Jump to content

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்!


Recommended Posts

 

139699543_3559090887510451_6869374534080
 

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ…..

 

ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.


கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் புன்னகையைத் தொடர்ந்து ஓரக் கண்கள் பயத்துடன் கணவனையும் பார்த்துக் கொண்டதையும் சத்யா கவனிக்கத் தவறவில்லை.

 


அவன் எழுந்து வரமாட்டான் என்று சத்யாவுக்குத் தெரியும். முச்சக்கர வண்டியில் இருந்து கொண்டு தாயுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அந்தக் கணவன். கால் பழுது பட்டிருக்க வேண்டும். கவலையோடு மகனின் காலைத் தடவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. அவர்கள் கவலை அவர்களுக்கு.
நீங்கள் சத்யன் மாஸ்டர் தானே? என்னை உங்களுக்குத் தெரிகிறதா நான் மேகா. நீலமேகலா. உங்களிடம் எண்பதாம் வருடம் வன்னியில் இருந்து வந்து தமிழ் படிச்சனான் மாஸ்டர்.
பெருமாள் சன்நிதியின் பின் புறத்தில் யாரும் காணாத ஒதுக்குப் புற ஒற்றை வழியில் எவரும் வராத போது எதிர்ப்புறமாக வந்து தயக்கத்துடன் கேட்டாள் அவள். எங்கள் காதல் பக்கங்களில் முக்கியமானவற்றைக் கிழித்து விட்டு வெறும் முகவரி பற்றி மட்டும் அவள் பேச நினைக்கிறாள் என்பது சத்யாவுக்குத் தெரிகின்றது.
தெரியும்.


தெரியுமா? அப்ப ஏன் நான் பார்த்தும் பார்க்காமல் இருந்தீர்கள்?
எனக்கு உங்களைக் கண்டதும் கூப்பிட்டுக் கதைக்க வேண்டும் போல இருந்தது. கூட வந்தவை ஏதாவது நினைச்சாலும் என்ற பயத்தில் தான் தெரியாதது போல இருந்தேன். இவ்வளவு காலம் போயும் அப்படியே தான் இருக்கிறீங்கள் மேகா. பேச்சின் திசையை மாற்றினான் சத்யா.
உண்மைதான். எவ்வளவு காலம் போனாலும் எல்லாம் குத்திய முள்ளுப் போல அப்படியே தான் இன்னமும் இருக்கிறது மாஸ்டர். நான் சொல்வது மனசிலே. அவள் தலை கவிழ்ந்து சொன்னாள்.
தலைமேல் கூப்பிய கையோடு தேவாரம் பாடிக்கொண்டு வந்த ஒரு ஆச்சி தம்பி கொஞ்சம் விலகப்பா அங்காலே போவதற்கு என்றாள்.


அது தான் அவர் விலகிட்டாரே. இனி எங்கே விலகுவது? என்று அந்த ஆச்சிக்குச் சொல்லிச் சிரித்துக் கொண்டு திரும்பிப் போனாள்; மேகலா.
காதலில் தோற்பது ஒரு கவலை என்றால் அந்தக் காதலியை திரும்பவும் காண்பது அதைவிடக் கவலை என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட தாங்க முடியாத கவலையொன்று காதலிலே உண்டு. அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

 


அது தான் காதலித்தவள் கண்ணுக்கு முன்னாலே தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளைக் காண்பது. அதைப் பார்த்து ஒரு பொறாமை வருமே அது தான் காதலில் தோற்ற மனங்களைச் சுட்டுத் தகனம் செய்கிற மிகப்பெரிய துன்பம். ஆறாத ரணம். மனதிலே அன்பைக் கலைத்துவிட்டுக் காமம் புகுந்துவிடும் நேரம் அது.
சத்யா பார்த்துக் கொண்டிருக்க முழங்கால்களில் கணவனுக்கு முன்னால் மண்டியிட்டு பாயில் இருந்து கொண்டு கணவனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு அவனின் கண்களைத் தன் ஒரு கையால் பொத்திக்கொண்டு உதடுகளால் நெற்றியை ஊதினாள் மேகலா. அவளின் மறு கை மடிக்கப்பட்டு முழங்கை மட்டும் அவனின் மடியிலே ஊன்றப்பட்டு இருந்தது. தாவணிச் சேலை மட்டும் நிலத்திலே சரிந்து அவன் கால் விரல்களோடு கதைபேசிச் சிரித்தது.


இனியும் கோவில் நின்றால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துச் சத்யா புறப்படத் தயாரான போது மாஸ்டர் என்றாள் மேகலா இப்போது தான் முதலில் கண்டவள் போல. எழுந்து நின்று சிரித்தாள். சத்தியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எனக்குப் படிப்பித்த மாஸ்டர் மாமி என்று என்று அவள் அறிமுகப் படுத்தவும் எப்படி மோனே இருக்கிறாய் என்று கேட்டாள் அந்தத் தாய். அதற்குள் அந்தக் கணவனும் கைகூப்பி வணங்கி வரவேற்றுவிட்டான். இருக்கிறேனம்மா. என்ன இவர் காலிலே.
என்னத்தைச் சொல்லுறது மோனை. செல் வெட்டினது தான். உன்னைப் போலத்தான் இவனும் பள்ளிக் கூடத்திலே படிப்பிச்சவன். இப்ப தள்ளிக்கொண்டு திரியுறம். எங்கே பெண்சாதி பிள்ளையள் வரல்லையா? தனிய நிக்கிறாய் தம்பி.

 


இல்லையம்மா. நான் தனியத்தான் வந்தனான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். மனுசி வீட்டிலே சமைக்குது. பிள்ளைகளுக்கு டியூசன். அது தான்
ஓ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்று ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கணவன் மேகலாவைப் பார்த்து படிக்காத அம்மா கூட நல்லா இரு மோனை என்று சொல்லுறா. மேகா நீர் படிப்பித்த மாஸ்டருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறீர். என்ன பழக்கம் இது என்றான்.
நான் கவனிக்கவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்றாள் மேகலா. சத்யா நன்றி சொல்வதற்குள் இவள் பிள்ளையும் யாழ்ப்பாணத்திலே படிக்கும் போது யாரோ உயிர்ச் சினேகிதியாம். வருத்தம் வந்து செத்துப் போச்சாம். அதின்ரை பிறந்தநாளும் இன்றைக்குத் தான் கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி கால் ஏலாதவனையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வருசா வருசம் அந்தப் பிறந்தநாளுக்கு கோவிலுக்கும் போகாமல் இருக்க மாட்டாள். நாள் முழுவதும் சாப்பிடவும் மாட்டாள். ஊர் உலகத்திலே இல்லாத அப்படியொரு சினேகிதம் வைச்சிருக்கிறாள் என்றாள் மாமி..
சத்யா திகைத்துப் போனான். அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவனுக்குப் பிறந்த நாள். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படித்த வீட்டுக்காரரிடம் டியூசன் முடிய நேரமாகும் என்று அறிவித்து விட்டு வந்த மேகலாவுடன் அந்த மாலை வேளையில் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் பண்ணைக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தான் சத்யா.
களைத்துச் சிவந்து போய் கடலிலே கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனை அந்தக் கோவிலில் இருந்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அருகே மனதுக்குப் பிடித்த காதலியும் இருந்துவிட்டால் அங்கே சொர்க்கம் நிர்மானிக்கப்பட்டு விடுகின்றது.


வரும் போது நாவலர் சந்தியில் சினிமாச் சுவரொட்டிகளைத் தின்றுவிட்டு ஒரு மாடு போட்டிருந்த சாணியில் வழுக்கி மோட்டார்ச் சைக்கிளோடு விழுந்து முழங்கையில் கல்லுத் தேய்த்த காயத்தை அவளுக்கு இன்னும் காட்டவில்லை சத்யா. சொன்னால் கவனமில்லை என்று ஏசுவாள் அழுவாள் என்று பயம்.
பிறந்த நாள் பரிசாக ஒரு மொண்டியா மணிக்கூட்டைக் கையில் கட்டிவிட்ட போது தான் காயத்தை அவள் பார்த்துவிட்டாள். கத்தினாள். உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்கிறது என்று அழுதாள். பின்பு சொன்னாள்.

 


இது வேறு ஒன்றுமில்லை. காலையிலே பிறந்த நாளுக்கு முட்டை போட்ட கேக் வாங்கி யோசிக்காமல் இரண்டு பேரும் சாப்பிட்டோம் இல்லையா? அது தான் கடவுளுக்குப் பொறுக்கல்லை. உடனேயே காட்டிப் போட்டுது. நான் இந்தக் கோவில்லே இப்பவே சத்தியம் பண்ணுறேன். இனி உயிர் உள்ள வரைக்கும் உங்கள் பிறந்த நாள் அன்றைக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். ஏதாவது ஒரு கோவிலுக்கு போட்டு வந்து தான் தேத்தண்ணீர் கூடக் குடிப்பேன் சரியோ.


பொறுங்கோ வருகிறேன் என்று சொல்லிலிட்டு சத்யா கீழே ஓடினான். இரண்டு தட்டிலே பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அம்மா செத்துப் போன உறவுக்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று உங்களுடைய மருமகளுக்கு சொல்லுங்கோ அம்மா. கடவுள் இனிக் கோவிக்க மாட்டார். இதைச் சாப்பிடச் சொல்லுங்கோ என்றான் சத்யா.


இல்லை நான் இன்றைக்குச் சாப்பிட மாட்டேன். விரதம். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவள். என் சினேகிதிக்காக அம்மனுக்கு முன்னாலே செய்த சத்தியம் இது. சினேகிதி தான் என்னோடு இல்லாமல் போனாலும் அவள் தொடக்கி வைத்த நினைவுகள் இன்னமும் என் மனதுக்குள்ளே ஈரமாகத் இருக்குது. கோவிக்காதையுங்கோ மாஸ்டர்.


அது சொல்வழி கேளாது மோனை. தான் பிடிச்சது தான் சரியென்று நிக்கும்;. நீ அதிலே எனனுடைய பேத்திகள் இரண்டு பேரும் நிக்கினம். அவையைச் சாப்பிடச் சொல்லிக் குடு தம்பி. அதுகளுக்குப் பசிக்கும்.
சத்யா அந்தப் பிள்ளைகளிடம் தட்டுகளைக் கொடுத்துவிட்டு வந்தான். நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்று மனம் அழுதது.


சரி மாஸ்டர் நாங்கள் போயிட்டு வாறோம். மனைவி பிள்ளைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கோ. உங்களுடைய பிள்ளைகளுக்கும் என்னுடைய பிள்ளைகள் வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கூடவோ தெரியாது. கவனமாகப் படிப்பியுங்கோ. உங்களைக் கண்டது சந்தோசம் என்ன என்று சொல்லிச் சிரித்தாள் மேகலா.

 


அவள் என்ன கேட்கின்றாள் என்று சத்யாவுக்குத் தெரியும். என்னை விட்டு ஓடிப்போய் உடனேயே சந்தோசமாகக் கல்யாணம் பண்ணிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு விட்டீர்களா என்பதைத்தான் ஒருவேளை கூடவோ தெரியாது என்று அவள் ஒரு வார்த்தையை வயதோடு சேர்த்துக்கொண்டாள் என்பது சத்யாவுக்கு மட்டும் தெரியும்.
இல்லை எனது பிள்ளைகளுக்கும் இவர்களுடைய வயது தான் இருக்கும் என்ற பதிலின் மூலம் உம்மை நான் முந்திக்கொண்டு ஓடவில்லை என்று மறைமுகமாகச் சொன்னான் சத்யா. அதை விளங்கிக் கொண்டு புன்னகைத்தாள் மேகலா.


சத்யாவுக்கு வருத்தம் தான். இவ்வளவு தூரம் பேசிக் கொண்ட பிறகு கூட ஒரு சம்பிரதாயத்துக்காக என்றாலும் ஒரு நாளைக்கு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வாங்கோ மாஸ்டர் என்று இவள் கேட்காமல் போகின்றாளே சரி அதுதான் வேண்டாம் போன் நம்பரையாவது தந்து கதையுங்கோ என்று சொல்லியிருக்கலாம் எதுவுமே சொல்லாமல் போகின்றாளே என்று துடித்தான் சத்யா.
பொறுக்க முடியாமல் அம்மா உங்களை எனக்கு நல்லாகப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு மகனையும் மருமகள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று மாமிக்குத் தூண்டில் போட்டுப் பார்த்தான் சத்யா.


உங்களுக்கு மாமியை விருப்பம் என்றால் இப்ப வேண்டும் என்றாலும் கூட்டிப் போங்கோ எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஒரு கிழமை உங்கள் வீட்டிலும் மாமி இருந்து பார்க்கட்டும் என்ற தன் பதிலால் உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டு திரும்பினாள் மேகலா.


மாஸ்டர் எனக்கு காலிலே பிரச்சனை வந்த பிறகு நல்ல மனுசரை சந்தித்தது மிகவும் குறைவு. அதிகம் வெளியிலும் நான் போவதில்லை. உங்களைப் போல படித்த வர்க்கத்திலே நட்பு இருந்தால் நல்ல விசயங்களைக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் மேகாவின்ரை செல் நம்பரை வாங்கிக் கொண்டு போங்கோ. எனக்குப் போன் இல்லை. அது தேவையுமில்லே. மேகா மாஸ்டருக்கு உமது நம்பரை எழுதிக் கொடுமப்பா
நில்லுங்கோ மாஸ்டர் அருச்சனை அலுவலகத்திலே ஒரு பேனை வாங்கி எழுதிக் கொண்டு வாறேன் என்ற மேகலா சற்று நேரத்தில் எழுதி வந்து தந்துவிட்டு விடை பெற்றாள்.


கடவுளே எனது இன்றைய பிறந்த நாளுக்குத் தான் மிகப் பெரிய உறவுப் பரிசு ஒன்றைத் தந்திருக்கின்றாய். நான் தொலைத்த உறவை திரும்பவும் தேடித் தந்திருக்கின்றாய்! என்னவளோடு நான் என்றுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவளோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே செத்தும் விட வேண்டும்.
மேகா எழுதித் தந்த துண்டை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை சத்யா. அருச்சனை செய்த சந்தணம் குங்குமம் தேங்காய் இருந்த பையிலே கவனமாக வைத்துக் கொண்டு காரில் ஏறினான். அவன் மனம் முழுவதுமே மேகலா வியாபித்திருந்தாள். யாழ்ப்பாணத்துக் கல்வி உலகத்துக்கு அவன் மனம் சென்று பழைய நினைவுகளை ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கியது.


மாஸ்டர் உங்களை இரண்டு பிள்ளைகள் வந்து தேடிக் கொண்டு போகினம் என்று அறிவித்தாள் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் வரவேற்பு அறைக்குப் பொறுப்பான பெண்.
என்னையா யாரது என்று கேட்டான் சத்யா.


அடேய் அந்த இரண்டாவது ஓ. எல் வகுப்பிலே வடிவான உயரமான வெள்ளைப் பிள்ளை ஒருத்தி இருப்பாளடா. வன்னியிலே இருந்து படிக்க வந்தவள் அவளும் மற்றது அந்த வாயாடி ஸ்ரெலா அவளும் தானடா வந்து தேடிக் கொண்டு போறாளவை. ஏதாவது பிரச்சனை என்றால் ஸ்ரெலாவின்ரை ஆட்கள் சுறாவுக்கு குத்துற மண்டாவால தான் ஏத்துவான்கள் கவனமாக இரு என்று அடுத்த அறையிலிருந்த ஆசிரிய நண்பன் சொல்லிச் சிரித்தான்.


சேர் இன்று காலை வகுப்பிலே ஒரு பையனை நீங்கள் படிக்கவில்லை ஏசினீங்களே அப்போது நீங்கள் சொன்ன கதை உண்மையாக நடந்ததா? நீங்கள் படிக்க கஸ்டப்பட்டீங்களா? என்று கேட்டாள் நீலமேகலா சத்யாவிடம் தனிமையில்.
உண்மைதானம்மா. படிக்கக் காசில்லாமல் நான் பட்ட கஸ்டம் கொஞ்சமல்ல. கற்பூரக் கம்பனியிலே வேலைக்குப் போய்த்தான் நான் படிக்கக் காசு சேர்த்தேன். இவன்களுக்குப் படிக்கச் சொல்லிப் பெற்றார் காசை அள்ளி இறைச்சாலும் படிக்கிறான்கள் இல்லை. அது தான் கோபம் வந்தது.
சேர் சின்ன வயசிலே நீங்கள் பட்ட கஸ்டம் போகட்டும். நீங்கள் என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. வன்னியிலே எங்களுக்கு நிறைய வயல் இருக்குது. திருகோண மலையிலும் வவுனியாவிலும் கடை இருக்குது. நான் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.


சத்யாவின் பதிலுக்குக் காத்திராமல் தானே ஒரு முடிவைச் சொல்லி விட்டு மேகலா போய் விட்டாள்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்து உறவினர் வீட்டில் தங்கிப் படித்த நேரத்தை விட மேகலா சத்யாவுடன் இருந்த நேரம் தான் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அந்த உறவு மலந்து இருந்தது. எங்கள் வீட்டிலே யாழ்ப்பாணத்துப் பையன் என்றால் மறுக்க மாட்டினம். உங்கள் வீட்டிலே தான் வன்னி அது இது என்று ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. நான் பார்த்த அளவிலே யாழ்ப்பாணத்தாருக்கு சரியான கொழுப்பு இருக்கு என்பாள் மேகலா.


உமக்கு அப்படி ஒரு பயம் இருந்தால் இப்பவே உம்மை எங்கள் வீட்டுக்குக் கூட்டிப்போய் அவர்கள் வாயாலேயே நீ தான் எங்கள் மருமகள் என்று சொல்ல வைக்கட்டுமா
இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம். நான் உங்களை நம்புறன். நீங்கள் சொன்னால் சரிதான்.
பல காதல்கள் சாதியாலே அழிந்தன. பல காதல்கள் சாத்திரத்தால் அழிந்தன. பல காதல்கள் பணத்தாலே அழிந்தன இன்னும் பல காதல்களைப் பெற்றார் அண்ணன் தம்பிகளே அழித்து ஒழித்தனர் யாழ்ப்பாணத்தில்! ஆனால் இவை எதுவும் இல்லாமல் நன்றிக் கடனுக்குப் பிராயச்சித்தமாக தனது காதலைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும் என்று சத்யா எதிர்பார்த்து இருக்கவில்லை.


சத்யா ஏ.எல் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலே இருந்த உம்மை இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர் ஆக்கியது நாங்கள். பட்டி தொட்டியெல்லாம் உமது பெயரைச் சுவரொட்டியாக ஒட்டிப் பிரபலப்படுத்தியது நாங்கள். அதுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது?
உம்முடைய கதை வெளியே பரவினால் எவன் எங்களை நம்பிப் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவான் என்று சொல்லும் பார்ப்போம். தயவு செய்து இந்தக் காதல் கத்தரிக்காய் ஒன்றும் உமக்கு வேண்டாம்.


இந்த டியூட்டரியை நம்பித்தான் எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. நீர் ஒரு ஆளாலே அத்தனை பேரும் கஞ்சிக்கு அலைய வேணும் என்று நினைக்கிறீரா. உம்மை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம். இப்படிப் பண்ணியிருக்கிறீரே.
இப்ப நினைச்சாலும் உம்மை நீக்கிவிட்டு வேறு ஆளைப் போட முடியும். அது பிரச்சனையைத் தீர்க்காது என்ற படியால் தான் உம்முடைய காலிலே விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளும்.


உங்களுக்கு என் காதல் தான் பிரச்சனை என்றால் நான் மேகலா படிச்சு முடித்த பின்பு வன்னியிலே போய் பேசிச் செய்து கொள்கிறேன். அது வரைக்கும் நான் அவளைப் பார்க்கல்லை சரியோ
இல்லை நீர் யாரை வேண்டும் என்றாலும் கட்டும். ஆனால் இங்கே படித்த பிள்ளைகள் வேண்டாம். எவ்வளவு காலம் போனாலும் அந்த அவப் பெயர் எங்களைப் பாதிக்கத்தான் செய்யும். இந்த நிலையத்தை நாங்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய கல்லூரி ஆக்கும் கனவோடு இருக்கின்றோம். அந்தக் கனவைக் கெடுக்காதையும்.
யாழ்ப்பாணக் கல்வி உலகத்துக்கு நீர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இதை நினைத்து எல்லாவற்றையும் கையை விடும்.
சரி உங்களுக்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சத்யா நிர்வாகத்தைக் கேட்டான்.


நீலமேகலாவை நாங்கள் டியூட்டரியை விட்டு வெளியே அனுப்புறம். நீர் அவளோடை இனி ஒரு தொடர்பும் வைக்கக் கூடாது. அவள் வன்னிக்கே போகட்டும்.
மார்கழியில் பரீட்சை வரப் போகுதே இடையிலே படிப்பைக் குழப்பி அனுப்பினால் பாவம் அல்லவா
அதை அவள் முதலிலே யோசித்து நடந்திருக்க வேணும். நீரும் தான்!
சத்யா எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வகுப்புக்கு அவன் வரவுமில்லை.
அன்று சத்யா வகுப்புக்கு வந்தான். வகுப்பிலே மேகலா இல்லை. ஸ்ரெலா மட்டும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து இருந்தாள். நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.


தம்பி யாழ்ப்பாணத்தவனுக்கு அந்தப் பிள்ளையைக் கட்டித்தரக் கூடாது என்ற சுயமரியாதை தலை தூக்கக் கூடியதாக அதின்ரை அப்பனோடு பண்பு தவறிக் கதைத்துப் போட்டினம் உம்முடைய டியூட்டரி ஆட்கள். அவன் படிக்காதவன் என்றாலும் மானஸ்தன். வசதியானவன்.
அவன் என் நண்பன். அவன் கண் கலங்கியதை முதன் முதலாக நான் அன்றுதான் பார்த்தேன்.
உம்மைக் காதலித்த ஒரு தப்புக்காக அந்தப் பிள்ளை இந்த முற்றத்திலே அப்பனிட்டை வாங்கின அடிகள் கொஞ்சமல்ல. நாங்கள் மறித்திருக்காவிட்டால் செத்திருக்கும்.


உன்னை நம்பிப் பிள்ளையைப் படிக்க விட்டால் அவள் என்ன ஏது செய்கிறாள் என்று நீ பார்க்க மாட்டியா? உன்னையும் அவளுக்கு ஒரு அப்பன் என்று நினைத்துத் தானே உனது வீட்டிலே இருந்து படிக்க விட்டேன். நீயும் சேர்ந்தா இந்தக் கூத்தெல்லாம்? என்று கேட்டான் தம்பி அவன்.
அதுகள் போட்டுதுகள். சரி நீரும் இனி உம்முடைய வேலையை போய்ப் பாருமன்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட்டுத் தெருப்படலையைச் சாத்திக் கொண்டு போனார் மேகலா இருந்து படித்த வீட்டுக்காரப் பெரியவர்.


இன்றைய கம்பியூட்டர் போன் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் அந்த வீட்டின் முன்னால் நீண்ட நேரம் நின்றான் சத்யா
ஏனப்பா ஏதாவது பிரச்சனையே நான் சமைத்து வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறன். கோவிலாலே வந்து காராலே இறங்காமல் இருக்கிறியள் என்றாள் மனைவி ஜன்னலால் எட்டிப் பார்த்து.
சாப்பாட்டைப் போடும் வாறன் என்று சொல்லிவிட்டு அருச்சனைப் பையில் இருந்து மேகலா தந்த துண்டுச் சீட்டை எடுத்து விரித்தான் சத்யா.


அவன் ஆவலோடு எதிர்பார்த்த போன் நம்பர் அதிலே காணப்படவில்லை.
மரங்கள் என்றால் நிழல் கொடுக்கும் பண்பு அதற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த மரங்களே தங்களுக்கு நிழல் தேடி அலைந்தால் அவைக்கு யார் எதனால் எந்த நிழலை எத்தனை தடவைகள் கொடுத்துவிட முடியும்? இன்று இன்னொரு மரத்தினைச் சுற்றிக் கொண்டு வாழும் ஒரு கொடியின் போன் நம்பர் நிழல் கொடுக்குமா? இல்லையே! அதனாலே அதை நான் தரவில்லை.
என்ற வாக்கியத்தை மட்டும் தான் அதிலே கண்டான் சத்யா.
Rasiah Gnana

கனடா ஈழநாடு பத்திரிகையில் நேற்று (15.1.2021) வெளியான சிறுகதை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

139699543_3559090887510451_6869374534080
 

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ…..

 

ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.


கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் புன்னகையைத் தொடர்ந்து ஓரக் கண்கள் பயத்துடன் கணவனையும் பார்த்துக் கொண்டதையும் சத்யா கவனிக்கத் தவறவில்லை.

 


அவன் எழுந்து வரமாட்டான் என்று சத்யாவுக்குத் தெரியும். முச்சக்கர வண்டியில் இருந்து கொண்டு தாயுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அந்தக் கணவன். கால் பழுது பட்டிருக்க வேண்டும். கவலையோடு மகனின் காலைத் தடவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. அவர்கள் கவலை அவர்களுக்கு.
நீங்கள் சத்யன் மாஸ்டர் தானே? என்னை உங்களுக்குத் தெரிகிறதா நான் மேகா. நீலமேகலா. உங்களிடம் எண்பதாம் வருடம் வன்னியில் இருந்து வந்து தமிழ் படிச்சனான் மாஸ்டர்.
பெருமாள் சன்நிதியின் பின் புறத்தில் யாரும் காணாத ஒதுக்குப் புற ஒற்றை வழியில் எவரும் வராத போது எதிர்ப்புறமாக வந்து தயக்கத்துடன் கேட்டாள் அவள். எங்கள் காதல் பக்கங்களில் முக்கியமானவற்றைக் கிழித்து விட்டு வெறும் முகவரி பற்றி மட்டும் அவள் பேச நினைக்கிறாள் என்பது சத்யாவுக்குத் தெரிகின்றது.
தெரியும்.


தெரியுமா? அப்ப ஏன் நான் பார்த்தும் பார்க்காமல் இருந்தீர்கள்?
எனக்கு உங்களைக் கண்டதும் கூப்பிட்டுக் கதைக்க வேண்டும் போல இருந்தது. கூட வந்தவை ஏதாவது நினைச்சாலும் என்ற பயத்தில் தான் தெரியாதது போல இருந்தேன். இவ்வளவு காலம் போயும் அப்படியே தான் இருக்கிறீங்கள் மேகா. பேச்சின் திசையை மாற்றினான் சத்யா.
உண்மைதான். எவ்வளவு காலம் போனாலும் எல்லாம் குத்திய முள்ளுப் போல அப்படியே தான் இன்னமும் இருக்கிறது மாஸ்டர். நான் சொல்வது மனசிலே. அவள் தலை கவிழ்ந்து சொன்னாள்.
தலைமேல் கூப்பிய கையோடு தேவாரம் பாடிக்கொண்டு வந்த ஒரு ஆச்சி தம்பி கொஞ்சம் விலகப்பா அங்காலே போவதற்கு என்றாள்.


அது தான் அவர் விலகிட்டாரே. இனி எங்கே விலகுவது? என்று அந்த ஆச்சிக்குச் சொல்லிச் சிரித்துக் கொண்டு திரும்பிப் போனாள்; மேகலா.
காதலில் தோற்பது ஒரு கவலை என்றால் அந்தக் காதலியை திரும்பவும் காண்பது அதைவிடக் கவலை என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட தாங்க முடியாத கவலையொன்று காதலிலே உண்டு. அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

 


அது தான் காதலித்தவள் கண்ணுக்கு முன்னாலே தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளைக் காண்பது. அதைப் பார்த்து ஒரு பொறாமை வருமே அது தான் காதலில் தோற்ற மனங்களைச் சுட்டுத் தகனம் செய்கிற மிகப்பெரிய துன்பம். ஆறாத ரணம். மனதிலே அன்பைக் கலைத்துவிட்டுக் காமம் புகுந்துவிடும் நேரம் அது.
சத்யா பார்த்துக் கொண்டிருக்க முழங்கால்களில் கணவனுக்கு முன்னால் மண்டியிட்டு பாயில் இருந்து கொண்டு கணவனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு அவனின் கண்களைத் தன் ஒரு கையால் பொத்திக்கொண்டு உதடுகளால் நெற்றியை ஊதினாள் மேகலா. அவளின் மறு கை மடிக்கப்பட்டு முழங்கை மட்டும் அவனின் மடியிலே ஊன்றப்பட்டு இருந்தது. தாவணிச் சேலை மட்டும் நிலத்திலே சரிந்து அவன் கால் விரல்களோடு கதைபேசிச் சிரித்தது.


இனியும் கோவில் நின்றால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துச் சத்யா புறப்படத் தயாரான போது மாஸ்டர் என்றாள் மேகலா இப்போது தான் முதலில் கண்டவள் போல. எழுந்து நின்று சிரித்தாள். சத்தியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எனக்குப் படிப்பித்த மாஸ்டர் மாமி என்று என்று அவள் அறிமுகப் படுத்தவும் எப்படி மோனே இருக்கிறாய் என்று கேட்டாள் அந்தத் தாய். அதற்குள் அந்தக் கணவனும் கைகூப்பி வணங்கி வரவேற்றுவிட்டான். இருக்கிறேனம்மா. என்ன இவர் காலிலே.
என்னத்தைச் சொல்லுறது மோனை. செல் வெட்டினது தான். உன்னைப் போலத்தான் இவனும் பள்ளிக் கூடத்திலே படிப்பிச்சவன். இப்ப தள்ளிக்கொண்டு திரியுறம். எங்கே பெண்சாதி பிள்ளையள் வரல்லையா? தனிய நிக்கிறாய் தம்பி.

 


இல்லையம்மா. நான் தனியத்தான் வந்தனான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். மனுசி வீட்டிலே சமைக்குது. பிள்ளைகளுக்கு டியூசன். அது தான்
ஓ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்று ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கணவன் மேகலாவைப் பார்த்து படிக்காத அம்மா கூட நல்லா இரு மோனை என்று சொல்லுறா. மேகா நீர் படிப்பித்த மாஸ்டருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறீர். என்ன பழக்கம் இது என்றான்.
நான் கவனிக்கவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்றாள் மேகலா. சத்யா நன்றி சொல்வதற்குள் இவள் பிள்ளையும் யாழ்ப்பாணத்திலே படிக்கும் போது யாரோ உயிர்ச் சினேகிதியாம். வருத்தம் வந்து செத்துப் போச்சாம். அதின்ரை பிறந்தநாளும் இன்றைக்குத் தான் கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி கால் ஏலாதவனையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வருசா வருசம் அந்தப் பிறந்தநாளுக்கு கோவிலுக்கும் போகாமல் இருக்க மாட்டாள். நாள் முழுவதும் சாப்பிடவும் மாட்டாள். ஊர் உலகத்திலே இல்லாத அப்படியொரு சினேகிதம் வைச்சிருக்கிறாள் என்றாள் மாமி..
சத்யா திகைத்துப் போனான். அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவனுக்குப் பிறந்த நாள். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படித்த வீட்டுக்காரரிடம் டியூசன் முடிய நேரமாகும் என்று அறிவித்து விட்டு வந்த மேகலாவுடன் அந்த மாலை வேளையில் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் பண்ணைக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தான் சத்யா.
களைத்துச் சிவந்து போய் கடலிலே கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனை அந்தக் கோவிலில் இருந்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அருகே மனதுக்குப் பிடித்த காதலியும் இருந்துவிட்டால் அங்கே சொர்க்கம் நிர்மானிக்கப்பட்டு விடுகின்றது.


வரும் போது நாவலர் சந்தியில் சினிமாச் சுவரொட்டிகளைத் தின்றுவிட்டு ஒரு மாடு போட்டிருந்த சாணியில் வழுக்கி மோட்டார்ச் சைக்கிளோடு விழுந்து முழங்கையில் கல்லுத் தேய்த்த காயத்தை அவளுக்கு இன்னும் காட்டவில்லை சத்யா. சொன்னால் கவனமில்லை என்று ஏசுவாள் அழுவாள் என்று பயம்.
பிறந்த நாள் பரிசாக ஒரு மொண்டியா மணிக்கூட்டைக் கையில் கட்டிவிட்ட போது தான் காயத்தை அவள் பார்த்துவிட்டாள். கத்தினாள். உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்கிறது என்று அழுதாள். பின்பு சொன்னாள்.

 


இது வேறு ஒன்றுமில்லை. காலையிலே பிறந்த நாளுக்கு முட்டை போட்ட கேக் வாங்கி யோசிக்காமல் இரண்டு பேரும் சாப்பிட்டோம் இல்லையா? அது தான் கடவுளுக்குப் பொறுக்கல்லை. உடனேயே காட்டிப் போட்டுது. நான் இந்தக் கோவில்லே இப்பவே சத்தியம் பண்ணுறேன். இனி உயிர் உள்ள வரைக்கும் உங்கள் பிறந்த நாள் அன்றைக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். ஏதாவது ஒரு கோவிலுக்கு போட்டு வந்து தான் தேத்தண்ணீர் கூடக் குடிப்பேன் சரியோ.


பொறுங்கோ வருகிறேன் என்று சொல்லிலிட்டு சத்யா கீழே ஓடினான். இரண்டு தட்டிலே பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அம்மா செத்துப் போன உறவுக்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று உங்களுடைய மருமகளுக்கு சொல்லுங்கோ அம்மா. கடவுள் இனிக் கோவிக்க மாட்டார். இதைச் சாப்பிடச் சொல்லுங்கோ என்றான் சத்யா.


இல்லை நான் இன்றைக்குச் சாப்பிட மாட்டேன். விரதம். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவள். என் சினேகிதிக்காக அம்மனுக்கு முன்னாலே செய்த சத்தியம் இது. சினேகிதி தான் என்னோடு இல்லாமல் போனாலும் அவள் தொடக்கி வைத்த நினைவுகள் இன்னமும் என் மனதுக்குள்ளே ஈரமாகத் இருக்குது. கோவிக்காதையுங்கோ மாஸ்டர்.


அது சொல்வழி கேளாது மோனை. தான் பிடிச்சது தான் சரியென்று நிக்கும்;. நீ அதிலே எனனுடைய பேத்திகள் இரண்டு பேரும் நிக்கினம். அவையைச் சாப்பிடச் சொல்லிக் குடு தம்பி. அதுகளுக்குப் பசிக்கும்.
சத்யா அந்தப் பிள்ளைகளிடம் தட்டுகளைக் கொடுத்துவிட்டு வந்தான். நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்று மனம் அழுதது.


சரி மாஸ்டர் நாங்கள் போயிட்டு வாறோம். மனைவி பிள்ளைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கோ. உங்களுடைய பிள்ளைகளுக்கும் என்னுடைய பிள்ளைகள் வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கூடவோ தெரியாது. கவனமாகப் படிப்பியுங்கோ. உங்களைக் கண்டது சந்தோசம் என்ன என்று சொல்லிச் சிரித்தாள் மேகலா.

 


அவள் என்ன கேட்கின்றாள் என்று சத்யாவுக்குத் தெரியும். என்னை விட்டு ஓடிப்போய் உடனேயே சந்தோசமாகக் கல்யாணம் பண்ணிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு விட்டீர்களா என்பதைத்தான் ஒருவேளை கூடவோ தெரியாது என்று அவள் ஒரு வார்த்தையை வயதோடு சேர்த்துக்கொண்டாள் என்பது சத்யாவுக்கு மட்டும் தெரியும்.
இல்லை எனது பிள்ளைகளுக்கும் இவர்களுடைய வயது தான் இருக்கும் என்ற பதிலின் மூலம் உம்மை நான் முந்திக்கொண்டு ஓடவில்லை என்று மறைமுகமாகச் சொன்னான் சத்யா. அதை விளங்கிக் கொண்டு புன்னகைத்தாள் மேகலா.


சத்யாவுக்கு வருத்தம் தான். இவ்வளவு தூரம் பேசிக் கொண்ட பிறகு கூட ஒரு சம்பிரதாயத்துக்காக என்றாலும் ஒரு நாளைக்கு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வாங்கோ மாஸ்டர் என்று இவள் கேட்காமல் போகின்றாளே சரி அதுதான் வேண்டாம் போன் நம்பரையாவது தந்து கதையுங்கோ என்று சொல்லியிருக்கலாம் எதுவுமே சொல்லாமல் போகின்றாளே என்று துடித்தான் சத்யா.
பொறுக்க முடியாமல் அம்மா உங்களை எனக்கு நல்லாகப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு மகனையும் மருமகள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று மாமிக்குத் தூண்டில் போட்டுப் பார்த்தான் சத்யா.


உங்களுக்கு மாமியை விருப்பம் என்றால் இப்ப வேண்டும் என்றாலும் கூட்டிப் போங்கோ எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஒரு கிழமை உங்கள் வீட்டிலும் மாமி இருந்து பார்க்கட்டும் என்ற தன் பதிலால் உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டு திரும்பினாள் மேகலா.


மாஸ்டர் எனக்கு காலிலே பிரச்சனை வந்த பிறகு நல்ல மனுசரை சந்தித்தது மிகவும் குறைவு. அதிகம் வெளியிலும் நான் போவதில்லை. உங்களைப் போல படித்த வர்க்கத்திலே நட்பு இருந்தால் நல்ல விசயங்களைக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் மேகாவின்ரை செல் நம்பரை வாங்கிக் கொண்டு போங்கோ. எனக்குப் போன் இல்லை. அது தேவையுமில்லே. மேகா மாஸ்டருக்கு உமது நம்பரை எழுதிக் கொடுமப்பா
நில்லுங்கோ மாஸ்டர் அருச்சனை அலுவலகத்திலே ஒரு பேனை வாங்கி எழுதிக் கொண்டு வாறேன் என்ற மேகலா சற்று நேரத்தில் எழுதி வந்து தந்துவிட்டு விடை பெற்றாள்.


கடவுளே எனது இன்றைய பிறந்த நாளுக்குத் தான் மிகப் பெரிய உறவுப் பரிசு ஒன்றைத் தந்திருக்கின்றாய். நான் தொலைத்த உறவை திரும்பவும் தேடித் தந்திருக்கின்றாய்! என்னவளோடு நான் என்றுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவளோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே செத்தும் விட வேண்டும்.
மேகா எழுதித் தந்த துண்டை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை சத்யா. அருச்சனை செய்த சந்தணம் குங்குமம் தேங்காய் இருந்த பையிலே கவனமாக வைத்துக் கொண்டு காரில் ஏறினான். அவன் மனம் முழுவதுமே மேகலா வியாபித்திருந்தாள். யாழ்ப்பாணத்துக் கல்வி உலகத்துக்கு அவன் மனம் சென்று பழைய நினைவுகளை ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கியது.


மாஸ்டர் உங்களை இரண்டு பிள்ளைகள் வந்து தேடிக் கொண்டு போகினம் என்று அறிவித்தாள் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் வரவேற்பு அறைக்குப் பொறுப்பான பெண்.
என்னையா யாரது என்று கேட்டான் சத்யா.


அடேய் அந்த இரண்டாவது ஓ. எல் வகுப்பிலே வடிவான உயரமான வெள்ளைப் பிள்ளை ஒருத்தி இருப்பாளடா. வன்னியிலே இருந்து படிக்க வந்தவள் அவளும் மற்றது அந்த வாயாடி ஸ்ரெலா அவளும் தானடா வந்து தேடிக் கொண்டு போறாளவை. ஏதாவது பிரச்சனை என்றால் ஸ்ரெலாவின்ரை ஆட்கள் சுறாவுக்கு குத்துற மண்டாவால தான் ஏத்துவான்கள் கவனமாக இரு என்று அடுத்த அறையிலிருந்த ஆசிரிய நண்பன் சொல்லிச் சிரித்தான்.


சேர் இன்று காலை வகுப்பிலே ஒரு பையனை நீங்கள் படிக்கவில்லை ஏசினீங்களே அப்போது நீங்கள் சொன்ன கதை உண்மையாக நடந்ததா? நீங்கள் படிக்க கஸ்டப்பட்டீங்களா? என்று கேட்டாள் நீலமேகலா சத்யாவிடம் தனிமையில்.
உண்மைதானம்மா. படிக்கக் காசில்லாமல் நான் பட்ட கஸ்டம் கொஞ்சமல்ல. கற்பூரக் கம்பனியிலே வேலைக்குப் போய்த்தான் நான் படிக்கக் காசு சேர்த்தேன். இவன்களுக்குப் படிக்கச் சொல்லிப் பெற்றார் காசை அள்ளி இறைச்சாலும் படிக்கிறான்கள் இல்லை. அது தான் கோபம் வந்தது.
சேர் சின்ன வயசிலே நீங்கள் பட்ட கஸ்டம் போகட்டும். நீங்கள் என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. வன்னியிலே எங்களுக்கு நிறைய வயல் இருக்குது. திருகோண மலையிலும் வவுனியாவிலும் கடை இருக்குது. நான் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.


சத்யாவின் பதிலுக்குக் காத்திராமல் தானே ஒரு முடிவைச் சொல்லி விட்டு மேகலா போய் விட்டாள்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்து உறவினர் வீட்டில் தங்கிப் படித்த நேரத்தை விட மேகலா சத்யாவுடன் இருந்த நேரம் தான் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அந்த உறவு மலந்து இருந்தது. எங்கள் வீட்டிலே யாழ்ப்பாணத்துப் பையன் என்றால் மறுக்க மாட்டினம். உங்கள் வீட்டிலே தான் வன்னி அது இது என்று ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. நான் பார்த்த அளவிலே யாழ்ப்பாணத்தாருக்கு சரியான கொழுப்பு இருக்கு என்பாள் மேகலா.


உமக்கு அப்படி ஒரு பயம் இருந்தால் இப்பவே உம்மை எங்கள் வீட்டுக்குக் கூட்டிப்போய் அவர்கள் வாயாலேயே நீ தான் எங்கள் மருமகள் என்று சொல்ல வைக்கட்டுமா
இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம். நான் உங்களை நம்புறன். நீங்கள் சொன்னால் சரிதான்.
பல காதல்கள் சாதியாலே அழிந்தன. பல காதல்கள் சாத்திரத்தால் அழிந்தன. பல காதல்கள் பணத்தாலே அழிந்தன இன்னும் பல காதல்களைப் பெற்றார் அண்ணன் தம்பிகளே அழித்து ஒழித்தனர் யாழ்ப்பாணத்தில்! ஆனால் இவை எதுவும் இல்லாமல் நன்றிக் கடனுக்குப் பிராயச்சித்தமாக தனது காதலைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும் என்று சத்யா எதிர்பார்த்து இருக்கவில்லை.


சத்யா ஏ.எல் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலே இருந்த உம்மை இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர் ஆக்கியது நாங்கள். பட்டி தொட்டியெல்லாம் உமது பெயரைச் சுவரொட்டியாக ஒட்டிப் பிரபலப்படுத்தியது நாங்கள். அதுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது?
உம்முடைய கதை வெளியே பரவினால் எவன் எங்களை நம்பிப் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவான் என்று சொல்லும் பார்ப்போம். தயவு செய்து இந்தக் காதல் கத்தரிக்காய் ஒன்றும் உமக்கு வேண்டாம்.


இந்த டியூட்டரியை நம்பித்தான் எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. நீர் ஒரு ஆளாலே அத்தனை பேரும் கஞ்சிக்கு அலைய வேணும் என்று நினைக்கிறீரா. உம்மை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம். இப்படிப் பண்ணியிருக்கிறீரே.
இப்ப நினைச்சாலும் உம்மை நீக்கிவிட்டு வேறு ஆளைப் போட முடியும். அது பிரச்சனையைத் தீர்க்காது என்ற படியால் தான் உம்முடைய காலிலே விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளும்.


உங்களுக்கு என் காதல் தான் பிரச்சனை என்றால் நான் மேகலா படிச்சு முடித்த பின்பு வன்னியிலே போய் பேசிச் செய்து கொள்கிறேன். அது வரைக்கும் நான் அவளைப் பார்க்கல்லை சரியோ
இல்லை நீர் யாரை வேண்டும் என்றாலும் கட்டும். ஆனால் இங்கே படித்த பிள்ளைகள் வேண்டாம். எவ்வளவு காலம் போனாலும் அந்த அவப் பெயர் எங்களைப் பாதிக்கத்தான் செய்யும். இந்த நிலையத்தை நாங்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய கல்லூரி ஆக்கும் கனவோடு இருக்கின்றோம். அந்தக் கனவைக் கெடுக்காதையும்.
யாழ்ப்பாணக் கல்வி உலகத்துக்கு நீர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இதை நினைத்து எல்லாவற்றையும் கையை விடும்.
சரி உங்களுக்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சத்யா நிர்வாகத்தைக் கேட்டான்.


நீலமேகலாவை நாங்கள் டியூட்டரியை விட்டு வெளியே அனுப்புறம். நீர் அவளோடை இனி ஒரு தொடர்பும் வைக்கக் கூடாது. அவள் வன்னிக்கே போகட்டும்.
மார்கழியில் பரீட்சை வரப் போகுதே இடையிலே படிப்பைக் குழப்பி அனுப்பினால் பாவம் அல்லவா
அதை அவள் முதலிலே யோசித்து நடந்திருக்க வேணும். நீரும் தான்!
சத்யா எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வகுப்புக்கு அவன் வரவுமில்லை.
அன்று சத்யா வகுப்புக்கு வந்தான். வகுப்பிலே மேகலா இல்லை. ஸ்ரெலா மட்டும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து இருந்தாள். நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.


தம்பி யாழ்ப்பாணத்தவனுக்கு அந்தப் பிள்ளையைக் கட்டித்தரக் கூடாது என்ற சுயமரியாதை தலை தூக்கக் கூடியதாக அதின்ரை அப்பனோடு பண்பு தவறிக் கதைத்துப் போட்டினம் உம்முடைய டியூட்டரி ஆட்கள். அவன் படிக்காதவன் என்றாலும் மானஸ்தன். வசதியானவன்.
அவன் என் நண்பன். அவன் கண் கலங்கியதை முதன் முதலாக நான் அன்றுதான் பார்த்தேன்.
உம்மைக் காதலித்த ஒரு தப்புக்காக அந்தப் பிள்ளை இந்த முற்றத்திலே அப்பனிட்டை வாங்கின அடிகள் கொஞ்சமல்ல. நாங்கள் மறித்திருக்காவிட்டால் செத்திருக்கும்.


உன்னை நம்பிப் பிள்ளையைப் படிக்க விட்டால் அவள் என்ன ஏது செய்கிறாள் என்று நீ பார்க்க மாட்டியா? உன்னையும் அவளுக்கு ஒரு அப்பன் என்று நினைத்துத் தானே உனது வீட்டிலே இருந்து படிக்க விட்டேன். நீயும் சேர்ந்தா இந்தக் கூத்தெல்லாம்? என்று கேட்டான் தம்பி அவன்.
அதுகள் போட்டுதுகள். சரி நீரும் இனி உம்முடைய வேலையை போய்ப் பாருமன்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட்டுத் தெருப்படலையைச் சாத்திக் கொண்டு போனார் மேகலா இருந்து படித்த வீட்டுக்காரப் பெரியவர்.


இன்றைய கம்பியூட்டர் போன் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் அந்த வீட்டின் முன்னால் நீண்ட நேரம் நின்றான் சத்யா
ஏனப்பா ஏதாவது பிரச்சனையே நான் சமைத்து வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறன். கோவிலாலே வந்து காராலே இறங்காமல் இருக்கிறியள் என்றாள் மனைவி ஜன்னலால் எட்டிப் பார்த்து.
சாப்பாட்டைப் போடும் வாறன் என்று சொல்லிவிட்டு அருச்சனைப் பையில் இருந்து மேகலா தந்த துண்டுச் சீட்டை எடுத்து விரித்தான் சத்யா.


அவன் ஆவலோடு எதிர்பார்த்த போன் நம்பர் அதிலே காணப்படவில்லை.
மரங்கள் என்றால் நிழல் கொடுக்கும் பண்பு அதற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த மரங்களே தங்களுக்கு நிழல் தேடி அலைந்தால் அவைக்கு யார் எதனால் எந்த நிழலை எத்தனை தடவைகள் கொடுத்துவிட முடியும்? இன்று இன்னொரு மரத்தினைச் சுற்றிக் கொண்டு வாழும் ஒரு கொடியின் போன் நம்பர் நிழல் கொடுக்குமா? இல்லையே! அதனாலே அதை நான் தரவில்லை.
என்ற வாக்கியத்தை மட்டும் தான் அதிலே கண்டான் சத்யா.
Rasiah Gnana

கனடா ஈழநாடு பத்திரிகையில் நேற்று (15.1.2021) வெளியான சிறுகதை

 

நல்ல ஒரு கதை. வாசிக்கும் போழுது தொலைக்காட்சியில் படம் பார்ப்பது போல ஒரு உணர்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

 

139699543_3559090887510451_6869374534080
 

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ…..

 

ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.


கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் புன்னகையைத் தொடர்ந்து ஓரக் கண்கள் பயத்துடன் கணவனையும் பார்த்துக் கொண்டதையும் சத்யா கவனிக்கத் தவறவில்லை.

 


அவன் எழுந்து வரமாட்டான் என்று சத்யாவுக்குத் தெரியும். முச்சக்கர வண்டியில் இருந்து கொண்டு தாயுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அந்தக் கணவன். கால் பழுது பட்டிருக்க வேண்டும். கவலையோடு மகனின் காலைத் தடவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. அவர்கள் கவலை அவர்களுக்கு.
நீங்கள் சத்யன் மாஸ்டர் தானே? என்னை உங்களுக்குத் தெரிகிறதா நான் மேகா. நீலமேகலா. உங்களிடம் எண்பதாம் வருடம் வன்னியில் இருந்து வந்து தமிழ் படிச்சனான் மாஸ்டர்.
பெருமாள் சன்நிதியின் பின் புறத்தில் யாரும் காணாத ஒதுக்குப் புற ஒற்றை வழியில் எவரும் வராத போது எதிர்ப்புறமாக வந்து தயக்கத்துடன் கேட்டாள் அவள். எங்கள் காதல் பக்கங்களில் முக்கியமானவற்றைக் கிழித்து விட்டு வெறும் முகவரி பற்றி மட்டும் அவள் பேச நினைக்கிறாள் என்பது சத்யாவுக்குத் தெரிகின்றது.
தெரியும்.


தெரியுமா? அப்ப ஏன் நான் பார்த்தும் பார்க்காமல் இருந்தீர்கள்?
எனக்கு உங்களைக் கண்டதும் கூப்பிட்டுக் கதைக்க வேண்டும் போல இருந்தது. கூட வந்தவை ஏதாவது நினைச்சாலும் என்ற பயத்தில் தான் தெரியாதது போல இருந்தேன். இவ்வளவு காலம் போயும் அப்படியே தான் இருக்கிறீங்கள் மேகா. பேச்சின் திசையை மாற்றினான் சத்யா.
உண்மைதான். எவ்வளவு காலம் போனாலும் எல்லாம் குத்திய முள்ளுப் போல அப்படியே தான் இன்னமும் இருக்கிறது மாஸ்டர். நான் சொல்வது மனசிலே. அவள் தலை கவிழ்ந்து சொன்னாள்.
தலைமேல் கூப்பிய கையோடு தேவாரம் பாடிக்கொண்டு வந்த ஒரு ஆச்சி தம்பி கொஞ்சம் விலகப்பா அங்காலே போவதற்கு என்றாள்.


அது தான் அவர் விலகிட்டாரே. இனி எங்கே விலகுவது? என்று அந்த ஆச்சிக்குச் சொல்லிச் சிரித்துக் கொண்டு திரும்பிப் போனாள்; மேகலா.
காதலில் தோற்பது ஒரு கவலை என்றால் அந்தக் காதலியை திரும்பவும் காண்பது அதைவிடக் கவலை என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட தாங்க முடியாத கவலையொன்று காதலிலே உண்டு. அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

 


அது தான் காதலித்தவள் கண்ணுக்கு முன்னாலே தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளைக் காண்பது. அதைப் பார்த்து ஒரு பொறாமை வருமே அது தான் காதலில் தோற்ற மனங்களைச் சுட்டுத் தகனம் செய்கிற மிகப்பெரிய துன்பம். ஆறாத ரணம். மனதிலே அன்பைக் கலைத்துவிட்டுக் காமம் புகுந்துவிடும் நேரம் அது.
சத்யா பார்த்துக் கொண்டிருக்க முழங்கால்களில் கணவனுக்கு முன்னால் மண்டியிட்டு பாயில் இருந்து கொண்டு கணவனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு அவனின் கண்களைத் தன் ஒரு கையால் பொத்திக்கொண்டு உதடுகளால் நெற்றியை ஊதினாள் மேகலா. அவளின் மறு கை மடிக்கப்பட்டு முழங்கை மட்டும் அவனின் மடியிலே ஊன்றப்பட்டு இருந்தது. தாவணிச் சேலை மட்டும் நிலத்திலே சரிந்து அவன் கால் விரல்களோடு கதைபேசிச் சிரித்தது.


இனியும் கோவில் நின்றால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துச் சத்யா புறப்படத் தயாரான போது மாஸ்டர் என்றாள் மேகலா இப்போது தான் முதலில் கண்டவள் போல. எழுந்து நின்று சிரித்தாள். சத்தியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எனக்குப் படிப்பித்த மாஸ்டர் மாமி என்று என்று அவள் அறிமுகப் படுத்தவும் எப்படி மோனே இருக்கிறாய் என்று கேட்டாள் அந்தத் தாய். அதற்குள் அந்தக் கணவனும் கைகூப்பி வணங்கி வரவேற்றுவிட்டான். இருக்கிறேனம்மா. என்ன இவர் காலிலே.
என்னத்தைச் சொல்லுறது மோனை. செல் வெட்டினது தான். உன்னைப் போலத்தான் இவனும் பள்ளிக் கூடத்திலே படிப்பிச்சவன். இப்ப தள்ளிக்கொண்டு திரியுறம். எங்கே பெண்சாதி பிள்ளையள் வரல்லையா? தனிய நிக்கிறாய் தம்பி.

 


இல்லையம்மா. நான் தனியத்தான் வந்தனான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். மனுசி வீட்டிலே சமைக்குது. பிள்ளைகளுக்கு டியூசன். அது தான்
ஓ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்று ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கணவன் மேகலாவைப் பார்த்து படிக்காத அம்மா கூட நல்லா இரு மோனை என்று சொல்லுறா. மேகா நீர் படிப்பித்த மாஸ்டருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறீர். என்ன பழக்கம் இது என்றான்.
நான் கவனிக்கவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்றாள் மேகலா. சத்யா நன்றி சொல்வதற்குள் இவள் பிள்ளையும் யாழ்ப்பாணத்திலே படிக்கும் போது யாரோ உயிர்ச் சினேகிதியாம். வருத்தம் வந்து செத்துப் போச்சாம். அதின்ரை பிறந்தநாளும் இன்றைக்குத் தான் கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி கால் ஏலாதவனையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வருசா வருசம் அந்தப் பிறந்தநாளுக்கு கோவிலுக்கும் போகாமல் இருக்க மாட்டாள். நாள் முழுவதும் சாப்பிடவும் மாட்டாள். ஊர் உலகத்திலே இல்லாத அப்படியொரு சினேகிதம் வைச்சிருக்கிறாள் என்றாள் மாமி..
சத்யா திகைத்துப் போனான். அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவனுக்குப் பிறந்த நாள். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படித்த வீட்டுக்காரரிடம் டியூசன் முடிய நேரமாகும் என்று அறிவித்து விட்டு வந்த மேகலாவுடன் அந்த மாலை வேளையில் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் பண்ணைக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தான் சத்யா.
களைத்துச் சிவந்து போய் கடலிலே கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனை அந்தக் கோவிலில் இருந்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அருகே மனதுக்குப் பிடித்த காதலியும் இருந்துவிட்டால் அங்கே சொர்க்கம் நிர்மானிக்கப்பட்டு விடுகின்றது.


வரும் போது நாவலர் சந்தியில் சினிமாச் சுவரொட்டிகளைத் தின்றுவிட்டு ஒரு மாடு போட்டிருந்த சாணியில் வழுக்கி மோட்டார்ச் சைக்கிளோடு விழுந்து முழங்கையில் கல்லுத் தேய்த்த காயத்தை அவளுக்கு இன்னும் காட்டவில்லை சத்யா. சொன்னால் கவனமில்லை என்று ஏசுவாள் அழுவாள் என்று பயம்.
பிறந்த நாள் பரிசாக ஒரு மொண்டியா மணிக்கூட்டைக் கையில் கட்டிவிட்ட போது தான் காயத்தை அவள் பார்த்துவிட்டாள். கத்தினாள். உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்கிறது என்று அழுதாள். பின்பு சொன்னாள்.

 


இது வேறு ஒன்றுமில்லை. காலையிலே பிறந்த நாளுக்கு முட்டை போட்ட கேக் வாங்கி யோசிக்காமல் இரண்டு பேரும் சாப்பிட்டோம் இல்லையா? அது தான் கடவுளுக்குப் பொறுக்கல்லை. உடனேயே காட்டிப் போட்டுது. நான் இந்தக் கோவில்லே இப்பவே சத்தியம் பண்ணுறேன். இனி உயிர் உள்ள வரைக்கும் உங்கள் பிறந்த நாள் அன்றைக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். ஏதாவது ஒரு கோவிலுக்கு போட்டு வந்து தான் தேத்தண்ணீர் கூடக் குடிப்பேன் சரியோ.


பொறுங்கோ வருகிறேன் என்று சொல்லிலிட்டு சத்யா கீழே ஓடினான். இரண்டு தட்டிலே பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அம்மா செத்துப் போன உறவுக்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று உங்களுடைய மருமகளுக்கு சொல்லுங்கோ அம்மா. கடவுள் இனிக் கோவிக்க மாட்டார். இதைச் சாப்பிடச் சொல்லுங்கோ என்றான் சத்யா.


இல்லை நான் இன்றைக்குச் சாப்பிட மாட்டேன். விரதம். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவள். என் சினேகிதிக்காக அம்மனுக்கு முன்னாலே செய்த சத்தியம் இது. சினேகிதி தான் என்னோடு இல்லாமல் போனாலும் அவள் தொடக்கி வைத்த நினைவுகள் இன்னமும் என் மனதுக்குள்ளே ஈரமாகத் இருக்குது. கோவிக்காதையுங்கோ மாஸ்டர்.


அது சொல்வழி கேளாது மோனை. தான் பிடிச்சது தான் சரியென்று நிக்கும்;. நீ அதிலே எனனுடைய பேத்திகள் இரண்டு பேரும் நிக்கினம். அவையைச் சாப்பிடச் சொல்லிக் குடு தம்பி. அதுகளுக்குப் பசிக்கும்.
சத்யா அந்தப் பிள்ளைகளிடம் தட்டுகளைக் கொடுத்துவிட்டு வந்தான். நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்று மனம் அழுதது.


சரி மாஸ்டர் நாங்கள் போயிட்டு வாறோம். மனைவி பிள்ளைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கோ. உங்களுடைய பிள்ளைகளுக்கும் என்னுடைய பிள்ளைகள் வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கூடவோ தெரியாது. கவனமாகப் படிப்பியுங்கோ. உங்களைக் கண்டது சந்தோசம் என்ன என்று சொல்லிச் சிரித்தாள் மேகலா.

 


அவள் என்ன கேட்கின்றாள் என்று சத்யாவுக்குத் தெரியும். என்னை விட்டு ஓடிப்போய் உடனேயே சந்தோசமாகக் கல்யாணம் பண்ணிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு விட்டீர்களா என்பதைத்தான் ஒருவேளை கூடவோ தெரியாது என்று அவள் ஒரு வார்த்தையை வயதோடு சேர்த்துக்கொண்டாள் என்பது சத்யாவுக்கு மட்டும் தெரியும்.
இல்லை எனது பிள்ளைகளுக்கும் இவர்களுடைய வயது தான் இருக்கும் என்ற பதிலின் மூலம் உம்மை நான் முந்திக்கொண்டு ஓடவில்லை என்று மறைமுகமாகச் சொன்னான் சத்யா. அதை விளங்கிக் கொண்டு புன்னகைத்தாள் மேகலா.


சத்யாவுக்கு வருத்தம் தான். இவ்வளவு தூரம் பேசிக் கொண்ட பிறகு கூட ஒரு சம்பிரதாயத்துக்காக என்றாலும் ஒரு நாளைக்கு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வாங்கோ மாஸ்டர் என்று இவள் கேட்காமல் போகின்றாளே சரி அதுதான் வேண்டாம் போன் நம்பரையாவது தந்து கதையுங்கோ என்று சொல்லியிருக்கலாம் எதுவுமே சொல்லாமல் போகின்றாளே என்று துடித்தான் சத்யா.
பொறுக்க முடியாமல் அம்மா உங்களை எனக்கு நல்லாகப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு மகனையும் மருமகள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று மாமிக்குத் தூண்டில் போட்டுப் பார்த்தான் சத்யா.


உங்களுக்கு மாமியை விருப்பம் என்றால் இப்ப வேண்டும் என்றாலும் கூட்டிப் போங்கோ எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஒரு கிழமை உங்கள் வீட்டிலும் மாமி இருந்து பார்க்கட்டும் என்ற தன் பதிலால் உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டு திரும்பினாள் மேகலா.


மாஸ்டர் எனக்கு காலிலே பிரச்சனை வந்த பிறகு நல்ல மனுசரை சந்தித்தது மிகவும் குறைவு. அதிகம் வெளியிலும் நான் போவதில்லை. உங்களைப் போல படித்த வர்க்கத்திலே நட்பு இருந்தால் நல்ல விசயங்களைக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் மேகாவின்ரை செல் நம்பரை வாங்கிக் கொண்டு போங்கோ. எனக்குப் போன் இல்லை. அது தேவையுமில்லே. மேகா மாஸ்டருக்கு உமது நம்பரை எழுதிக் கொடுமப்பா
நில்லுங்கோ மாஸ்டர் அருச்சனை அலுவலகத்திலே ஒரு பேனை வாங்கி எழுதிக் கொண்டு வாறேன் என்ற மேகலா சற்று நேரத்தில் எழுதி வந்து தந்துவிட்டு விடை பெற்றாள்.


கடவுளே எனது இன்றைய பிறந்த நாளுக்குத் தான் மிகப் பெரிய உறவுப் பரிசு ஒன்றைத் தந்திருக்கின்றாய். நான் தொலைத்த உறவை திரும்பவும் தேடித் தந்திருக்கின்றாய்! என்னவளோடு நான் என்றுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவளோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே செத்தும் விட வேண்டும்.
மேகா எழுதித் தந்த துண்டை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை சத்யா. அருச்சனை செய்த சந்தணம் குங்குமம் தேங்காய் இருந்த பையிலே கவனமாக வைத்துக் கொண்டு காரில் ஏறினான். அவன் மனம் முழுவதுமே மேகலா வியாபித்திருந்தாள். யாழ்ப்பாணத்துக் கல்வி உலகத்துக்கு அவன் மனம் சென்று பழைய நினைவுகளை ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கியது.


மாஸ்டர் உங்களை இரண்டு பிள்ளைகள் வந்து தேடிக் கொண்டு போகினம் என்று அறிவித்தாள் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் வரவேற்பு அறைக்குப் பொறுப்பான பெண்.
என்னையா யாரது என்று கேட்டான் சத்யா.


அடேய் அந்த இரண்டாவது ஓ. எல் வகுப்பிலே வடிவான உயரமான வெள்ளைப் பிள்ளை ஒருத்தி இருப்பாளடா. வன்னியிலே இருந்து படிக்க வந்தவள் அவளும் மற்றது அந்த வாயாடி ஸ்ரெலா அவளும் தானடா வந்து தேடிக் கொண்டு போறாளவை. ஏதாவது பிரச்சனை என்றால் ஸ்ரெலாவின்ரை ஆட்கள் சுறாவுக்கு குத்துற மண்டாவால தான் ஏத்துவான்கள் கவனமாக இரு என்று அடுத்த அறையிலிருந்த ஆசிரிய நண்பன் சொல்லிச் சிரித்தான்.


சேர் இன்று காலை வகுப்பிலே ஒரு பையனை நீங்கள் படிக்கவில்லை ஏசினீங்களே அப்போது நீங்கள் சொன்ன கதை உண்மையாக நடந்ததா? நீங்கள் படிக்க கஸ்டப்பட்டீங்களா? என்று கேட்டாள் நீலமேகலா சத்யாவிடம் தனிமையில்.
உண்மைதானம்மா. படிக்கக் காசில்லாமல் நான் பட்ட கஸ்டம் கொஞ்சமல்ல. கற்பூரக் கம்பனியிலே வேலைக்குப் போய்த்தான் நான் படிக்கக் காசு சேர்த்தேன். இவன்களுக்குப் படிக்கச் சொல்லிப் பெற்றார் காசை அள்ளி இறைச்சாலும் படிக்கிறான்கள் இல்லை. அது தான் கோபம் வந்தது.
சேர் சின்ன வயசிலே நீங்கள் பட்ட கஸ்டம் போகட்டும். நீங்கள் என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. வன்னியிலே எங்களுக்கு நிறைய வயல் இருக்குது. திருகோண மலையிலும் வவுனியாவிலும் கடை இருக்குது. நான் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.


சத்யாவின் பதிலுக்குக் காத்திராமல் தானே ஒரு முடிவைச் சொல்லி விட்டு மேகலா போய் விட்டாள்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்து உறவினர் வீட்டில் தங்கிப் படித்த நேரத்தை விட மேகலா சத்யாவுடன் இருந்த நேரம் தான் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அந்த உறவு மலந்து இருந்தது. எங்கள் வீட்டிலே யாழ்ப்பாணத்துப் பையன் என்றால் மறுக்க மாட்டினம். உங்கள் வீட்டிலே தான் வன்னி அது இது என்று ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. நான் பார்த்த அளவிலே யாழ்ப்பாணத்தாருக்கு சரியான கொழுப்பு இருக்கு என்பாள் மேகலா.


உமக்கு அப்படி ஒரு பயம் இருந்தால் இப்பவே உம்மை எங்கள் வீட்டுக்குக் கூட்டிப்போய் அவர்கள் வாயாலேயே நீ தான் எங்கள் மருமகள் என்று சொல்ல வைக்கட்டுமா
இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம். நான் உங்களை நம்புறன். நீங்கள் சொன்னால் சரிதான்.
பல காதல்கள் சாதியாலே அழிந்தன. பல காதல்கள் சாத்திரத்தால் அழிந்தன. பல காதல்கள் பணத்தாலே அழிந்தன இன்னும் பல காதல்களைப் பெற்றார் அண்ணன் தம்பிகளே அழித்து ஒழித்தனர் யாழ்ப்பாணத்தில்! ஆனால் இவை எதுவும் இல்லாமல் நன்றிக் கடனுக்குப் பிராயச்சித்தமாக தனது காதலைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும் என்று சத்யா எதிர்பார்த்து இருக்கவில்லை.


சத்யா ஏ.எல் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலே இருந்த உம்மை இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர் ஆக்கியது நாங்கள். பட்டி தொட்டியெல்லாம் உமது பெயரைச் சுவரொட்டியாக ஒட்டிப் பிரபலப்படுத்தியது நாங்கள். அதுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது?
உம்முடைய கதை வெளியே பரவினால் எவன் எங்களை நம்பிப் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவான் என்று சொல்லும் பார்ப்போம். தயவு செய்து இந்தக் காதல் கத்தரிக்காய் ஒன்றும் உமக்கு வேண்டாம்.


இந்த டியூட்டரியை நம்பித்தான் எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. நீர் ஒரு ஆளாலே அத்தனை பேரும் கஞ்சிக்கு அலைய வேணும் என்று நினைக்கிறீரா. உம்மை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம். இப்படிப் பண்ணியிருக்கிறீரே.
இப்ப நினைச்சாலும் உம்மை நீக்கிவிட்டு வேறு ஆளைப் போட முடியும். அது பிரச்சனையைத் தீர்க்காது என்ற படியால் தான் உம்முடைய காலிலே விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளும்.


உங்களுக்கு என் காதல் தான் பிரச்சனை என்றால் நான் மேகலா படிச்சு முடித்த பின்பு வன்னியிலே போய் பேசிச் செய்து கொள்கிறேன். அது வரைக்கும் நான் அவளைப் பார்க்கல்லை சரியோ
இல்லை நீர் யாரை வேண்டும் என்றாலும் கட்டும். ஆனால் இங்கே படித்த பிள்ளைகள் வேண்டாம். எவ்வளவு காலம் போனாலும் அந்த அவப் பெயர் எங்களைப் பாதிக்கத்தான் செய்யும். இந்த நிலையத்தை நாங்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய கல்லூரி ஆக்கும் கனவோடு இருக்கின்றோம். அந்தக் கனவைக் கெடுக்காதையும்.
யாழ்ப்பாணக் கல்வி உலகத்துக்கு நீர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இதை நினைத்து எல்லாவற்றையும் கையை விடும்.
சரி உங்களுக்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சத்யா நிர்வாகத்தைக் கேட்டான்.


நீலமேகலாவை நாங்கள் டியூட்டரியை விட்டு வெளியே அனுப்புறம். நீர் அவளோடை இனி ஒரு தொடர்பும் வைக்கக் கூடாது. அவள் வன்னிக்கே போகட்டும்.
மார்கழியில் பரீட்சை வரப் போகுதே இடையிலே படிப்பைக் குழப்பி அனுப்பினால் பாவம் அல்லவா
அதை அவள் முதலிலே யோசித்து நடந்திருக்க வேணும். நீரும் தான்!
சத்யா எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வகுப்புக்கு அவன் வரவுமில்லை.
அன்று சத்யா வகுப்புக்கு வந்தான். வகுப்பிலே மேகலா இல்லை. ஸ்ரெலா மட்டும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து இருந்தாள். நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.


தம்பி யாழ்ப்பாணத்தவனுக்கு அந்தப் பிள்ளையைக் கட்டித்தரக் கூடாது என்ற சுயமரியாதை தலை தூக்கக் கூடியதாக அதின்ரை அப்பனோடு பண்பு தவறிக் கதைத்துப் போட்டினம் உம்முடைய டியூட்டரி ஆட்கள். அவன் படிக்காதவன் என்றாலும் மானஸ்தன். வசதியானவன்.
அவன் என் நண்பன். அவன் கண் கலங்கியதை முதன் முதலாக நான் அன்றுதான் பார்த்தேன்.
உம்மைக் காதலித்த ஒரு தப்புக்காக அந்தப் பிள்ளை இந்த முற்றத்திலே அப்பனிட்டை வாங்கின அடிகள் கொஞ்சமல்ல. நாங்கள் மறித்திருக்காவிட்டால் செத்திருக்கும்.


உன்னை நம்பிப் பிள்ளையைப் படிக்க விட்டால் அவள் என்ன ஏது செய்கிறாள் என்று நீ பார்க்க மாட்டியா? உன்னையும் அவளுக்கு ஒரு அப்பன் என்று நினைத்துத் தானே உனது வீட்டிலே இருந்து படிக்க விட்டேன். நீயும் சேர்ந்தா இந்தக் கூத்தெல்லாம்? என்று கேட்டான் தம்பி அவன்.
அதுகள் போட்டுதுகள். சரி நீரும் இனி உம்முடைய வேலையை போய்ப் பாருமன்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட்டுத் தெருப்படலையைச் சாத்திக் கொண்டு போனார் மேகலா இருந்து படித்த வீட்டுக்காரப் பெரியவர்.


இன்றைய கம்பியூட்டர் போன் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் அந்த வீட்டின் முன்னால் நீண்ட நேரம் நின்றான் சத்யா
ஏனப்பா ஏதாவது பிரச்சனையே நான் சமைத்து வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறன். கோவிலாலே வந்து காராலே இறங்காமல் இருக்கிறியள் என்றாள் மனைவி ஜன்னலால் எட்டிப் பார்த்து.
சாப்பாட்டைப் போடும் வாறன் என்று சொல்லிவிட்டு அருச்சனைப் பையில் இருந்து மேகலா தந்த துண்டுச் சீட்டை எடுத்து விரித்தான் சத்யா.


அவன் ஆவலோடு எதிர்பார்த்த போன் நம்பர் அதிலே காணப்படவில்லை.
மரங்கள் என்றால் நிழல் கொடுக்கும் பண்பு அதற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த மரங்களே தங்களுக்கு நிழல் தேடி அலைந்தால் அவைக்கு யார் எதனால் எந்த நிழலை எத்தனை தடவைகள் கொடுத்துவிட முடியும்? இன்று இன்னொரு மரத்தினைச் சுற்றிக் கொண்டு வாழும் ஒரு கொடியின் போன் நம்பர் நிழல் கொடுக்குமா? இல்லையே! அதனாலே அதை நான் தரவில்லை.
என்ற வாக்கியத்தை மட்டும் தான் அதிலே கண்டான் சத்யா.
Rasiah Gnana

கனடா ஈழநாடு பத்திரிகையில் நேற்று (15.1.2021) வெளியான சிறுகதை

 

பகிர்விற்கு நன்றி தோழர்..👌

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து மண் மனம் வீசும் காதல் .........காதல் தோல்வியும் கூட........!   😎

நன்றி நுணா......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக இருக்கலாம். ...கதை அருமை  பகிர்வுக்கு நன்றி .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்கள் கதைகளாகும் போது, அவற்றின் அழகே தனித்துவமானது தான்…!

நன்றி நுணா….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆசிரியர்கள் மாணவிகளை திருமணமும் செய்திருக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.