Jump to content

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
54 நிமிடங்களுக்கு முன்னர்
கமல்ஹாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார்.

இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டபோது அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தங்குக்கு அந்த சின்னம் தேவையில்லை என்று அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி. மெளரியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுவதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

Link to comment
Share on other sites

புதிய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளில் தனக்குப் பிடித்தது டார்ச் லைட்தான் என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதை கமல் எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது.🔦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

புதிய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளில் தனக்குப் பிடித்தது டார்ச் லைட்தான் என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதை கமல் எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது.🔦

அவருக்கு மிகவும் தேவையான ஒன்று தான்.😃

Link to comment
Share on other sites

ரியூப் லைட் கிடைத்து இருந்தால் இன்னும் நல்லாக பொருந்தியிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

அவருக்கு மிகவும் தேவையான ஒன்று தான்.😃

யாயினி... உங்கள் உள் குத்து பகிடியை, மிகவும் ரசித்தேன். 👍🏼 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

டார்ச் லைட் உவருக்கு சரியான சின்னம்...😁

டார்ச்சை பிடிச்சு போட்டார்.... இனி 234 பேரை தேடி பிடிக்கணுமே....

இவர் கூட்டணி போவார்... சீட்டுகள் வெல்லலாம் எண்டு நிக்கிற ஆட்கள், 234 லும் நிப்பார்  எண்டோன்ன, ஓடியிருவினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன "ரொச் லைற்" சின்னமே தான் வேணுமா.? அதுக்கும் அண்னை பெற்றர் மாஸ் லைற் இருக்கு .. ☺️..😊

x1080

அதுகும் இல்லை என்றா தீ-பந்தம் இருக்கு..! பிடிப்பது என்டு முடிவு செய்த பிறகு எதுவா இருந்தா என்ன.?👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

ரியூப் லைட் கிடைத்து இருந்தால் இன்னும் நல்லாக பொருந்தியிருக்கும்

நிழலி நீங்களுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நிழலி நீங்களுமா.

உண்மையைத் தானே சொல்கிறோம்.என்னமோ கின்டர்கார்டன் பிள்ளைகள் போல..... 😆

Link to comment
Share on other sites

5 hours ago, சுவைப்பிரியன் said:

நிழலி நீங்களுமா.

ரியூப்லைட் என்றால் சுவிச் போட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து தாமதமாகத்தான் எரியும். கமல் 60 வயதுக்கு பிறகு நடிப்பில் இருந்து ரிட்டயர் ஆகும் சமயத்தில் தான் அரசியல் செய்ய முயல்கின்றார். அதற்குத்தான் ரியூப்லைட் என்று எழுதினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரியூப்லைட் என்றால் சுவிச் போட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து தாமதமாகத்தான் எரியும். கமல் 60 வயதுக்கு பிறகு நடிப்பில் இருந்து ரிட்டயர் ஆகும் சமயத்தில் தான் அரசியல் செய்ய முயல்கின்றார். அதற்குத்தான் ரியூப்லைட் என்று எழுதினான். 

இதுக்கு அது  பதில் இல்லையே... 🤔

ரியூப்லைட் எண்டால்... ஒளிவு மறைவு இன்றி... அனைத்தையுமே உளறிக் கொட்டுபவர் என்று தானே பொருள்....

கமல் உளறுவார்... ஆக்களுக்கு புரியாது.... அதாவது வெள்ளை ரியூப்லைட்க்கு ஊதா, மஞ்சள் டீசு  சுத்திர மாதிரி.

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

ரியூப்லைட் எண்டால்... ஒளிவு மறைவு இன்றி... அனைத்தையுமே உளறிக் கொட்டுபவர் என்று தானே பொருள்.

ஒருவரைப் பார்த்து, "நீ செரியான ரியூப்லைட் டா" என்று சொல்வதன் அர்த்தம் என்னவென நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஒருவரைப் பார்த்து, "நீ செரியான ரியூப்லைட் டா" என்று சொல்வதன் அர்த்தம் என்னவென நினைக்கின்றீர்கள்?

உளறல்.... எல்லாத்தயுமே, மறைக்க வேண்டியதையுமே சொல்லி, சிரிச்சுக்கொண்டு  நிக்கிறது தான் நமக்கு புரிந்த ரியூப்லைட்.

பிழை எண்டால், அதுக்கேத்தமாதிரி கழிச்சுப்போட்டு, மிச்ச பொற்காசுகளை தாருங்கோ மன்னா. பசிக்குது. :grin:

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

உளறல்.... எல்லாத்தயுமே, மறைக்க வேண்டியதையுமே சொல்லி, சிரிச்சுக்கொண்டு  நிக்கிறது தான் நமக்கு புரிந்த ரியூப்லைட்.

பிழை எண்டால், அதுக்கேத்தமாதிரி கழிச்சுப்போட்டு, மிச்ச பொற்காசுகளை தாருங்கோ மன்னா. பசிக்குது. :grin:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றன.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றது.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்யூப்லைட் என்றால் சொல்வதை தாமதமாகப் புரிந்து கொள்ளுதல்.....!

உதாரணம் (1). நண்பர்களுக்கிடையில் ஒருவர் ஓரு பகிடி சொன்னால் அதற்கு எல்லோரும் சிரித்து முடித்தபின் அதற்குள் ஒருவர் அந்தப் பகிடியை தாமதமாகப் புரிந்து கொண்டு சிரிப்பார் டியூப்லைட்  மாதிரி.....!  😂

உதாரணம் (2). நீங்கள் எதிர்பாராமல் மலிவாய் கிடைத்ததென்று ஒரு பெரியமீனை வாங்கிக் கொண்டுபோய் மனைவியிடம் சமைக்க குடுக்கிறீர்கள்.அதை பையில் இருந்து எடுக்கும் போதே அவங்களுக்கு சந்தேகம் வருது. அவ மீனின் செதிலை தூக்கி பூவை பார்த்திட்டு (இதுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது,இரவில எருமை எப்படித் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து கொண்டு போகிறா. கொஞ்சம் தாமதமாகத்தான் (டியூப்லைட் மாதிரி) அவ ஏதோ சொன்னது உங்களுக்கு தெரியுது. இப்ப இவள் என்ன சொன்னவள், பொறு வாறன் என்று பின் பக்கம் போனால் அந்த மீனை சாப்பிட நாயும் பூனையும் சண்டை போடுது. அதுதான்......!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

 

47 minutes ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

https://www.google.ca/search?sxsrf=ALeKk03nxDYInfnYKrnODAg69f00XoGYXA%3A1610815965569&ei=3RkDYPGKIp6P9PwP6eiy0AM&q=ரியூப்+லைட்+&oq=ரியூப்+லைட்+&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQghEKABMgUIIRCgAVDxSlibUWDlXGgAcAB4AIABvAGIAdoGkgEDNC4zmAEAoAEBwAEB&sclient=mobile-gws-wiz-serp#ip=1

நான் நினைத்த அர்த்ததில் ரியூப் லைட்  இனை மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர் என சில பதிவுகள் சொல்கின்றன.

லொக்டவுனில் இருந்த காசே கரையுது, பொற்காசுகளுக்கு எங்கே போவேன்... வேண்டும் என்றால் முத்தஹாசன் ஸ்ரைலில் ஒரு உம்மா தாறன்.

இந்த திரியில் நாதமுனி எழுதிய பதில்களை வாசித்தால், நிழலி சொன்ன அர்த்தம்தான் “டியூப் லைட்” என்பது பட்டென புரியும் 🤣.

யாயினியும் முன்பு கேட்டிருந்தார் இதே போல் ஒரு கேள்வியை.

1. கற்பூரம் - ஒரு விசயத்தை சொன்னவுடன் “டக்” என்று விளங்கி கொள்வோர்.

2. டியூப்லைட்- விசயத்தை சொன்னவுடன், ஸ்டாட்டர் எரிந்து, ஒருக்கா மின்னி, கொஞ்சம் சுணங்கி பின் எரிய (விளங்க) தொடங்குபவர்கள்.

3. சாம்பிராணி அல்லது ஸ்டாட்டர் அடித்த டியூப்லைட்.

எவ்வளவு சொன்னாலும் விளங்காதவர்கள்.

பிகு: நான் ஊர்புதினம், தமிழக செய்தியில் போர் நிறுத்தம் கண்டியளே. பேர் சொல்லி கேட்டதால் பதில் போட்டேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் பொறுத்தம் எண்டால், எங்கண்ட கோசன்...உஙகின  பிசியா நிக்கிறார்... உந்த பக்கம் வராமல் போகார் ... விலாவாரியா புட்டு , புட்டு வைப்பார். எதுக்கும் தேத்தண்ணியை ஆத்திக்கொண்டு வாறன் ... கலைச்சு விழுந்து தான் ...வரும் மனிசர் ... 😄

சரி ஆறப்போகுது... தேத்தண்ணீய  குடியுங்கோவன் தல.

நிழலி... சொன்னனான் தானே...

தலயை பத்தி.... ஒரு புத்தகமே எழுதப்போறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரியூப் லைட்  சுவிட்சை போட்டவுடன் எரியாது சோக்  மூலம் அதிக மின்னை ஒரு கனம் ஸ்டார்ட்டர் உதவியுடன்  செலுத்தும் போது டியூப் ல் உள்ள பாதரச ஆவியானது தூண்டல் பெற்று ஒளிர தொடங்குகின்றது மேலதிக விளக்கம் கீழே .

முக்கிய விடயம் இந்த டியூப் லைட்  கண்டு பிடித்தது  எடிசன் அல்ல .

 

1 hour ago, நிழலி said:

எதுக்கும் நான் தான் பிழையாக அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டேனோ என ஒரு சந்தேகம் வந்து கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன். 

அவனொரு டியூப் லைட்  என்றால் உடனே விளக்கம் பெற கஷ்டப்படுபவரை பார்த்து சொல்லும் சொல் .அதே போல் மாட்டை  பற்றி கதைக்கும் போது அது கட்டப்பட்டு இருக்கும் தென்னையை பற்றி கதைப்பவர்களுக்கும் பொருந்தும் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ரியூப் லைட்  சுவிட்சை போட்டவுடன் எரியாது சோக்  மூலம் அதிக மின்னை ஒரு கனம் ஸ்டார்ட்டர் உதவியுடன்  செலுத்தும் போது டியூப் ல் உள்ள பாதரச ஆவியானது தூண்டல் பெற்று ஒளிர தொடங்குகின்றது மேலதிக விளக்கம் கீழே .

முக்கிய விடயம் இந்த டியூப் லைட்  கண்டு பிடித்தது  எடிசன் அல்ல .

 

அவனொரு டியூப் லைட்  என்றால் உடனே விளக்கம் பெற கஷ்டப்படுபவரை பார்த்து சொல்லும் சொல் .அதே போல் மாட்டை  பற்றி கதைக்கும் போது அது கட்டப்பட்டு இருக்கும் தென்னையை பற்றி கதைப்பவர்களுக்கும் பொருந்தும் .😁

அதாவது, மக்களுக்கு புரியாத மாதிரி பேசி, அவர்களை டியூப் லைட் ஆகவே வைத்திருப்பதால், மக்கள் தான் டியூப் லைட், கமல் இல்லை. எண்டு சொல்லாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாரு இதை எல்லாம் சேர்ஜறி செய்யிறது.....அவரவர் அறிவுக்கு எட்டிய தை தானே செய்ய முடியும்....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதாவது, மக்களுக்கு புரியாத மாதிரி பேசி, அவர்களை டியூப் லைட் ஆகவே வைத்திருப்பதால், மக்கள் தான் டியூப் லைட், கமல் இல்லை. எண்டு சொல்லாம் தானே.

ஓம் அப்படியும் பார்க்கலாம் 😁இங்கும் ஓரிருவர் சம்பந்தமே இல்லாமல் ஆங்கில கலப்பு போட்டு எழுதுவினம் அதை 70MM  என்பார்கள் படம்காட்டுதலின் சுருக்கம் .ஆனால் நம்ம தலை  கோசான் நேற்று zeal of the convert க்கு அருமையான விளக்கம் போட்டுள்ளார் அப்படியான விடயங்களில் ஆள் கில்லி . கமல் 70 MM தான் காட்டுவார் அதுதான் அவரின் தொழில் இனி வெளியாலும் நடிக்கணும் .😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.