Jump to content

இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்


Recommended Posts

 

🦐இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..!🦐

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…!

இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும்.

பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. அதனால் இறாலை “கடலின் தூய்மையாளர்” என்றும் அழைக்கின்றனர். இறாலானது ஆழ்கடல் பகுதியில் தான் முட்டையிடுகின்றன.

முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில்(prawn farming business plan) நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.

மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலிலும் அதிகமாக கால்சியம்(calcium), அயோடின்(iodine) மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இறால் வளர்ப்பினை நெல் விவசாயத்துக்கு இணையாகவே பேசுவார்கள். இதிலும் விதை, அறுவடை என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்.

கடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது. ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. நல்ல தண்ணீர் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிட்டத்தக்க விஷயம்.

🦐இறால் வளர்ப்பு முறை மற்றும் குளம் தயார் செய்தல் / prawn farming business plan:

நீர்வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறிகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நீலக்கால் மற்றும் மோட்டு இறாலை தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல் மண், களிமண் கலவை 1.5:1 :1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைத்தல் வேண்டும்.

நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். பின் 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவு வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு ஆகியவற்றை குளத்தில் இட்டு குளத்தின் நீர்மட்டத்தை 30 செ.மீ அளவில் அமைக்க வேண்டும்.

100 கிலோ யூரியா(urea), 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்(super phosphate), அடியுரமாக முதலில் போட வேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் மாறியபின் நீர்மட்டத்தை 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அதை அறுவடை காலம் வரை பராமரிக்க வேண்டும்.

🦐இறால் மீன் இருப்பு வைத்தல் / இறால் வளர்ப்பு / prawn farming in tamil:

தனியார் மற்றும் அரசு இறால் மீன்(prawn farming) பொறுப்பகங்களிலிருந்து நன்னீர் இறாலை பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து 2 வாரங்களுக்கு உணவு கொடுத்த பின்னர் விட்டால் பிழைப்பு விகிதம் அதிகமாகும்.

🦐இறால் இருப்பு செய்தபின் பராமரிப்பு / இறால் வளர்ப்பது எப்படி:

இருப்பு செய்தபின் குள நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்(oxygen), கார அமிலத்தன்மை(Alkaline acidity) மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்க வேண்டும்.

வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன்(oxygen) 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால் மீன்(prawn in tamil) நன்றாக வளரும். நீரில் பிராணவாயு(oxygen) அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

🦐இறால் மீன் தீவனம் / இறால் வளர்ப்பு தொழில் / prawn farming:

ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவை தாராளமாய் கொடுக்கலாம். இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவம் போல் செய்து விற்பனைக்கு விற்று வருகின்றனர். அதை கூட நாம் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

🦐இறால் மீன் அறுவடை மற்றும் இறால் மீன் விற்பனை / இறால் வளர்ப்பு தொழில்:

5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களை பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையால் பயன்படுத்தலாம். நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு கை தடவல் மூலமாகவும் இறாலை பிடிக்கலாம்.

FB

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.