Jump to content

ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன்

One language, two nations; Two languages, one Nation
-Dr. Colvin R. De Silva

என் வீட்டுக் காணியிலே 
இராணுவ முகாம் கட்டியிருக்கு 
எம் நினைவை கட்டித்தொழ 
எமக்கு இங்கு சட்டம் இல்லை

எந்த ஒரு இனமாகிலும் தம் உறவுகளின் பிரிவுகள் சார்ந்து நினைவு கொள்ளும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. இது ஓர் அடிப்படை மனித உரிமை சார்ந்ததாகும். ஒரு மனிதன் இறப்பில் இருந்து பிறப்பு வரை சம உரிமையுடனே பிறக்கிறான் என ஆங்கில அரசியல் தத்துவஞானி ஜான் லோக் (John Locke) கூறினார்.சாதி சமயம் கடந்த பாகு பாடு இல்லாத சமத்துவ நீதி கொண்ட மனித நேயங்களோடு கூடிய மானிடத்தின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.

ஒரு அரசின் அடிப்படை சட்டங்களில் தன் மக்கள் அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்பும் அதே போல் எல்லா மக்களும் தமது கடமைகளையும் உரிமைகளையும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப எந்தத் தடங்கலும் இல்லாமல் வாழ வழி செய்து கொடுப்பதேயாகும். ஒரு பெரும் பான்மை இனத்துக்கு உரிய உரிமைகள் யாவும் அந்த நாட்டில் வாழும் சிறு பான்மையினருக்கும் கிடைக்க செய்வதே அறமும் தர்மமும் சார்ந்த அரசியல் கோட்பாடாகும்.இதையே சமத்துவம் (equality) என்போம்.

இனவெறி, நிறவெறி என்ற இனப் பாகுபாடோடு(Racial segregation)எத்தனை மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.இன்று கூட இந்த துயரம் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவில் சர்வாதிகார ஆட்சியாளர்களால்(authoritarian ruler)அந்தந்த நாடுகளில் வாழும் சிறு பான்மையினர் எதிர் கொள்வதை பார்க்கிறோம்.தென் ஆபிரிக்காவின் கறுப்பு இனத்தலைவன் நெல்சன் மண்டேலாவை பல ஆண்டுகளாக சிறையில் போட்டு அந்த இன மக்களை இன பாகுபாடு என்ற கொள்கை மூலம் வெள்ளை இனத்தவர் ஆட்சி எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தியது என்பதை அறிவோம்.இதே நிலைமை இன்று கூட உலகில் ஈழத் தமிழர் உட்பட பல சிறு பான்மை இனங்கள் எதிர் கொள்கிறார்கள்.

சிறையில் இருந்து வெளியில் வந்த நெல்சன் மண்டேலா யாரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அறவழி சத்தியம் சார்ந்து தன் மக்களை போராட அழைத்தார். இன்று இவர் போல் ஈழத்து தமிழர்களும் அறமும் நீதியும் சார்ந்து எவரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அதே அறமும் நீதியும் சார்ந்து இனப் படுகொலைக்கு ஒரு நீதியை நிரந்தரமாக வழங்குங்கள் என்றே கேட்கிறார்கள். தொலைந்து போன எம் உறவுகளை தேடித் தாருங்கள் என்று தான் கேட்கிறார்கள். அதே போலவே சிங்கள ஆட்சியாளறிடம் உங்களைப் போன்றே சமத்துவமான உரிமையை இத் தீவில் எமக்கும் பகிர்ந்து தாருங்கள் என்று தான் கேட்க்கிறோம். அமைதியும் சமாதானமுமாக இத் தீவில் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒற்றுமையோடு வாழுவோம் என்று தான் கேக்கிறோம்.

one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers.I have a dream today! வெள்ளை இன சிறுவனும் கறுப்பு நிற சிறுமியும் இந்த அமெரிக்க மண்ணில் இனவாதம் இல்லாமல் ஒன்றாக அந்த நதி ஓரமாக நடந்து போக வேண்டும் என்று அன்று ஒரு நாள் அந்த கறுப்பு இனப் போராளி மார்ட்டின் லூதர் கண்ட கனவு போலவே சிங்கள சிறுவனும் தமிழ் சிறுமியும் இத் தீவில் கை கோர்த்து நடக்கும் கனவுகளோடு வாழவே விரும்பினோம். ஆனால் வன்முறையும் வெறுப்புமாக இனவாதம் இத் தீவில் இரத்தத்தை ஓட விட்டது.கூட்டை பிய்த்து எறிய பறந்த குருவிகள் போலே தம் மண்ணை விட்டு அகதிகளாக அடையாளம் தொலைந்த மனிதர்களாக புலம் பெயர் வாழ்வாகிப் போனது ஈழத்தமிழன் வாழ்வு.

 இனியாவது மனிதாபத்தோடு எமது அடிப்படை உரிமை சார்ந்து எமது கடைமைகளையும் உரிமைகளையும் செய்ய விடுங்கள்.போரில் இறந்து போனா எம் மக்களை நினைவு கூரும் உரிமையை அடக்கி ஒடுக்கி அந்த மக்களுக்காக கட்டப்பட்ட ஓர் எங்கள் கனவுகளின் நினைவுகளை உடைத்து எறியாதீர். உங்களால் நியமிக்கப்பட்ட எந்த அதிகாரியும் உங்களுக்கு விசுவாசமாகத் தான் இருப்பார் என்பது தெரியும்.

எந்த தனி மனிதர்களையும் பழி வாங்கி இதனால் எமக்கு எந்த நன்மை வரும் என்பதை விட அறமும் சத்தியமும் சார்ந்து அற போராட்ட வழியிலே மாணவர்கள் வட கிழக்கு ஈழத் தமிழர்கள் சேர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினரோடும் முற்போக்கு சிங்கள மக்களோடும் போராடுவதே இன்று இருக்கும் நிலையில் சரி என தமிழர்கள் உணர்ந்து இருப்பது போல் அண்மைய நிகழ்வுகள் காண்பிக்கின்றன. உள்ளுர் அரசியல் உட்பட பல சர்வதேச ஊடகங்களில் இது பேசப்படுவதை அறிகிறோம். 

மாணவர்களின் அந்த மக்களின் போராட்டம் தமிழ் நாடு உட்பட சர்வதேச மயமாக்கப்பட்டு ஒரு புதிய பாதையை திறக்க வேண்டும். மாறி வரும் உலக ஒழுங்கில் சுய லாப அரசியல் பொருளாதார இராணுவ காய் நகர்தல் போட்டியிலே உலகின் இரவுக் காவலர் யாராக இருக்கப் போகிறார்கள் என்று காலம் பதில் சொல்லவிருக்கும் இவ் வேளையிலே இந்த சந்தர்ப்பத்தை கை நழுவ விடாமல் தமிழர் தலைமையும் தமிழர்களும் இதை சரியான அரசியல் இராஜதந்திரத்தை கையாள்வதன் மூலம் தங்கள் இலக்கை அடிவதற்கான ஒரு பாதை திறந்துதிருப்பது போல் உள்ளது.

அறமும் தர்மமும் சார்ந்து  சத்திய வழியில் போராடிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்,காந்தி போன்று சத்தியாக்கிரக சமாதான சத்திய வழியில் தொலைந்தவர்களையும் இறந்தவர்களையும் நினைவு கூரும் உரிமை கோரி போராடும் தமிழ் மாணவர்களின் போராட்டமும் தமிழர் இனப் பிரச்சினையும் தை பிறந்தால் வழி பிறகும் என்ற நம்பிக்கை கனவுகளோடு வெற்றி பெற வேண்டும்.

அதே போல் ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லும் இலங்கையின் ஜனாதிபதி தனக்கு இரண்டு முகம் என்றும் சொல்கின்றார். இந்த இரு முகங்களையும் கண்டு  தமிழர்கள் பயந்து இருப்பதுபோல்  இன்று சிங்கள மக்களுக்கும் பயப்  பீதி ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது  `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` என்ற பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது.

 - பா.உதயன்✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, uthayakumar said:


ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன்

One language, two nations; Two languages, one Nation
-Dr. Colvin R. De Silva

என் வீட்டுக் காணியிலே 
இராணுவ முகாம் கட்டியிருக்கு 
எம் நினைவை கட்டித்தொழ 
எமக்கு இங்கு சட்டம் இல்லை

எந்த ஒரு இனமாகிலும் தம் உறவுகளின் பிரிவுகள் சார்ந்து நினைவு கொள்ளும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. இது ஓர் அடிப்படை மனித உரிமை சார்ந்ததாகும். ஒரு மனிதன் இறப்பில் இருந்து பிறப்பு வரை சம உரிமையுடனே பிறக்கிறான் என ஆங்கில அரசியல் தத்துவஞானி ஜான் லோக் (John Locke) கூறினார்.சாதி சமயம் கடந்த பாகு பாடு இல்லாத சமத்துவ நீதி கொண்ட மனித நேயங்களோடு கூடிய மானிடத்தின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.

ஒரு அரசின் அடிப்படை சட்டங்களில் தன் மக்கள் அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்பும் அதே போல் எல்லா மக்களும் தமது கடமைகளையும் உரிமைகளையும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப எந்தத் தடங்கலும் இல்லாமல் வாழ வழி செய்து கொடுப்பதேயாகும். ஒரு பெரும் பான்மை இனத்துக்கு உரிய உரிமைகள் யாவும் அந்த நாட்டில் வாழும் சிறு பான்மையினருக்கும் கிடைக்க செய்வதே அறமும் தர்மமும் சார்ந்த அரசியல் கோட்பாடாகும்.இதையே சமத்துவம் (equality) என்போம்.

இனவெறி, நிறவெறி என்ற இனப் பாகுபாடோடு(Racial segregation)எத்தனை மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.இன்று கூட இந்த துயரம் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவில் சர்வாதிகார ஆட்சியாளர்களால்(authoritarian ruler)அந்தந்த நாடுகளில் வாழும் சிறு பான்மையினர் எதிர் கொள்வதை பார்க்கிறோம்.தென் ஆபிரிக்காவின் கறுப்பு இனத்தலைவன் நெல்சன் மண்டேலாவை பல ஆண்டுகளாக சிறையில் போட்டு அந்த இன மக்களை இன பாகுபாடு என்ற கொள்கை மூலம் வெள்ளை இனத்தவர் ஆட்சி எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தியது என்பதை அறிவோம்.இதே நிலைமை இன்று கூட உலகில் ஈழத் தமிழர் உட்பட பல சிறு பான்மை இனங்கள் எதிர் கொள்கிறார்கள்.

சிறையில் இருந்து வெளியில் வந்த நெல்சன் மண்டேலா யாரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அறவழி சத்தியம் சார்ந்து தன் மக்களை போராட அழைத்தார். இன்று இவர் போல் ஈழத்து தமிழர்களும் அறமும் நீதியும் சார்ந்து எவரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அதே அறமும் நீதியும் சார்ந்து இனப் படுகொலைக்கு ஒரு நீதியை நிரந்தரமாக வழங்குங்கள் என்றே கேட்கிறார்கள். தொலைந்து போன எம் உறவுகளை தேடித் தாருங்கள் என்று தான் கேட்கிறார்கள். அதே போலவே சிங்கள ஆட்சியாளறிடம் உங்களைப் போன்றே சமத்துவமான உரிமையை இத் தீவில் எமக்கும் பகிர்ந்து தாருங்கள் என்று தான் கேட்க்கிறோம். அமைதியும் சமாதானமுமாக இத் தீவில் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒற்றுமையோடு வாழுவோம் என்று தான் கேக்கிறோம்.

one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers.I have a dream today! வெள்ளை இன சிறுவனும் கறுப்பு நிற சிறுமியும் இந்த அமெரிக்க மண்ணில் இனவாதம் இல்லாமல் ஒன்றாக அந்த நதி ஓரமாக நடந்து போக வேண்டும் என்று அன்று ஒரு நாள் அந்த கறுப்பு இனப் போராளி மார்ட்டின் லூதர் கண்ட கனவு போலவே சிங்கள சிறுவனும் தமிழ் சிறுமியும் இத் தீவில் கை கோர்த்து நடக்கும் கனவுகளோடு வாழவே விரும்பினோம். ஆனால் வன்முறையும் வெறுப்புமாக இனவாதம் இத் தீவில் இரத்தத்தை ஓட விட்டது.கூட்டை பிய்த்து எறிய பறந்த குருவிகள் போலே தம் மண்ணை விட்டு அகதிகளாக அடையாளம் தொலைந்த மனிதர்களாக புலம் பெயர் வாழ்வாகிப் போனது ஈழத்தமிழன் வாழ்வு.

 இனியாவது மனிதாபத்தோடு எமது அடிப்படை உரிமை சார்ந்து எமது கடைமைகளையும் உரிமைகளையும் செய்ய விடுங்கள்.போரில் இறந்து போனா எம் மக்களை நினைவு கூரும் உரிமையை அடக்கி ஒடுக்கி அந்த மக்களுக்காக கட்டப்பட்ட ஓர் எங்கள் கனவுகளின் நினைவுகளை உடைத்து எறியாதீர். உங்களால் நியமிக்கப்பட்ட எந்த அதிகாரியும் உங்களுக்கு விசுவாசமாகத் தான் இருப்பார் என்பது தெரியும்.

எந்த தனி மனிதர்களையும் பழி வாங்கி இதனால் எமக்கு எந்த நன்மை வரும் என்பதை விட அறமும் சத்தியமும் சார்ந்து அற போராட்ட வழியிலே மாணவர்கள் வட கிழக்கு ஈழத் தமிழர்கள் சேர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினரோடும் முற்போக்கு சிங்கள மக்களோடும் போராடுவதே இன்று இருக்கும் நிலையில் சரி என தமிழர்கள் உணர்ந்து இருப்பது போல் அண்மைய நிகழ்வுகள் காண்பிக்கின்றன. உள்ளுர் அரசியல் உட்பட பல சர்வதேச ஊடகங்களில் இது பேசப்படுவதை அறிகிறோம். 

மாணவர்களின் அந்த மக்களின் போராட்டம் தமிழ் நாடு உட்பட சர்வதேச மயமாக்கப்பட்டு ஒரு புதிய பாதையை திறக்க வேண்டும். மாறி வரும் உலக ஒழுங்கில் சுய லாப அரசியல் பொருளாதார இராணுவ காய் நகர்தல் போட்டியிலே உலகின் இரவுக் காவலர் யாராக இருக்கப் போகிறார்கள் என்று காலம் பதில் சொல்லவிருக்கும் இவ் வேளையிலே இந்த சந்தர்ப்பத்தை கை நழுவ விடாமல் தமிழர் தலைமையும் தமிழர்களும் இதை சரியான அரசியல் இராஜதந்திரத்தை கையாள்வதன் மூலம் தங்கள் இலக்கை அடிவதற்கான ஒரு பாதை திறந்துதிருப்பது போல் உள்ளது.

அறமும் தர்மமும் சார்ந்து  சத்திய வழியில் போராடிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்,காந்தி போன்று சத்தியாக்கிரக சமாதான சத்திய வழியில் தொலைந்தவர்களையும் இறந்தவர்களையும் நினைவு கூரும் உரிமை கோரி போராடும் தமிழ் மாணவர்களின் போராட்டமும் தமிழர் இனப் பிரச்சினையும் தை பிறந்தால் வழி பிறகும் என்ற நம்பிக்கை கனவுகளோடு வெற்றி பெற வேண்டும்.

அதே போல் ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லும் இலங்கையின் ஜனாதிபதி தனக்கு இரண்டு முகம் என்றும் சொல்கின்றார். இந்த இரு முகங்களையும் கண்டு  தமிழர்கள் பயந்து இருப்பதுபோல்  இன்று சிங்கள மக்களுக்கும் பயப்  பீதி ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது  `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` என்ற பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது.

 - பா.உதயன்✍️

நல்லதொரு அரசியல் அலசலுக்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு அரசியல் அலசலுக்கு நன்றிகள் தோழர்..👍

புரட்சிகர தமிழ்தேசியனே உங்கள் கருத்துக்கு நன்றி தோழர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.