Jump to content

முள்முருக்கை - நெற்கொழுதாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

முள்முருக்கை: நெற்கொழுதாசன்

Netkoplustory.jpg?resize=1020%2C721&ssl=

நீண்டு கிடந்த தெருவில் நாய் தன்பாட்டில் படுத்துக்கிடந்தது. கண் எட்டும் தொலைவு மட்டும் வேறு எந்த உயிரினங்களையும் காணமுடியவில்லை. பாலை வெய்யில். தொலைவில், தெருவின்மேல்   நிரலைகள் தோன்றியது.  புளுதி உறைந்த ஓரங்களில் அனல்காற்று மெல்ல மண் துணிக்கைகளை அங்குமிங்குமாக உருட்டிக்  கொண்டிருந்தது.  தெருவில் ஊற்றியிருந்த  தார் நைந்து செருப்பை உள்வாங்கியது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். மறைவுகளிலிருந்து  யாரோ  கூர்ந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன்.  என்னையறியாமல் மனம்  கூனிக்கொண்டது.  திரும்பிப்போ என்று ஒரு குரலும், இல்லை உன் பாட்டில் நீ போ. அன்றும் இப்படித்தான்.  சிறு அசைவுகூட எழவில்லையே. எதற்காக நீ தயங்குகிறாயென்று, ஒரு குரலும் எதிரெதிராக  ஒலித்துக் கொண்டிருந்தது.  நடந்தேன். அன்றையைபோல் அல்லாமல் நிமிர்ந்தே நடந்தேன்.

எல்லாம் மாறி இருந்தது.  வேலிகளைக் காணவில்லை. திரும்பும் இடங்கள் எங்கும் மதில்கள். மதில்மேல் ஆணிகளும், உடைத்த போத்தல்களின் பிசுங்கான்களும் நிறைந்திருந்தன. மதிலில் காகமோ, புலுனிக்குருவியோ, அணில்பிள்ளையோ   இருக்கமுடியாது. முன்பெல்லாம் யாராவது முகவரி கேட்டு வந்தால், மதில்வீடென்றோ, ஓட்டுவீடென்றோதான்  அடையாளம்  சொல்வோம். அப்போது  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுதான் மதில்கள் இருந்தன. அவ்வளவு எண்ணிக்கையில் தான் ஓட்டு வீடுகளும் இருந்திருக்கும். முடக்கன் கந்தன் கடையடி முல்லையில்தானே கம்பு முறித்து அடித்தார்கள்.  நாடியை தடவிப் பார்த்தேன். தழும்பு இருந்தது.

அவர்கள் என்னை எளியவேசை என்று அழைத்தார்கள். ஊருக்குள் கால் வைச்சால் அடித்துமுறிப்பதாக கத்தினார்கள். அவர்களில் ஒருவன் என் பின்னாலிருந்து கிளுவைக் கதியாலால் அடித்தான்.  தொடையொன்றில் கிளுவை முள் கீறியது. இன்னும் எரிவதுபோல இருக்கவே தொடையை  புறங்கையால் தடவிக்கொண்டேன். அவன் முகம் நன்றாக நினைவிருந்தது. அதற்கு சிலநாள்களுக்கு பேச்சோடு உதவி தேவை என்றால் கேளுங்க என்று  குழைந்து பேசியிருந்தான்.  பசுவின் சாணத்தை மணந்து திமிறும் நாம்பன் மாட்டின் முறுகலை அவனில் கண்டேன். அந்தக்கணத்தில் அவன் மீது எழுந்த அச்சம் இன்னும் இருக்கிறது. அந்த அச்சம் இப்போது இரக்கமாக மாறிவிட்டது. அங்கு வாழ்ந்த நாள்களில், இரவுக்கு கண் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பேன். இரக்கம் இருக்கிறதா என்றால் இல்லை என்பேன். 

எதற்காக இந்தத் தெருவில் நடந்தே போகவேண்டும் என விரும்பினேன். தெரியவில்லை. நடக்க நடக்க ஒரு நிறைவு. சேர்த்துவைத்திருந்த வன்மத்தில் ஒரு மாற்றம். நான் இன்னும் ஏறக்குறைய ஒருமைல் தூரம் போகவேண்டும். போய்ச்சேர்வதற்குள் நான் புது மனிசியாகிவிடுவேனோ என்ற அய்யம் எனக்குள் எழுந்தது. அவர்கள் அன்று ஏன் அப்படிச்செய்தார்கள்.

சேரன்தோட்டம் விவசாயக் கிராமம். நூறு குடும்பங்கள் அளவில் குடியிருந்தார்கள். அரசாங்கத்தின் எல்லைப் பகுப்புகளைத் தாண்டி, கிராமத்தவர்கள்  தமக்குள்ளாகவே தமது ஊரின் எல்லையை வகுத்துவைத்திருந்தார்கள். வடக்கு தெற்காக இரண்டு வாசிகசாலைகளும், கிழக்குப்பக்கம் ஒரு பிள்ளையார் கோயிலும், மேற்குப்பக்கம் வயலும் குளமுமாக எல்லையை தம் மனதுள்ளேயே வரைந்துகொண்டிருந்தனர்.  கல்யாணமோ கருமாதியோ எதுவென்றாலும் தமக்குள்ளேயே முடித்துக் கொள்வார்கள். வருடத்தின் எல்லா நாள்களும் தோட்டத்தில் வேலை செய்வார்கள். மாரிகாலத்தில் வயலில் நெல் விதைப்பார்கள்.  எல்லா ஊர்களைப்போல இங்கு இருந்த இளைஞர்களும் தங்கள் ஊரை மதிப்பாக வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

கிராமம் முடிந்து வயல் தொடங்குமிடத்தில் என் வீடு. அதை வீடு என்று யாரும் சொல்லமாட்டார்கள். எனக்கு அது வீடாயிருந்தது. படுக்கவும், சமைக்கவும், ஒரு றங்குப்பெட்டி வைக்கவும் போதுமான ஒரு அடைக்கப்பட்ட  நீள்சதுரநிலம். மண்ணைக் குழைத்து நிலமட்டத்திலிருந்து  ஒரு அடி அளவில் உயர்த்தி திண்ணைபோல செய்திருந்தேன். அதுதான் படுக்கை. அதிலிருந்து இரண்டடி தள்ளி, வடகிழக்கு மூலையில், வெட்டி எடுக்கப்பட்ட மண்ணெண்ணை பரலின் அடிப்பாகத்தின்மேல்  மூன்று கற்களை வைத்து அடுப்பாக செய்திருந்தேன். அடுப்புக்கு எதிர் மூலையில் சாமிப்படம். அடுப்பு எரியும் வெளிச்சம் சாமிப்படத்தில் படவேண்டும் என்று ஆச்சி சொல்லுவார். அந்த நிலம் இப்போது எப்படி  இருக்கும். அவர்கள் தூக்கி எறிந்த ரங்குப்பெட்டி மண்ணேறி மக்கிப் போயிருக்கும். இதேமாதிரித்தான்  பிரான்ஸில் நிலம் வாங்கி வீடு கட்டியபோதும் அடுப்பு எரிக்கும் வெளிச்சம் சாமியறையில் படும்படியாக  பார்த்து  வீட்டைக்கட்டினேன். படுக்கையையும் கூட.

நாயுருவி,எருக்கு, தூதுவளை  என அந்தத்  திடலெங்கும் செடிகள் நிறைந்து கிடந்தது. அந்தத்  திடலை எனக்கு தந்தவர் அம்மாவுடன் வேலைசெய்த மனோன்மணி அம்மா.  சாகுந்தறுவாயில் அம்மா, மனோன்மணி அம்மாவின் முகவரியை தந்திருந்தார்.  எறிகணை வீச்சால் ஏற்பட்ட காயமும், அதன் காரணமாக ஏற்பட்ட அதிக ரத்தப்போக்குமே மரணத்துக்கு காரணம் என மருத்துவ அறிக்கை வந்திருந்தது. நான் அந்த அறிக்கையுடன் மட்டும்தான் மனோன்மணி அம்மாவிடம் வந்திருந்தேன். மனோன்மணி அம்மா சாகும்வரை சாப்பாட்டுக்கு சிரமப்படவிடவில்லை. அவர் இறந்தபின் தோட்டங்களில்  கூலி வேலை.

அற்புதராசன் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தான். அரச வேலை செய்யுமளவுக்கு படித்திருந்தவன். ஆனாலும் தோட்டம்தான் செய்தான். அவர்களுக்கு நிறையவே நிலங்கள் இருந்தன. வயலும் மேட்டுநிலங்களுமாக வருடத்தில் எல்லா நாள்களும் வேலை இருந்தது. அவனுடைய தோட்டத்திற்கும்  கூலி வேலைக்கு போயிருக்கிறேன். நான் குடியிருந்த திடல் காணியை ஒட்டி அவர்களது பனங்காணி ஒன்றும் உள்ளது. அதில் கள் இறக்குபவர் பனைக்கூலியாக ஒரு போத்தல் கள்ளை முருங்கைமரமொன்றில் கொழுவி வைப்பார். அந்த கள்ளை எடுப்பதற்காக ஆரம்பத்தில்  வந்து சென்றவன்தான் அற்புதராசன்.

நாளடைவில் என் வீட்டுக்கும்  வந்துபோகத் தொடங்கினான்.  பின்னர் தோட்டத்தில் வேலை செய்த கூலியை வீட்டுக்கு  கொண்டுவந்து தரத் தொடங்கினான். கள்ளை வீட்டின் முகப்பிலிருந்து குடிக்கவும் செய்தான். எல்லாமும் மாறத்தொடங்கியது.  முதலில் நாயுருவிப்பற்றைகள் மறைந்தன. பதிலாக முள்முருக்கைவேலி அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. வேலி வளையமாக என்னைச் சுற்றி அடைத்துக்கொண்டது. வாசல் எனப் பாவித்த இடத்தில் கதவு ஒன்றும் வந்து சேர்ந்தது. கதவு புரிந்துகொள்ள இயலாததாக இருந்தது. உள்வளமாக  மட்டுமே அந்தக் கதவு திறக்க அனுமதித்தது.

குடிசைக்குள் அடுப்பைத் தவிர மற்றதெல்லாம் சிறிய மற்றங்கள் அடைந்தன. நண்டு அற்புதராசனுக்கு  பிடித்த உணவாகயிருந்தது. கள்ளும் சுட்ட நண்டும் அலாதியான சுவை என்பான்.வெள்ளிக்கிழமைகளில் கூட  நண்டு சுட்டுக் கொடுத்திருக்கிறேன். ஒருநாள் கத்தியின் பின்பக்கத்தால் நண்டின் ஓடுகளைத்  தட்டியிருந்தேன். ஓடு நொருங்கி சதைக்குள் கிடக்கிறது என்றான்.  கடித்து உடைத்துக்கொடுத்தேன். சுட்ட நண்டின் வாசமும் சுவையும் முற்றத்தில் ஒட்டிக்கிடந்தது . கடலில் நண்டு என்றால் நிலத்தில் உடும்பு.

நான் புத்தகங்களை வாசிப்பது தெரிந்ததும், ரமணிச்சந்திரனின்  புத்தகங்களையும், ஒரு ரேடியோவையும்  வாங்கிக்  கொடுத்தான்.  உறவுகளற்ற  எனக்கு அற்புதராசனின் வருகை சந்தோசத்தை ஏற்படுத்தியது. மனமெங்கும் நிறைந்திருந்த ஏக்கம் வடியத்தொடங்கியது.   மனோன்மணி அம்மா இருந்திருந்தால் நான் அந்த ஏக்கத்திற்கு ஆளாகி இருந்திருக்கமாட்டேன்.

அவன் என்னை திருமணம் செய்யமாட்டான் என்று உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.ஆனால் அதை அந்த இரவில் வெளிப்படையாக உடைத்துச் சொன்னபோது அழத் தோன்றியது. உதடுகளுக்குள் அழுகையை மடக்கிக்கொண்டேன். உள்மடங்கிய உதடுகளை விரல்களால் நிமிண்டி உறிஞ்சினான். அன்றையின் பின்  அற்புதராசனை வெறுத்தேன். அதிலிருந்து சரியாக இருபது வருடங்கள் கழித்து பிரான்சில் அவனைக்    கண்டேன். நான் அளைந்த அந்த உடல் அப்போதும் அருவருப்பாக தான் இருந்தது. ஆம். அவன் என்னை ஏமாற்றியவன். 

அவர்கள் ஐந்து பேர் இருந்தார்கள். மூவர் புதியவர்கள். தடிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மீசையே அரும்பாத  ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான்.அவர்களில் மிகவும் சிறியவனாக இருந்த அவன் என் ரேடியோவை எடுத்து தன் வயிற்றுக்குள் செருகியதைப் பார்த்தேன். தம்பி அது ஒன்றுதான் என் பொழுதுபோக்கு. அதை வைத்துவிடு என்றபோது எட்டி என் வயிற்றில் உதைத்தான். அவன்தான் முதன் முதலாக என்னை அடித்தான். அவன் உதைத்த வேகத்தில் என் அடிவயிற்றில் சிறுநீர் துளிர்த்தது. கதவைத்தள்ளி வெளியில் வந்து கத்தினேன். யாரும் வரவில்லை. இருளின் போர்வைக்குள் என் நிர்வாணம். திசைகள் கண்களாயிருந்தன. 

வெளியில் இருந்து பார்த்தபோது கைவிளக்கு விழுந்த இடத்திலிருந்து நெருப்பு எழுந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் அவர்களின் முகம் தெரிந்தது. ஊரின் எல்லையைக் கடக்கும்வரை அடித்தார்கள். இனிமேல் ஊருக்குள் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் பையை எறிந்தார்கள்.  அன்று மேகமற்ற வானத்தில்  முழு நிலவு.  ஈரமற்ற  நிலத்தில் நான்.

இது முடக்கன் கந்தன் கடையடிதான். எனக்குதான் அடையாளம்  தெரியவில்லை. என்னையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கடைவாசலில் இருவர் நிற்கிறார்கள்.   பக்கத்தில் பொண்ணு ஆச்சியின் அப்பத்தட்டி இருக்கிறதா என்று பார்த்தேன். அப்பத்தட்டி இருந்ததிற்கான குறிப்புகளே இல்லை. கடைக்குள் பார்த்தேன். கடை வாசலில் நின்றவர்கள் விலகி வழி விட்டார்கள். என் தோற்றத்திற்காக என புரிந்துகொண்டேன்.  கடையை அண்டி நின்ற முல்லை மரம் அடிபெருத்துக் கிடந்தது. நல்ல நிழல் மரம். முன்பெல்லாம் எந்தநேரமும் யாராவது ஒருவர் இருவர் அதில் இருப்பார்கள். இப்போது அதன் பக்கம் யாரும் போனதற்கான அடையாளம் இல்லை. கடைவாசலில் நின்றவர்களுக்கு எதோ தோன்றியிருக்கவேண்டும். அவர்களை கவனியாதது போல நடக்கத்தொடங்கினேன். இரண்டு அடி வைத்ததும் கடையை திரும்பிப் பார்த்தேன்.

கிராமத்துக்குள் யார் வந்தாலும் முடக்கன் கந்தனின் கடையைத்தாண்டி தான் வரவேண்டும்.  வருபவர்கள் கடையைக் கண்டதும் இறங்கி விசாரிப்பார்கள்.  அந்த நேரத்தில் நிற்பவர்களைப்  பொறுத்தே  பதிலும் அமையும். ஊருக்குள் கல்யாணம் பேசுபவர்கள் தம் தரகரிடம் முடக்கன் கந்தன் கடையில் விசாரிக்க வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்புவார்கள்.

இரண்டுகடைகள் ஒரு கட்டடத்தில். பக்கத்தில் சரித்து இறக்கிய அஸ்பெஸ்ரர் சீற் கொட்டில். அதற்குள்தான் அப்பக்காரக்கிழவி பொண்ணு ஆச்சி அப்பமும் தோசையும்  சுட்டு விற்பார். இரண்டு  கடைகளில் ஒன்று பலசரக்கு சாமான்கள் விற்கும் கடை. மற்றது தோட்டமருந்து, பசளைகள் விற்கும் கடை. இரண்டு கடைகளையும் முடக்கன்கந்தன் தான் நடத்தினார்.  முடக்கன் என்ற சொல்லுக்கு அர்த்தம் எந்தவொரு அகராதியிலும் இருக்காது. கந்தனுக்கு இடதுபக்கம்  இடுப்பு  வளைவு.   வலது பக்கம் கால்  வளைவு. ஆள் நிமிர்ந்து தான் நிற்பார். நிற்கும்போது வளைவு தெரியாது. நடந்தாலோ இருந்தாலோ வளைவு தெரியும். ரோடுகளில் இருக்கும் முடக்குப்போல கந்தன் உடம்பில் வளைவு இருப்பதால் அவரை முடக்கன் கந்தன் என்று கூப்பிடுவார்கள்.

முடக்கன் கந்தனின் கடையில் கொப்பிக்கணக்கு வைத்துதான் நான் சாமான் வேண்டுவது. காசு கிடைக்கும்போது மொத்தமாக கொடுத்து கடனை அடைத்துக்கொள்வேன். எல்லோரும் கந்தன் கள்ளக்கணக்கு எழுதுவதாக சொல்வார்கள். ஆனால் எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னைப் பொறுத்தவரை கந்தன் நேர்மையாளன்.  அவர்கள் எனக்கு அடித்தபோது கந்தன் மட்டும்தான் “தம்பியவை அடிக்காதையுங்கோ செத்துக்கித்துப் போவாள்” என்று கூறியவர். அப்படி கூறியதற்கே கந்தனின் கடையை உடைத்துவிடப்போவதாக எச்சரிக்கை  செய்தார்கள் அவர்கள்.  பொண்ணு ஆச்சிகூட “வந்தாள் வரத்தாளால”  ஊரின் மனமே போச்சு என்றுதான் சொன்னார்.

அது சமாதான காலம்.  புலிகள், இராணுவம்,மற்றும்  ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்தார்கள். சட்டப்படி புலிகளின் நீதித்துறை ஒரு விசாரணையை செய்வதாயின் பளையில் அமைந்திருக்கும் அவர்களின் காவல்துறைக்கு வரும்படி அழைப்புக்கடிதம்   கொடுப்பார்கள். கடிதம் கிடைத்தால் போயேயாகவேண்டும். இராணுவம் மற்றும் ஈபிடிபி  நேரடியாக வீட்டுக்கு வந்து தமக்கு ஏற்றவகையில் பிரசனைகளை தீர்த்துவிட்டு போவார்கள். எனக்கு அடித்தவர்களில் மூவர் புதியவர்கள் என்று சொன்னேனல்லவா. அவர்கள் தங்களை கலாசாரக்குழு என்று சொன்னார்கள். சமாதானகாலத்தில் இப்படி ஆயிரம் குழுக்கள் இருந்தன. புலிகளிடமும்,இராணுவத்திடமும்,ஈபிடிபியிடமும். இவர்களைத் தாண்டி இன்னொரு குழுவும் இருந்தது. அது எல்லோருக்கும் எடுபிடி செய்யும் குழு. அந்த சந்தர்ப்பத்தில் யார் பலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எடுபிடியாக மாறி விடுவார்கள்.  இவர்கள் எந்த குழு என்று  எனக்கு தெரிந்தே இருந்தது. 

இந்த வீதியால்தான் இழுத்துவந்தார்கள். கழுத்துக்குக் கீழே இறங்கியிருந்த ஆடையை இழுத்து கழுத்தையும்  மூடினேன். அவர்களில் இளையவன் அதை பார்த்துவிட்டான். வேசைக்கு என்னடி வெக்கம் என்று கேட்டான்.  திருப்பவும் சட்டையை இழுத்துக் கிழித்தான். கிழிக்கும் சாக்கில் மார்பை பிடித்து இழுத்தான். வலித்தது.  அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பதை உணர்ந்தேன். கலாசாரக்குழு என்ற அவர்களைப் பார்த்து சிரித்தேன். எனக்காக பேசுவார்கள்  எவருமில்லை.  அநாதை என்றால் அடிவளவு நாயும் நக்கிப் பார்க்கும். 

கொழும்பிலிருந்து விமானம் ஏறும்போது, இனிமேல் இந்த மண்ணுக்கு வருவதேயில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். விமானம் உயர உயர நிலத்தின் மீதான பாசம் பெருகியது. தனி முகில்போல எடையில்லாமல் அது அப்படியே என்னுள் உறைந்துபோயிற்று. மனதில் ஒரு பெரும் பாரத்துடன்தான் பிரான்சில் இறங்கினேன். அந்தப்பாரத்துடன் செத்துவிடவே விரும்பினேன்.  ஆனால் அவனை பிரான்ஸில் கண்டபோது எல்லாம் சிதைந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த உணர்வை ஏமாற்றம் என்று தனியே சொல்லிவிடமுடியாது

முதலில் அவனது மனைவி தான் அறிமுகமானார். பாரிஸின் புறநகர் வைத்தியசாலையில் சந்தித்தேன். அறிமுகமற்ற தமிழர்கள் சந்தித்தால் அறிமுகமாகிப் பேசுவது வழமையானது. யார் என்று தெரியாமலேயே பேசினோம். மகன் வரும்வரை  பேசிக்கொண்டிருந்தோம். அந்த நட்பு தொலைபேசி வழியாகவும் நெருக்கமாயிற்று. அவர்களை வீட்டுக்கு அழைத்திருந்தேன். அவர்கள்  காரிலிருந்து  இறங்கிய நொடிப் பொழுதிலேயே நான் அழியத் தொடங்கினேன். ஆம், இறங்கியது அற்புதராசன்.

அற்புதராசனது பார்வையிலிருந்தது என்னவென கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவுணர்வு என்று சொல்லிவிட முடியாது. முதலில் தன்  எண்ணங்களை உறுதிப்படுத்தும் பார்வைதான் இருந்தது. பின் தன்  மனைவியின் கண்களில்  தேடினான்.   அது ஒன்றைத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.  தன்னைக் கட்டுப்படுத்த   முயன்றதை கண்கள் காட்டிக்கொடுத்தன. இயலாமையால் தவித்தான். ஆனால் என்  எண்ணமெல்லாம் அவனைக்கடந்து மீசை அரும்பாத அந்த சிறுவனைத் தான் தேடியது. உணவு மேசையில் அமர்ந்து பேசத்தொடங்கினோம்.

இனி வேறுவழியில்லை. அற்புதராசன் தன்னைக் கட்டுப்படுத்த முயல்வதை குலைக்க  வேண்டும். நான், என்னை அவனுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.  மனம் உந்தியது. வாருங்கள்  வீட்டைப் பார்ப்போம் என்று அழைத்தேன். ஒவ்வொரு  அறையாக காட்டினேன். எப்போதுமே நான் ரசித்திருக்காத வீட்டின் செழிப்பான பகுதிகளையெல்லாம் காட்டினேன். மீன் தொட்டிக்குள் இருந்த  சங்குநுணியில் தங்கம் பூசியிருந்ததை காட்டினேன். என் அறையை திறந்துவிட்டேன். நிலமட்டத்திலிருந்து ஒரு அடிவரை உயர்ந்து திண்ணையும் அதன்மேல் இருந்த மெத்தையும் அவன் கண்களுக்கு படும்படி விலகி நின்றேன். என் கீழ்க்கழுத்தில் இருந்த மச்சத்தை பார்க்குபடியாக திரும்பி, அவன் மனைவியுடன் பேசலானேன். பின் அவனைப் சிதைக்கும்  இறுதி ஆயுதத்தையும்   எடுத்தேன்.  இது எங்கள் குடும்ப  ஆல்பம்  என்று அவர்களின் கையில் கொடுத்தேன். உள்ளே திருப்பி இவர்தான் என் கணவர் என்று அறிமுகம் செய்தேன்.

முழுமையாக சிதைந்து உட்கார்ந்திருந்த அற்புதராசனைப் பார்க்க மகிழ்வுக்கும் துயரத்துக்கு இடையில் எதோ ஒன்று வடிந்துபோனது. நிச்சயம் அவன் நினைவுகளில் ஊரில் இருந்த  பனைத்திடலும், பனைக்கூலியாக கள் வாங்கிய அந்த நிகழ்வுகளும் வந்திருக்கும். வரவேற்பறையில் மாலை போடப்பட்டிருந்த புகைப்படத்தைக் காட்டி “அவர்தான்” என்றேன். அல்பத்தையும் சுவரிலிருந்து படத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதன்பின் பேசியதெல்லாம் அவன் மனைவி மட்டும்தான். தன்னை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதாக நினைப்பவனின் வீழ்ச்சி முன்னேயே நிகழ்கின்ற அந்தக் கணம் துயர் மிக்கது. குரூரமிருகம் ஆனந்தமடைந்து வெளியேறியது. நான் ஏன் அப்படிச் செய்தேன். தெரியவில்லை. மறந்ததாய் எண்ணியிருந்தவைகள் ஒவ்வொன்றாக தோன்றின. அவர்கள் ஐவருக்கும் ஆறாவதாக அவனுக்குமாக சேர்த்து மகனை முத்தமிட்டேன். உதடுகள் உள்மடிய அழுகையை விழுங்கிக் கொண்டேன். .

மன்னிப்பின் மகத்துவம் எந்த வரிகளுக்குள்ளும் அடங்கிவிடுவதில்லை. அது முழுவதும் உணர்ச்சிகளால் சேர்மானம் கொள்வது. அன்பு  சகமனிதனை நேசிக்கவைக்கும்  சக்தியை விதைத்துக் கொண்டே இருக்கும். ஒரு உதைக்கப்பட்ட பந்துபோல் மேல்  எழுந்து கொண்டேயிருக்கும். சகமனிதன்  மீதான கரிசனையும்  நேசிப்பும்தான்  வாழ்வின் அர்த்தம் எனப் புரிந்தது. மனதற்குள் புது எழுச்சி. வாழ்ந்த ஊருக்குப் போகவேண்டும். தானாகவே தோன்றியது. தீர்மானித்த அடுத்தநாள் பயணச்சீட்டை  பதிவு செய்துவிட்டேன்.

இவ்வளவு வேகமாக இங்கு வந்தடைவேன் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. எல்லாம்  எதோ ஒரு ஒழுங்கில்  நடந்துமுடிந்துவிட்டது. இன்னும்  இரண்டு எட்டில் மனோன்மணி அம்மா வீடு.

மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்த முகம். மீசை முளைத்து விட்டது. கூடவே ஓரிரண்டு  நரைமுடிகள். எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.  எதேட்சையாக பார்ப்பதுபோல அவனது காலைப் பார்த்தேன். அறனை சருகுக்குள் நுழைவதுபோல காலை சரத்துக்குள்  மறைத்துக் கொண்டான். நீங்கள் வரவிருப்பதாக அண்ணா  சொன்னார். அவன் குரல்  கண்ணாடியில் விழுந்த நீர்த்துளிபோல  சிதறியது.தோளிலிருந்த  பையிலிருந்து  எடுத்தேன். “இது உமக்காக” என்றபடி அவனின் கைகளில் கொடுத்தேன். ஊருக்கு போவதென தீர்மானித்த அன்றே பாரிஸில் வாங்கியது தயங்கியபடி  பெற்றுக்கொண்டான்.

உங்களிடம் ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றான். அவனது  கண்களைப் பார்த்தேன்.  வேண்டாம் என்றேன்.  நான் இருந்த வீட்டைப்  பார்க்க போகவேண்டும் என்றேன். அங்கே ஒன்றுமில்லை.  சரி வாருங்கள் போகலாம்.  என்றபடி  எழுந்தான்.”இல்லை நான் தனியாகப் போகவேண்டும்” என்றேன். மனோன்மணி அம்மாவின் வீட்டிலிருந்து சிலநூறு அடி தூரத்திலிருந்தது நான் வாழ்ந்த  இடம்.

இருபது வருடங்களை அந்த சிலநூறு அடிகளில் நடந்து கழிக்கத்  தொடங்கினேன். பெரும் சுமையொன்றை சுமப்பவர் யாராவது சுமையை பகிர்ந்து கொள்ள வருவார்களா என்று ஏக்கத்துடன் தேடுவார்களே அந்த  நிலையிலிருந்தேன். ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போதும் நான் நிலத்தில் நிற்பதை  உறுதிப்படுத்திக் கொண்டேன். நான் வாழ்ந்த திடலில் ஒற்றை முள்முருக்கை மரம்தான் நின்றது.

கதவு இருந்த இடத்தில்போய்  நின்றேன். கதவு இருந்தால் எப்படி  திறந்துகொண்டு உள்ளே செல்வேனோ அதேபோல, மதத்து நின்ற முள்முருக்கையின் கீழ்நின்று சுற்றிலும்  பார்த்தேன்.  அது வேலி இருந்த இடம். அது அடுப்பு இருந்த இடம். அதில் உடுப்புகளை கழுவி காயப்போடுவது என ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தேன். அருகில் இருந்த  பெரியகல்லில் உட்கார்ந்தேன். நிலமெங்கும் முள்முருக்கை விதைகளும் சிகப்பு பூக்களும் உதிர்ந்து கிடந்தன. 

எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்று தெரியாது. என்னையுணராமல்  முள்முருக்கை விதை ஒன்றை எடுத்து கல்லில் தேய்ந்து கையில் சுட்டுப் பார்த்தேன். சிலிர்த்து அடங்கியது. கையில் வைத்திருந்த தொலைபேசியில் என்னை நானே புகைப்படம் எடுத்தேன். படத்தை கூர்ந்து பார்த்தேன்.  நிலமெங்கும் சிகப்பு பூக்கள், மஞ்சள் இலைகள்  மத்தியில் நான். என் முகத்தை சூம் செய்து பார்த்தேன்.  எழுந்தேன்.  இல்லாத   கதவை வெளிவளமாக  தள்ளி வெளியேறுவதுபோல பாவனை  செய்து கொண்டு வெளியேறினேன். இனி இருபது வருடங்களை நடந்து திரும்ப வேண்டும். 

 

நெற்கொழுதாசன் 

 

பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.

https://akazhonline.com/?p=3073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் அடிமடடத்துக்கு  சென்ற பெண்  வாழ்ந்து காட்டிய வீரம். அழகான வர்ணனை பகிர்வுக்கும்  எழுத்தாளருக்கும் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசைக் கிளறும் சிறப்பான கதை நெற்கொழுதாசன்......!  👍

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையோடு கதையாக இப்ப ஊரில் முள் முருங்கை அழிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

கதையோடு கதையாக இப்ப ஊரில் முள் முருங்கை அழிந்து விட்டது.

முள்முருக்கை இலை, குழை ஆட்டுக்குட்டிகளுக்கு பிடித்த ஒன்று! நிறைய மசுக்குட்டிகளுக்கும் இருக்கும். எப்படி அழிந்துபோயிற்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடி குந்தியிருந்து முருக்கம் இலையில்  குழையல் சோறு சாப்பிட்டது ஒரு காலம்.....!  👌

image.jpeg.a9cfac26daaf1da03001d675cac43166.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

முள்முருக்கை இலை, குழை ஆட்டுக்குட்டிகளுக்கு பிடித்த ஒன்று! நிறைய மசுக்குட்டிகளுக்கும் இருக்கும். எப்படி அழிந்துபோயிற்று?

அது தான் எனக்கும் ஆச்சரியம்.அங்குள்ளவர்களை கேட்டால் தானாக அழிந்தது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.