Jump to content

ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 

Image may contain: 1 person, outdoor

ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலை.

இப்போது நாம் ஒரு பெரும் லொக்டௌன் னினுள்  முடங்கப்பட்டுளோம்.

17ம் நூறாண்டில், இதேபோன்ற ஒரு முடக்கத்தில் தான், விஞ்ஞான உலகத்துக்கு, நியூட்டன் எனும் சிறந்த விஞ்ஞானி கிடைத்தார்.

தனது தந்தையார் இறந்து, மூன்று மாதங்களின் பின்னரே நியூட்டன் பிறந்தார். அவர் ஒரே ஒரு பிள்ளை என்பதால், இறந்த தந்தையின் பெயரே அவருக்கு இடப்பட்டது. 

அவரது தாயார் மறுமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். நியூட்டனுக்கும், அவரது, மாற்றுத் தந்தைக்கும் ஒத்து போகாததால், தனது பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார் அவர்.

வடக்கு இங்கிலாந்தின், கிராந்தம் பகுதியில் உள்ள கிங்ஸ் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார் அவர். தீடீரென அவரது மாற்றுத் தந்தை இறந்து விட, தவித்துப்போன தாய்க்கு உதவியாக அவருடன் வாழ  தொடங்கினார் நியூட்டன். 

குடும்பத்தின் பண கஷடம் காரணமாக, படிப்பினை நிறுத்தி, விவசாய வேலைகளுக்கு போக வேண்டும், என தாயார் வற்புறுத்தினர்.

ஆனாலும், அவரது பாடசாலை ஆசிரியர், கல்வியினை முடித்து, பின்னர் வேறு வேலைக்கு போகலாம் என வலியுறுத்தியதால் அவர் கல்வியினை தொடர்ந்தார். 

பாடசாலையில், இவரை தொடர்ந்து தொந்தரவு செய்த, (bully) இன்னோரு மாணவனுக்கு, தான் அவனிலும் பார்க்க படிப்பில் சிறந்தவன் என காண்பிக்க, உண்டான போட்டியே அவரை சிறந்த மாணவனாகியது.

1661 யூன் மாதம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரிக்கு  BA படிக்க சென்றார் அவர். அங்கே, சாப்பாட்டு செலவுக்கு, சமையல் கூடத்தில் சிறிய வேலைகளை செய்தார். சிறப்பாக படித்ததால் 1664ம் ஆண்டில், மேலும் நான்கு வருடங்கள் MA படிக்க கூடிய வகையில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

எனினும் 1965 ம் ஆண்டில், ஆகஸ்ட்  மாதத்தில், ஒரு பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

ஏப்ரல் 1667 ல், மீண்டும் திறக்கும் வரை அவர் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், பல விடயங்களை படித்து தம்மை மெருகேற்றிக் கொண்டார்.

விந்தரோப் எனும் பகுதியில் இருந்த வீட்டில் தங்கியிருந்த போதே, ஆப்பிள் விழுந்ததும், அவரது சிந்தனை விரிந்ததும், புவியீர்ப்புக் கொள்கை உருவானதும் நடந்தது.

Image may contain: tree, grass and outdoor

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்று காணப்படும், நியூட்டன் ஆப்பிள் மரத்தின்.... வாரிசு.

Image may contain: tree, plant, outdoor and nature

மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய அவர், ஐசக் பர்ரோவ் எனும் பேராசியரின் கவனத்தினை ஈர்த்தார்.

அதன் காரணமாக, 1669 ல் அந்த பேராசிரியர் ஓய்வு பெறும் போது, MA பட்டம் எடுத்திருந்த நியூட்டன், பேராசிரியர் ஆகி அவரது இடத்தினை எடுத்துக் கொண்டார்.

விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த, இரண்டாம் சார்லஸ் மன்னரால் 1662ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த Royal Society யின் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் விளங்கினார். இன்றுவரை இயங்கும்,பழமை மிக்க  ஒரு விஞ்ஞான அமைப்பு Royal Society ஆகும்.

https://royalsociety.org/about-us/history/

நியூட்டன், ஒரு பௌதிகவியலாளரும், கணிதவியலாளரையும் இருந்தார்.

புதிய பௌதிக கொள்கைகளையும், இயக்க விதிகள் மூன்றினையும் தந்த நியூட்டன், 17ம் நூறாண்டின் ஈடு இணையில்லாத விஞ்ஞான பெருமகன் ஆக கொண்டாடப்படுகின்றார்.

லொக்டௌன் காலத்தில் வீட்டில் இருந்த போதே, அவர் பல விடயங்கள் குறித்து ஆய்வு, சிந்தனை செய்து எழுதி உலகுக்கு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1687ல் புவிஈர்ப்பு குறித்து எழுதி தனது அவதானிப்பினை வெளியே சொன்னார். 

1705ம் ஆண்டில், விஞ்ஞான உலகுக்கு அளப்பரிய சேவைகள் செய்தமை காரணமாக, அரசி ஆன் அவரை கவுரவம் செய்ததன் மூலம் சார் பட்டம் கிடைத்தது.

லண்டனில், காசுத்தாள், நாணயங்களை அச்சிடும், றோயல் மின்ட் இல் பதவி வகித்த அவர், 1727ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி தனது உறக்கத்தில் மரணம் அடைந்தார்.

திருமணமே செய்து கொள்ளாத அவர், கடைசி காலத்தை, தனது அரை சகோதரியின், மகள் வீட்டிலேயே (பேத்தி) களித்தார். 

 

Image may contain: 1 person, indoor

No photo description available.

Link to comment
Share on other sites

  • Nathamuni changed the title to ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 

Image may contain: 1 person, outdoor

ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலை.

இப்போது நாம் ஒரு பெரும் லொக்டௌன் னினுள்  முடங்கப்பட்டுளோம்.

17ம் நூறாண்டில், இதேபோன்ற ஒரு முடக்கத்தில் தான், விஞ்ஞான உலகத்துக்கு, நியூட்டன் எனும் சிறந்த விஞ்ஞானி கிடைத்தார்.

தனது தந்தையார் இறந்து, மூன்று மாதங்களின் பின்னரே நியூட்டன் பிறந்தார். அவர் ஒரே ஒரு பிள்ளை என்பதால், இறந்த தந்தையின் பெயரே அவருக்கு இடப்பட்டது. 

அவரது தாயார் மறுமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். நியூட்டனுக்கும், அவரது, மாற்றுத் தந்தைக்கும் ஒத்து போகாததால், தனது பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார் அவர்.

வடக்கு இங்கிலாந்தின், கிராந்தம் பகுதியில் உள்ள கிங்ஸ் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார் அவர். தீடீரென அவரது மாற்றுத் தந்தை இறந்து விட, தவித்துப்போன தாய்க்கு உதவியாக அவருடன் வாழ  தொடங்கினார் நியூட்டன். 

குடும்பத்தின் பண கஷடம் காரணமாக, படிப்பினை நிறுத்தி, விவசாய வேலைகளுக்கு போக வேண்டும், என தாயார் வற்புறுத்தினர்.

ஆனாலும், அவரது பாடசாலை ஆசிரியர், கல்வியினை முடித்து, பின்னர் வேறு வேலைக்கு போகலாம் என வலியுறுத்தியதால் அவர் கல்வியினை தொடர்ந்தார். 

பாடசாலையில், இவரை தொடர்ந்து தொந்தரவு செய்த, (bully) இன்னோரு மாணவனுக்கு, தான் அவனிலும் பார்க்க படிப்பில் சிறந்தவன் என காண்பிக்க, உண்டான போட்டியே அவரை சிறந்த மாணவனாகியது.

1661 யூன் மாதம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரிக்கு  BA படிக்க சென்றார் அவர். அங்கே, சாப்பாட்டு செலவுக்கு, சமையல் கூடத்தில் சிறிய வேலைகளை செய்தார். சிறப்பாக படித்ததால் 1664ம் ஆண்டில், மேலும் நான்கு வருடங்கள் MA படிக்க கூடிய வகையில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

எனினும் 1965 ம் ஆண்டில், ஆகஸ்ட்  மாதத்தில், ஒரு பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

ஏப்ரல் 1667 ல், மீண்டும் திறக்கும் வரை அவர் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், பல விடயங்களை படித்து தம்மை மெருகேற்றிக் கொண்டார்.

விந்தரோப் எனும் பகுதியில் இருந்த வீட்டில் தங்கியிருந்த போதே, ஆப்பிள் விழுந்ததும், அவரது சிந்தனை விரிந்ததும், புவியீர்ப்புக் கொள்கை உருவானதும் நடந்தது.

Image may contain: tree, grass and outdoor

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்று காணப்படும், நியூட்டன் ஆப்பிள் மரத்தின்.... வாரிசு.

Image may contain: tree, plant, outdoor and nature

மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய அவர், ஐசக் பர்ரோவ் எனும் பேராசியரின் கவனத்தினை ஈர்த்தார்.

அதன் காரணமாக, 1669 ல் அந்த பேராசிரியர் ஓய்வு பெறும் போது, MA பட்டம் எடுத்திருந்த நியூட்டன், பேராசிரியர் ஆகி அவரது இடத்தினை எடுத்துக் கொண்டார்.

விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த, இரண்டாம் சார்லஸ் மன்னரால் 1662ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த Royal Society யின் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் விளங்கினார். இன்றுவரை இயங்கும்,பழமை மிக்க  ஒரு விஞ்ஞான அமைப்பு Royal Society ஆகும்.

https://royalsociety.org/about-us/history/

நியூட்டன், ஒரு பௌதிகவியலாளரும், கணிதவியலாளரையும் இருந்தார்.

புதிய பௌதிக கொள்கைகளையும், இயக்க விதிகள் மூன்றினையும் தந்த நியூட்டன், 17ம் நூறாண்டின் ஈடு இணையில்லாத விஞ்ஞான பெருமகன் ஆக கொண்டாடப்படுகின்றார்.

லொக்டௌன் காலத்தில் வீட்டில் இருந்த போதே, அவர் பல விடயங்கள் குறித்து ஆய்வு, சிந்தனை செய்து எழுதி உலகுக்கு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1687ல் புவிஈர்ப்பு குறித்து எழுதி தனது அவதானிப்பினை வெளியே சொன்னார். 

1705ம் ஆண்டில், விஞ்ஞான உலகுக்கு அளப்பரிய சேவைகள் செய்தமை காரணமாக, அரசி ஆன் அவரை கவுரவம் செய்ததன் மூலம் சார் பட்டம் கிடைத்தது.

லண்டனில், காசுத்தாள், நாணயங்களை அச்சிடும், றோயல் மின்ட் இல் பதவி வகித்த அவர், 1727ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி தனது உறக்கத்தில் மரணம் அடைந்தார்.

திருமணமே செய்து கொள்ளாத அவர், கடைசி காலத்தை, தனது அரை சகோதரியின், மகள் வீட்டிலேயே (பேத்தி) களித்தார்

 

Image may contain: 1 person, indoor

No photo description available.

நல்ல கட்டுரை முனியர்.நானும் இந்த லொக்டவுன்நேரத்திலை ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்றுநினைக்கிறன் ஆனால் முடியுதே இல்லை. அது சரி சகோதரியின் மகள் எப்பிடி பேத்தி ஆகும் மருமகளல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர். ஐசக் நியூட்டனின் சிறிய ஆனால் சிறப்பான கட்டுரை.....!  👍

நன்றி நாதம்ஸ் .....!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

நல்ல கட்டுரை முனியர்.நானும் இந்த லொக்டவுன்நேரத்திலை ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்றுநினைக்கிறன் ஆனால் முடியுதே இல்லை. அது சரி சகோதரியின் மகள் எப்பிடி பேத்தி ஆகும் மருமகளல்லோ?

மகளின் வீட்டில் பேத்தியின் கவனிப்பில் இருந்தார்.

காசு இருந்ததே.... 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வரலாற்று கட்டுரை 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

மகளின் வீட்டில் பேத்தியின் கவனிப்பில் இருந்தார்.

காசு இருந்ததே.... 🤑

சரி சரி  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்து விட்டது 
ஒன்று கடனாக வைத்து கொள்ளவும் 

Link to comment
Share on other sites

On 15/1/2021 at 11:54, Nathamuni said:

லொக்டௌன் காலத்தில் வீட்டில் இருந்த போதே, அவர் பல விடயங்கள் குறித்து ஆய்வு, சிந்தனை செய்து எழுதி உலகுக்கு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Time & space இரண்டும் creativityக்கு அவசியம் என எங்கோ கேட்ட ஞாபகம். Lockdownல் கால அவகாசமும், சக மனிதரது  சிந்தனைகள், கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படாத தனிமையான ஓர் இடமும் நியூட்டனின் சிந்தனாசக்தி தங்குதடையின்றித் தொழிற்பட்டு உலகிற்குப் பயனுள்ள விடயங்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. 

இன்னொரு விதத்தில், உலகத்தின் தேவையும், நியூட்டனின் சிந்தனாசக்தியை ஏதோ வழியில் பயன்படுத்தவேண்டும் என்ற அவருக்கான தேவையும் தகுந்த இடம், நிறைவான கால அவகாசம் இவற்றின் துணையோடு அவரைத் தூண்டியிருக்கும் என்றும் கொள்ளலாமோ! 

என்னைச் சிந்திக்கவைத்த பதிவுக்கு நன்றி நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

Time & space இரண்டும் creativityக்கு அவசியம் என எங்கோ கேட்ட ஞாபகம். Lockdownல் கால அவகாசமும், சக மனிதரது  சிந்தனைகள், கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படாத தனிமையான ஓர் இடமும் நியூட்டனின் சிந்தனாசக்தி தங்குதடையின்றித் தொழிற்பட்டு உலகிற்குப் பயனுள்ள விடயங்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. 

இன்னொரு விதத்தில், உலகத்தின் தேவையும், நியூட்டனின் சிந்தனாசக்தியை ஏதோ வழியில் பயன்படுத்தவேண்டும் என்ற அவருக்கான தேவையும் தகுந்த இடம், நிறைவான கால அவகாசம் இவற்றின் துணையோடு அவரைத் தூண்டியிருக்கும் என்றும் கொள்ளலாமோ! 

என்னைச் சிந்திக்கவைத்த பதிவுக்கு நன்றி நாதமுனி. 

இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன்.

அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle  இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view.

இந்த இடத்தில திருகினால், அங்கே.. உதைக்கும், அல்லது இவ்வாறான விளைவுகள் உண்டாகும் என்னும் பரந்த பார்வை. அது வாசிப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

இந்த சுவிச்சை போட்டால், அங்க தண்ணி பாயும் எண்டு தெரியாமலே  அதை தொட்டு, இப்ப பார் என்ன நடந்திருக்கெண்டு... போ, போய் ... அடியை வாங்கி கட்டு என்பார்களே 
 
இது big picture view ன் எதிர் நிலை.

சில சிறந்த வைத்திய நிபுணர்கள் இத்தகைய வியூ கொண்டதால் தான் மருந்துகளை சரியாக கொடுத்து, கைராசி மருத்துவர் என்கிறோம்.

இதை கொடுத்தால், அது நடக்கும்... ஆனால் இவருக்கு இன்ன கொம்பிலிகேஷன் இருப்பதால் பேதி வரும்... அதாலை, ஒரு முறை கொடுத்து, நிறுத்தி.... நிலைமை பார்த்து, இதை கொடுங்கள்.... அந்த ரியாக்ஷன் இல்லாவிடில், இதனையே மீண்டும் கொண்டுங்கள் என்று தாதிகளுக்கு எழுதி வைப்பதும் big picture view தான்.

என்னுடன் ஒரு இந்திய IT காரர் வேலை செய்தார்.... அவரே எனக்கு, கணக்கியலில் இருந்து IT  பாய உந்துதலாக இருந்தார்.

டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான்.

இதனையே, big picture view இல்லாத வேறு ஒருவராயின், திருப்பி, திருப்பி எழுதி, அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

அரசியலில், இதுவே, மகிந்தா , ரணில் அரசியலுக்கு இடையே உள்ள வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன்.

அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle  இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view.

இந்த இடத்தில திருகினால், அங்கே.. உதைக்கும், அல்லது இவ்வாறான விளைவுகள் உண்டாகும் என்னும் பரந்த பார்வை. அது வாசிப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

இந்த சுவிச்சை போட்டால், அங்க தண்ணி பாயும் எண்டு தெரியாமலே  அதை தொட்டு, இப்ப பார் என்ன நடந்திருக்கெண்டு... போ, போய் ... அடியை வாங்கி கட்டு என்பார்களே 
 
இது big picture view ன் எதிர் நிலை.

சில சிறந்த வைத்திய நிபுணர்கள் இத்தகைய வியூ கொண்டதால் தான் மருந்துகளை சரியாக கொடுத்து, கைராசி மருத்துவர் என்கிறோம்.

இதை கொடுத்தால், அது நடக்கும்... ஆனால் இவருக்கு இன்ன கொம்பிலிகேஷன் இருப்பதால் பேதி வரும்... அதாலை, ஒரு முறை கொடுத்து, நிறுத்தி.... நிலைமை பார்த்து, இதை கொடுங்கள்.... அந்த ரியாக்ஷன் இல்லாவிடில், இதனையே மீண்டும் கொண்டுங்கள் என்று தாதிகளுக்கு எழுதி வைப்பதும் big picture view தான்.

என்னுடன் ஒரு இந்திய IT காரர் வேலை செய்தார்.... அவரே எனக்கு, கணக்கியலில் இருந்து IT  பாய உந்துதலாக இருந்தார்.

டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான்.

இதனையே, big picture view இல்லாத வேறு ஒருவராயின், திருப்பி, திருப்பி எழுதி, அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

அரசியலில், இதுவே, மகிந்தா , ரணில் அரசியலுக்கு இடையே உள்ள வித்தியாசம்.

முயற்சி செய்து பார்ப்போம் 

 

Link to comment
Share on other sites

20 hours ago, Nathamuni said:

இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன்.

அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle  இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view.

 

20 hours ago, Nathamuni said:

டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான்.

நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!)

கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா! 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!)

கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா! 😀

 

அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது.

பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். 

****

IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு.

ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன்.

உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb  பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல்.

சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்....

அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி? 

இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture  view  இல்லாத நிலை என்பேன்.  

Link to comment
Share on other sites

41 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது.

பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். 

நீங்கள் கூறியதில் 'திறமை வளர்த்துக்கொள்வது' என்ற கருத்துடன் உடன்படுகிறேன். நிச்சயமாகக் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் திறமை.

நான் சொல்லவந்தது, பிறப்பினால் கிடைத்த திறமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி. ரிச்சர்ட் பிரான்சனை எடுத்துக்கொண்டால், அவர் பெரிதாகப் படிக்காவிட்டாலும் கூட படித்த குடும்பத்தில் பிறந்தமையால் திறமைக்கான சில காரணிகள் அவருக்குப் பிறப்பிலேயே இயற்கையாகக் கிடைத்திருக்கக்கூடும். அதற்காகத் தந்தை போல நீதிபதியாக வேண்டிய அவசியமில்லை. சட்டத்துறையில் அவருடைய தந்தைக்கு big picture view இருந்திருக்கக்கூடும். அவருடைய மகளுக்கு மருத்துவத்துறையில் இந்தப் பார்வை இருக்கக்கூடும். பிரான்சன் வியாபாரத்தில் அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். இதனுடன் உழைப்பின் அளவும், கிடைத்த வாய்ப்புக்களும், timingம் ஒவ்வொருவரின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். ஏனைய திறமைகள் அவருடைய தாயார் மூலமோ, பாட்டன், முப்பாட்டன் மூலமோ பிறப்பினால் வந்து அவையும் அவருக்குக் கைகொடுத்திருக்கும். ஒரு திறமையை வளர்க்க அது மரபணு மூலம் ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதும், அப்படிக் கிடைக்காத ஒன்றை வளர்க்க முடியாது என்பதும் எனது கருதுகோள். (உயிரியல் விஞ்ஞானத்தில் வல்லவர்கள் யாராவது இதைப் பற்றித் தெளிவுபடுத்தவும். தவறென்றால் சொல்லவும்.). 

ஆகவே, எனது கண்ணோட்டத்தில், பிறப்பால் வராத ஒரு திறமையை வளர்க்க முடியாது; பிறப்பில் இயற்கையாக வந்தது என்பதற்காக அதை உழைப்பின் மூலம் வளர்க்காவிட்டாலும் அது தானாக வெளிப்படாது. பிறப்பால் பல திறமைகள் கலவைகளாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன; ஆனாலும் எல்லோரிடமும் எல்லாத் திறமையும் இருப்பதில்லை. கலவைகளாகப் பல திறமைகள் இருந்தாலும் கல்வி, அனுபவம், உலகத்துக்கு அவற்றுக்கான தேவை, கிடைத்த வாய்ப்புக்கள், பெற்றோரின் வளர்ப்பு இவையெல்லாம் சேர்ந்தே அவற்றில் எந்தத் திறமைகள் தனியாகவோ, கலவையாகவோ வளர்க்கப்பட்டு ஒருவரைப் பிரகாசிக்கச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இது நான் வாசித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, பிற மனிதர், குடும்பங்களை அவதானித்து உருவாக்கிய கருதுகோள். 

மீண்டும், யாராவது உயிரியல் நிபுணர்களின் உதவி இங்கு தேவை. தெரிந்தால் இதற்கு மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டவும். நன்றி 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கூறியதில் 'திறமை வளர்த்துக்கொள்வது' என்ற கருத்துடன் உடன்படுகிறேன். நிச்சயமாகக் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் திறமை.

நான் சொல்லவந்தது, பிறப்பினால் கிடைத்த திறமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி. ரிச்சர்ட் பிரான்சனை எடுத்துக்கொண்டால், அவர் பெரிதாகப் படிக்காவிட்டாலும் கூட படித்த குடும்பத்தில் பிறந்தமையால் திறமைக்கான சில காரணிகள் அவருக்குப் பிறப்பிலேயே இயற்கையாகக் கிடைத்திருக்கக்கூடும். அதற்காகத் தந்தை போல நீதிபதியாக வேண்டிய அவசியமில்லை. சட்டத்துறையில் அவருடைய தந்தைக்கு big picture view இருந்திருக்கக்கூடும். அவருடைய மகளுக்கு மருத்துவத்துறையில் இந்தப் பார்வை இருக்கக்கூடும். பிரான்சன் வியாபாரத்தில் அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். இதனுடன் உழைப்பின் அளவும், கிடைத்த வாய்ப்புக்களும், timingம் ஒவ்வொருவரின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். ஏனைய திறமைகள் அவருடைய தாயார் மூலமோ, பாட்டன், முப்பாட்டன் மூலமோ பிறப்பினால் வந்து அவையும் அவருக்குக் கைகொடுத்திருக்கும். ஒரு திறமையை வளர்க்க அது மரபணு மூலம் ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதும், அப்படிக் கிடைக்காத ஒன்றை வளர்க்க முடியாது என்பதும் எனது கருதுகோள். (உயிரியல் விஞ்ஞானத்தில் வல்லவர்கள் யாராவது இதைப் பற்றித் தெளிவுபடுத்தவும். தவறென்றால் சொல்லவும்.). 

ஆகவே, எனது கண்ணோட்டத்தில், பிறப்பால் வராத ஒரு திறமையை வளர்க்க முடியாது; பிறப்பில் இயற்கையாக வந்தது என்பதற்காக அதை உழைப்பின் மூலம் வளர்க்காவிட்டாலும் அது தானாக வெளிப்படாது. பிறப்பால் பல திறமைகள் கலவைகளாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன; ஆனாலும் எல்லோரிடமும் எல்லாத் திறமையும் இருப்பதில்லை. கலவைகளாகப் பல திறமைகள் இருந்தாலும் கல்வி, அனுபவம், உலகத்துக்கு அவற்றுக்கான தேவை, கிடைத்த வாய்ப்புக்கள், பெற்றோரின் வளர்ப்பு இவையெல்லாம் சேர்ந்தே அவற்றில் எந்தத் திறமைகள் தனியாகவோ, கலவையாகவோ வளர்க்கப்பட்டு ஒருவரைப் பிரகாசிக்கச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இது நான் வாசித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, பிற மனிதர், குடும்பங்களை அவதானித்து உருவாக்கிய கருதுகோள். 

மீண்டும், யாராவது உயிரியல் நிபுணர்களின் உதவி இங்கு தேவை. தெரிந்தால் இதற்கு மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டவும். நன்றி 😀

 

இங்கை ஒரு பரியாரியார் இருக்கிறார்.... பைடன் பதவி ஏற்ற பின்னர் வந்து விளக்கம் தருவார். அதுவரை பொறுப்போம். 😁

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி? 

இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture  view  இல்லாத நிலை என்பேன்.  

புரிகிறது நாதமுனி. 

வியாபாரத்தில் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் இந்தப் பார்வை உடையோருக்கு அவர்கள் தம்மையும் தாம் சார்ந்த துறையையும் வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவும். அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர், மருத்துவர் எனப் பட்டியல் நீண்டு செல்லும்!

12 minutes ago, Nathamuni said:

இங்கை ஒரு பரியாரியார் இருக்கிறார்.... பைடன் பதவி ஏற்ற பின்னர் வந்து விளக்கம் தருவார். அதுவரை பொறுப்போம். 😁

பல நாள் யோசித்த விடயங்கள். பல வினாக்கள். நிச்சயம் அவர் மூலம் இந்த சந்தேகங்கள் தீருமென நம்புவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.