Jump to content

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

1-108-696x392.jpg
 1 Views

45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த  காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது.

“இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் விருப்பப்பட்ட ஓவியத்தை வரையும் அளவுக்கு, அவர்களிடம் எல்லா வகையான உபகரணங்கள் மற்றும் வரைவதற்கான திறன் இருந்தது” என ‘சயின்ஸ் அட்வான்செஸ்’ என்கிற சஞ்ஜிகையில் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான மேக்சிமே ஆபெர்ட் கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39509

Link to comment
Share on other sites

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

தெரியவில்லையா? மகன் வைத்தியர்தானே, செலவின்றி அவரிடம் காட்டிச் சிகிச்சை பெறுவதற்கு வழி உள்ளது சிறித்தம்பி.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

 

1 hour ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

அவர் தலைப் பகுதியை மட்டும் சொல்கிறார் சிறியர். சட்டென்று பார்க்கும்போது குருவித்தலை போலும் நன்றாகப் பார்த்தால் பன்றியின் முன் மூக்கும் இரு துவாரங்களுடன் தெரிகிறது....!  👌  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெரியவில்லையா? மகன் வைத்தியர்தானே, செலவின்றி அவரிடம் காட்டிச் சிகிச்சை பெறுவதற்கு வழி உள்ளது சிறித்தம்பி.🤣

 

53 minutes ago, suvy said:

 

அவர் தலைப் பகுதியை மட்டும் சொல்கிறார் சிறியர். சட்டென்று பார்க்கும்போது குருவித்தலை போலும் நன்றாகப் பார்த்தால் பன்றியின் முன் மூக்கும் இரு துவாரங்களுடன் தெரிகிறது....!  👌  😁

பாஞ்ச் அண்ணை.... சுவியர்,

விளக்கமாக சொன்ன பிறகு....

🐤 குருவி தெரியுது. 👍🏼😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

 

பாஞ்ச் அண்ணை.... சுவியர்,

விளக்கமாக சொன்ன பிறகு....

🐤 குருவி தெரியுது. 👍🏼😁😂

L'enfer c'est aussi soi-même – fluffybanana

பாஞ்சின் கண்கள்.....!

Excuse Me Reaction GIF by Mashable - Find & Share on GIPHY

சிரியரின் கண்கள்.....!

The Manager GIF - MichaelScott TheManager FingerGuns - Discover & Share GIFs

சுவி ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

L'enfer c'est aussi soi-même – fluffybanana

பாஞ்சின் கண்கள்.....!

Excuse Me Reaction GIF by Mashable - Find & Share on GIPHY

சிரியரின் கண்கள்.....!

The Manager GIF - MichaelScott TheManager FingerGuns - Discover & Share GIFs

சுவி ......!

சுவியர்... இந்தப் படங்களை, பார்க்க.. சிரிப்பு தாங்க முடியவில்லை. 🤣
மினைக்கெட்டு... தேடி எடுத்தமைக்கு, நன்றி ஐயா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

ஐயா,

உண்மையிலேயே உங்கள் பார்வை விசேசம்தான்.

இப்படி இரு தோற்றம் வரும் முறையில் கீறுவது ஒரு வகை கண்கட்டி வித்தை (optical illusion).

நீங்கள் கூறியதன்பின், இதை கீறியவர் இந்த optical illusion என்ற concept ஐ அத்தனை வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தாரா? அல்லது இது தற்செயலா என்று யோசிக்கவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

இதுக்கு போய் , 45,000 மே கொஞ்சம் ஓவர். அங்காள ஒரு 500 எக்ஸ்ட்ரா என்ன கணக்கு.... எப்படி அளந்தார்கள் எண்டு ஏதாவது இழவு விளங்கினால் சொல்லுங்கோ...

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

மாலை வேலை ஆலையில் முடிந்து, வாழைச்சேனையில் உள்ள சுங்காங்கேணிக்குச் செல்ல இரவு 10மணிக்கு மேலாகிவிடும். ச.கு னாவின் பெற்றோல் செற்றுக்கு அப்பால் எங்கள் வீடு செல்லும் வீதி  ஒரே கும்மிருட்டாக இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் எங்களைத் தூரத்தில் வரும் நண்பனின் தேவாரப் பாடல்கள் எழுப்பிவிடும், மிகவும் பயந்தவன், அவன் சைக்கிளுக்கு லைற்ரும் இல்லை. அந்த மாலை வேலை அவனுக்கு தேவாரம், திருவாசகம், புராணம் என பல பாடல்களை பாடவைத்து இறையருளையும் பெற வைத்தது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இதுக்கு போய் , 45,000 மே கொஞ்சம் ஓவர். அங்காள ஒரு 500 எக்ஸ்ட்ரா என்ன கணக்கு.... எப்படி அளந்தார்கள் எண்டு ஏதாவது இழவு விளங்கினால் சொல்லுங்கோ...

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

என்ன பாஸ், 

நான் இதை நீங்கள் நாயக்கரோட சேத்து, பண்டாரநாயக்கவ இழுத்து ஒரு குழையல் குழைப்பியள் எண்டு பார்த்தா, ஈசியா முடிச்சிட்டியள்.

இதையும் ஒருக்கா பாருங்கோ.

https://blog.britishmuseum.org/the-lion-man-an-ice-age-masterpiece/

எங்கட நரசிம்மர வச்சு கதை விடுறாங்கள்.

ஒடிசா பாலுவுக்கு ஒரு மெயில தட்டி விடுங்கோ. ஆமையோட வந்து - இது நரநிம்மந்தான் என நிறுவட்டும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்ன பாஸ், 

நான் இதை நீங்கள் நாயக்கரோட சேத்து, பண்டாரநாயக்கவ இழுத்து ஒரு குழையல் குழைப்பியள் எண்டு பார்த்தா, ஈசியா முடிச்சிட்டியள்.

அதெல்லாம்.... சும்மா... காசை வாங்கிக்கொண்டு... வீட்டிலை இருந்து உங்களோட கும்மாம் குத்து போட்டது ....

இப்ப... புது இடம்.... கொஞ்சம் வேலை செய்யிற மாதிரி.... பல்ஸ் பிடிச்சு... ஏறி ஒக்காந்தப் பிறகு.... பழையபடி விளாடுவோம்...

ஓகே... அது வரைக்கும்.... உங்க... கிரௌண்டை... வடிவா  பார்த்து... ஈ  காக்காய் அண்டாமல் பாருங்கோ...  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதெல்லாம்.... சும்மா... காசை வாங்கிக்கொண்டு... வீட்டிலை இருந்து உங்களோட கும்மாம் குத்து போட்டது ....

இப்ப... புது இடம்.... கொஞ்சம் வேலை செய்யிற மாதிரி.... பல்ஸ் பிடிச்சு... ஏறி ஒக்காந்தப் பிறகு.... பழையபடி விளாடுவோம்...

ஓகே... அது வரைக்கும்.... உங்க... கிரௌண்டை... வடிவா  பார்த்து... ஈ  காக்காய் அண்டாமல் பாருங்கோ...  :grin: 

உந்த கிரவுண்ட் பிடிக்கிற வேலை குரே பாக்கில் இருந்து செய்யுறியள் என🤣

நானும் கு சா அண்ணையும் பிடிச்சு வக்கிறம் கெதியா வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உந்த கிரவுண்ட் பிடிக்கிற வேலை குரே பாக்கில் இருந்து செய்யுறியள் என🤣

நானும் கு சா அண்ணையும் பிடிச்சு வக்கிறம் கெதியா வாங்கோ.

சாமியார் இல்லாமலும், தனி ஆளாய்  நிண்டு விளையாடுவியல்  எண்டு தானே, தல எண்டுறம்.. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள 
நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல .....

Link to comment
Share on other sites

On 16/1/2021 at 14:00, Nathamuni said:

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை.

எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு!

சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்!

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535large.BFCC0535-7729-456E-B179-E82F2FFB9C2D.jpeg.982a74098b442193412390f578c787c5.jpeg

 

large.DE8A6774-1085-4639-89D1-041EF2CE87EA.jpeg.5c0e80df79c8b30897111a03338a1d67.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள 
நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல .....

வணக்கம் மருதர்,

இது எனக்கு எறிஞ்ச கல்மாதிரி தெரியவில்லை (நான் மேலே என் பதிவை போட்டுள்ளேன்), ஆனால் 10 ஆயிரம் வருட கருத்தை முன் வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கான பதில்.

நான் சொன்னது 10 ஆயிரம் வருடத்தின் பின்தான் நகர நாகரீகம் தொடங்கியது. அதாவது ஒரு நிலத்தில் தங்கி, உழுது, விவசாயம் பார்க்கும் அகேரியன்/ ஏர்பன் சிவிலைசேசன்.

ஆகவேதான் 45 000 ஆண்டுக்கு முன் பூம்புகாரில் ஒரு துறைமுகம் இருந்தது என்பதை மறுத்துரைதேன்.

ஆனால் மனித இனமாமாகிய ஹோமோ சேப்பியன் சேப்பியன்ஸ் தோன்றி பல ஆயிரம், லட்சம் ஆண்டுகள் ஆகவே ஒரு குகையில் படம் கீறும் அளவில் மனித இனம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்து இருந்தது என்பது -10 ஆயிரம் வருடத்தின் பின் தான் அகேரியன் நாகரீகம் தொடங்கியது எனும் கொள்கைக்கு முற்றிலும் ஏற்புடையதே.

நான் மேலே சொன்ன ஐரோப்பாவில் கண்டு பிடிக்கபட்ட lion-man ஓவியமும் இப்படியே. இதை போல் மேலும் சில உள்ளன.

ஆனால் இவை எவையும் 10, 000 ஆண்டுக்கு முன் அகேரியன்/நகர நாகரீகம் இருந்தது என சொல்லும் தரவுகள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வணக்கம் மருதர்,

இது எனக்கு எறிஞ்ச கல்மாதிரி தெரியவில்லை (நான் மேலே என் பதிவை போட்டுள்ளேன்), ஆனால் 10 ஆயிரம் வருட கருத்தை முன் வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கான பதில்.

நான் சொன்னது 10 ஆயிரம் வருடத்தின் பின்தான் நகர நாகரீகம் தொடங்கியது. அதாவது ஒரு நிலத்தில் தங்கி, உழுது, விவசாயம் பார்க்கும் அகேரியன்/ ஏர்பன் சிவிலைசேசன்.

ஆகவேதான் 45 000 ஆண்டுக்கு முன் பூம்புகாரில் ஒரு துறைமுகம் இருந்தது என்பதை மறுத்துரைதேன்.

ஆனால் மனித இனமாமாகிய ஹோமோ சேப்பியன் சேப்பியன்ஸ் தோன்றி பல ஆயிரம், லட்சம் ஆண்டுகள் ஆகவே ஒரு குகையில் படம் கீறும் அளவில் மனித இனம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்து இருந்தது என்பது -10 ஆயிரம் வருடத்தின் பின் தான் அகேரியன் நாகரீகம் தொடங்கியது எனும் கொள்கைக்கு முற்றிலும் ஏற்புடையதே.

நான் மேலே சொன்ன ஐரோப்பாவில் கண்டு பிடிக்கபட்ட lion-man ஓவியமும் இப்படியே. இதை போல் மேலும் சில உள்ளன.

ஆனால் இவை எவையும் 10, 000 ஆண்டுக்கு முன் அகேரியன்/நகர நாகரீகம் இருந்தது என சொல்லும் தரவுகள் அல்ல.

தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது
ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும் 
அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி 
மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும் 
எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. 
தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு 
அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது 
என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும் 
ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள் 
மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை 
கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

வணக்கம் மருதர்,

இது எனக்கு எறிஞ்ச கல்மாதிரி தெரியவில்லை (நான் மேலே என் பதிவை போட்டுள்ளேன்), ஆனால் 10 ஆயிரம் வருட கருத்தை முன் வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கான பதில்.

நான் சொன்னது 10 ஆயிரம் வருடத்தின் பின்தான் நகர நாகரீகம் தொடங்கியது. அதாவது ஒரு நிலத்தில் தங்கி, உழுது, விவசாயம் பார்க்கும் அகேரியன்/ ஏர்பன் சிவிலைசேசன்.

ஆகவேதான் 45 000 ஆண்டுக்கு முன் பூம்புகாரில் ஒரு துறைமுகம் இருந்தது என்பதை மறுத்துரைதேன்.

ஆனால் மனித இனமாமாகிய ஹோமோ சேப்பியன் சேப்பியன்ஸ் தோன்றி பல ஆயிரம், லட்சம் ஆண்டுகள் ஆகவே ஒரு குகையில் படம் கீறும் அளவில் மனித இனம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்து இருந்தது என்பது -10 ஆயிரம் வருடத்தின் பின் தான் அகேரியன் நாகரீகம் தொடங்கியது எனும் கொள்கைக்கு முற்றிலும் ஏற்புடையதே.

நான் மேலே சொன்ன ஐரோப்பாவில் கண்டு பிடிக்கபட்ட lion-man ஓவியமும் இப்படியே. இதை போல் மேலும் சில உள்ளன.

ஆனால் இவை எவையும் 10, 000 ஆண்டுக்கு முன் அகேரியன்/நகர நாகரீகம் இருந்தது என சொல்லும் தரவுகள் அல்ல.

நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப்   பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது
ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும் 
அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி 
மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும் 
எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. 
தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு 
அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது 
என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும் 
ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள் 
மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை 
கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது 

இதை நான் அந்த திரியில் சொல்லியும் விட்டேன்.

மனித இடப் பெயர்வு ஆசியாவுடன் இணைந்த வட அமெரிக்கா வழி நடந்தாக நம்ப படுகிறது. அதேபோல் தான் அவுஸ்ரேலியா நியூசிலாந்து போனவர்களும் என.

இங்கே வரலாற்றை ஆராயும் எவரும் கொலம்பஸ்ஸில் இருந்து அது ஆரம்பிப்பாதக சொல்வதில்லை. நீங்கள் அப்படி அவர்கள் சொல்வதாக கருதுகிறீர்கள்.

ஆனால் இதுவரை உலகம் ஏற்று கொண்ட வரலாற்று தியரிகளை தாண்டி ஏனையவற்றை முன்வைக்கும் போது அதை அப்படியே ஏற்று கொள்ள முடியாது.

நான் எப்போதும் புது தியரிகளை காது கொடுத்து கேட்பேன்.

நடு இரவில் பூம்புகார் ரிசேர்ஜ் என இணைத்த 10 பக்க pdf இணைப்பை படித்து அதில் உள்ள குறைகளை விளக்கி பதிலும் இட்டேன். ஆகவே புதிய சிந்தனைகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் அவை நம்ப கூடியதாக இருக்க வேண்டும்.

ஆமைகளை பின் பற்றி தமிழர்கள் கொலம்பியா போனார்கள் என்று சொல்லும் போது - அதை யார் சொல்கிறார் என பார்க்க வேண்டும்.  அவர் ஒரு பெளதீகவியல் இளமானி. சரி பரவாயில்லை அடுத்து அவர் இதை ஏதாவது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளாரா என பார்க்கவேண்டும்.

இல்லை - ஆமைகள் இப்படி போகிறன, இந்த ஊர்களில் எல்லாம் தமிழை நிகர்ந்த ஒலி வரும் ஊர் பெயர்கள் உள்ளன ஆகவே இவை தமிழ் ஊர்கள்தான், தமிழர்கள்தான் அங்கே போனார்கள் என்பதே அவரின் ஆய்வு எனும் போது. என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொன்னது போல் நாளைக்கே 45,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் நகரம் கட்டி வாழ்ந்தார்கள் என ஆய்வு வந்தால் அதை ஏற்கலாம்.

ஆனால் ஒன்று அந்த ஆய்வு யூடியூபில் வராது. ஏதாவது ஒரு பல்கலையில், பல துறைசார் நிபுணர்கள் உழைப்பில்தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப்   பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔      

இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதை நான் அந்த திரியில் சொல்லியும் விட்டேன்.

மனித இடப் பெயர்வு ஆசியாவுடன் இணைந்த வட அமெரிக்கா வழி நடந்தாக நம்ப படுகிறது. அதேபோல் தான் அவுஸ்ரேலியா நியூசிலாந்து போனவர்களும் என.

இங்கே வரலாற்றை ஆராயும் எவரும் கொலம்பஸ்ஸில் இருந்து அது ஆரம்பிப்பாதக சொல்வதில்லை. நீங்கள் அப்படி அவர்கள் சொல்வதாக கருதுகிறீர்கள்.

ஆனால் இதுவரை உலகம் ஏற்று கொண்ட வரலாற்று தியரிகளை தாண்டி ஏனையவற்றை முன்வைக்கும் போது அதை அப்படியே ஏற்று கொள்ள முடியாது.

நான் எப்போதும் புது தியரிகளை காது கொடுத்து கேட்பேன்.

நடு இரவில் பூம்புகார் ரிசேர்ஜ் என இணைத்த 10 பக்க pdf இணைப்பை படித்து அதில் உள்ள குறைகளை விளக்கி பதிலும் இட்டேன். ஆகவே புதிய சிந்தனைகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் அவை நம்ப கூடியதாக இருக்க வேண்டும்.

ஆமைகளை பின் பற்றி தமிழர்கள் கொலம்பியா போனார்கள் என்று சொல்லும் போது - அதை யார் சொல்கிறார் என பார்க்க வேண்டும்.  அவர் ஒரு பெளதீகவியல் இளமானி. சரி பரவாயில்லை அடுத்து அவர் இதை ஏதாவது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளாரா என பார்க்கவேண்டும்.

இல்லை - ஆமைகள் இப்படி போகிறன, இந்த ஊர்களில் எல்லாம் தமிழை நிகர்ந்த ஒலி வரும் ஊர் பெயர்கள் உள்ளன ஆகவே இவை தமிழ் ஊர்கள்தான், தமிழர்கள்தான் அங்கே போனார்கள் என்பதே அவரின் ஆய்வு எனும் போது. என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொன்னது போல் நாளைக்கே 45,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் நகரம் கட்டி வாழ்ந்தார்கள் என ஆய்வு வந்தால் அதை ஏற்கலாம்.

ஆனால் ஒன்று அந்த ஆய்வு யூடியூபில் வராது. ஏதாவது ஒரு பல்கலையில், பல துறைசார் நிபுணர்கள் உழைப்பில்தான் வரும்.

வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை 
நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை 
நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன்.

உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை 
எனது கருத்தை பகிர்வதே நோக்கம்.
நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே 
சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள் 
வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை. 

வேறு திரியில் என்ன பேசுகிறார்கள் 
யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம் 
கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே 
இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும் 

நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும்  காரணமாக இருக்கலாம்  ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய 
காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே. 

நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது 
அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் 
அதில் எனக்கு அக்கறை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.

இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான் 
நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி 
இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது. 

ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும் 
இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம் 
அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில் 
ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன்.

நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது 
அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின் 
அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்? 
ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும் 
கேட்க்க முடியாது போகிறது? 

ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் 
அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும் 
மூலிகை பெட்ரோல் மாதிரி 

பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை.

எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு!

சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்!

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535large.BFCC0535-7729-456E-B179-E82F2FFB9C2D.jpeg.982a74098b442193412390f578c787c5.jpeg

 

large.DE8A6774-1085-4639-89D1-041EF2CE87EA.jpeg.5c0e80df79c8b30897111a03338a1d67.jpeg

பகிர்வுக்கு நன்றி.

கிறீஸ்தவருக்கு முதலே முஸ்லிம்கள் அவுஸ்ரேலியா வந்து விட்டார்கள் என்றும் மக்கசார் முஸ்லிம்களுடன் அபொர்ஜினிகள் திருமண பந்தம் வைத்தார்கள் எனவும் அண்மையில் வாசித்தேன். ஆனால் bookmark பண்ணவில்லை🤦‍♂️.

நான் ஒரு ரயில் பிரியன். இல்லை வெறியன்.  உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். உங்கள் ஊரில் GAN என்று ஒரு ரெயில் ஓடுகிறது அடிலேட்-அலிஸ் ஸ்பிரிங்ஸ்-டார்வின்னை இணைப்பது. அதன் பெயரும் Afghan என்பதன் சுருக்கம்தானாம்.

வெள்ளையர்கள் வந்த பின் camel caravans மூலம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பொருட்களை நகர்த்தும் பொருட்டு பல ஆப்கானிகள் தருவிக்கபட்டார்களாம். பின்னர் அந்த பாதை வழியே ஓடிய ரயிலும் அதே பெயரில் ஓடுகிறதாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.