-
Tell a friend
-
Topics
-
18
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄
-
சிங்கள பிணத்திண்ணி கழுகுகளை விட இவர்கள் மேலானவர்கள், நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது கண்டனீர்களா, ஆதாரம்? மனமுவந்து செய்த பல உதவிகள் உங்களை போன்ற வர்களுக்கு கசக்கதான் செய்யும், உதவி செய்தவர்களை இப்படி கேலிசெய்யும் மனம் உங்களை தவிர வேறு எவருக்கும் வராது. சிங்கள காட்டு மிராண்டிகள் பணத்திற்காக தன் இனத்திற்கு துரோகம் செய்தான் எம்மினத்தில் உள்ள சில கை கூலிகள் போன்று. இவர்களை உள்ளே வரவிடமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு யாரென்றில்லை தமிழனென்றால் காணும் கொல்வதற்கு. தமிழீழத்தில் சிங்கள நாய்கள் மண்ணை கொள்ளையிடுகின்றான், அதில் உங்கள் குரலை காணவில்லை இங்கு வந்து சிங்களத்துக்கு வக்காலத்து வேறு. உங்கள் நிலையை யோசித்து பாருங்கள் இவர்களை உள்ளே வரவிடாமால் சிங்கள காட்டுமிராண்டி கடற்படையால் முடியாதா? உள்ளோ வந்தால் கொல்லதான் வேண்டுமா? எப்படி எமது வீரர்கள் கையாண்டார்கள் அன்று? சிங்கள காட்டுமிராண்டிகள் மாடு போல் உங்களையும் வெட்டுவேன் என மிரட்டுகின்றான், அதில் உங்கள் ஒரு பதிவு கூட இல்லை, ஏன், எஜமான் விசுவாசம்?
-
நடராஜன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கபடாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. - இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கபடாமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். - - இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்காரணமாக அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு அணியில் இருந்து இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://crictamil.in/the-reason-behind-nattu-rejection-vs-eng/?fbclid=IwAR3xKQ_dmjeeFEEqUH7hJF6H0eSF6HpnXFePEHAkJURdi1fjAvYrMLGl1jI
-
By உடையார் · பதியப்பட்டது
தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் ஒப்பம் இட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் சமூகம் தற்போது எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழ்நிலை மீது கவனத்தைக் குவிக்கும் நோக்குடன் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் – “போருக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் உண்மையான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் வஞ்சகத்தனமான வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஐ. நா. தீர்மானத்தில் கூறப்பட்டவாறு ஒர் இடைக்கால நீதிச் செயல்முறையை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறி விட்டது. போர் குற்றவாளிகளைத் தண்டிப்பது உட்பட பாதிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீளளிப்பது, இழப்பீடுகளை வழங்குவது போன்றவற்றை உள்ளடக்கிய பொறிமுறையை இலங்கை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், கருத்துக்கள் அங்கு மேலெழுகின்றன. தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு தமிழர்களுக்கு எதிராக அரசியல் நிர்வாகம் கையாளப்பட்டு வருகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் மீது சித்திரவதைகளும் கண்காணிப் புக்களும் தொடர்கின்றன. மறுபுறத்தில் சிங்கள படைகளைச் சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரில் யுத்தக் குற்றங்கள், மனிதத்தன்மைக்கு எதிரான மீறல்களைப் புரிந்தவர் என்று பகிரங்கமாக அறியப்பட்ட சவீந்திர சில்வா நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். -இவ்வாறு அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் உண்மையான – நீடித்த – பகிர்ந்து கொள்ளப்பட்ட – அமைதியின் வெற்றிக்கு பிரான்ஸ் தனக்கிருக்கும் அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி அவசரமாக உதவ வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்ரோனுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் உறுப்பினர்கள் விவரம் : Jean-Christophe Lagarde – MP for Seine-Saint-Denis – Member of the study group on the Tamil people Marie-George Buffet – MP for Seine-Saint-Denis – President of the study group on the Tamil people Clémentine Autain – MP for Seine-Saint-Denis François Pupponi – MP for Val-d’Oise – Member of the study group on the Tamil people Jean-Félix Acquaviva – MP for Haute-Corse Emmanuelle Anthoine – MP for la Drôme Ericka Bareigts – MP for Réunion Olivier Damaisin – MP for Lot-and-Garonne Alain David – MP for Gironde Caroline Fiat – MP for Meurthe and Moselle Régis Juanico – MP for Loire Yannick Kerlogot – MP for Côtes d’Armor Sonia Krimi – MP for Manche Jean-Paul Lecoq – MP for Seine-Maritime Paul Molac – MP for Morbihan Sébastien Nadot – MP for Haute-Garonne Bérengère Poletti – MP for Ardennes Gabriel Serville – MP for Guyane Eric Straumann – MP for Haut-Rhin Michèle Victory – MP for l’Ardèche Sylvia Pinel – MP for Tarn-et-Garonne https://www.ilakku.org/?p=40058 -
உலகம் உன்னை உதைக்கும் துன்பம் தந்தே வதைக்கும் . மனதை தொடர்ந்து சிதைக்கும். மனிதத் தனமின்றி கதைக்கும். நேர்மை கொண்டால் உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் முயற்சி கொண்டால் நிலைக்கும் முன்னிலை வரலாறு படைக்கும். நிலத்தில் புதைந்த விதைக்கும் நீரும் கிடைத்தால் முளைக்கும். கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.