Jump to content

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
54 நிமிடங்களுக்கு முன்னர்
கமல்ஹாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார்.

இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டபோது அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தங்குக்கு அந்த சின்னம் தேவையில்லை என்று அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி. மெளரியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுவதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

Link to comment
Share on other sites

புதிய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளில் தனக்குப் பிடித்தது டார்ச் லைட்தான் என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதை கமல் எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது.🔦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

புதிய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளில் தனக்குப் பிடித்தது டார்ச் லைட்தான் என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதை கமல் எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது.🔦

அவருக்கு மிகவும் தேவையான ஒன்று தான்.😃

Link to comment
Share on other sites

ரியூப் லைட் கிடைத்து இருந்தால் இன்னும் நல்லாக பொருந்தியிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

அவருக்கு மிகவும் தேவையான ஒன்று தான்.😃

யாயினி... உங்கள் உள் குத்து பகிடியை, மிகவும் ரசித்தேன். 👍🏼 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

டார்ச்சை பிடிச்சு போட்டார்.... இனி 234 பேரை தேடி பிடிக்கணுமே....

இவர் கூட்டணி போவார்... சீட்டுகள் வெல்லலாம் எண்டு நிக்கிற ஆட்கள், 234 லும் நிப்பார்  எண்டோன்ன, ஓடியிருவினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன "ரொச் லைற்" சின்னமே தான் வேணுமா.? அதுக்கும் அண்னை பெற்றர் மாஸ் லைற் இருக்கு .. ☺️..😊

x1080

அதுகும் இல்லை என்றா தீ-பந்தம் இருக்கு..! பிடிப்பது என்டு முடிவு செய்த பிறகு எதுவா இருந்தா என்ன.?👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

ரியூப் லைட் கிடைத்து இருந்தால் இன்னும் நல்லாக பொருந்தியிருக்கும்

நிழலி நீங்களுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நிழலி நீங்களுமா.

உண்மையைத் தானே சொல்கிறோம்.என்னமோ கின்டர்கார்டன் பிள்ளைகள் போல..... 😆

Link to comment
Share on other sites

5 hours ago, சுவைப்பிரியன் said:

நிழலி நீங்களுமா.

ரியூப்லைட் என்றால் சுவிச் போட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து தாமதமாகத்தான் எரியும். கமல் 60 வயதுக்கு பிறகு நடிப்பில் இருந்து ரிட்டயர் ஆகும் சமயத்தில் தான் அரசியல் செய்ய முயல்கின்றார். அதற்குத்தான் ரியூப்லைட் என்று எழுதினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரியூப்லைட் என்றால் சுவிச் போட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து தாமதமாகத்தான் எரியும். கமல் 60 வயதுக்கு பிறகு நடிப்பில் இருந்து ரிட்டயர் ஆகும் சமயத்தில் தான் அரசியல் செய்ய முயல்கின்றார். அதற்குத்தான் ரியூப்லைட் என்று எழுதினான். 

இதுக்கு அது  பதில் இல்லையே... 🤔

ரியூப்லைட் எண்டால்... ஒளிவு மறைவு இன்றி... அனைத்தையுமே உளறிக் கொட்டுபவர் என்று தானே பொருள்....

கமல் உளறுவார்... ஆக்களுக்கு புரியாது.... அதாவது வெள்ளை ரியூப்லைட்க்கு ஊதா, மஞ்சள் டீசு  சுத்திர மாதிரி.

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

ரியூப்லைட் எண்டால்... ஒளிவு மறைவு இன்றி... அனைத்தையுமே உளறிக் கொட்டுபவர் என்று தானே பொருள்.

ஒருவரைப் பார்த்து, "நீ செரியான ரியூப்லைட் டா" என்று சொல்வதன் அர்த்தம் என்னவென நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஒருவரைப் பார்த்து, "நீ செரியான ரியூப்லைட் டா" என்று சொல்வதன் அர்த்தம் என்னவென நினைக்கின்றீர்கள்?

உளறல்.... எல்லாத்தயுமே, மறைக்க வேண்டியதையுமே சொல்லி, சிரிச்சுக்கொண்டு  நிக்கிறது தான் நமக்கு புரிந்த ரியூப்லைட்.

பிழை எண்டால், அதுக்கேத்தமாதிரி கழிச்சுப்போட்டு, மிச்ச பொற்காசுகளை தாருங்கோ மன்னா. பசிக்குது. :grin:

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

உளறல்.... எல்லாத்தயுமே, மறைக்க வேண்டியதையுமே சொல்லி, சிரிச்சுக்கொண்டு  நிக்கிறது தான் நமக்கு புரிந்த ரியூப்லைட்.

பிழை எண்டால், அதுக்கேத்தமாதிரி கழிச்சுப்போட்டு, மிச்ச பொற்காசுகளை தாருங்கோ மன்னா. பசிக்குது. :grin:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றன.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றது.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்யூப்லைட் என்றால் சொல்வதை தாமதமாகப் புரிந்து கொள்ளுதல்.....!

உதாரணம் (1). நண்பர்களுக்கிடையில் ஒருவர் ஓரு பகிடி சொன்னால் அதற்கு எல்லோரும் சிரித்து முடித்தபின் அதற்குள் ஒருவர் அந்தப் பகிடியை தாமதமாகப் புரிந்து கொண்டு சிரிப்பார் டியூப்லைட்  மாதிரி.....!  😂

உதாரணம் (2). நீங்கள் எதிர்பாராமல் மலிவாய் கிடைத்ததென்று ஒரு பெரியமீனை வாங்கிக் கொண்டுபோய் மனைவியிடம் சமைக்க குடுக்கிறீர்கள்.அதை பையில் இருந்து எடுக்கும் போதே அவங்களுக்கு சந்தேகம் வருது. அவ மீனின் செதிலை தூக்கி பூவை பார்த்திட்டு (இதுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது,இரவில எருமை எப்படித் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து கொண்டு போகிறா. கொஞ்சம் தாமதமாகத்தான் (டியூப்லைட் மாதிரி) அவ ஏதோ சொன்னது உங்களுக்கு தெரியுது. இப்ப இவள் என்ன சொன்னவள், பொறு வாறன் என்று பின் பக்கம் போனால் அந்த மீனை சாப்பிட நாயும் பூனையும் சண்டை போடுது. அதுதான்......!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

 

47 minutes ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றன.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

இந்த திரியில் நாதமுனி எழுதிய பதில்களை வாசித்தால், நிழலி சொன்ன அர்த்தம்தான் “டியூப் லைட்” என்பது பட்டென புரியும் 🤣.

யாயினியும் முன்பு கேட்டிருந்தார் இதே போல் ஒரு கேள்வியை.

1. கற்பூரம் - ஒரு விசயத்தை சொன்னவுடன் “டக்” என்று விளங்கி கொள்வோர்.

2. டியூப்லைட்- விசயத்தை சொன்னவுடன், ஸ்டாட்டர் எரிந்து, ஒருக்கா மின்னி, கொஞ்சம் சுணங்கி பின் எரிய (விளங்க) தொடங்குபவர்கள்.

3. சாம்பிராணி அல்லது ஸ்டாட்டர் அடித்த டியூப்லைட்.

எவ்வளவு சொன்னாலும் விளங்காதவர்கள்.

பிகு: நான் ஊர்புதினம், தமிழக செய்தியில் போர் நிறுத்தம் கண்டியளே. பேர் சொல்லி கேட்டதால் பதில் போட்டேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

சரி ஆறப்போகுது... தேத்தண்ணீய  குடியுங்கோவன் தல.

நிழலி... சொன்னனான் தானே...

தலயை பத்தி.... ஒரு புத்தகமே எழுதப்போறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரியூப் லைட்  சுவிட்சை போட்டவுடன் எரியாது சோக்  மூலம் அதிக மின்னை ஒரு கனம் ஸ்டார்ட்டர் உதவியுடன்  செலுத்தும் போது டியூப் ல் உள்ள பாதரச ஆவியானது தூண்டல் பெற்று ஒளிர தொடங்குகின்றது மேலதிக விளக்கம் கீழே .

முக்கிய விடயம் இந்த டியூப் லைட்  கண்டு பிடித்தது  எடிசன் அல்ல .

 

1 hour ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

அவனொரு டியூப் லைட்  என்றால் உடனே விளக்கம் பெற கஷ்டப்படுபவரை பார்த்து சொல்லும் சொல் .அதே போல் மாட்டை  பற்றி கதைக்கும் போது அது கட்டப்பட்டு இருக்கும் தென்னையை பற்றி கதைப்பவர்களுக்கும் பொருந்தும் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ரியூப் லைட்  சுவிட்சை போட்டவுடன் எரியாது சோக்  மூலம் அதிக மின்னை ஒரு கனம் ஸ்டார்ட்டர் உதவியுடன்  செலுத்தும் போது டியூப் ல் உள்ள பாதரச ஆவியானது தூண்டல் பெற்று ஒளிர தொடங்குகின்றது மேலதிக விளக்கம் கீழே .

முக்கிய விடயம் இந்த டியூப் லைட்  கண்டு பிடித்தது  எடிசன் அல்ல .

 

அவனொரு டியூப் லைட்  என்றால் உடனே விளக்கம் பெற கஷ்டப்படுபவரை பார்த்து சொல்லும் சொல் .அதே போல் மாட்டை  பற்றி கதைக்கும் போது அது கட்டப்பட்டு இருக்கும் தென்னையை பற்றி கதைப்பவர்களுக்கும் பொருந்தும் .😁

அதாவது, மக்களுக்கு புரியாத மாதிரி பேசி, அவர்களை டியூப் லைட் ஆகவே வைத்திருப்பதால், மக்கள் தான் டியூப் லைட், கமல் இல்லை. எண்டு சொல்லாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாரு இதை எல்லாம் சேர்ஜறி செய்யிறது.....அவரவர் அறிவுக்கு எட்டிய தை தானே செய்ய முடியும்....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதாவது, மக்களுக்கு புரியாத மாதிரி பேசி, அவர்களை டியூப் லைட் ஆகவே வைத்திருப்பதால், மக்கள் தான் டியூப் லைட், கமல் இல்லை. எண்டு சொல்லாம் தானே.

ஓம் அப்படியும் பார்க்கலாம் 😁இங்கும் ஓரிருவர் சம்பந்தமே இல்லாமல் ஆங்கில கலப்பு போட்டு எழுதுவினம் அதை 70MM  என்பார்கள் படம்காட்டுதலின் சுருக்கம் .ஆனால் நம்ம தலை  கோசான் நேற்று zeal of the convert க்கு அருமையான விளக்கம் போட்டுள்ளார் அப்படியான விடயங்களில் ஆள் கில்லி . கமல் 70 MM தான் காட்டுவார் அதுதான் அவரின் தொழில் இனி வெளியாலும் நடிக்கணும் .😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.