Jump to content

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார்

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார்.

இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3000 க்கும் மேற்பட்ட இடங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்படும்

தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும், சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை இன்று ஜனவரி 16 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காணொள் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், இது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும்.  இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3006 இடங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்படும். தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும். 

முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி திட்டம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கிய கோ-வின் என்ற ஒன்லைன் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும். 

இது தடுப்பூசி இருப்புகள், சேமிப்பு வெப்பநிலை மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகளின் தனிப்பட்ட கண்காணிப்பு உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை அளிக்கும். தடுப்பூசி போடப்படும் நேரத்தில்,  இந்த டிஜிட்டல் தளம், திட்ட மேலாளர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவும்.

கொவிட்-19 தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க பிரத்தியேக 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போதிய அளவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை அனைத்து மாவட்டங்களுக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அனுப்பியுள்ளன. மக்கள் பங்களிப்பு கொள்கைகள் மீதான இத்திட்டத்தை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/98559

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

 

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் தொடங்கின.

 


இந்த பணிக்காக அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது.
 

நாடு முழுவதும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


பிறகு அவர் டெல்லி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் உரையாடினார். அதன் பின்னர் மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக உரையாற்றினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இது கருதப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்திய பிறகு பயணாளிகளை 30 நிமிடங்கள் அமர வைத்து கண்காணிக்கும் அறை, அவசர கால மருத்துவ சிகிச்சை அறை போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடும் பணி எந்தவித குழப்பமும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதை சிரமமின்றி மேற்கொள்வதற்காக ஏற்கனவே 2 தடவை நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் சுமார் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. எனவே இன்று தடுப்பூசி போடும் பணிகள் மிக எளிதாக நடைபெற்றன.

நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி போடப்படும். இன்று 3006 மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் முதல் நாளான இன்று நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி பெறுகிறார்கள்.

ஒவ்வொரு மையத்துக்கும் தடுப்பூசிகள் நேற்றே கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த மையங்களுக்கு வர வேண்டிய முன்கள பணியாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி முன்கள பணியாளர்கள் மையங்களுக்கு வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கோ-வின் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்துவதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை முன்கள பணியாளர்களுக்கு மிக எளிதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.

மையங்களுக்கு இன்று வந்த முன்கள பணியாளர்கள் அனைவரும் அந்த கோ-வின் செயலி மூலம் உறுதிப்படுத்தப்பட்டனர். அதோடு வாக்காளர் பட்டியல் துணை கொண்டும் அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அதன்பிறகே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 166 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்களை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடப்படும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 20 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளது. 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கோவேக்சின் தடுப்பூசியை 6 மையங்களில் பயன்படுத்தினார்கள்.

தமிழகத்தில் 4.39 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்து கோ-வின் செயலியில் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்.

அடுத்தடுத்து தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையையும், தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளனர். 2 மாதத்துக்குள் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 2-வது தவணையாக 28 நாட்கள் கழித்து மீண்டும் தடுப்பூசி போடப்படும். இதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.

மார்ச் மாதத்துக்கு பிறகு தனியார் நிறுவனங்களுக்கும் தடுப்பூசிகளை வினியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/16114849/2266519/Tamil-News-COVID-19-vaccination-work-started-in-3006.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியா என் சிப்சு..! ☺️..😊

137526816_2627608230863754_3579740871104

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.