Jump to content

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! |  Athavan News

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு 466 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மூன்றாவது வேட்பாளர் நோர்பேர்ட் ரோட்ஜென் முன்னைய சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.

ஜேர்மனிய அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டின் தொடக்கத்தில் இந்த வாக்கெடுப்பு வந்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் அங்கெலா மேர்க்கெல், தனது தற்போதைய நான்காவது பதவிக்காலத்தின் முடிவில் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜேர்மனியில்-அங்கெலா-மேர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு 466 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,

நான் இவர்தான் வருவார் எண்டு எதிர்பார்த்தனான்.ஆள்  பொருளாத விசயத்திலை கெட்டிக்காரன்.

Rachsüchtiger“ Friedrich Merz: US-Zeitung startet Attacke vor CDU-Parteitag  | Politik

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் இவர்தான் வருவார் எண்டு எதிர்பார்த்தனான்.ஆள்  பொருளாத விசயத்திலை கெட்டிக்காரன்.

Rachsüchtiger“ Friedrich Merz: US-Zeitung startet Attacke vor CDU-Parteitag  | Politik

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

🤣இதை விட ஜனநாயகமாக தேர்தலே இல்லாமல் நடப்பது என நினக்க்கிறேன்🤣

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

ஓம். எல்லா வாக்கு சீட்டிலும் சம்பந்தர் என்று தான் எழுதி இருக்கும். Sarcastic Roll Eye Emoji Gif | Emoji, Eyes emoji, Animated emoticons

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

🤣இதை விட ஜனநாயகமாக தேர்தலே இல்லாமல் நடப்பது என நினக்க்கிறேன்🤣

கோஷன் அவர் எங்கள் மாநிலமுதலமைச்சர் CDU கட்சியைச் சேர்த்தவர்.எனது மாநிலம்NRW .ஆகும்😎👍👍👍👍🙏

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

இல்லை, இந்தமுறையை ,அவர்கள் விரும்புவதில்லை .காரணம் இம்முறைப்படி தேர்தல் நடத்தால் அவர்கள் தலைவர்களாக, வரமுடியாது.😜😜👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

கோஷன் அவர் எங்கள் மாநிலமுதலமைச்சர் CDU கட்சியைச் சேர்த்தவர்.எனது மாநிலம்NRW .ஆகும்😎👍👍👍👍🙏

இல்லை, இந்தமுறையை ,அவர்கள் விரும்புவதில்லை .காரணம் இம்முறைப்படி தேர்தல் நடத்தால் அவர்கள் தலைவர்களாக, வரமுடியாது.😜😜👍

சந்தோசம் கந்தையா அண்ணை. ஆள் எப்படி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

சந்தோசம் கந்தையா அண்ணை. ஆள் எப்படி? 

இப்போ இருப்பவர் மிகநன்று இவரும் பறுவயில்லை  எதிர்வரும் தேர்தலிலும் இரண்டு  அல்லது மூன்று  கட்சிகள் சேர்த்துதான் ஆட்சியமைக்கவேண்டும் 

{1}CDU+SPD... {2} CDU+GRUNE. [3] CDU+SPD+GRUNE  இந்த மூன்றில் ஒன்று வரலாம் என நினைக்கிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம்.😜😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதை விட ஜனநாயகமாக

உலககத்தின் மூத்த குடியினர் எல்லோ இதை விட ஜனநாயகமாக தான் இருப்பார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

புதிசாய் வந்தவர் இந்த கொரோனா ரைம்மிலை நல்ல பெயர் எடுத்துட்டார்.எனக்கு பிடிச்சவரை அங்கெலா மேர்க்கலுக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.