Jump to content

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உண்மை தான். போராட்டம் உங்கள் ஒரு சில கோட்சூட்டுடன் வெளிநாடு வந்தோரை மட்டுமே பாதித்தது. என் போன்று அனைத்தையும் இழந்து கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாற்றில் வரவிடமாட்டீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் கட்டிய சறத்துடன் ஓடி வந்தவர்களை வரலாறு எழுதும்.  ஏனெனில் அவர்களை எழுதாமல் வரலாறு பூர்த்தி ஆகாது. 

போலியான வரலாற்று போராட்டத்தை  நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேசம்  கிளிநொச்சி வரை சென்றது. சிங்கள இனவாதத்திற்கு விட்டுகொடுப்புகள் இல்லை என்றதும் அழிக்க நினைத்தனர்.மௌனித்து வெற்றி கண்டனர். அதற்கும் சர்வதேசம் உதவியது. அதன் பலனை இந்தியா இன்று அறுவடை செய்கின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம் போன்று தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உருவாகும்!

(சில திருத்தங்களுடன்), உங்கள் அடிப்படைக் கருத்தை வரவேற்கிறேன்.

காய்தல் உவர்தல் இன்றி உண்மையான போராட்ட வரலாறு அப்படியே எழுதப்படல் வேண்டும். 

இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமென நான் நம்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

நான் போரால் பாதிக்கப்படவில்லை என்பதை எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?? முன் பின் ஓடி வந்ததை வைத்து எவ்வாறு நக்கல் நையாண்டி செய்வீர்கள்?? 

அடிக்கடி இவ்வாறான வார்த்தைகளை பாவித்து இங்குள்ள உறவுகளை கோபப்படுத்துவதை பலரும் பல முறை குறிப்பிட்டுள்ளார்கள்.

நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று நானே நம்பவில்லை! பிறகெப்படி நான் எழுதியதில் அந்த அர்த்தம் உங்களுக்கு விளங்கியது? உங்களுக்கே வெளிச்சம்!

உங்கள் முதல் கருத்து: "தமிழ் மக்கள் தான் புலிகளையே வழி நடத்தினர்!" 

இந்த வசனத்தில் உள்ள நகைச்சுவை உங்களுக்கு உறைக்கவேயில்லையா? ஐயா , எந்தக் காலத்தில் எந்த ஆண்டில் புலிகள் தமிழ் மக்களிடம் இது சரியா , விருப்பமா என்று கருத்துக் கேட்டு தங்கள் செயல்களைத் தொடர்ந்தனர்? 

இது போன்ற கருத்து யாரிடமிருந்து வரும்? ஒன்று உங்களுக்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்தும் வெளிப்படையாக பேச விருப்பமில்லாமல் இருக்க வேண்டும்!

இதில் எது உங்கள் பிரச்சினை என்று எனக்கு அறிய ஆர்வமில்லை!

ஆனால், உங்கள் மேல் கருத்தும், போராட்டம் குறித்த வேறு பல கருத்துகளும் ஊரில் இருந்த எனக்கு புதுமையாகத் தெரிவதால் , நான் சுட்டிக் காட்டினேன்!  இதன் அர்த்தம் நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய இயலும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று நானே நம்பவில்லை! பிறகெப்படி நான் எழுதியதில் அந்த அர்த்தம் உங்களுக்கு விளங்கியது? உங்களுக்கே வெளிச்சம்!

உங்கள் முதல் கருத்து: "தமிழ் மக்கள் தான் புலிகளையே வழி நடத்தினர்!" 

இந்த வசனத்தில் உள்ள நகைச்சுவை உங்களுக்கு உறைக்கவேயில்லையா? ஐயா , எந்தக் காலத்தில் எந்த ஆண்டில் புலிகள் தமிழ் மக்களிடம் இது சரியா , விருப்பமா என்று கருத்துக் கேட்டு தங்கள் செயல்களைத் தொடர்ந்தனர்? 

இது போன்ற கருத்து யாரிடமிருந்து வரும்? ஒன்று உங்களுக்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்தும் வெளிப்படையாக பேச விருப்பமில்லாமல் இருக்க வேண்டும்!

இதில் எது உங்கள் பிரச்சினை என்று எனக்கு அறிய ஆர்வமில்லை!

ஆனால், உங்கள் மேல் கருத்தும், போராட்டம் குறித்த வேறு பல கருத்துகளும் ஊரில் இருந்த எனக்கு புதுமையாகத் தெரிவதால் , நான் சுட்டிக் காட்டினேன்!  இதன் அர்த்தம் நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய இயலும்?

 

கதைக்க வேண்டும் எழுத வேண்டும் என்பதற்காக கிறுக்கல்கள் நேரத்தை வீணடிக்கும்.

புலிகள் யார்? எங்கிருந்து வந்தார்கள்??

புலிகள் ஆயிரம் இரண்டாயிரமாய் வானத்தில் இருந்து குதித்து தமிழ் மக்களை ஆட்டிப் படைத்தது போலிருக்கு உங்கள் கருத்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

(சில திருத்தங்களுடன்), உங்கள் அடிப்படைக் கருத்தை வரவேற்கிறேன்.

காய்தல் உவர்தல் இன்றி உண்மையான போராட்ட வரலாறு அப்படியே எழுதப்படல் வேண்டும். 

இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமென நான் நம்பவில்லை. 

உங்களிடம் ஒரு கேள்வி

தமிழ் மக்களின் அரசியல் ஆணையை புலிகள் ஏற்றுக் கொண்டு அதற்காக போராடினார்களா? 

தமது ஆணையை தமிழ் மக்கள் மீது திணித்தார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

கதைக்க வேண்டும் எழுத வேண்டும் என்பதற்காக கிறுக்கல்கள் நேரத்தை வீணடிக்கும்.

புலிகள் யார்? எங்கிருந்து வந்தார்கள்??

புலிகள் ஆயிரம் இரண்டாயிரமாய் வானத்தில் இருந்து குதித்து தமிழ் மக்களை ஆட்டிப் படைத்தது போலிருக்கு உங்கள் கருத்து?

விசுகர், சொல்கிறேன் என்று கோவிக்காதீர்கள்: 

தமிழ் மக்களிடமிருந்து புலிகள் அமைப்பு உருவானது என்பதற்கும் , புலிகள் தமிழ் மக்களால் வழி நடத்தப் பட்டார்கள் என்பதற்கும் இடையேயான வேறுபாடு தெரியாமலா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? 

இதே பாணியில், தமிழ் மக்களிடமிருந்து உருவான ஈ.பி.டி.பி, புளொட் இவையும் "தமிழ் மக்களால் வழி நடத்தப் படுபவை" என்று சொன்னால் இங்கே வரவேற்பீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி

தமிழ் மக்களின் அரசியல் ஆணையை புலிகள் ஏற்றுக் கொண்டு அதற்காக போராடினார்களா? 

தமது ஆணையை தமிழ் மக்கள் மீது திணித்தார்களா??

தமிழீழம் என்கின்ற தனி நாட்டிற்கான ஆணையை அரசியற் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது வாக்களிப்பினூடாக வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியே ஆயுதப் போராட்டம். 

இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை. 

ஆனால் நீங்கள் கூறுவதும் Justin கூறுவதும் ஒன்றல்ல.

Justin ஆயுதப் போராட்ட காலத்தைக் குறிப்பிடுகின்றார்.

நீங்கள் தனிநாட்டிற்கான ஆணை வழங்கப்பட்ட ஆரம்பத்தைக் குறிப்பிடுகிறீர்கள்(என்பது என் புரிதல்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள
தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள
தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.

எனது இளவயதில், பஸ்போர்ட் விண்ணப்பப்படிவத்தை எடுத்து தரும்படி கேட்க எனது நெருங்கிய உறவினரும் தமிழர் விடுதலை கூட்டணி முக்கிஸ்தருமான ஒருவரின் வீடொன்றுக்கு போனேன். அந்த வீடு பெரும்பாலும் பாளடைந்த வீடு போல இருக்கும். இவர் தவிர யாரும் அங்கிருப்பதில்லை. இவர் கூட அவ்வப்போதுதான்  வந்து வந்து போவார்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்ளேயிருந்து வந்து தயக்கமாக எட்டிப்பார்த்தான். இவர் “என்ன?” என்று கேட்டார். “அந்த திருகோணமலை பொடியன் அழுறான். வீட்ட போகப்போறானாம்.” என்றான் அந்த சிறுவன். இவர் உள்ளே போய் அவனுடன் பேசுவது  கேட்டது. “உன்ன நான் உமா மகேஸ்வரனிட கையில குடுப்பன் எண்டு சொன்னனான் தானே? இரெண்டு நாளில போகப்போறம். இப்ப ஏன் அழுறாய்?”

இது மிகப்பெரிய பொய் என்று எனக்கு தெரியும். இவருக்கும் உமா மகேஸ்வரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவரை பின்னர் கொழும்பில் வைத்து புலிகள் சுட்டார்கள். தப்பிவிட்டார். பிற்காலத்தில் ரெலோ உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் புடைசூழ பயணம் செய்தார்.

நீண்டகாலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் அமிர்தலிங்கம் சொல்வதை தலைகீழாக நின்று செய்தார். அவர் சிறுவர்களை திரட்டி அனுப்பியது அமிர்தலிங்கத்தின் மகன் தலைமையில் றோ உருவாக்கிய ஆயுதக்குழுவுக்கு என்றே நினைக்கிறேன். 

இலங்கைத்தமிழரின் ஆயுதமயப்படுத்தலுக்கு முழுமையான காரணம் றோ. முற்றிலும் இந்திய நலன்களுக்காகவே இந்த ஆயுதமயப்படுத்தல் நடந்தது. ரெலோவை அழித்தபின் சந்தி சந்தியாக கூட்டம் வைத்து விடுதலைப்புலிகள் தந்த விளக்கம் இது. இதை புரிந்து கொண்டு இந்திய நலன்களுக்காக அழிவதை தவிர்க்கப் பார்த்தவர்கள் விடுதலைப்புலிகள். அதனாலேயே இந்தியாவால் அழிக்கப்பட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

எனது இளவயதில், பஸ்போர்ட் விண்ணப்பப்படிவத்தை எடுத்து தரும்படி கேட்க எனது நெருங்கிய உறவினரும் தமிழர் விடுதலை கூட்டணி முக்கிஸ்தருமான ஒருவரின் வீடொன்றுக்கு போனேன். அந்த வீடு பெரும்பாலும் பாளடைந்த வீடு போல இருக்கும். இவர் தவிர யாரும் அங்கிருப்பதில்லை. இவர் கூட அவ்வப்போதுதான்  வந்து வந்து போவார்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்ளேயிருந்து வந்து தயக்கமாக எட்டிப்பார்த்தான். இவர் “என்ன?” என்று கேட்டார். “அந்த திருகோணமலை பொடியன் அழுறான். வீட்ட போகப்போறானாம்.” என்றான் அந்த சிறுவன். இவர் உள்ளே போய் அவனுடன் பேசுவது  கேட்டது. “உன்ன நான் உமா மகேஸ்வரனிட கையில குடுப்பன் எண்டு சொன்னனான் தானே? இரெண்டு நாளில போகப்போறம். இப்ப ஏன் அழுறாய்?”

இது மிகப்பெரிய பொய் என்று எனக்கு தெரியும். இவருக்கும் உமா மகேஸ்வரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவரை பின்னர் கொழும்பில் வைத்து புலிகள் சுட்டார்கள். தப்பிவிட்டார். பிற்காலத்தில் ரெலோ உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் புடைசூழ பயணம் செய்தார்.

நீண்டகாலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் அமிர்தலிங்கம் சொல்வதை தலைகீழாக நின்று செய்தார். அவர் சிறுவர்களை திரட்டி அனுப்பியது அமிர்தலிங்கத்தின் மகன் தலைமையில் றோ உருவாக்கிய ஆயுதக்குழுவுக்கு என்றே நினைக்கிறேன். 

இலங்கைத்தமிழரின் ஆயுதமயப்படுத்தலுக்கு முழுமையான காரணம் றோ. முற்றிலும் இந்திய நலன்களுக்காகவே இந்த ஆயுதமயப்படுத்தல் நடந்தது. ரெலோவை அழித்தபின் சந்தி சந்தியாக கூட்டம் வைத்து விடுதலைப்புலிகள் தந்த விளக்கம் இது. இதை புரிந்து கொண்டு இந்திய நலன்களுக்காக அழிவதை தவிர்க்கப் பார்த்தவர்கள் விடுதலைப்புலிகள். அதனாலேயே இந்தியாவால் அழிக்கப்பட்டார்கள்.

 

உள்ளுக்கு இருந்து அழுத்த பொடிக்கு அதை சொன்னவர், வெளியிலை போய் நிண்ட உங்களுக்கு என்ன சொன்னவர்?

புலியிலை, டெலோவிலை சேர்க்கிறனெண்டு சொன்னவரோ?   :grin:😜

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

உள்ளுக்கு இருந்து அழுத்த பொடிக்கு அதை சொன்னவர், வெளியிலை போய் நிண்ட உங்களுக்கு என்ன சொன்னவர்?

புலியிலை, டெலோவிலை சேர்க்கிறனெண்டு சொன்னவரோ?   :grin:😜

நீங்கள் அவருக்கு ஆதரவானவராக தெரிகிறது. றோ பற்றி எழுதினால் பொதுவாக அதை கேலி செய்து நீங்கள் எழுதுவதை அவதானித்திருக்கிறேன். எமது மக்களின் அழிவில் றோவின் பங்களிப்புக்கு ஈழத்தமிழர் பலர் வேலை செய்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நீங்கள் அவருக்கு ஆதரவானவராக தெரிகிறது. றோ பற்றி எழுதினால் பொதுவாக அதை கேலி செய்து நீங்கள் எழுதுவதை அவதானித்திருக்கிறேன். எமது மக்களின் அழிவில் றோவின் பங்களிப்புக்கு ஈழத்தமிழர் பலர் வேலை செய்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்.

யூட்டர், சும்மா சிரிப்பு காட்டாதீங்கோப்பூ.

நீங்கள் சொன்ன பகிடிக்கதைக்கு, நானும் ஒரு மறுத்தான் பகிடிதானப்பு. இதுக்கு போய், ரா.... கீ எண்டு கொண்டு.... 

சொல்லுறது தான், சொல்லுறியள், ஒரு CIA ஆள் எண்டு சொன்னியல்  எண்டால், உங்க, யாழ் தளத்தில் ஒரு கெத்தா திரியலாம் எல்லோ... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி

தமிழ் மக்களின் அரசியல் ஆணையை புலிகள் ஏற்றுக் கொண்டு அதற்காக போராடினார்களா? 

தமது ஆணையை தமிழ் மக்கள் மீது திணித்தார்களா??

அண்ணை,

இப்ப பலருக்கு 2009 இற்கு முன்னர் தாங்கள் எப்படி, எதற்காக புலிகளை ஆதரித்தார்கள் என்பது மறந்து போச்சுது. 2009 இல புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊரிலிருந்து தங்களுக்குச் செய்தி கிடைத்ததாம், அதனால தான் தாங்கள் புலிகளை விமர்சிக்கிறம் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படியானால் 2009 வரை புலிகளை அவர்கள் ஆதரித்தபோது புலிகள் செய்தவை என்று பேசப்பட்ட மனிதவுரிமை மீறல்களை இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அதுபற்றி எதுவுமே தமக்குத் தெரியாது என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். 2009 வரை புலிகளை ஆதரிப்பதற்கு இவர்களுக்கு இருந்த அதே காரணங்கள்தாம் இன்றுவரை புலிகளை ஆதரித்து நிற்பவர்களுக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை.  புலிகளின் மனிதவுரிமை மீறல்களுக்காகவே அவர்களை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று இன்று பேசுபவர்கள் 2009 இற்கு முன்னமே, அதாவது புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பேசப்பட்டபோதே அதைச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுட்டு இப்போதுவந்து நடுநிலமை பேசுறம் எண்டுறதும், மனிதவுரிமை வாதிகள் எண்டுறதும் சகித்துக்கொள்ள முடியாமல் கிடக்கு.

மக்களைப் புலிகள் தான் வழிநடத்தினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மனிதவுரிமை வாதிகள் போலவும், நடுநிலைமைவாதிகள் போலவும் பேசும் எல்லோருமே அவர்களின் தலைமைத்துவத்தையே தமிழர்களின் தலைமைத்துவமாக ஏற்றுக்கொண்டே சென்றார்கள். ஏனென்றால், அன்று புலிகளை விட்டால் மக்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை. தமது அரசியலை, தமது இருப்பை, தாயகத்தை புலிகள் காப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். புலிகள் காட்டிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள்.

ஆகவே, புலிகள் மக்களை வழிநடத்தவில்லை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கவில்லையென்று இன்று கூறுவோர் செய்வது தாம் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பியவற்றையும், நம்பிச் செயற்பட்டவற்றையும் இல்லையென்றும், பொய்யென்றும் மறுப்பதுதான்.

இவர்களை எம்மால் மாற்றவியலாது. கடந்து செல்லுங்கள். உங்களுக்குத் தெரியும் நீங்கள் செய்வது. அது உங்களுக்குச் சரியாகத் தென்படும் பட்சத்தில் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

இப்ப பலருக்கு 2009 இற்கு முன்னர் தாங்கள் எப்படி, எதற்காக புலிகளை ஆதரித்தார்கள் என்பது மறந்து போச்சுது. 2009 இல புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊரிலிருந்து தங்களுக்குச் செய்தி கிடைத்ததாம், அதனால தான் தாங்கள் புலிகளை விமர்சிக்கிறம் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படியானால் 2009 வரை புலிகளை அவர்கள் ஆதரித்தபோது புலிகள் செய்தவை என்று பேசப்பட்ட மனிதவுரிமை மீறல்களை இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அதுபற்றி எதுவுமே தமக்குத் தெரியாது என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். 2009 வரை புலிகளை ஆதரிப்பதற்கு இவர்களுக்கு இருந்த அதே காரணங்கள்தாம் இன்றுவரை புலிகளை ஆதரித்து நிற்பவர்களுக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை.  புலிகளின் மனிதவுரிமை மீறல்களுக்காகவே அவர்களை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று இன்று பேசுபவர்கள் 2009 இற்கு முன்னமே, அதாவது புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பேசப்பட்டபோதே அதைச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுட்டு இப்போதுவந்து நடுநிலமை பேசுறம் எண்டுறதும், மனிதவுரிமை வாதிகள் எண்டுறதும் சகித்துக்கொள்ள முடியாமல் கிடக்கு.

மக்களைப் புலிகள் தான் வழிநடத்தினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மனிதவுரிமை வாதிகள் போலவும், நடுநிலைமைவாதிகள் போலவும் பேசும் எல்லோருமே அவர்களின் தலைமைத்துவத்தையே தமிழர்களின் தலைமைத்துவமாக ஏற்றுக்கொண்டே சென்றார்கள். ஏனென்றால், அன்று புலிகளை விட்டால் மக்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை. தமது அரசியலை, தமது இருப்பை, தாயகத்தை புலிகள் காப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். புலிகள் காட்டிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள்.

ஆகவே, புலிகள் மக்களை வழிநடத்தவில்லை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கவில்லையென்று இன்று கூறுவோர் செய்வது தாம் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பியவற்றையும், நம்பிச் செயற்பட்டவற்றையும் இல்லையென்றும், பொய்யென்றும் மறுப்பதுதான்.

இவர்களை எம்மால் மாற்றவியலாது. கடந்து செல்லுங்கள். உங்களுக்குத் தெரியும் நீங்கள் செய்வது. அது உங்களுக்குச் சரியாகத் தென்படும் பட்சத்தில் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

அது...... பின்னாலிருந்து விமர்சிக்கப்பட்டால், விமர்சிக்கப்படுபவர்கள் முன்னால் இருக்கிறார்கள் என்பதே அர்த்தம். 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

யூட்டர், சும்மா சிரிப்பு காட்டாதீங்கோப்பூ.

நீங்கள் சொன்ன பகிடிக்கதைக்கு, நானும் ஒரு மறுத்தான் பகிடிதானப்பு. இதுக்கு போய், ரா.... கீ எண்டு கொண்டு.... 

சொல்லுறது தான், சொல்லுறியள், ஒரு CIA ஆள் எண்டு சொன்னியல்  எண்டால், உங்க, யாழ் தளத்தில் ஒரு கெத்தா திரியலாம் எல்லோ... 😜

மீண்டும் ஈழத்தமிழர் அழிவுக்கு றோ பொறுப்பு என்பதை கற்பனை போன்று காட்ட முயல்கிறீர்கள். காரணம் வெளிப்படையானது.

Link to comment
Share on other sites

10 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள
தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.

சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும், தன்னாட்சி உரிமை வேண்டும், என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பின்பு ஆவரங்காலில் நடைபெற்ற கூட்டத்தில் "300 இளைஞர்கள் இணைந்தால் போதும் தன்னாட்ச்சியை பெற்றுத் தருவோம்" என்று முழங்கினார் அமிர்தலிங்கம். கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலான இளைஞர்கள் கையெழுத்திட்டார்கள். என் கையெழுத்தும் முகவரியோடு அதில் இணைந்தது. சில மாதங்களின் பின்னர் கட்டுவனில் நடந்த ஒரு கூட்டத்தில் மேடையேறினார் அமிர்தலிங்கம். அங்கு என் நண்பர்கள் சிலருடன் சென்றிருந்தேன். விக்கி என்ற நண்பர், ஆவரங்கால் கையெழுத்து என்னானது என்று கேட்டார். நாலு குண்டர்கள் வந்தார்கள், தம்பியவை இங்கு நிற்கவேண்டாம் போங்கோ என்ற ஆணை பிறந்தது. குண்டர்களை எதிர்க்கும் வலு எங்களிடம் இல்லை, ஆணைக்குக் கிழ்ப்படிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும், தன்னாட்சி உரிமை வேண்டும், என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பின்பு ஆவரங்காலில் நடைபெற்ற கூட்டத்தில் "300 இளைஞர்கள் இணைந்தால் போதும் தன்னாட்ச்சியை பெற்றுத் தருவோம்" என்று முழங்கினார் அமிர்தலிங்கம். கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலான இளைஞர்கள் கையெழுத்திட்டார்கள். என் கையெழுத்தும் முகவரியோடு அதில் இணைந்தது. சில மாதங்களின் பின்னர் கட்டுவனில் நடந்த ஒரு கூட்டத்தில் மேடையேறினார் அமிர்தலிங்கம். அங்கு என் நண்பர்கள் சிலருடன் சென்றிருந்தேன். விக்கி என்ற நண்பர், ஆவரங்கால் கையெழுத்து என்னானது என்று கேட்டார். நாலு குண்டர்கள் வந்தார்கள், தம்பியவை இங்கு நிற்கவேண்டாம் போங்கோ என்ற ஆணை பிறந்தது. குண்டர்களை எதிர்க்கும் வலு எங்களிடம் இல்லை, ஆணைக்குக் கிழ்ப்படிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.  

 

வணக்கம் அண்ணா

போரை நடாத்திய தலைமுறையை  சார்ந்தவர்கள்  நாம்

முடிவுகளை  நாமே (மக்களே)  எடுத்தோம்

அதனை செய்யக்கூடியவர்களை  வைத்து செய்வித்தோம்

அந்த நேரம்  அது சரியாகவே இருந்தது

இருந்திருக்கிறது

என்னைப்பொறுத்தவரை இப்பொழுதும் அது சரியாகவே இருக்கிறது

ஏனெனில் அதனை  தீரமானிப்பவர்களாக

அதனை உந்தி  தள்ளுபவர்களாக சிங்கவர்களே இன்றும்  இருக்கிறார்கள்

அவர்கள்  மாறாதவரை

அவர்கள்  உணராதவரை நாம்  எடுக்கும்  எந்த தீர்மானமும் எமது கையில்  இல்லை

புத்திசாலித்தனத்துக்கு இங்கு இயலாமை

அல்லது முயலாமை அல்லது நிமிராமை என்பது  மட்டுமே அர்த்தமாகும்.

Link to comment
Share on other sites

13 minutes ago, விசுகு said:

புத்திசாலித்தனத்துக்கு இங்கு இயலாமை

அல்லது முயலாமை அல்லது நிமிராமை என்பது  மட்டுமே அர்த்தமாகும்.

எங்களில் எத்துணை திறமைகள் இருந்தாலும் நாங்கள் இந்திய வழிகாட்டலையே பின்பற்றி வளர்ந்தவர்கள்.

Quellbild anzeigen

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, colomban said:

இயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்

😏

இல்லாவிட்டால்....? 

புலித்தடை வந்திராதோ..😂

 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால், 

go corana go, go corano go என்று இந்தியன் பானையைத் தட்டி Covid-19 ஐ விரட்டியதுபோல, புலிகளும் துவக்குகளில தட்டித் தட்டி Go army go, Go army go என்று வாயாலதான் சண்டை பிடித்திருக்க வேண்டி இருந்திருக்கும்..

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான

58 minutes ago, Kapithan said:

😏

இல்லாவிட்டால்....? 

புலித்தடை வந்திராதோ..😂

 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால், 

go corana go, go corano go என்று இந்தியன் பானையைத் தட்டி Covid-19 ஐ விரட்டியதுபோல, புலிகளும் துவக்குகளில தட்டித் தட்டி Go army go, Go army go என்று வாயாலதான் சண்டை பிடித்திருக்க வேண்டி இருந்திருக்கும்..

😂

எனது வயதுக்கு

இதுவரை நான் கண்ட மாற்றுக்கருத்தாளரெல்லாம் இவ்வாறு  மட்டுமே சிந்திக்கிறார்கள்

செயல்  என்பது  என்னவென்றே தெரியாததன் அறுவடை இது  மட்டும்  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

மீண்டும் ஈழத்தமிழர் அழிவுக்கு றோ பொறுப்பு என்பதை கற்பனை போன்று காட்ட முயல்கிறீர்கள். காரணம் வெளிப்படையானது.

ஈழத்தமிழர் அழிவுக்கு CIA பொறுப்பு .  ok. happy? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=XYZ6_n7Mpb0

இந்த காட்சியில் முகவரி தேடுபவர் பதில் சொல்லும் பெண்ணின் மொழி நடையினை அவதானித்து அவரது பூர்வீகம் பற்றி அறிந்து கொள்ள முயல்வார், அதற்கு அந்தப்பெண் தான் ஒஸ்ரியா நாட்டினை சார்ந்தவள் என்று கூறுவார் பதிலுக்கு ஒஸ்ரியாவா? எனக்கேட்டுவிட்டு அவுஸ்திரேலியரின் மொழிநடையில் நகைச்சுவையாகப்பேசுவார், அவுஸ்திரேலியா வருகைதராவிட்டால் இந்த நகைசுவை முழுமையாகப்புரிந்திருக்காது,நாம் அறிந்த தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கிறோம். நம்பிக்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, பல தடவைகளில் அதற்காக உயிர்கள் கூட இழக்கப்படுகின்றன, எந்த கருத்தும் தவறான கருத்தல்ல சில வேளைகளில் அவை முழுமையடையாமல் இருக்கும் அதற்கு காரணம் குறித்த கருத்து தொடர்பான தரவுகள் முழுமையற்றதாக உள்ளதே அதற்குக்காரணம், உலகில் யாரும் முட்டாள்கள் இல்லை எமக்கு ஒருவர் முட்டாளாகத்தெரிந்தால் அது அவரது தவறல்ல, 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

https://www.youtube.com/watch?v=XYZ6_n7Mpb0

இந்த காட்சியில் முகவரி தேடுபவர் பதில் சொல்லும் பெண்ணின் மொழி நடையினை அவதானித்து அவரது பூர்வீகம் பற்றி அறிந்து கொள்ள முயல்வார், அதற்கு அந்தப்பெண் தான் ஒஸ்ரியா நாட்டினை சார்ந்தவள் என்று கூறுவார் பதிலுக்கு ஒஸ்ரியாவா? எனக்கேட்டுவிட்டு அவுஸ்திரேலியரின் மொழிநடையில் நகைச்சுவையாகப்பேசுவார், அவுஸ்திரேலியா வருகைதராவிட்டால் இந்த நகைசுவை முழுமையாகப்புரிந்திருக்காது,நாம் அறிந்த தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கிறோம். நம்பிக்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, பல தடவைகளில் அதற்காக உயிர்கள் கூட இழக்கப்படுகின்றன, எந்த கருத்தும் தவறான கருத்தல்ல சில வேளைகளில் அவை முழுமையடையாமல் இருக்கும் அதற்கு காரணம் குறித்த கருத்து தொடர்பான தரவுகள் முழுமையற்றதாக உள்ளதே அதற்குக்காரணம், உலகில் யாரும் முட்டாள்கள் இல்லை எமக்கு ஒருவர் முட்டாளாகத்தெரிந்தால் அது அவரது தவறல்ல, 

 

 

 

முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

Ignorance is bliss என்று இருப்பவர்களை "தகவல் முழுமையடையாமல் இருப்பது தான் பிரச்சினை, முட்டாள்கள் அல்ல!" என்ற வகைக்குள் அடக்க இயலாது என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.