Jump to content

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்

Digital News Team 2021-01-19T15:34:08

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.
இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.

6-300x225.jpg
50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

5-225x300.jpg
இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-4-300x225.jpg
குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1-2-300x225.jpg
இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/105825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி!

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்படை படகுடன் மோதியதால் ஏற்பட்டதாக கூறப்படும் விபத்தினால் காணாமல் போயிருந்த மேலும் இரு இந்திய மீனவர்களில் சடலங்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.

நேற்றும் (20) இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டது. இதன்படி படகில் இருந்த நால்வரும் பலியாகியுள்ளனர்.

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 18ம் திகதி எல்லை தாண்டிய மீனவர்களை கடற்படை கைது செய்ய முயன்ற போது படகு விபத்துக்குள்ளாகியது என்று கடற்படை தெரிவித்தது.

இதன்போது படகில் இருந்த இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல் போயிருந்தனர்.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏ.மெசியா (30-வயது), வட்டவாளத்தை சேர்ந்த வி.நாகராஜ் (52-வயது), மண்டபத்தை சேர்ந்த என்.சாம் (28-வயது) மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த எஸ்.செந்தில் குமார் (32-வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதில் சாம் 2009ம் ஆண்டு இல்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

On 19/1/2021 at 03:20, தமிழ் சிறி said:

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

மறவன்புலவு சச்சியின் சத்தத்தையே காணவில்லை - பயனில்லை என்று ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடித்தார்களாம். அதனால் கைதுசெய்ய முயன்றார்களாம். ஒரு படகு தப்பியோடியதாம். அதைப் பிடிக்கத் துரத்திச் செல்லும்போது அது சறுக்கிக் கடலில் மூழ்கிவிட்டதாம்.

அதுசரி, அப்படியானால் இலங்கைக் கடற்படையின் படகில் சேதம் எவ்வாறு ஏற்பட்டது? காயமடைந்து வேறு படகுகளில் தப்பிவந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படை தமது படகின் மேல் வேண்டுமென்றே வந்து இடித்ததாகவும், இதனாலேயே தமது படகு மூழ்கியதாகவும் கூறுகிறார்கள். இதற்குள் ரோ எங்கிருந்து வந்தது? முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

Link to comment
Share on other sites

7 minutes ago, தமிழ் சிறி said:

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

காலங்காத்தாலை...  கண்ட படி, எங்களை சிரிக்க வைக்காதீர்கள். 😂
நீங்கள் கனவுலகில் இருந்து கொண்டு...விடும் புலுடாக்களை,
நாம் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களா? :grin:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும் இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் ராமேஸ்வரம் மீனவர்கள், எதிர்வரும்  24ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  அறிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்போவதாக எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்ப முயன்றபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டுவரும் இலங்கை அரசை கண்டித்தும், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

http://athavannews.com/உயிரிழந்த-மீனவர்களுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

Link to comment
Share on other sites

29 minutes ago, Kadancha said:

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

1 hour ago, தமிழ் சிறி said:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.

புலனாய்வு தகவல் மூலம் சிரிக்க வைத்தமைக்கு எனது நன்றிகள். 
 

Link to comment
Share on other sites

7 minutes ago, Kadancha said:

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.
 

ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது. நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது

இதை ஒரு போதுமே மறுக்கவில்லை. அதுவே RAW இந்த தலையாய கடமை.

 

4 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

கண்ணா RAW க்கு லீலாவின் ஏக்கம் புரியவில்லை. RAW கண்டுகொள்ளவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

நாம்... என்பது,
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும், மக்கள் ராசா... 

"புலி, பசித்தாலும்... புல்லைத்  தின்னாது."
எமக்கு... றோவை, கண்டாலே... அலர்ஜி.

உங்கள், கருத்துக்களைப்  பார்த்தால்..
அரசியலில்... நீங்கள், இன்னும்.. 
அரிவரி   வகுப்பில்தான்... உள்ளீர்கள் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

நானும்... அப்படித்தான்,  நினைத்திருந்தேன்.
உள்ளே... போய் பார்த்தால், அவ்வளவும் களிமண். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.