ளது. ஆனாலும் குறைந்த வெப்பநிலையையும் மீறி அடுத்து வரப்போகிற கோடைக்காலத்தில் பவளங்கள் நிறமிழக்கும் நிகழ்வு நடக்கத்தான் போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

லா நினா – குளிர் – நிறமிழத்தல் நடக்காது என்று புரிந்து கொள்கிற அளவுக்குக் காலநிலை எளிமையாக இல்லை என்பது அவர்களது வாதம். காலநிலை மாற்றத்தால் எல்லாமே சிக்கலாகிவிட்டது என்பதால் லா நினா சுழற்சியால் மட்டும் நிறமிழத்தலைத் தடுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது வரும் புயல்கள் கூட பவளப்பாறைகளை பாதிக்கின்றன. அவை கடல் வெப்பத்தைக் குறைக்கும் என்றாலும் புயல்களின் தீவிரத்தன்மை அதிகரித்துக் கொண்டே வருவதால் அடிக்கும் காற்றிலும் அலைகளின் வேகத்தாலும் பவளப்பாறைகள் சுக்குநூறாக உடைகின்றன. அதீத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடலுக்குள் வருகிற சேறும் மாசுபட்ட நீரும் பவளப்பாறைகளுக்கு ஆபத்தாக முடிகிறது.

உலகளாவிய அறிவியலாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான 2014 அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீரின் வெப்பநிலையும் அமிலத் தன்மையும் அதிகரிக்கும் எனவும் எளிதில் பாதிக்கப்படுகிற வாழிடங்களான பவளத்திட்டுக்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கான அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme) பவளப்பாறைகள் நிறமிழத்தல் பற்றிய ஒரு முக்கிய அறிக்கையை நவம்பர் 2020-ல் வெளியிட்டுள்ளது. காலநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த அறிக்கை சில தரவுகளை ஆராய்கிறது. பாரீஸ் ஒப்பந்தம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை முன்வைத்து நிறமிழத்தல் நிகழ்வுகள் கணிக்கப்பட்டுள்ளன. அறிக்கை முன்வைக்கும் முக்கியமான முடிவுகள் இவை:

பாரீஸ் ஒப்பந்தம் முற்றிலுமாக செயல்படுத்தப்படாவிட்டால் உலகின் எல்லா பவளத்திட்டுக்களிலும் வருடாந்திர தீவிர நிகழ்வுகள் வரத்தொடங்கும். 2034-ம் ஆண்டுக்குப் பிறகு எல்லா பவளத்திட்டுக்களுமே வருடாவருடம் நிறமிழக்கும்.

பாரீஸ் ஒப்பந்தம் பாதியாவது செயல்படுத்தப்பட்டால் இது 2045-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போகும். அதாவது பாரீஸ் ஒப்பந்தம் பாதியளவு செயல்படுத்தப்பட்டால், 2045-ம் ஆண்டுக்குப் பின்னர் வருடாந்திர தீவிர நிறமிழத்தல் நிகழ்வுகள் எல்லா பவளத்திட்டுக்களிலும் வரத்தொடங்கும்.

உலகின் சராசரி வெப்பநிலைக்கும் இந்த நிறமிழத்தல் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு. நாம் வெப்பநிலையை எந்த அளவுக்குக் குறைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறைக்கிற ஒவ்வொரு கால் டிகிரி வெப்பத்துக்கும் (0.25 டிகிரி செல்சியஸ்) இந்தக் கணிப்பு வருடத்தில் ஏழு ஆண்டுகள் கூடும்! அதாவது, குறைக்கப்படுகிற ஒவ்வொரு கால் டிகிரி செல்சியஸுக்கும் நிறமிழத்தல் நிகழ்வு ஏழு வருடங்கள் தள்ளிப்போகும்!
இந்தியாவைப் பொறுத்தவரை இது 2046-ம் ஆண்டு நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2046-ம் ஆண்டுக்குப் பிறகு, வருடாவருடம் பவளப்பாறைகள் நிறமிழக்கலாம்.

நிறமிழக்கும் ஒவ்வொரு பவளத்திட்டும் உயிரிழக்கும் என்றோ மீண்டு வந்துவிடும் என்றோ நிச்சயமாக சொல்லிவிட முடியாது. அது அந்தந்த கடற்பகுதிகளின் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் வருடாவருடம் நிறமிழப்பு ஏற்பட்டால் பவள உயிரிகளுக்குத் தங்களைக் காத்துக்கொள்ளும் அவகாசம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
எல்லா பவளத்திட்டுக்களுமே அழிந்துவிட்டால் என்ன ஆகும்?

கொஞ்சம் பதறவைக்கிற சூழலியலாளர்கள் யோசிக்க பயப்படுகிற கேள்வி இது. ஆனால், காலம் இந்தக் கேள்வியையும் நேருக்குநேர் சந்திக்க வைத்துவிடுகிறது. ஒருவேளை உலகிலுள்ள எல்லாக் கடல்களிலும் எல்லா பவளத்திட்டுக்களும் மொத்தமாக அழிந்து விட்டால் என்ன ஆகும்?

சுருக்கமான பதில் – “துல்லியமாக என்ன நடக்கும் என்பது தெரியாது, ஆனால் நாம் அறிந்த உலகம் பல விதங்களில் கண்ணுக்குத் தெரியாமல் பாதிக்கப்படும். பல கண்ணிகள் அறுபடும்”

இவற்றில் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிற உயிர்க்கண்ணிகள் என்ன ஆகும் என்பதைப் பார்க்கலாம்:

பல பவளத்திட்டுக்கள் பெரு மீன்களின் குஞ்சுகளுக்கு நர்சரிகளைப் போல செயல்படுகின்றன. நம் உணவுக்கு ஆதாரமாக இருக்கிற பல ஆழ்கடல் மீன்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதே பவளத்திட்டுக்களிலிருந்து தான். பவளத்திட்டுக்கள் இல்லாவிட்டால் இந்த மீன் இனங்கள் எல்லாமே அழியலாம்.

மீன்பிடித் தொழில், சுற்றுலா, வாழ்வாதாரம் என்று பவளத்திட்டுக்களிலிருந்து மட்டும் உலக அளவில் 375 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது! அது எல்லாமே அழியும். பல தீவு நாடுகளுக்கு இந்தப் பவளத்திட்டுக்கள் தான் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அந்த நாடுகளின் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலையும்.

பவளத்திட்டுக்களிலிருந்து பெறப்படும் வேதி மூலக்கூறுகள், மருந்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் அழியும். பவளத்திட்டுக்கள் கடலோரப் பகுதிகளுக்கு ஒரு அரணாக இருக்கின்றன. பவளத்திட்டுக்கள் அழிந்துவிட்டால் சுனாமி, புயல், கடல்சீற்றம் போன்ற நிகழ்வுகள் வந்தால் கடலோரப் பகுதிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது.

பவளத்திட்டுக்கள் தொன்மமான உயிரிகள். ஒரு சராசரி பவளத்திட்டின் வயது 500 ஆண்டுகள். ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டின் வயது 20,000 ஆண்டுகள்! மனிதனோடு பல வரலாறுகளைக் கடந்து பயணித்துவரும் பவளத்திட்டுக்கள் அழியும்போது, காலத்தின் புத்தகத்தில் சில முக்கிய பக்கங்களும் கிழித்து வீசப்படும்.

காலப் பிரபஞ்சத்தின் ஓவியம்

பல்வேறு வண்ணங்களில் உயிர்ப்பும் சந்தடியுமாக இருந்த பவளத்திட்டுக்கள் கண்ணுக்கு நேரே நிறமிழந்து, பாசி படிந்து அழிவதைப் பார்ப்பது ஒரு குரூரமான அனுபவம். சில சிறு பவளத்திட்டுக்கள் இவ்வாறு அழிவதை நானே பார்த்திருக்கிறேன்.

கடலும் நிலமும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில்
காலப் பிரபஞ்சத்தின் ஓவியங்களைப் போல
மாயக் கம்பளங்களைப் போல
புனிதமான மொசைக் கற்களைப் போல
கனவுலகின் அற்புதத் தோட்டங்களாக
இந்தப் பவளத் திட்டுக்கள்

என்ற யாஹியா லபாபிடியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “மனிதனுக்குக் காலம் என்றால் பயம், ஆனால் அந்தக் காலமே பிரமிடுகளைப் பார்த்து பயப்படுகிறது” என்று ஒரு சொலவடை உண்டு. அது பவளப்பாறைகளுக்கும் பொருந்தும். காலத்தையும் மீறி நின்று கொண்டிருக்கும் இந்தப் பவளத்திட்டுக்களை மனித இனத்தின் செயல்பாடுகள் அழித்துக் கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்.

நிறமிழந்த பவளப்பாறைகளுக்குள் செல்வது என்பது சிலந்தி வலைகள் நிரம்பிய யாரோ வாழ்ந்து கெட்ட வீட்டின் மாய விசும்பல்களுக்கு இடையே நடந்து செல்வதைப் போன்ற ஒரு துயர்மிகு அனுபவம். “நாம் குறைக்கிற ஒவ்வொரு கால் டிகிரி செல்சியஸுக்கும் ஒரு தாக்கம் உண்டு” என்ற தரவு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெற்றால் ஒருவேளை பவளத்திட்டுக்கள் காப்பாற்றப்படலாம்.

தரவுகள்:
Report from ARC Center of Excellence for Coral Reef Studies, Australia, April 2020.
Climate modelling maps from NOAA and Australian Bureau of Meteorology, 2020.
Climate Change 2014: Fifth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change, 2014.
Projections of future coral bleaching conditions using IPCC CMIP6 models. United Nations Environment Programme, November 2020.

***

நாராயணி சுப்ரமணியன்

 

http://www.yaavarum.com/நிறமிழக்கும்-பவளங்கள்-ஒ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.