Jump to content

முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா)

 
Capture-7.jpg
 118 Views

மகிந்தவிடம் அவசரமாக ஓடிய இந்தியத் தூதுவர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது தொடர்பில் அதிர்ச்சி அடைந்த இந்தியத் தூதுவர் சிறீலங்கா பிரதமரை அவசரமாக சந்தித்தன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

நினைவுத்தூபி இடித்ததும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபச்சாவை சந்திப்பதற்கு இந்தியத் தூதுவர் கோபால் பக்லே முயன்றபோதும், மகிந்த குருநாகல் பகுதிக்கு சென்றதால் அவரால் சந்திக்க முடியவில்லை. எனினும் கடந்த ஞாயிறு மாலை மகிந்த கொழும்பு திரும்பியதும் உடனடியாக மகிந்தவை அவரின் இல்லத்துக்கு சென்று இந்திய தூதுவர் சந்தித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறீலங்காவை விட்டு வெளியேறிய 24 மணிநேரத்தினுள் தூபியை இடித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியத் தூதுவர் மகிந்தாவை எச்சரித்ததுடன், உடனடியக நிலமையை சீர் செய்யுமாறும் கடுமையான தொனியில் கேட்டிருந்தார்.

Capture-5-1.jpg

இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மகிந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்காவை தொடர்புகொண்டு பேசியதுடன், அமரதுங்கா உடனடியாக யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்பு கொண்டிருந்தார்.

அதன் பின்னர் திங்கட்கிழமை (11) அதிகாலை துணைவேந்தர் மாணவர்களுடன் இணைந்து புதிய தூபிக்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார். தூபி இடிக்கப்பட்ட 60 மணிநேரத்திற்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்துள்ளன.

மகிந்தவுக்கு தெரியாமல் தூபியை இடித்தாராம் சிறீசற்குணராஜா

தூபி இடிக்கப்பட்டது தமக்கு தெரியாது எனவும், அதற்கு யார் அனுமதி தந்தது எனவும் சிறீலங்கா பிரதமரின் செயலாளர் அலுவலகம் யாழ். பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

4-1.jpg

எனினும் நடந்தவை எல்லாவற்றையும் உரிய விளக்கங்களுடன் பிரதமரின் செயலாளர் அலுவலக்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வுத்துறையினரை தோற்கடித்த துணைவேந்தர்

தூபி இடிக்கப்பட்ட நடவடிக்கையானது சிறீலங்கா அரசுக்கும், நாட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது நாட்டின் தேசிய புலனாய்வுத்துறையின் தோல்வி; அதாவது அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை என்பன ஒருங்கிணைந்து செயலாற்றவில்லை என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா புலானாய்வுத்துறையின் முற்றான தோல்வியின் வெளிப்பாடு இது. எந்த ஒரு அமைப்பும் இதனை அரச அதிகாரிகளுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

அதன் எதிர்வினையையும் அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர். அதாவது அரச இயந்திரங்கள் தன்னிச்சையாக செயற்படுவதாக அரச வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தூபி இடிப்பு விவகாரம் ஐ.நாவில் பாரப்படுத்த வேண்டும்

– பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி விவகாரத்தை பிரித்தானிய அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கும் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டோனா தெரிவித்துள்ளார்.

Capture-1-2.jpg

இது மத சுதந்திரத்தை மறுக்கும் செயலாகும்; எனது பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் வசிக்கினறனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கனேடிய தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு அதிசயித்த கொழும்பு ஊடகம்

சிறீலங்கா அரசினாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்கள் கடந்த வாரம் வாகனப் பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் கொடியை தாங்கியவாறு பல நூறு வாகனங்கள் வீதியால் அணிவகுத்து சென்றதுடன், ஒலிகளை எழுப்பி மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.

இந்த வாகனத் தொடரணியின் காணொளியை தாம் பார்த்ததாகவும், அதில் புதிய வகை மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, அவுடி மற்றும் டபிள் கப் போன்ற வாகனங்களே அதிகளவில் சென்றதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் த சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதுடன், தமிழ் மக்களின் இந்த பொருளாதார வளர்ச்சி அந்த நாடுகளின் அரசியல் தலைவர்களின் கவனத்தை திருப்பவல்லது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையில் நிறைவேறிய தீர்மானம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்ததற்கு எதிராக யாழ் மாநகரசபையில் கடந்த புதன்கிழமை (13) கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தூபியை அதே இடத்தில் மீள அமைக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுட்பமாக காய் நகர்த்திய துணைவேந்தர்

யாருக்கும் தெரியாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை துணைவேந்தர் எவ்வாறு இடித்து அழித்தார் என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் தூபியை இடிக்குமாறு அறிக்கை ஒன்று இரகசியமாக துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருடன் துணைவேந்தர் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும், அது தொடர்பில் பேசப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நினைவுத்தூபியை இடிப்பதற்கு துணைவேந்தரும் பதிவாளர் வி. காண்டீபனும் இரகசியமாக திட்டம் தீட்டினர். தமது நடவடிக்கைகளை இரகசியமாக பேணிய அவர்கள், கோவிட்-19 நெருக்கடியை அதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

f13fa264-90da-439a-abc1-fc303cffa2da-1.j

பொறியியலாளர்கள் மற்றும் கனரக வாகன நிறுவனம் போன்றவற்றுடனான தொடர்புகளும் இரகசியமாக பேணப்பட்டன. வெள்ளிக்கிழமை (8) இரவு 10 மணிக்கு இடிப்பது என திட்டமிடப்பட்டது. அன்று இரவு வேறு காரணங்கள் கூறப்பட்டு மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

துணைவேந்தரும், பதிவாளருமே அங்கு இருந்தனர். தெல்லிப்பளையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தூபியை இடிக்கும் கூரையில் வெளிச்ச விளக்கு பொருத்தப்பட்ட கனரக வாகனம் வாடைகைக்கு  அமர்த்தப்பட்டது.

திட்டமிட்டபடி 10 மணியளவில் இடிக்கும் பணிகள் இரகசியமாக ஆரம்பமாகின. ஆனால் இடிக்கும் சத்தம் கேட்டு பொன் இராமநாதன் வீதி மற்றும் பரமேஸ்வரா சந்தி ஆகியவற்றில் இருந்த அயலவர்கள் விழித்துக் கொண்டனர்.

பொதுமக்களும், மாணவர்களும் வளாகத்திற்கு வெளியே அணிதிரண்டனர். அவர்கள் அணிதிரளும்போது தமிழ் மக்கள் சந்தித்த இனஅழிப்பின் வரலாற்றை சுமந்து நின்ற நினைவாலயம் வெறும் கற்குவியலாக இருந்ததுடன், அதனை கனரக வாகனம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலை

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது தமக்கு மிகுந்த கவலை அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தயராக இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=39651

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவுக்கு  ஈழத்தமிழர் அழிக்கபட்டு, இல்லாமல் போவதையே இப்போதும் வேண்டியதாக இருக்கிறது.

அதில், இந்த நினைவு தூபி உடைப்பில் கிந்தியா எதோ அக்கறை கொண்டதாக  வெளியே காட்டி கொண்டு,   வரும் unhrc இல் வரக்கூடிய சற்று கடுமையான நிலையை பேரமாக கொண்டு உள்ளே சொறி  சிங்களத்துடன் கிழக்கு கொள்கலபை கையகப்படுத்துவதற்கு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.