Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

உது படிப்பில்லை... பயிற்சி.. கண்டியலே.... கொத்துரொட்டி போட பழகுற மாதிரி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

எல்லாம் படம் எடுத்து அதுநாளைக்கு பேப்பர்ல வதுட்டாலும் எண்ட பயம்தான்🤣.

பிரபல்யஸ்தர் என்றால் இப்படி சில தொல்லைகள் வழமைதானே.

நான் நீங்கள் வெண்முரசு படிக்கிறன் எண்டு சொல்லேக்கையே நினிச்சனான் இவர் வேலையை ஆரையோ வச்சு வாங்கிற ஆள் எண்டு 🤣. இல்லாட்டில் அதை படிக்க எங்க நேரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

அண்ணை,

உப்பிடி எல்லாரும் நழுவினால் எப்படி? 

யார் நாளுக்கு £600 பவுண் வேலைக்கு போய், உழைச்சு, நல்ல கார் வாங்கி, தமிழினத்தை முன்னேற்றுவது?

தனிய நாதத்தால மட்டும் முடியுமே?

விசுகு அண்ணை பட்டும் படாமல் நழுவிற்றார்.

அக்கினி? ஜோக் எண்டு சொல்லாமல் ஜோக் அடிச்சிட்டு போய்ட்டார்.

அக்காச்சி? ஆர் யூ சீரியஸ் ? எண்டு விளங்காதமாரி நடிக்கிறா?

மருதர் வந்து அக்காச்சிய கலாய்ச்சிட்டு போட்டார்.

கிருபன் ஜி சம்பந்தமில்லாமல் அமெரிக்கன் சீ இ ஓ வை பற்றி கதைக்கிறார்.

இப்ப நீங்களும் இப்படிச் சொன்னால் - இந்த இனத்தை யார் தான் காப்பாற்றுவது?

யூடியூப் பாக்க தெரியுமோ?

நிகே போடுற சுண்டைகாய் சம்பல் வீடியோ மாரித்தான். 

வெளிக்கிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

🤣 மீரா வேலணை காம்பில நிண்ட ஆள் போல கிடக்கு🤣

மொட்டை வெய்யில் மட்டும் இல்லை - வெள்ளை அரைக்கை பனியன், காக்கி டவுசர், டெனிஸ் சப்பாத்து எல்லாம் உண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

 

 

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

 

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

இதுகள் போலத்தான் கிடக்கு

கேட்கலாம் தான்

ஆனால்  ரதி  சொன்ன மாதிரி நமக்கு  புரியணுமே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

ஆல்வின்_டொஃப்லர்_ எதிர்கால அதிர்ச்சி_கோட்_இல்லிடரேட்_இகோர்_பியூகர்

 நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் 
நின்றால் விழுந்துவிடுவோம்  தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நன்றி நாதம் இப்படி ஒரு திரியை தொடங்கியதற்கு.

Robotic Process Automation(RPA)

Digital Proccess Automation (DPA)

Business Process Management (BPM) போன்ற துறைகளும் நல்லா வளர்ந்து வருகின்றன.

இலவச /கட்டண  இணையவழி கல்வி சான்றிதழ்களும் அந்த துறைசார் நிறுவனங்களால் வழங்கபடுவதும் சிறப்பம்சம்.

இங்கிலாந்தில் Blue Prism

ஐரோப்பா மற்றைய நாடுகளில் UiPath

அமெரிக்கா மற்றும் சுவிசில் Automation Anywhere 

இதைவிட Softmotive இனை அண்மையில் வாங்கிய Microsoft இன் Power Automate போன்ற Tools முதன்மையானவை. அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றன.

Pegas 

IBM

Bizagi (UK Based Tool) போன்ற Tools BPM DPM போன்ற துறைகளுக்கு முன்னணியில் இருக்கின்றன.

மேலே சொன்ன Tools இனை Google இல் தேடினாலே அதே நிறுவங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச / கட்டண ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை காணலாம்.

வேலை வாய்ப்புக்கு RPA Developer அல்லது Intelligent Automation Developer அல்லது RPA Architect இப்படி தேடி பாருங்கள் எண்ணற்ற வேலைகள் கொட்டி கிடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு Robot இது தான் அவர்களின் தாரக மந்திரம்.

வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நாதம் நான் என் ஓய்வு நேரங்களில் உதவ தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 00:07, Nathamuni said:

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

நான் கணனியை கற்றுக்கொண்டதே இணையத்தில்தான் நாதா கணனி பற்றி 3 கால படிப்பு அது டைப்பிங் , எக்ஸ்செல் அப்படி இப்படியென தற்போது கூகிள் , யூ டியுப்பால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்து வருகிறேன் இப்பவரைக்கும் நீங்கள் சொன்னத்திற்கு செல்ல காலம் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:35, சுவைப்பிரியன் said:

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

 நன்றி வாய்ப்புக்கள் கிடைத்தால் சந்திப்போம் .

யாழ்ப்பாணம் வந்த போது உங்களை விசாரித்தேன் நீங்கள் அந்த் அந்நேரம் கொழும்பில் என ஜீவன் அண்ண  சொன்னது ஞாபகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு பணம் தேவை?
இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் 
நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை 
நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.
இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி.

80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் 
யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது 
மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது 
கீழாகவே இருக்கிறது. 

பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம்.
இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கே 
இதுமாதிரியான யுத்திகள் உதவும் என்பதைவிட முதலில் புரியும். 

உலக ஜனாதிபதிகள்  கோடீஸ்வரர்கள்  விஞ்ஞானிகள்  விளையாட்டு வீரர்கள் 
விபச்சாரிகள் பூசாரிகள்  பிச்சைக்காரர்கள்  கூலி தொழிலாளர்கள் எல்லோருக்குமே 
எந்த பாகுபாடும் இன்றி ஓவருவருக்கும் ஒவ்வரு நாளும் 24 மணித்தியாலங்கள் 
வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மணி நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே 
உங்களின் அடுத்த வருட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 

அடுத்த வருடம் 
ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? 
அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கை தராதரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? 
உலக ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க விரும்புகிறீர்களா? 

இன்றைய உங்கள் 24 மணி நேரத்தில் அதற்க்காக எத்தனை மணியை 
முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் அது தங்கி இருக்கிறது. 

நாதமுனி கிருபன் போனற்வர்களால் உங்களுக்கு வழிகளைத்தான் சொல்ல முடியும் 
உங்களுக்காக அவர்களால் படிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாத ஒரு 
இக்கட்டான நிலை உலகில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்:
1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy)
2. 5G, 6G
3. AI
4. Nano technology etc

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள்  மிக மிக அவசியம்.

 90 இல்  இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை.

மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும்  பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.