Jump to content

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து


Recommended Posts

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

 

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார்.

துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை காணப்படுவதின் பாரதூர தன்மையினையும் விளக்கினார்.

மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கில சட்டமே நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், ஆங்கில சட்டத்தில் இப்படியான கூற்றுக்கள் நீதிமன்ற அவதூறாக கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாதுஇ குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்தார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 

நீதிமன்றுகளுக்கு கடிவாளம் தேவை.

ஒரு தீர்ப்பு குறித்து அல்லது தீர்ப்பளித்த நீதிபதி குறித்து கருத்து சொன்னால், நீதிமன்ற அவமதிப்பு. தண்டனை சரியாயிருக்கும்.

இலங்கை நீதித்துறை ஊழல் மிக்கது என்ற கருத்து சொன்னால், அதுக்கு இந்த தண்டனை தவறு. ஊழல் இல்லவே இல்லை என்று யாருமே சொல்ல முடியாது.

பத்திரிகை துறை யாருமே, அதே நீதிமன்ற அவமதிப்பு பயத்தில், வாயே திறவாமல் உள்ள போது, சுமேந்திரன் பாராளுமன்றில் சொன்னது, இந்த வகையில் தவறு இழைக்கும் நீதித்துறைக்கு கடிவாளம் போட, புதிய சட்டம் வரவேண்டும் என்று.

அரசாங்கத்தின் அமைச்சர்எஸ் பி திசாநாயக்க.... இதே போல, இரண்டு வருடம் உள்ளே இருந்தார். அநேகமாக, அவரும் புதிய சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்.

அதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை காரணமாக, அங்கே பேசுவதை, நீதித்துறை தண்டிக்க  முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.lawgazette.co.uk/practice-points/criticising-judges-a-risky-business/5041481.article 
 

https://www.theleaflet.in/contempt-dignity-and-fair-criticism-what-do-they-mean-to-courts/# 
 

ஒரு வழக்கில் தீர்ப்பு (conviction) வேறு, தண்டனை (sentencing) வேறு. 

அண்மையில் இராமநாயக்க, பிரசாந்த் பூஷன் இருவருடைய வழக்குகளையும் பார்க்கும் போதும், இங்கிலாந்து சட்டத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போதும் இராமநாயக்கவுக்கு கொடுத்த தீர்ப்பு சரியானதே. 

ஆனால் தண்டனை மிக அதிகம். 

இங்கிலாந்தில் இனவாதி டாமி ராபின்சனுக்கு கொடுக்க பட்ட தீர்ப்பும் கவனிக்கதக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீதிமன்றுகளுக்கு கடிவாளம் தேவை.

ஒரு தீர்ப்பு குறித்து அல்லது தீர்ப்பளித்த நீதிபதி குறித்து கருத்து சொன்னால், நீதிமன்ற அவமதிப்பு. தண்டனை சரியாயிருக்கும்.

இலங்கை நீதித்துறை ஊழல் மிக்கது என்ற கருத்து சொன்னால், அதுக்கு இந்த தண்டனை தவறு. ஊழல் இல்லவே இல்லை என்று யாருமே சொல்ல முடியாது.

பத்திரிகை துறை யாருமே, அதே நீதிமன்ற அவமதிப்பு பயத்தில், வாயே திறவாமல் உள்ள போது, சுமேந்திரன் பாராளுமன்றில் சொன்னது, இந்த வகையில் தவறு இழைக்கும் நீதித்துறைக்கு கடிவாளம் போட, புதிய சட்டம் வரவேண்டும் என்று.

அரசாங்கத்தின் அமைச்சர்எஸ் பி திசாநாயக்க.... இதே போல, இரண்டு வருடம் உள்ளே இருந்தார். அநேகமாக, அவரும் புதிய சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்.

அதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை காரணமாக, அங்கே பேசுவதை, நீதித்துறை தண்டிக்க  முடியாது.

உங்கட கருத்து உங்களுக்கே சின்ன பிள்ளைத்தனமாய் தெரியவில்லை ...ஒருவர் ஒரு நாட்டின் நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார் .அவரை கூப்பிட்டு விருது கொடுக்க சொல்கிறீர்களா?...சும் மட்டும் அல்ல வேறு யார் வாதாடி இருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும் . ஆனால் குறைவாய் கிடைத்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உங்கட கருத்து உங்களுக்கே சின்ன பிள்ளைத்தனமாய் தெரியவில்லை ...ஒருவர் ஒரு நாட்டின் நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார் .அவரை கூப்பிட்டு விருது கொடுக்க சொல்கிறீர்களா?...சும் மட்டும் அல்ல வேறு யார் வாதாடி இருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும் . ஆனால் குறைவாய் கிடைத்திருக்கும் 

அக்கோய்,

சும்மா, நான் அடி, நுனி தெரியாமல் கதைக்கிறேன் எண்டு நினைக்கப்படாது.

ஒரு நீதிபதியோட, தீர்ப்பை மாத்தி எழுத  பேரம் பேசினதை, அவரே ரெகார்ட் பண்ணி, அது வெளிய வந்தது தெரியுமே, இல்லையோ....

பிறகென்ன, தண்டனை கொடுக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அக்கோய்,

சும்மா, நான் அடி, நுனி தெரியாமல் கதைக்கிறேன் எண்டு நினைக்கப்படாது.

ஒரு நீதிபதியோட, தீர்ப்பை மாத்தி எழுத  பேரம் பேசினதை, அவரே ரெகார்ட் பண்ணி, அது வெளிய வந்தது தீருமோ, இல்லையோ....

பிறகென்ன, தண்டனை கொடுக்கிறது?

நாதம் இலங்கையின் நீதித் துறை 100% பேபக்ட் என்று நான் சொல்லவில்லை ...ஆனால் இவரே நீதித் துறையை அவமதிக்கின்ற மாதிரி கதைத்தால் சாதாரண மனிதன் என்ன செய்வான்?எப்படி நீதிமன்றத்தையோ அல்லது சட்டத்தையோ மதிப்பான்?  ..இவர் செய்தது பிழை ...தண்டனை சரியானது ...இவர் மீதான வழக்கு வேறு ...வாயை வைச்ச்சிட்டு சும்மா இருந்திருந்தால் உப்ப உள்ளுக்குள்ள இருக்க வேண்டியதில்லை 

நீதிபதி பிழை செய்தால் அவருக்கு எதிராய் சும்மை பிடித்து ஒரு வழக்கை போடுறது , அதை விடுத்து என்ன இது சின்ன பிள்ளைத்தனமாய் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

நாதம் இலங்கையின் நீதித் துறை 100% பேபக்ட் என்று நான் சொல்லவில்லை ...ஆனால் இவரே நீதித் துறையை அவமதிக்கின்ற மாதிரி கதைத்தால் சாதாரண மனிதன் என்ன செய்வான்?எப்படி நீதிமன்றத்தையோ அல்லது சட்டத்தையோ மதிப்பான்?  ..இவர் செய்தது பிழை ...தண்டனை சரியானது ...இவர் மீதான வழக்கு வேறு ...வாயை வைச்ச்சிட்டு சும்மா இருந்திருந்தால் உப்ப உள்ளுக்குள்ள இருக்க வேண்டியதில்லை 

நீதிபதி பிழை செய்தால் அவருக்கு எதிராய் சும்மை பிடித்து ஒரு வழக்கை போடுறது , அதை விடுத்து என்ன இது சின்ன பிள்ளைத்தனமாய் 😂

அக்காச்சி,

உந்த லோயர்மார், லாடு லபக்கதாசுகள் எல்லாம் jurisprudence (சட்டத்தின் வியாக்கியானம்?) என்பதை பற்றி பக்கமா எழுதி மண்டைகாய வைப்பாங்கள். நீங்கள் contempt of court இன் jurisprudence ஐ ஒரு பந்தியில் சும்மா வகுந்து எடுத்து விட்டீர்கள் 👏🏾👏🏾👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 

தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

1. வடக்கு-கிழக்கு பிரிப்பு வழக்கு

2. இராணுவ வீரர்களுக்கு எதிராக

3. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு ஆதரவாக

4. பிள்ளையானுக்கு எதிராக

5. ராமநாயக்கவுக்கு ஆதரவாக 

இப்படி எல்லாம் தோக்கிற வழக்காவே நீளுது லிஸ்ட்……

ரதி அக்காச்சி ஜஸ்ட் லைக் தட் விளங்கபடுத்தின மேட்டர பாலிமெண்டில போய் கதைச்சிருக்கு மனுசன்.

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

சுமந்திரன் அன்றைய சனாதிபதியின் வழக்கறிஞர். அவர் எப்படி தமிழ்மக்களுக்கு சார்பாக வாதாடி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க முடியும்?

19 minutes ago, goshan_che said:

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

உரிமைக்காக வாதாடுபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்க வேண்டும்.அந்த வகையில் கஜேந்திரகுமார். பார்ப்போம் அடுத்த நடவடிக்கைகளை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன் அன்றைய சனாதிபதியின் வழக்கறிஞர். அவர் எப்படி தமிழ்மக்களுக்கு சார்பாக வாதாடி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க முடியும்?

44 minutes ago, குமாரசாமி said:

 

இல்லை அண்ணை, ஜனாதிபதி சட்டதரணி என்பது சட்டதரணிகளில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்.

இங்கிலாந்தில் Queen’s  Counsel (QC) என்பார்கள், பேச்சுவழக்கில் Silk என்றும் அழைப்பார்கள். பழைய ஆட்களில் சேர் பி, ஜி ஜி, எஸ் ஜே வி இன்னும் பலர் QCக்கள்.

1972 முதலாம் குடியரசு யாப்பின் பின் இலங்கை ஜனாதிபதியின் பெயரில் இதை President’s Counsel என மாற்றினார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதுதான் ஜனாதிபதி சட்டத்தரணி. தவிர அவர்கள் ஜனாதிபதியின் சட்டதரணிகள் அல்ல.

சுமந்திரன் எந்த ஜனாதிபதியின் சட்டதரணியாகவும் இருந்ததாக எனக்கு தெரியாது.

48 minutes ago, குமாரசாமி said:

 

உரிமைக்காக வாதாடுபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்க வேண்டும்.அந்த வகையில் கஜேந்திரகுமார். பார்ப்போம் அடுத்த நடவடிக்கைகளை....

எல்லாருக்கும் சந்தர்பம் கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் கஜன் என்னை விட வயசு கூடின ஆள். படிச்சு முடிச்சும் கனகாலம்- ஆனாலும் ஏன் ஒரு பிரபல தமிழ் வழக்குகளை எடுத்து நடத்துவதில்லையோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணை, ஜனாதிபதி சட்டதரணி என்பது சட்டதரணிகளில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்.

இங்கிலாந்தில் Queen’s  Counsel (QC) என்பார்கள், பேச்சுவழக்கில் Silk என்றும் அழைப்பார்கள். பழைய ஆட்களில் சேர் பி, ஜி ஜி, எஸ் ஜே வி இன்னும் பலர் QCக்கள்.

1972 முதலாம் குடியரசு யாப்பின் பின் இலங்கை ஜனாதிபதியின் பெயரில் இதை President’s Counsel என மாற்றினார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதுதான் ஜனாதிபதி சட்டத்தரணி. தவிர அவர்கள் ஜனாதிபதியின் சட்டதரணிகள் அல்ல.

சுமந்திரன் எந்த ஜனாதிபதியின் சட்டதரணியாகவும் இருந்ததாக எனக்கு தெரியாது.

எனக்கு இதைப்பற்றி நல்லவடிவாக தெரியாது. ஆனால் சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரியின் வழக்கறிஞர் என ஒரு திரி இங்கேயும் எரிஞ்சு கருகிப்போன ஞாபகம் இருக்கு...

 

5 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் சந்தர்பம் கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் கஜன் என்னை விட வயசு கூடின ஆள். படிச்சு முடிச்சும் கனகாலம்- ஆனாலும் ஏன் ஒரு பிரபல தமிழ் வழக்குகளை எடுத்து நடத்துவதில்லையோ தெரியாது.

எனக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

1. வடக்கு-கிழக்கு பிரிப்பு வழக்கு

2. இராணுவ வீரர்களுக்கு எதிராக

3. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு ஆதரவாக

4. பிள்ளையானுக்கு எதிராக

5. ராமநாயக்கவுக்கு ஆதரவாக 

இப்படி எல்லாம் தோக்கிற வழக்காவே நீளுது லிஸ்ட்……

ரதி அக்காச்சி ஜஸ்ட் லைக் தட் விளங்கபடுத்தின மேட்டர பாலிமெண்டில போய் கதைச்சிருக்கு மனுசன்.

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

அண்ணை 
தாங்கள்  எனக்கு 

உங்களிடம் மற்றைய கருத்தாளரின் வாயை அடைக்கும் ஒரு தந்திரம் இருக்கிறது. இதை நானும் இன்னும் சிலரும் முன்பும் சுட்டி காட்டி உள்ளோம்.

கிழக்கில் நீங்கள் ஆதரித்த அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டினால் - கூட்டமைப்பு என்ன செய்தது, நீங்கள் தேசிக்காய்கள் என்ன செய்தீர்கள் என கேட்பீர்கள்.

இப்படி சொன்னதாக ஞாபகம், இப்போ சுமந்திரனை பற்றி பேசும் போது கஜே எங்கிருந்து வந்தார் ...?
தேசிக்காய்சும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைஸ் தான் அண்ணை, அரிவரியிலிருந்தே தான் தப்புவதற்காக பக்கத்திலிருப்பவனை இழுத்துவிட்டு வளர்ந்த கூட்டம், அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது, என்ன சும்மா பம்பலுக்காக மற்றவனுக்கு கதையடிப்பது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
தாங்கள்  எனக்கு 

உங்களிடம் மற்றைய கருத்தாளரின் வாயை அடைக்கும் ஒரு தந்திரம் இருக்கிறது. இதை நானும் இன்னும் சிலரும் முன்பும் சுட்டி காட்டி உள்ளோம்.

கிழக்கில் நீங்கள் ஆதரித்த அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டினால் - கூட்டமைப்பு என்ன செய்தது, நீங்கள் தேசிக்காய்கள் என்ன செய்தீர்கள் என கேட்பீர்கள்.

இப்படி சொன்னதாக ஞாபகம், இப்போ சுமந்திரனை பற்றி பேசும் போது கஜே எங்கிருந்து வந்தார் ...?
தேசிக்காய்சும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைஸ் தான் அண்ணை, அரிவரியிலிருந்தே தான் தப்புவதற்காக பக்கத்திலிருப்பவனை இழுத்துவிட்டு வளர்ந்த கூட்டம், அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது, என்ன சும்மா பம்பலுக்காக மற்றவனுக்கு கதையடிப்பது 

அக்னி,

இதென்னப்பா கூத்தா கிடக்கு. சுமந்திரனை தப்ப வைக்க அவர் தோத்த வழக்கை யாரும் லிஸ்ட்போடுவார்களா🤣.

நான் முன்பே சொல்லி விட்டேன், 2013இல் இருந்து 2015 வரை சும்+விக்கி க்கு ஒரு சந்தர்பம் கொடுக்கலாம் என நான் யோசித்தது உண்மை. நான் நினைத்தது போல் அவர்கள் நடக்கவில்லை என்றதும் உங்களை போல் “போய் தேசிக்காயை கேளுங்கள்” என மழுப்பாமல், எனது கணிப்பு பிழை அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை ஒத்து கொண்டு, அவர்களுக்கு சந்தர்பம் கொடுக்க வேண்டும் என்று எழுதுவதை நிறுத்தி, அவர்கள் மீது விமர்சனத்தையும் வைத்து வருகிறேன்.

ஆனால் கஜேந்திரகுமார் மீது நம்பிக்கை ஒரு போதும் வரவில்லை. அவர் சொல்லும் விடயங்கள் அத்தனை சாத்தியமறரதாய் இருப்பதால்.

ஆனால் ஒரு தோல்வியடைந்த வக்கீலை இன்னொரு தோல்வியடைந்த வக்கீலால் பிரதியீடு செய்ய கூடாது என்பதை காட்டவே இருவரையும் ஒப்பிட்டு எழுதினேன்.

ஆனால் அவர்கள் வக்கீல் தொழிலில் பிரகாசிக்கவில்லை என்பதால் அரசியலில் பிரகாசிக்க மாட்டார்கள் என்பதில்லை அதனால்தான் அவருக்கு ஒரு சந்தர்பம் தரலாம் என்றும் எழுதினேன்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கலாம், இருவரில் யார் வினைதிறனாக செயல்பட்டார்கள் அல்லது இருவரும் ஒரே கேஸ்தானா என.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் எந்த அரசியல் கட்சிக்கும் “நேர்ந்து விடப்பட்டவன் அல்ல”🤣. ஆகவே உங்களை போல் அன்றி, என்னால் சந்திரகாந்தனையும், சுமந்திரனையும், கஜேந்திரகுமாரையும் ஒரு சேர விமர்சிக்க இயலுமாய் உள்ளது.

ஆனானப்பட்ட திரு பிரபாகரன் அவர்களின் சில அரசியல் முடிவுகளையே விமர்சித்து எழுதுபவன் நான் - பிஸ்கோத்து சுமந்திரனுக்கு கவர் எடுக்கிறேன் என்று என்னை சொல்வதை பெரும் மானநஸ்டமாகவே கருதுகிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

பிள்ளையானுடைய கேசில் கடைசி ஹியரிங்கில் தான் சும் அவருக்கு எதிராய் வாதாட போறேன் என்று வந்தார் ...ஏன் கடைசி நேரத்தில் போய் மூக்குடை பட்டார் என்று அவரது வால்களுக்கே தெரியவில்லை.
இவருக்கு ஓவர் கொன்பிடன்ட் என்று நினைக்கிறேன்.
பிள்ளையானுக்காய் எல்லாம்  சும்மை எதிர்க்க வேண்டிய தேவை எனக்கில்லை 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

ஏன் கடைசி நேரத்தில் போய் மூக்குடை பட்டார் என்று அவரது வால்களுக்கே தெரியவில்லை.

எல்லாம் மேல் இடத்தின்ரை பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2021 at 22:20, nunavilan said:

துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார்.

வாழ்நாள்  முழுவதும்  விசாரணையின்றி, இளமையைத் தொலைத்து, சிறையில் விடுதலைக்காய் ஏங்கித் தவிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது அநீதி என இவருக்கு விங்கவில்லை..... ரஞ்சனுக்காக  புலம்புகிறார். எல்லாம் பணம், கூடி வாழும் பாக்கியம். இருக்கட்டும்.... இவர் தமிழ் மக்களின் பிரதிநிதி, ஜெனிவாவில் வெட்டி வீழ்த்தப்போறார் என்பதுதான் தாங்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

.
இவருக்கு ஓவர் கொன்பிடன்ட் என்று நினைக்கிறேன்.

 

100% ✔️
அத்துடன் தேவையில்லாமல் வாயை திறப்பதும், தேவையே இல்லாத விடயங்களில் மூக்கை நுழைப்பதும். தவிரவும் மாற்று கருத்தை ஏற்று கொள்வதிலும் பரந்த அணுகுமுறை இல்லை, தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் ரகமாம்.

Link to comment
Share on other sites

விஜயகலா விடுதலை புலிகளை பற்றி எதோ சொல்லி விட்டார் என்று பெரிய விசாரணை கமிசன் ஆள் போல தொலைக்காட்சியில் மானபங்க படுத்திய ரஞ்சனை  ஒரு 10 வருடம் உள்ளுக்குள் போட்டிருக்கலாம்.😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.