Jump to content

புத்தர் சிலையும் நினைவுத் தூபியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையும் நினைவுத் தூபியும்
============================

யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் மீண்டும் இடித்த கைகளே அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே இன்னமும் அது கட்டப்படுமா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமும் அது நினைவுத் தூபியாகக் கட்டப்படாது. மாறாக அது சமாதானத் தூபியாக கட்டப்படும்; அதன் மூலம் தூபி எதற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் என்ற இன்னொரு விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிளிநொச்சியில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட செய்தி வேறு வேறு அனுமானங்களையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. இந்தச் செய்திகளை சில தமிழ் ஊடகங்களே தவறாகக் கையாண்டதையும், தவறான தகவல்களை மக்களிடையே பரப்பியதையும் பார்க்க முடிந்தது. 

1. ஒரு இணைய பத்திரிகை “நேற்று கிளிநொச்சி வளாகத்தில் இருந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னரே தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் கட்டியிருந்த நினைவுத் தூபி உடைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத் தக்கது” என்று செய்தி வெளியிட்டிருந்தது. 

2. இன்னொரு இணையப் பத்திரிகை, கிளிநொச்சி வளாகத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதைக் குறிப்பிட்டதோடு இந்த புத்த கோவில் பல இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒன்று என்றும் ஏனைய மதத்து மாணவர்கள் சிறு கொட்டில்களியே தமது கடவுள் அடையாளங்களை வைத்து இன்றுவரை வழிபட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.  

இந்த இரண்டு செய்திகளையும் வாசிக்கும் ஒரு பொதுமகன் என்ன செய்தியைப் பெற்று கொள்வார்? இந்த இரண்டு வகையான செய்திகளும் அவற்றை வாசிப்பவர்களை ஒரு திசையிலேயே இழுத்துச் செல்கின்றன. முதலாவது செய்தி, நினைவுத் தூபி உடைக்கப்பட்டதன் எதிரொலியே கிளிநொச்சி வளாக சம்பவம் என்ற தகவலையும் இரண்டாவது செய்தி, இலங்கை அரசின் பாரபட்சம் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களின் வணக்கத் தலங்களை அமைத்துக் கொடுப்பதிலும் தொடர்கிறது என்ற தகவலையும் மறைமுகமாகச் சொல்லும் வகையிலேயே அமைந்துள்ளன. 

நினைவுத் தூபி உடைக்கப்பட்டதற்கு மறுநாளே உபவேந்தர் மீண்டும் அதனைக் கட்டித் தருவதாக வாக்களித்ததுடன் அடிக்கல்லும் நாட்டிய நிலையில் மாணவர் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். இந்த நிலையில் அதற்குப் பழிவாங்கும் வகையில் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலையை உடைக்கும் அளவிற்கு பல்கலைக் கழக மாணவர்கள் அவ்வளவு முட்டாள்களா? புத்தர் சிலையை உடைப்பதன் மூலம் தமது கோரிக்கை நிறைவேறாதென்று அவர்களுக்குத் தெரியாதா?

ஆனால் இந்தத் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரத்தை மிகச் சாதரணமான ஒன்றாகக் கருதி புறக்கணிக்கவும் முடியாது. இன்று இலங்கையில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வடக்கில் இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இது திட்டமிடப்பட்டே இடிக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. இலங்கையில் புத்தர் சிலை சேதமாக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலும் மாவனல்ல பகுதியிலும் வேறு பல பகுதிகளிலும் இவ்வாறு புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக மானவல்ல பகுதியில் புத்தரின் சிலைகள் சேதமாக்கப்பட்ட நிலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தில் கைதாகி இன்றுவரை தடுப்புக் காவலில் இருக்கிறார்கள். ஆனால் அண்மையில் மாவன்னல்ல, ஹிகுல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிங்களவர் என்றும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் அத்துடன் அவர் தெருவோரம் உள்ள வணக்கத்தலங்களின் உண்டியல்களை உடைத்துப் பணம் திருடுபவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கைதும் செய்தியும், தமிழர்களும் முஸ்லிம்களும்தான் புத்தர் சிலைகளைச் சேதமாக்குகின்றனர் என்ற பிரச்சாரத்தினை கேள்விக்கு உள்ளாகிய ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலேயே நாமும் கிளிநொச்சி புத்தர் சிலை சேதமாக்கப்பட்டதை நோக்க வேண்டும். 

இது ஒருபுறம் இருக்க, இரண்டாவது செய்தியில் குறிப்பிட்டது போல கிளிநொச்சி வளாக புத்தர் கோவில் பல இலட்சக் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பத்திரிகை தவறாக வழிநடத்த முயற்சிப்பது போல இது கிளிநொச்சி வளாகத்தில் யாழ் பல்கலைக் கழகமோ இலங்கை அரசோ கட்டிக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. இது இராணுவம் இந்த வளாகத்தில் இருந்த காலத்தில் அவர்களால் கட்டப்பட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கையில் சிங்கள மாணவர்களுக்கு மட்டும் அதிக பணச் செலவில் வழிபாட்டுத் தலம் கட்டிக் கொடுக்கப்பட்டதான வியாக்கியானம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. 

இவ்வாறான செய்திகளைப் பார்க்கும்போது தமிழ் ஊடகங்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற வகையில் இயங்குவதோடு, மக்களையும் திசை திருப்பி இவ்வாறான உணர்ச்சிவசப்படுத்தும் வகைச் செய்திகளின் அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனவா? என்ற கேள்வியைத் தமிழ் ஊடகங்கள் முன்வைக்க விரும்புகின்றோம். பொதுவாக மக்கள் அரசியல்வாதிகள் சொல்வதை விட ஊடகங்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். இதனை உணர்ந்து, அனைத்து ஊடகங்களும் அறம் சார்ந்தும் சமூகப் பொறுப்புணர்வோடும் இயங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்.

 

https://www.facebook.com/101881847986243/posts/256635022510924/?d=n

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஊர் செய்திகளின் படி இடிக்கப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் வரும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவுச்சின்னம் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.