Jump to content

2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும்

 

வெப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச வானிலை முகமைகள் 2020ஆம் ஆண்டு ஒரு சுட்டெரித்த ஆண்டாக இருந்தது என்று ஒப்புக் கொண்டன. ஆனால் மிக வெப்பமான இருந்த ஆண்டுகளின் பட்டியலில் 2020 எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதில் அவை வேறுபடுகின்றன.

நாசாவின் தரவுகள், 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல ஒரு மோசமான கொளுத்தும் ஆண்டாக அமைந்ததாகக் கூறுகிறது.

வெப்பநிலை அளவில் இந்த முகமைகள் வேறுபட்டாலும் கடந்த 12 மாதங்கள் ஒரு வெப்பமான தசாப்தத்தின் பகுதி என ஒப்புக் கொள்கின்றன.

மேலும் ஐந்து முக்கிய முகமைகள் 2020 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளதாக கூறுகின்றன.

நாசாவின் தரவு 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல வெப்பமானது என்கிறது. அமெரிக்க நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் பிரிட்டனின் வானிலை அலுவலகம் 2020ஆம் ஆண்டு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

ஜப்பான் வானிலை முகமை 2020ஆம் ஆண்டு மூன்றாவது வெப்பமான ஆண்டு என்று தெரிவிக்கிறது.

ஆனால் இதெல்லாம் கணக்கீட்டுப் பிழையால் நிகழ்கிறது என்கிறது இந்த தரவுகளை ஒன்றிணைத்த உலக வானிலை நிறுவனம்.

தற்போது சர்வதேச வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. 1850-1900 காலகட்டம் "தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் காரணமாக வெப்பநிலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் பசுமைக்குடில் வாயுவின் வெளியேற்றம் 7 சதவீதம் அளவிற்கு குறைந்தது. இருப்பினும் அது போதாது என்கிறார்கள் நிபுணர்கள்.

புகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பெருந்தொற்று காலத்திலும் நாம் பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக அதை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருந்தோம்." என்கிறார் நியூயார்க்கில் உள்ள நாசா காட்டார்ட் இன்ஸ்டியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடிஸின் இயக்குநர் காவின் ஷிமிட்.

இயற்கையாக வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளைக் காட்டிலும் மனிதர்களின் செயல்பாடுகள் அதி வேகமாக இருப்பதால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

சர்வதேச வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவில் உயர்ந்திருப்பது ஒரு கவலை தரும் விஷயமாகக் கருதப்படுகிறது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி உலக நாடுகள் இந்த நூற்றாண்டில் சர்வதேச வெப்பநிலை அதிகரிப்பை 1.5டிகிரி செல்ஷியஸிற்குள் கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளன.

ஆனால் 2020ஆம் ஆண்டில் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட எல்லையைக் கடந்துவிட்டது.

அமெரிக்காவின் தேசிய முகமையான நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன் தகவல்படி, தரைப் பகுதியில் சர்வதேச வெப்பநிலையின் சராசரி 1.59 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து இருந்தது. இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியைவிட அதிகம். நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் தரவுகள் இது 141 வருடங்களில் இல்லாத உயர்வு என்கிறது. இது 2016ஆம் ஆண்டைக்காட்டிலும் 0.05டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும்.

"எனவே 2020ஆம் ஆண்டு சர்வதேச பருவநிலை தரவுகளில் ஒரு முக்கிய ஆண்டு" என்கிறார் பிரிட்டனின் வானிலை அலுவலகத்தின் பருவநிலை கண்காணிப்புக் குழுவின் மூத்த விஞ்ஞானி காலின் மோரிஸ்.

தண்ணீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அனைத்து தகவல்களும் சர்வதேச சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதாக காட்டுகின்றன. அதுவும் சமீபத்திய தகவல் அதில் ஒருபடி முன்னேறியுள்ளது. இது பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மிக நெருக்கமாக உள்ளது," என்கிறார் அவர்.

மேலும் 2020ஆம் ஆண்டு வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் காற்று மாசு அல்லது அது இல்லாமை.

ஆம், பொது முடக்கத்தால் விமானங்களும், கார்களும் இயங்காமல் இருந்த நிலையில் காற்று மாசு குறைந்து காணப்பட்டது.

எனவே அழுக்கான காற்று இல்லாத காரணத்தால் சூரியனின் வெளிச்சம் நேரடியாக பூமியின் மீது பட்டு வெப்பநிலை அதிகமாக இருந்தது.

2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்பநிலை குறித்த சில முக்கிய தகவல்கள்

கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது 1850 -1900ஆம் ஆண்டுகளின் சராசரியைக் காட்டிலும் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும்.

2011 - 2020 ஆம் ஆண்டுதான் வெப்பம் மிகுந்த தசாப்தமாக உள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு பிறகு மிக வெப்பமான அறு ஆண்டுகள் அமைந்தன.

அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளான 2020, 2019 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.