Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

 

இங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.
எனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.
கை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

 

நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கு கொரோனா வந்து அவர்களின் கதைகளைக் கேட்டபின்னர், நான் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி போடவுள்ளேன்.  எனது இணை NHS இல் வேலை செய்வதால் போன ஞாயிறு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஊசிபோட்ட கையில் இரண்டுநாள் நோவைத் தவிர வேறு எதுவித அறிகுறிகளும் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

நாம் சிறுவயதில் போட்ட தடுப்பு ஊசிகளுக்கும் இதே பின் விளைவுகள் இருந்தது தானே?. ஊசி போட்ட இடத்தில் சிதல்கூட்டி புண் வந்திருக்கும். எனக்கு நான்கு அடையாளங்கள் இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் நல்லதொரு அனுபவபகிர்வு. பலருக்கு இது பயன் படும்.

நன்றி நெடுக்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.
எனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.
கை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.

ஆம் ஆரம்பத்தில் இங்கும் 21 நாள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடுவது பற்றி சிந்தித்து செயற்பட்டார்கள். ஆனால்.. இப்போது குறைந்தது முதலாவது தடுப்பூசியையாவது அதிகம் பேருக்கும் முதலில் அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும்.. முதலாவது தடுப்பூசி தரும் நிர்ப்பீடனம்.. 3 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்ற கணிப்பிலும்.. 3 வாரம் என்பது 3 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்..  உங்களுக்கு முன்னுரிமை உண்டு. உலகில் அதிகம் கொவிட்-19 பாதிப்புக் கண்ட நாடாகவும் அமெரிக்காவே விளங்குகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் ..... இது போன்ற அனுபவப் பதிவுகளால் பயம் கொஞ்சம் குறையலாம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

உங்களைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு நேரம் வரும்.. அதாவது Herd immunity என்பதற்கான வாய்ப்பு வரும் போது. அதாவது தொற்று மூலம் நிர்ப்பீடனம் கண்டோடும்  மற்றும் தடுப்பூசி மூலம் நிர்ப்பீடனம் கண்டோரும் சமூகத்தில் அதிகரிக்கும் போது கொவிட்-19 சமூகப் பரவல் என்பதை இயல்பாகக் கட்டுப்படுத்தும் போது.

What is herd immunity and how many people need to be vaccinated to protect  a community?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவி    NHSவேலை செய்வதால் இன்று 10.30 மணிக்கு தடுப்பூசி(PFIZER) போட்டுக்கொண்டார் இதுவரை பெரிய பின்விளைவுகள் வரவில்லை.எனது மாமியார்80 வயது கடந்த 4 நாட்களுக்குமன் போட்டுக்கொண்டார் அவருக்கு எந்தப் பின்விளைவுகளும் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

ஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.
ஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.. 

எனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎

மீனுக்குத் தூண்டில் போட்டு லட்சம் பேரை பிடித்த இளம்பெண்

தூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

10 minutes ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

https://nypost.com/tag/covid-vaccine/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

ஜேர்மனியிலும் ஊசி போட்ட பத்து முதியவர்களுக்கு கிட்ட இறந்துள்ளார்களாம்.. செய்திகளில் வாசிக்கமுடிந்தது..கனடாவில்்்Nhsகற்கு பணியாற்றுபவர்களும் ஊசி போடுவதாக தெரிய வில்லை.. கட்டாயமாக்கப் பட்டால் போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம்..குறிப்பாக home visit Psw workers and house keeping.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

ஜேர்மனியிலும் ஊசி போட்ட பத்து முதியவர்களுக்கு கிட்ட இறந்துள்ளார்களாம்.. செய்திகளில் வாசிக்கமுடிந்தது..கனடாவில்்்Nhsகற்கு பணியாற்றுபவர்களும் ஊசி போடுவதாக தெரிய வில்லை.. கட்டாயமாக்கப் பட்டால் போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம்..குறிப்பாக home visit Psw workers and house keeping.... 

தடுப்பூசி பற்றி பயங்காட்டும் செய்திகள் அதிகம் பரவும் காலம் இது. சமூகவலைத் தளங்களில் இதற்கென்றே பலர் தீயாக வேலை செய்கின்றார்கள்.😀

நோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை. 

 

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் மக்களுக்கு முதல் dose உம் 1/2 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது dose உம் போட்டாயிற்று. இங்கு  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொத்துக்கொத்தாக சாகவில்லை! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

காலம் கருதிய பதிவுக்கு நன்றி நெடுக்ஸ்.

எனது சகோதரர்கள் இருவரும், நண்பர்கள் இருவரும் போட்டு இப்போ 3 கிழமைக்கு மேல் ஆகிறது.

சொல்லி கொள்ளும்படி பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த உடல் உபாதையும் இல்லை.

யூகேயில் இருக்கும் இடத்தை பொறுத்து போடும் விகிதம் மாறுபடுகிறது போல் தெரிகிறது.

எனது தாயாரை தவிர உறவினர் 4 பேர்  எனது நேரடி-அற்ற கண்காணிப்பில் உள்ளார்கள். இவர்களில் எனது தாயாரை விட வயது குறைந்த ஒருவருக்கு போன கிழமை போட்டார்கள். தாயாருக்கு போன் பண்ணி கேட்டாலும், கூப்பிடும் வரை பொறுங்கள் என்பதே பதில்.

ஊசி போட்டு கொண்டவர் 70 வயதுக்கு மேலானவர். அதிக பருமன் உள்ளவர் ஆனால் வேறு எந்த பிரச்சனையும்மில்லை. அவருக்கும் ஒரு பக்க விளைவும் இல்லை.

பிற்சேர்க்கை:

சகோதரர்கள் 17ம் திகதி போட்டார்கள். ஒரு மாதம் ஆகி விட்டது. ஒருவருக்கு லேசான தொய்வு, அலர்ஜி சின்ன வயதில் இருந்தது. ஆனால் அவருக்கும் ஊசி போட்ட பின் பெரிய விளைவுகள் ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

காலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.

இது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.

ஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.

மேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.

எல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.

23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.

தனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎01‎-‎2021 at 17:14, nedukkalapoovan said:

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?
 

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.
ஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.

அதை  நானும் கேள்விப் பட்டேன்...பொறுத்திருந்து பார்ப்போம் 
 

1 hour ago, goshan_che said:

 

இது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.

ஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.

மேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.

எல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.

23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.

தனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.

 

 

 

நன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள்😆 ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .
என்னைப் பொறுத்த வரை எதுவும் என் கைகளில் இல்லை ...கொரோனா வந்து போடத் தான் வேண்டும் என்றால் ஒன்றும் செய்யேலாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

 

நன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள்😆 ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .

 

🤣 எவ்வளவு காலத்துக்குத்தான் ஒன்லைன் வாழ்க்கை வாழ முடியும்.🤣

யாழில் எனக்கு கட்டணம் அறவிடவும் கூடும்🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை. 

அமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

மீனுக்குத் தூண்டில் போட்டு லட்சம் பேரை பிடித்த இளம்பெண்

தூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....!  😂

இருக்கலாம். இதைப் பார்ப்பவர்கள் கண்கள் எங்கெல்லாம் மேயும் என்பதையும் சொல்லியிருக்கலாமே சுவித்தம்பி.😍🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

நன்றி நெடுக்ஸ் ...ஊசி போட்ட பின்னும் எல்லாத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பிறகெதற்கு ஊசி போடுவான்?

18 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.

மறைச்சிருப்பினம் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.