Jump to content

ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாணியை இணையத்தில் விற்கும் தம்மிக்க; இவ்வளவு விலையா? - Jvpnews

ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க

கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியான சிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, தாம் கூறியவாறு ஒளடத பாணியைப் பருகியிருந்தால் கொரோனா ஏற்பட்டிருக்காது என தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒளடத-பாணியை-நான்-கூறியவா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

தாம் கூறியவாறு ஒளடத பாணியைப் பருகியிருந்தால் கொரோனா ஏற்பட்டிருக்காது என தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் லெகியத்தை நன்றா நசுக்கி குடிக்க சொல்லி இருக்கார் தோழர்..👍

BronzeUnnaturalIberianmole-small.gif

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவர் லெகியத்தை நன்றா நசுக்கி குடிக்க சொல்லி இருக்கார் தோழர்

அப்படியில்லை தோழர் 
சரியாக சூரியன் மறைந்து சந்திரன் எட்டிப்பார்க்கும் அந்தக்கணத்தில்  இரண்டுகாலையும் தூக்கி பிடரி மேல் போட்டுக்கொண்டு பாணியை குடித்தால் ஆயுளுக்கும் கொரோனா எட்டிப்பார்க்காது  
ஓடாவி கொரோனா ஸ்பெசலிஸ்ட் சொல்லும் ஒருவிடயத்தையும் இந்த மக்கு சனம் கேட்குதில்லை ,
பாணி மேல் இருந்த காதலில் முண்டியடிச்சு கூடிய கூட்டத்திலேயே முக்கால்வாசிக்கு கொரோனா பரவியிருக்கும் இந்த லட்சணத்தில் எழுத்தறிவு 96% என்று வெளியே பீத்தல் வேறு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

கொரோனா.... வரவழைக்கும், பாணிக்கு....

காளியின் பெயரை குறிப்பிடாமல், புத்தரின் பெயரைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 😁

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா பாணியை இணையத்தில் விற்கும் தம்மிக்க; இவ்வளவு விலையா? - Jvpnews

கரண்டியை வாய்க்குள் வைத்த உடனேயே ஓங்காளம் வருவதுபோல் தெரிகிறது. மாசமாக இருக்கலாம்.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கரண்டியை வாய்க்குள் வைத்த உடனேயே ஓங்காளம் வருவதுபோல் தெரிகிறது. மாசமாக இருக்கலாம்.🤔

அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪

அது மகிந்தவுக்குத் தெரியுமோ.. 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

அது மகிந்தவுக்குத் தெரியுமோ.. 😂

கபிதன், நான்முன்பு ஒரு செய்தி படித்தேன் என் தலைவன் என்றும் இளைமையாக இருக்க "இந்தோனேசியாவில் இருந்து வரவழைத்து கொடுத்தேனே" என்று மேர்வின் சில்வா புலம்பிய செய்தி அது. அவருக்கு அந்தப் பார்ட்டிகள் உள்ளபோது அவர் ஏன் பூட்டிகளைப் பார்க்கப் போறார்...??😂🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪

 பிள்ளை இருக்கா பேரப்பிள்ளை இருக்கா என அவர் விசாரித்தாரா? இல்லையே?
ஒரு அனுபவஸ்தர் சொல்லவதை காது குடுத்து கேக்க வேணும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கபிதன், நான்முன்பு ஒரு செய்தி படித்தேன் என் தலைவன் என்றும் இளைமையாக இருக்க "இந்தோனேசியாவில் இருந்து வரவழைத்து கொடுத்தேனே" என்று மேர்வின் சில்வா புலம்பிய செய்தி அது. அவருக்கு அந்தப் பார்ட்டிகள் உள்ளபோது அவர் ஏன் பூட்டிகளைப் பார்க்கப் போறார்...??😂🤣

 

ஆனால் சகோ மற்ற ரகமாம். தலதா மாளிகைக்குப் போகாமல் ருவான் வெலிசாயவிற்குப்போனதன் பரகசியமும் அதுதானாம். 🤐

நாடாளுமன்றிலேயே ஒர் பா... விரும்பிகள் ஐந்திற்கும் மேலாம். அண்மையில் உள்ளுக்குப் போன ஜன ரஞ்ச கமானவரும் உட்பட.. 🤐

இதை நான் கூறவில்லை. பட்சி கூறுகிறது.

🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Muslim

தம்மிக்க பாணி தொடர்பாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு

கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஒளடத தயாரிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மருந்து உற்பத்திகளை ஆய்வு செய்ய அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மருந்து உற்பத்திகளை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ´கேகாலை தம்மிக்க பண்டார தயாரித்த கொவிட் ஒழிப்பு உள்நாட்டு மருந்து உள்ளிட்டவைகள் குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

அவை தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை. அவ்வாறு இல்லாது எந்தவொரு மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படாது.

இதன் நன்மை தீமைகளை நாட்டுக்கு அறிவிப்போம். தம்மிக்க பண்டார தயாரித்த பாணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்க முடியும் என நம்புகின்றேன்.

ஒக்ஸ்போட் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி முதன் முதலில் இலங்கைக்கு கிடைக்கும். அதன் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வோம்.

இதற்கிடையில் ரஸ்ய தடுப்பூசி பெறுவதற்கான பேச்சுவார்த்தைககள் இடம்பெற்று வருகின்றன. பற்றாக்குறை ஏற்படின் அவற்றை பணம் கொடுத்து வாங்க நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தம்மிக்க-பாணி-தொடர்பாக-இ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2021 at 12:13, அக்னியஷ்த்ரா said:

அப்படியில்லை தோழர் 
சரியாக சூரியன் மறைந்து சந்திரன் எட்டிப்பார்க்கும் அந்தக்கணத்தில்  இரண்டுகாலையும் தூக்கி பிடரி மேல் போட்டுக்கொண்டு பாணியை குடித்தால் ஆயுளுக்கும் கொரோனா எட்டிப்பார்க்காது  
ஓடாவி கொரோனா ஸ்பெசலிஸ்ட் சொல்லும் ஒருவிடயத்தையும் இந்த மக்கு சனம் கேட்குதில்லை ,
பாணி மேல் இருந்த காதலில் முண்டியடிச்சு கூடிய கூட்டத்திலேயே முக்கால்வாசிக்கு கொரோனா பரவியிருக்கும் இந்த லட்சணத்தில் எழுத்தறிவு 96% என்று வெளியே பீத்தல் வேறு  

 

அக்னி 

சுவாமி நித்தியானந்த இப்படி இர‌ண்டு கால்கலையும் தூக்கி வைத்திருக்க ரன்சிதா கையில் ஒரு  சிறிய சங்கில் பாணீயை வைத்திருக்கும்  படம் ஒன்று இங்கு இணைக்கப்ட்டிருந்தது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.