Jump to content

நாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பியல் நிஷாந்த உட்பட இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்றுக்கு ஆகியுள்ளனர்.

அமைச்சர் வாசுதேச நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஞாயிற்றுக்கிழமையன்று (17ஆம் திகதி) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றிருந்த நிகழ்வொன்றிலும், கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்திருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டார்.

நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தயாரித்த பாணியை, சில வாரங்களுக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அருந்தியிருந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது மருந்தை அருந்தினால் வாழ்நாளில் கொரோனா பாதிப்பு ஏற்படாது என, அதனைத் தயாரித்த தம்மிக்க பண்டார கூறியிருந்தார்.

நாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.