Jump to content

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள்

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் 

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே  இது. 

இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார். 

பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த இவர் தற்போது ஒரு மாட்டை தானே பராமரித்து வருகிறார். இப்போது அவரது விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மகள் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றார்.  

தான் இன்றும் தன் அன்றாட கருமங்களை தானே பார்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு அன்றைய உணவுப் பழக்க வழக்கங்களே காரணம் என சொல்கிறார். எங்களோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே மாட்டுக்கு புல்லுப் புடுங்க போக நேரமாகுது என ஆயத்தமாகிறார்.

அன்றைய கால உணவுப்பழக்கங்களையும் ஒரு வித சிலிர்ப்போடு எம்மோடு பகிர்ந்து  கொண்டார்.

அன்றைய காலங்களில் சாமி, குரக்கனை வருடாந்தோறும் தவறாமல் பயிரிட்டு வருவோம். அதனை காயவைத்து பக்குவமாக உரலில் தான் குத்துவோம். பின் தானியங்களை ஒரு வருடத்துக்கு கூடைகளில் போட்டு பாதுகாத்து அதனையே நாளாந்தம் சாப்பிட்டு வருவோம். அன்று செல்வாக்குள்ளவை தான் அரிசி வாங்கி சாப்பிடுவார்கள். 

முருங்கை இலைக்கறி, கஞ்சி அல்லது ஒடியல் கூழ் தான் பகல் சாப்பாடு, மரவள்ளிக்கிழங்கு என்றால் பலாலி தான் பேமஸ். கொவ்வை, குறிஞ்சா இலைகளை போட்ட குரக்கன் கூழும் நன்றாக இருக்கும். 

அன்றைய காலத்தில் காலை சாப்பாடு தினைச்சாமி கஞ்சி அல்லது பழஞ்சோறு, பழந்தண்ணீர் தான். 


அன்று பயிர்களுக்கு தண்ணீர் வழங்கும் துலா, பட்டை  இறைப்பு முறைகள் குறித்தும் விளக்குகிறார். ஒரு முறை இறைக்கவே மூன்று / நான்கு பேர் தேவை. விவசாயிகள் அன்று ஒருவருக்கொருவர் உதவி செய்து எவ்வாறு விவசாய கூலிகளை இயன்றளவு குறைத்து தாங்களே கூட்டாக எவ்வாறு இணைந்து வாழ்ந்தோம் என்றும் சொல்கிறார். 

வெறும் தோட்டக் காணிகளில் ஒரு பக்கத்தில் தொட்டிலில் மாடுகளும், அருகே அட்டாளையில் ஆடுகளும் கட்டப்பட்டிருக்கும். தொட்டிலை தோட்டக்காணியில் மாற்றி மாற்றி மாடுகளை கட்டுவோம். மாற்றும் போது ஏற்கனவே கட்டிய இடத்தை கொத்தி விடுவோம். அன்றிருந்த ஊர் மாடுகளின் பாலும் தரமாக தான் இருக்கும். 

சித்திரை 28 க்கு தினை தானியத்தை விதைத்து நாற்றுமேடை போட்டு விடுவோம். 21 ஆம் நாளில் பிடுங்கி கலப்பையால் உழுத தோட்டத்தில்  நடுவோம். மூன்று மாதத்தில் அறுவடை செய்து விடுவோம். 

சிறுதானியங்கள், பாகல், வெங்காயம், மிளகாய் என்று அந்ததந்த  போகத்துக்கு ஏற்றவாறு மாறிமாறி பயிர்களை நாட்டுவோம். மலை ஆமணக்கு, பூவரசு, வேம்பு போன்றவற்றின் இலை, தழைகளையும், மண்வீட்டுக் கூரையின் பழைய ஓலைகள், வெட்டிய பனை ஓலைகளையும் தாழ்த்து தான் இந்தப் பயிர்களையும் நடுவோம். 

பனை ஓலை தாழ்ப்பித்து தான் பாகலைப்  பயிரிடுவோம். இலந்தை கொப்புக்களை கட்டி அதன் மேல் படர  விடுவோம். பாகல் காயை பேப்பரால் சுற்றி காய்களை தாக்கும் பழ ஈக்களில் இருந்து காப்பாற்றுவோம். தோட்டத்தோடு தான் எப்போதும் இருப்போம். 

தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளை தலையில் சுமந்து கொண்டு தான் சுன்னாகம் போவோம். சிலர் சைக்கிளிலும்  போவார்கள்.

றோயல் டிஸ்பென்சரி என்று யாழ்ப்பாணத்தில இருந்தது. அவை தான் எங்களுக்கு கொண்டு வந்து பொலுடோலை அறிமுகப்படுத்தினர். அதை விசிற புழு, பூச்சிகளும் சாகும். அதனை சாப்பிடுகின்ற பறவைகளும் இறக்கும். இப்போது பல மருந்துகள் விவசாயத்தில் வந்துவிட்டது. மனிதனைத் தாக்கும் நோய்களும் கூடி விட்டது.     

அன்று பயிர்களுக்கு மாட்டு சாணமும், ஆட்டு புழுக்கைகளும் தான் பசளை. பிறகு செயற்கை உரம் வந்ததும் இரவிரவாக ஒழிச்சு தான்  போடுவினம்.   என்று தன் அன்றைய தற்சார்பு வாழ்வையும் பின் எவ்வாறு இரசாயனங்களுக்கு எம் விவசாயிகள் மாறினர் என்பதையும் விளக்கியுள்ளார். @Nimirvu

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.