Jump to content

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது; 4 மீனவர்களைக் காணவில்லை வைகோ கடும் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது; 4 மீனவர்களைக் காணவில்லை வைகோ கடும் கண்டனம்

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை மூழ்கடித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது

vaiko-300x205.jpg

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது.
1. மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம்,
2. நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி,
3. சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம்,
4. செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம்
ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர்.
எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின.
படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.
நேற்று19.01.21 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை.
விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன.
 
அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகின்றது.
2-2-300x225.jpg
அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை.
கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்உறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
இனி அதற்குத் தேவை இல்லை; கைது செய்யப் போவது இல்லை; கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது.
பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது.
நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது.
காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அருகே இந்திய மீன்பிடி படகு மூழ்கிய இடம் தெரிந்தது: 2 உடல்கள் மீட்பு

20 ஜனவரி 2021, 07:48 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
சேதமடைந்த இலங்கை கடற்படைப் படகு.

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

 
படக்குறிப்பு,

சேதமடைந்த இலங்கை கடற்படைப் படகு.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக இன்றும் நடக்கிறது.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு இதனைக் கூறினார்.

அந்த படகு மூழ்கிய இடம் தெரிந்ததாகவும், அது ஆழ்கடலுக்குள் முழுமையாக மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த படகில் நான்கு பேர் இருந்திருக்கலாம் என இலங்கை கடற்படை சந்தேகிக்கின்றது எனவும் எஞ்சிய இரண்டு பேரையும் தாம் தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக உடல்கள் ஒப்படைக்கவுள்ளது என்று இலங்கை கடற்படை பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நிலையில், இரண்டு பேரின் சடலங்கள்

இலங்கை கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் இன்று (20) மதியம், கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான படகை தாம் கண்டுபிடித்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து, கடலுக்குள் மூழ்கிய படகுக்குள் கடற்படையின் சுழியோடிகள் சென்று, மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, கடலுக்குள் மூழ்கிய படகில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேரின் சடலங்களை தாம் கண்டெடுத்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கடலில் மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

அத்துடன், விபத்துக்குள்ளாகி மூழ்கும் படகை தேடும் பணிக்காக கடற்படைக்கு சொந்தமான படகுகளும் மற்றும் கப்பலொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம் (ஜனவரி 18) இரவு சட்டவிரோதமாக நுழைந்த, 50க்கும் அதிகமான இந்திய மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை குறிப்பிடுகிறது.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.

இதையடுத்து, இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய படகுகள் தப்பிச் சென்ற வேளையில், ஒரு படகு மட்டும் இலங்கை கடற்படையின் படகை மோதி சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்திய படகுகள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிப்பதற்காக வழமையாகவே தமது படகை சேதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு நேற்று முன்தினமும் தமது படகை சேதப்படுத்தி, தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், எதிர்பாராத விதமாக இந்திய படகு கடலில் கவிழ்ந்ததாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.

கடலில் மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

விபத்துக்குள்ளான படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் இந்திக்க டிசில்வா கூறினார்.

எனினும், இந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 4 மீனவர்கள், நாடு திரும்பவில்லை என இந்திய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.

இந்திய அதிகாரிகளின் தகவல்களுக்கு அமைய, விபத்துக்குள்ளான படகில் 4 மீனவர்கள் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் தமிழீழ மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் வேட்டையாடிய சிங்கள கடற்படை மீண்டும்.. வேண்டும் என்றே மோதி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இலங்கைத் தீவில் தமிழர் நிலங்களையும் கடலையும் ஆக்கிரமிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் அதன் அடக்குமுறையை தமிழகம் நோக்கியும் திருப்பி இருப்பது மிகவும் ஆபத்தான போக்காகும்.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக - தமிழீழ மீனவர்களும் சம்பந்தப்பட்ட தரப்பு நியாயமான அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களும் சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வு தேட வேண்டும்.

இந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கு எதிராக தமிழக மீனவர்கள் சர்வதேச நீதிமன்றை நாடுவது அவசியம். எல்லை தாண்டி வந்தால்.. கைது செய்வதை விடுத்து.. வேண்டும் என்றே படகால் தாக்கிக் கொல்வது பெரும் குற்றமாகும். 

இதே செயலை முன்னரும் சிங்களக் கடற்படை செய்துள்ளது. கடற்புலிகளின் இருப்பு தமிழீழ மீனவர்களை மட்டுமன்றி தமிழக மீனவர்களையும் பாதுகாத்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

141329257_2091542884335942_3706575896542 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.