Jump to content

கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!

கிசான் சம்மான்

எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை (PM-Kissan) 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டத்துக்கு 5 ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும் தகுதியுடையவர்கள் என்று முதலில் வரையறுக்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 எனக் கணக்கிடப்பட்டு மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. விவசாயிகளின் நன்மைக்கான இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுக்க போலி விவசாயிகளை இணைத்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து முறைகேடு செய்த போலி விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

பிரதமர் மோடி
 
பிரதமர் மோடி

அதேபோல முறைகேடுகளில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறது வேளாண்துறை. தமிழகம் முழுவதும் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருந்தாலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில்தான் அதிகளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில்தான் பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,364 கோடிகளை மத்திய அரசு வழங்கியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

காமன்வெல்த் மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் விவசாயிகள் நிதியுதவி திட்டம் குறித்தும் அதற்கான பயனாளிகளின் வரையறை குறித்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய வேளாண் துறையிடம் விளக்கம் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவலை பகிர்ந்திருக்கும் அவர், ``இந்த நிதியுதவி இரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியற்ற விவசாயிகள் மட்டுமல்லாமல் வருமான வரி செலுத்தும் விவசாயிகளும் நிதியுதவி பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்திருக்கிறது.

விவசாயிகள்
 
விவசாயிகள்

நிதியுதவி பெற்றிருக்கும் தகுதியற்ற விவசாயிகளில் 55.58% பேர் வருமான வரி செலுத்துபவர்கள். மீதமுள்ள 44.41% விவசாயிகள் நிதியுதவி பெறத் தகுதியற்ற பிரிவில் வருபவர்கள். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 2020 ஜூலை 31-ம் தேதி வரை ரூ.1,364.13 கோடி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிதியுதவி திட்டம் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றிருப்பதை அரசின் புள்ளி விவரங்களே தெளிவாகக் காட்டுகிறது. இந்த விவசாயிகள் அனைவரும் மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

 

பஞ்சாப்பில் மட்டும் 4.74 லட்சம் (23.16%) தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவியைப் பெற்றிருக்கிறார்கள். அதேபோல அசாமில் 3.45 லட்சம் (16.87%) விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 2.86 லட்சம் (13.99%) விவசாயிகளும் பலன் பெற்றிருக்கின்றனர். இந்த 4 மாநிலங்களிலும் தகுதியற்ற விவசாயிகளையும் சேர்த்து 54.03% தொகையைப் பெற்றிருக்கின்றனர்” என்று அதிர்ச்சியளிக்கிறார்.

``விவசாயம் இன்று இருக்கும் நிலையில் இந்த சொற்ப தொகை விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்திவிடாது. ஆனாலும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இப்போதுதான் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் அரசு, இந்தச் சிறிய சலுகையை அளித்திருக்கிறது. இதிலும் முறைகேடு நடப்பதால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயம்
 
விவசாயம்

தமிழகத்தில் நடந்த முறைகேட்டில் பணத்தைத் திரும்பப் பெறுகிறார்களே தவிர, அதில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. கண் துடைப்புக்காக ஒருசில கடைநிலை ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில்தான் இந்த முறைகேடு நடைபெற்றதாக நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது இந்தியா முழுவதிலும் நடைபெற்றிருப்பதால் உடனடியாக சி.பி.ஐ விசாரணை வைத்து, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்கிறார் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் முருகையன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. மாதவனிடம் பேசினோம். ``இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்காகத் தமிழகத்திலாவது ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, பட்டா, சிட்டா போன்றவற்றைக் கேட்டுப் பெற்றார்கள். ஆனால், வடமாநிலங்களில் பட்டா, சிட்டா என எதையும் அவர்கள் கேட்கவில்லை. அதற்குக் காரணம் 2019 நாடாளுமன்றத் தேர்தல். எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

கோ. மாதவன், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர்
 

அதற்கான எந்த விதிமுறைகளையும் வகுக்காமல், ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் வாங்காமல் விவசாயி என்று விண்ணப்பித்துவிட்டாலே போதும் என்ற நிலையில் அனைவருக்கும் பணத்தை அனுப்பிவிட்டது.

அதன்படி அங்கு ஒரேவீட்டில் கணவன், மனைவி, மகன், மகள் என அனைவருமே இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணம் பெற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. அதை முறையாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் நடந்த குளறுபடிகள் காரணமாக அந்தத் திட்டம் தற்போது முடக்கப்பட்டிருக்கிறது. அதன்காரணமாகத் தகுதியான விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களிலாவது முறையான விதிமுறைகளை உருவாக்கி முழு பயனும் தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

 

https://www.vikatan.com/government-and-politics/agriculture/rti-information-reveals-rs-1364-crore-irregularities-in-pm-kisan-samman-scheme

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.