Jump to content

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

 

spacer.png

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இ ‘இயேசு அழைக்கிறார்’நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில்... வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளியிடவில்லை என்றும் முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

"இப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தொடர்புடைய 28 வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளை முடித்தவுடன் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வரி ஏய்ப்பு பற்றி முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்று வருமான வரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றன.

 

https://minnambalam.com/public/2021/01/20/23/jesus-calls-chirstian-organaisation-it-raid

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யேசு ஓடுகிறார் என இந்த நிறுவனம் அழைக்கப்படும்..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

Link to comment
Share on other sites

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம்.

பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும்  அயோக்கியர்கள் இவர்கள் என்று  Zuma சொன்னது 💯  உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

உண்மை தான். சுவிஸ் வருமான வரித்துறைக்கு ஏன் மூக்கில் வேர்க்கவில்லை போதகர் தனது மத வியாபார தலைமையகம் இருப்பிடம் உள்ள நாட்டில் வரி எல்லாம் ஒழுங்காக கட்டியிருப்பார்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

அடுத்தது சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தில் ரெய்டு நடத்த வருமானவரித்துறைக்கு முன்மொழிகின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

 

அவர்கள் ரெடியாம். ஆனால் கொஞ்சம் செலவாகுமாம். எப்படி வசதி 🤣.

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan government allocates Rs. 5 million for flood relief in Northern  Province – GTN English

தனித் தீவு வேண்டும் என்றாலும் கணக்க சும்மா கிடக்குது. ஏதாவது ஒன்டை ஆட்டையைப் போடலாம்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

அந்த வேலையை பின் பக்க கதவாலை வெட்டியாடலாம். 😎
இல்லாட்டி இருக்கவே இருக்கு கார் டிக்கி 💝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

நானும் வரட்டே.. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

நானும் வரட்டே.. 🙏

இல்லை..No...No..😎

பேனை, பென்சிலுக்கை கமரா வைச்சு எதையும் செய்யக்கூடிய ஆக்களை கிட்டவும் எடுக்க மாட்டம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

 

8 hours ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Bori´s und Smitti´s Bier Stube (Seite 45) - Allmystery

கப்பல், விமானம், காணி... எல்லாம் சொந்தமாக வரும் என்றால்....
சிலவற்றை.. தியாகம் செய்யத்தான் வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

14 hours ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

உண்மையில் இந்த வகையில் முகமது எனக்கு பின்னால எவன் வந்தாலும் அவன் கள்ளன் என்று சொன்னது நல்லதா போயிட்டு.

ஆனா என்ன அந்த முட்டா பீசுகள் அந்தாள் விட்டுட்டு போனதை விட்டு ஒரு அடி நகர மாட்டாம் எண்டு நிக்குதுகள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

Link to comment
Share on other sites

On 20/1/2021 at 12:23, Kavi arunasalam said:

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

தெய்வம் நின்று கொல்லும் என்பதன் பொருள் இதுதானோ....??

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

யோசிக்காமல் இருப்பமா பாண்ச்  அண்ணெய் முன்பு போல் இல்லை நிறைய கெடுபிடிகள் உதாரணத்துக்கு பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் இப்படியான தீவுகளை வாங்கி அங்கு அந்த பெரிய நாட்டுக்குள் சிலவகையான பொருள்களை கொண்டுபோனால் மில்லியன்கணக்கில் வருமான வரி வாங்கியதுக்கு  பணவரவு கணக்கு காட்டல் என்று பாரிய தலைவலிகளில்  தப்பிக்க இப்படியான தீவுகளில் அந்த நாட்டின் பணக்காரர்களில் பாதுகாப்பு பெட்டகம் வைத்து சிலவழிப்பது  வழமையான ஒன்று . அப்படியான வேலைகளுடன் கடத்தல் பொருள்கள் இடை தங்குமுகமாகவும் செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் இப்போதெல்லாம் அதை விட்டு இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் ஒரு நாட்டின் அனுசரணை இன்றி நிலைப்பது கடினம் .

https://www.privateislandsonline.com/search?view[map]=0&availability=rent&region=srilanka&q=&price_range=1%3A6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.