Jump to content

காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு!

Lifebuoy

இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிராண்டின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?

கோவிட்-19 தொற்று நோய்க்காலத்தில் நம்மில் பலரும் லைஃப்பாய் சோப்பு போட்டு குளித்திருப்போம். ஆனால், இந்த லைஃப்பாய் சோப் நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது தெரியுமா?

நூற்றாண்டைக் கடந்த சோப்

1894-ம் ஆண்டு வில்லியம், ஜேம்ஸ் லீவர்ஸ் சகோதர்களால் காலரா நோயைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோப்தான் லைஃப்பாய் ஆகும். இந்தியாவுக்கு லைஃப்பாய் சோப் அறிமுகமாகி சுமார் 125 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இதனுடைய சந்தை நிலைப்படுத்தலான (Market Positioning) – கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும் சோப்பு என்பது மட்டும் மாறவில்லை!

தொற்றக்கூடிய சாதாரண சளி, காய்ச்சலிலிருந்து வயிற்றுப்போக்கு/காலரா வரை நோய்கள் பெரும்பாலும் `தொடுதலின் (hand contact)’ மூலம்தான் பரவுகிறது. இந்தப் பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்கிற நோக்கில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட சோப்தான் இந்த லைஃப்பாய் ஆகும்.

சோப்புக்கான நிலைப்படுத்தலில் மாற்றம் இல்லையென்றாலும் அதனுடைய உபயோகத்தைப் பல சூழ்நிலைகளிலும், தளங்களிலும் விளக்கும் வகையில் இதனுடைய விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. `லைஃப்பாய் இருக்குமிடமே ஆரோக்கியம் இருக்குமிடம்’ என்கிற விளம்பர வாசகமும் இசையும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

லைஃப்பாய் Vs டெட்டால் மோதல்

ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை லைஃப்பாய் சோப் ஒரு பிராண்டாக மட்டுமல்லாமல் `கார்பாலிக்’ வகை அல்லது `சிவப்பு’ நிறத்திலான சோப் என்கிற வகைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதிகமாக விற்பனையாகும் சோப்பாகவும் இருந்து வந்தது. அதன்பின், டாடா ஆயில் மில் (டாம்கோ) நிறுவனமானது `OK’ என்கிற பெயரில் ஒரு சோப்பை இந்தப் பிரிவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், நாளடைவில் லைஃப்பாய் சோப் தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் யுனிலீவர் `டாம்கோ’ நிறுவனத்தையே கையகப்படுத்திக் கொண்டது. இந்த சோப்களுக்குப் போட்டியாக `ஓஸ்வால் அக்ரோ’ நிறுவனம் ஒரு புதிய சோப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த சோப்பால் அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

Lifebuoy
 
Lifebuoy

1980, 90-களில் லைஃப்பாய் சோப்பின் வளர்ச்சிக்குத் தடையாக வேறெந்த கார்பாலிக் சோப்பின் அறிமுகம் இல்லை என்றாலும், சந்தையில் விற்கப்படும் சோப்புகள் அனைத்தும் பிரீமியம், பாப்புலர், கார்பாலிக் சோப்புகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி, கார்பாலிக் சோப்பாக இல்லாவிட்டாலும் பாப்புலர் வகையைச் சேர்ந்த சோப்புகளின் விலை லைஃப்பாய் விலையை ஒட்டி இருந்ததுடன், அதனுடைய அழகும் கவர்ச்சியும் பெரிய அளவில் இல்லாமல் இருந்ததால், லைஃப்பாய் சோப் `கீழ்மை’யாகக் (Down market) கருதப்பட்டது.

`ஆரோக்கியம்’ என்கிற கருத்தாக்கத்தை வைத்து லைஃப்பாய் சோப்புகள் விளம்பரம் செய்யப்பட்டாலும், இதற்கும் மற்ற சோப்புகளின் `புத்துணர்ச்சியூட்டும் குளியல்’ என்கிற நிலைப்படுத்தலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை என மக்கள் எண்ண ஆரம்பித்தனர். அத்துடன் லிரில், சிந்தால், டெட்டால் ஆகிய மூன்று சோப்புகளும் வெவ்வேறு நிலைப்படுத்தலுடன் சந்தையில் வலம்வர ஆரம்பித்தன. `Antiseptic’ என்கிற டேக் லைனுடன் டெட்டாலுக்கான நெருக்கம் அதிகமிருந்தாலும் அதை `சோப்’போடு பொருத்திப் பார்ப்பது சிரமமாக இருந்தது.

 

யுக்தியை மாற்றிய லைஃப்பாய்

பெரும்பாலான வீடுகளில் டெட்டால் இருந்தாலும் அது பெரும்பாலும் உடம்பில் அடிபடும்போது, முகச்சவரம் செய்யும்போது ஏற்படும் சிறு வெட்டுக் காயங்கள் போன்றவற்றுக்கே உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய உபயோகத்தைப் பரவலாக்கும் நோக்கத்தில் அப்போது இதை சந்தைப்படுத்தி வந்த `ரெக்கிட் & கோல்மேன் ஆஃப் இண்டியா' நிறுவனமானது இதைப் பொது உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம் என்கிற வகையில் அதை விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. கிருமிக்கு எதிரான பாதுகாப்பு என `லைஃப்பாய்' பெருமையாகப் பேசப்பட்டு வர, டெட்டால் சோப்புக்கும் அதே விஷயங்களைச் சொல்கிற மாதிரி விளம்பரங்கள் வெளியாக ஆரம்பித்தன.

இதைத் தொடர்ந்து லைஃப்பாய் சோப்பும் தன் விளம்பரத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தது. `கார்பாலிக் சோப்’ என்பதிலிருந்து `அதிக நுரை’ தரக்கூடிய மென்மையான சோப் என விளம்பரப்படுத்திக் கொண்டாலும் `ஆரோக்கியம்’ என்கிற அம்சத்துக்கு அழுத்தம் தருவதை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை.

lifebuoy
 
lifebuoy

லைஃப்பாயில் பல வகை...

இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து லைஃப்பாய் பல வகையான சோப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அவற்றில் சில:

லைஃப்பாய் ப்ளஸ்,

லைஃப்பாய் ஆக்டிவ் ரெட்,

லைஃப்பாய் ஆக்டிவ் ஆரஞ்ச்,

லைஃப்பாய் இன்டர்நேஷனல்,

லைஃப்பாய் டோட்டல்,

லைஃப்பாய் ஸ்கின்கார்ட்,

லைஃப்பாய் ஃப்ரஷ்,

லைஃப்பாய் ஸ்ட்ராங்,

லைஃப்பாய் நேச்சுரல்ஸ் போன்றவையாகும்.

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு / காலரா ஏற்படுவதற்கான தொற்றை 47% வரை குறைக்கலாம் என்பது `லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிக்கல் மெடிஸின்’ என்கிற அமைப்பின் மூலம் தெரியவர, லைஃப்பாய் தனது `ஸ்வஸ்த்ய சேத்னா’ என்கிற மிகப் பெரிய விழிப்புணர்வு முன்னெடுப்பை 2002-ம் ஆண்டு மேற்கொண்டது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைக் கெளரவிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு இந்தியத் தபால் துறை ஒரு சிறப்பு தபால் கவர் வெளியிட்டு சிறப்பித்தது. 2002-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை இந்த விழிப்புணர்வுத் திட்டம் இந்தியாவில் சுமார் 51,000 கிராமங்களில் வசிக்கும் 12 கோடிக்கும் மேலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது.

Lifebuoy
 
Lifebuoy

உலக கை கழுவும் நாள்

2010-ம் ஆண்டு லைஃப்பாய், வரிசை விஸ்தரிப்பு உத்தியின் கீழ் `லைப்பாய் ஹாண்ட் சானிடைஸ’ரையும் அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ம் தேதியை லைஃப்பாய் சுமார் 100 நாடுகளில் `உலக கை கழுவும் நாளாக’ அனுசரித்து வருகிறது.

ஒவ்வொருவரும் முறையாக கை கழுவி சுகாதாரத்தைப் பேணுவதற்கு வருடத்துக்கு 20 சோப்புகள் தேவைப்படும். ஆனால், தற்சமயம் உலகளவில் 1.5 பில்லியன் மக்கள் சுமார் எட்டு பிராண்ட் சோப்புகளைத்தான் உபயோகித்து வருகிறார்கள் என இந்த நிறுவனத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. அத்துடன் இந்த நிறுவனத்தின் `கை கழுவும் திட்டங்கள்' மூலம் 2002-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 1.07 பில்லியன் மக்களை களப்பணி மற்றும் ஊடகங்கள் மூலமாக சென்றடைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.

காலத்திற்கேற்றாற் போல புதுப்புது சோப்புகளை புது வடிவங்களில் லைஃப்பாய் அதனுடைய பெயரின் கீழ் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய நுகர்வோர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஒன்றாக லைஃப்பாய் தொடர்ந்து இருப்பது அதன் பெருமைக்கு முக்கியமான சான்றாகும்.

 

https://www.vikatan.com/business/news/a-brief-story-on-lifebuoy-soap-and-its-125-years-history

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lifebuoy Seife, 10x85g, Rot: Amazon.de: Drogerie & Körperpflege

ஊரிலை லைவ்போய் சவுக்காரம்  எண்டால் சொறி சிரங்குகாரர் தான் ஞாபகத்துக்கு வருவினம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

 

லண்டனில இருக்கியள் இது தெரியாமல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில இருக்கியள் இது தெரியாமல்

இங்கு இந்த சோப்பை கடைகளில் கண்டதேயில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைச்சுக் கொள்ளும் வியாபாரம் நிலைக்கிறது..

 

Lifebuoy Alcohol Based Hand Sanitizer: Buy Lifebuoy Alcohol Based Hand  Sanitizer Online at Best Price in India | Nykaa

Lifebuoy Hand Sanitiser Gel 50ml | Wilko

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2021 at 19:02, குமாரசாமி said:

Lifebuoy Seife, 10x85g, Rot: Amazon.de: Drogerie & Körperpflege

ஊரிலை லைவ்போய் சவுக்காரம்  எண்டால் சொறி சிரங்குகாரர் தான் ஞாபகத்துக்கு வருவினம்.😂

 

On 14/1/2021 at 21:21, ரதி said:

நான் இவ்வளவு நாளும் இந்த சோப்பை இந்தியாவில் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் 

ஜேர்மனியில்... குறிப்பிட்ட சில கடைகளில் கண்டு உள்ளேன். :)

புங்கையூரான்....  முன்பு, 
யாழ். இந்துக் கல்லூரி விடுதியில்...
நடந்த,
 "சிவப்பு சவுக்கார பகிடியை" ... அழகாக பதிந்திருந்தார்.  🤣

அந்தத் தலைப்பில்,  நெடுக்சும்.. கனக்க  எழுதிய நினைவு.
அந்தத்  தலைப்பை, தேடி கண்டு பிடித்து தருபவர்களுக்கு,
ஒரு, + புள்ளி வழங்கப் படும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

பனங்கொட்டை, பனை வளர்ப்புக்கு முன்னுரிமை குடுத்த நிறுவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் உலக கை கழுவும் நாளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்தாகதெரியவில்லை.கொரோனாவோடு சரி கை கழுவும் நாளும் வந்துட்டு.😄

வேற.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

சைவப் பெருந்தகை... திருவாளர்   கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம்.
பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், 
"மில்க் வைற்"  தொழிற்சாலை  இருந்தது.  

1970´களில்,  ரயில் வண்டியில்....
யாழ்ப்பாணத்திலிருந்து....  கொழும்பு  போகும் வரை,
எல்லா புகையிரத நிலையங்களிலும்... 
இவரது... சவர்க்கார  விளம்பர பலகை இருக்கும்.

அதனைப் பார்த்துக் கொண்டு... 
கொழும்பு வரை, பயணிக்கும் போது....
நம்ம ஊர்...  "மில்க் வைற்"  சவுக்காரமும், 
என்னுடன்,  துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும்.

அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

சைவப் பெருந்தகை... திருவாளர்   கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம்.
பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், 
"மில்க் வைற்"  தொழிற்சாலை  இருந்தது.  

1970´களில்,  ரயில் வண்டியில்....
யாழ்ப்பாணத்திலிருந்து....  கொழும்பு  போகும் வரை,
எல்லா புகையிரத நிலையங்களிலும்... 
இவரது... சவர்க்கார  விளம்பர பலகை இருக்கும்.

அதனைப் பார்த்துக் கொண்டு... 
கொழும்பு வரை, பயணிக்கும் போது....
நம்ம ஊர்...  "மில்க் வைற்"  சவுக்காரமும், 
என்னுடன்,  துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும்.

அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.  :)

பெயரை நல்ல ஞாபகம் வைச்சிருக்கிறியள்.
எப்பவும் திருநீற்று பூச்சோடைதான் திரிவார். பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாய் புத்தகங்கள் கொடுப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெயரை நல்ல ஞாபகம் வைச்சிருக்கிறியள்.
எப்பவும் திருநீற்று பூச்சோடைதான் திரிவார். பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாய் புத்தகங்கள் கொடுப்பவர்.

குமாரசாமி அண்ணா.... 
நல்லது, செய்தவர்களின் பெயர்கள்....
காலம் கடந்தும், நிலைத்து நிற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா.... 
நல்லது, செய்தவர்களின் பெயர்கள்....
காலம் கடந்தும், நிலைத்து நிற்கும். :)

சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை – மடத்துவாசல்

  மில்க்வைற்  மேலுறைகளை சேர்த்து அனுப்பினால் படிப்பு சம்பந்தமாய் பரிசுகள் தருவினம்.

இதெல்லாம் ராணி சந்தன சோப்பு போடுறவைக்கு எங்கை தெரியப்போகுது?? 🤣  🤪

Buy Rani Sri Lanka Sandalwood Queen of Beauty Soaps - Pack of 5 Online at  Low Prices in India - Amazon.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை – மடத்துவாசல்

  மில்க்வைற்  மேலுறைகளை சேர்த்து அனுப்பினால் படிப்பு சம்பந்தமாய் பரிசுகள் தருவினம்.

ஆஹா.... அந்தக் கால  "மில்க் வைற்"   விளம்பரத்தை, பார்க்க சந்தோசமாக உள்ளது. :grin:

பாடசாலை.... மாணவ, மாணவியரின் வெள்ளை உடை...
"பளிச்" என, மின்ன...  மில்க் வைற்,   நீலப் பொடி  பாவியுங்கள்.  

ப்ளீஸ்..... (கே. எஸ்.ராஜா.... பாணியில், வாசிக்கவும்) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

யாராவது இவரை கண்டீர்களா ?

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை

நம்ம Jaffna - யாழில் மீண்டும் "மில்க்வைற்”சோப்!... | Facebook

தட்டாதெருவுக்கு அருகில்தான் மில்க்வைட் கொம்பனி இருந்தது. இங்கிருந்த பல மிசின்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப் பட்டன.... அவற்றை நேரில் பார்த்த பழகிய அனுபவம் மறக்க முடியாதது.....!  😇

திரு கனகசாபாபதி (மில்க்வைட் )

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

நல்லை ஆதீனம் (நல்லூர்)

இவர்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல அளப்பரிய சேவைகளை மக்களுக்கு செய்துள்ளனர். அவற்றை இந்நேரத்தில் நினைவு கூருகிறேன்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, suvy said:

தட்டாதெருவுக்கு அருகில்தான் மில்க்வைட் கொம்பனி இருந்தது. இங்கிருந்த பல மிசின்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப் பட்டன.... அவற்றை நேரில் பார்த்த பழகிய அனுபவம் மறக்க முடியாதது.....!  😇

திரு கனகசாபாபதி (மில்க்வைட் )

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

நல்லை ஆதீனம் (நல்லூர்)

இவர்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல அளப்பரிய சேவைகளை மக்களுக்கு செய்துள்ளனர். அவற்றை இந்நேரத்தில் நினைவு கூருகிறேன்.....! 

உண்மையில் இவர்கள் ஊர்களுக்கு நல்ல தொண்டு செய்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

திருமதி தங்கம்மா அப்பாக்குட்டி (துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பளை )

இங்கு முச்  என்றால் தும்முகிற பெண்ணியவாதிகள் பாடம் படிக்கணும் அவரிடம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.